புதன், 24 நவம்பர், 2021

கட்டணம் செலுத்தி ஆன்லைனில் கிராம வரைபடம் பெறும் வசதி துவக்கம் revenue maps can be obtained online

 https://tnlandsurvey.tn.gov.in/index.php/Select/buyerForm

 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் கிராம வரைபடம் பெறும் வசதி துவக்கம்  revenue maps can be obtained online

--------------------

https://tnlandsurvey.tn.gov.in/index.php/Select 

-------------------

சென்னை--கிராம வரைபடங்களை, ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி பெறுவதற்கான புதிய வசதியை, நில அளவை துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில் நிலம் வாங்குவோர், அது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிய, பட்டா, நில அளவை வரைபடம் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்வது அவசியம்.

கணினியில் பதிவேற்றம்

இந்நிலையில், சர்வே எண் வாயிலாக நில அளவை வரைபடங்களை பெறுவதும்; குறிப்பிட்ட சர்வே எண், சம்பந்தப்பட்ட கிராமத்தில் எங்கு அமைந்துள்ளது என்பதை அறிவதும் சிரமமாக உள்ளது.இதற்கு நில அளவை துறையை அணுகி, கிராம வரைபடங்களை பெற வேண்டும். இதற்காக நில அளவை துறை, 16 ஆயிரத்து 721 கிராமங்களின் வரைபடங்களை தயாரித்து உள்ளது. வரைபடங்கள் அனைத்தும், டிஜிட்டல் முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், கிராம வரைபடங்களுக்காக, நில அளவை துறை அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய சேவையை நில அளவைத்துறை துவக்கிஉள்ளது.

நில அளவை துறையின், https://tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தில், இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்தால், சம்பந்தப்பட்ட கிராம வரைபடம் தொடர்பான விபரங்கள் வரும். இங்கு விண்ணப்பதாரர் தங்கள் பெயர், முகவரி, அடையாள ஆவண விபரம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.இதன்பின், ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வரைபடத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக, 200 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிரச்னைகட்டணம் செலுத்தியவுடன் கிராம வரைபடங்களை, உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு நபர் ஒரு மாதத்தில், 10 வரைபடங்களை மட்டுமே பெற முடியும்.அதேநேரத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த சேவையில் கட்டணம் செலுத்துவதில், சில தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நில அளவை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Source: dinamalar

Village, town block and district maps will very soon be made available online for the benefit of land buyers, industrialists and realtors.

As part of the reforms aimed at transparency and efficiency in the Revenue Department, the Tamil Nadu government is strengthening its online services. A senior official told The Hindu, “We are designing a portal for the Survey and Settlement Department, and the services through this portal will be launched soon.”

The survey number correlation statements for every district will also be uploaded online, and this is expected to help landowners with the old and new survey/subdivision numbers of a land parcel, the official said.

At present, village maps can be accessed only in person from the taluk offices or a copy of it can be obtained in person from the offices of the Regional Deputy Directors of Survey or the office of the Director of Survey and Settlement in Chennai. As for the survey number correlation statements, only a few districts have uploaded them online.

Village maps primarily help in identifying waterbodies, especially the lesser known channels or streams, and poromboke lands, and in checking the suitability of a land parcel for agriculture. According to the Revenue Department, all 16,721 village maps have been scanned.

சனி, 20 நவம்பர், 2021

கார்த்திகை நாள்

 கார்த்திகை திருநாள் என்பது கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் அறு மீன் கார்த்திகை விண்மீன் கூட்டமும் நிலவும் நெருங்கும் நாள்.இந்நாளில் வீடுதோறும் பழந்தமிழர் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதன் காரணம் மறைந்து போய் பின்னாளில் அது முருகனின் கார்த்திகை விழாவாகவும்  சிவன் பிரம்மா மாலன் கதையாகவும்  மாறி இந்து சமய விழாவாக மாறிப்போனது.

தொல்காப்பியம் புறத்திணைஇயல்  35 

பரிபாடல்- 10, 11

மலைபடுகடாம் -10, 99-101

புறநானூறு- 229

நற்றிணை - 58, 202

அகநானூறு 141, 185

களவழி நாற்பது -17

என சங்கநாட்களில் கொண்டாடப்பட்ட கார்த்திகை விளக்கு ஒளி நாள் சங்கம் மருவிய காலத்தில் காரணம் மாறி கொண்டாடப்பட்டதை முத்தொள்ளாயிரம் சீவக சிந்தாமணி ஆகிய இலக்கியங்கள்  பதிவு செய்துள்ளன.பிற்பாடு பக்தி இலக்கிய காலத்தில் சமயத்தோடு தொடர்பு படுத்தப்பட்டு காரணம் மாறிக் கொண்டாடப் பட்டதை திருமந்திரம்  தேவார கபாலீச்சுரப்பதிகம் திருவெம்பாவை பெரியபுராணம்  அருணகிரியார் பாடல்களில் காண முடிகிறது.

சங்க நாட்களில் நமது முன்னோர்கள் கொண்டாடிய இந்தப் பழமை விழாவின் காரணம் தற்போது நமக்குப் புரிபடவில்லை. உழவுக்கு உறுதுணையான வடகிழக்குப் பருவமழையினை வரவேற்க வீடு தோறும் விழக்கேற்றி கொண்டாடி  இருக்கலாம். ஆரல் இறால் எரிநாள் அழல் ஆ அல் அளகு அறுமீன் எனக் கடுந்தமிழ்பெயர் கொண்ட இந்நாளில் அனைவருக்கும் தொல்லியலாளர் நாராயணமூர்த்தியின்  கார்த்திகை விளக்கொளிநாள் வாழ்த்துகள்.💥

வியாழன், 7 அக்டோபர், 2021

தமிழில் அரபுச் சொற்கள்

அசல்   أصل மூலம்

மாஜிماضي  முந்தைய

அத்து حد வரம்பு

முகாம்مقام  தங்குமிடம்

அத்தர் عطر மணப்பொருள்

முலாம்ملام  மேற்பூச்சு

அமுல் عمل  நடைமுறை

ரத்துرد  விலக்கு/நீக்கம்

அனாமத்أنعمت கேட்பாரற்ற

ரசீதுرصيد  ஒப்புப் படிவம்

அல்வாحلوه  இனிப்பு

ராஜிراضي  உடன்பாடு

ஆஜர்حاظر  வருகை

ருஜுرجوع  உறுதிப்பாடு

ஆபத்துآفت  துன்பம்

ருமால்رمال  கைக்குட்டை

இனாம்انعام  நன்கொடை

லாயக்لائق  தகுதி

இலாகாعلاقة  துறை

வக்கீல்وكيل  வழக்குரைஞர்

கஜானாخزانة  கருவூலம்

வக்காலத்துوكالة  பரிந்துரை

காலிخالي  வெற்றிடம்

வகையறாوغيره  முதலான

காய்தாقاعدة  

தலைமை/வரம்பு  

வசூல்وصول  திரட்டு

காஜிقاضي  நீதிபதி

வாய்தாوعده  தவணை

கைதிقيد  சிறையாளி

வாரிசுوارث  உரியவர்

சவால்سوال  

அறைகூவல்/கேள்வி  

சர்பத்شربة குளிர்பானம்

ஜாமீன்ضمان  பிணை

சரத்துشرط  நிபந்தனை

ஜில்லாضلعة  மாவட்டம்

தகராறு تكرار வம்பு

தாவாدعوة  வழக்கு

திவான்ديوان  அமைச்சர்

பதில்بدل  மறுமொழி

பாக்கிباقي  நிலுவை

மஹால்محل  மாளிகை

ஜமாபந்தி ஒன்றுகூடல்

ஃபிர்கா அலகு

மகசூல்محصول  அறுவடை

மாமூல்معمول  வழக்கம்

கீரனூர் அருகே 2000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலைகள் கண்டெடுப்பு.

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, விளாப்பட்டி மற்றும் பெரியமூளிப்பட்டி கிராமங்களுக்கு இடையே இரும்பு காலத்தை சேர்ந்த இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான இரும்பு உருக்கு உலைகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இரும்பு உருக்கு உலைகள்

இது குறித்து கீரனூரை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் கூறியதாவது:-

பெரியமூளிப்பட்டி கிராமத்திலிருந்து விளாப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் பழமையான பானை ஓடுகள் குமியலாக காணப்படுகின்றன. அதனை ஒட்டி மண்ணில் புதைந்த வண்ணம் சுடுமண்ணால் செய்யப்பட்ட பழமையான இரும்பு உருக்கு உலைகள் இருப்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.


சிதைவுற்ற நிலையில் உலை

சேதமடைந்த நிலையில், மண்ணில் புதைந்த வண்ணம் ஐந்திற்கும் மேற்பட்ட உலை அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன. இந்த உலைகளை சுற்றிலும் பல்வேறு இரும்பு கழிவுகள் மற்றும் இரும்பு தாதுக்கள் நிறைந்த கற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக உருக்கப்பட்ட இரும்பு கட்டிகளாக வார்க்க பட்டதற்கு அடையாளமாக உடைந்த இரும்பு கட்டிகள் இங்கு கிடைக்கின்றன.


இரும்பு துண்டுகள்

மேலும் இங்கு இரும்பு உருக்கு தொழில் தொடர்ந்து நடைபெற்றதற்கு அடையாளமாக, ஆலங்க்குடி தாலுகா பொற்பனைக்கோட்டையில் கிடைத்தது போல பத்திற்கும் மேற்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊதுகுழல் துருத்திகள் உலையினை சுற்றிலும் காணப்படுகின்றன. முக்கிய அம்சமாக அவை முதுமக்கள் தாழிகளை போல உட்புறமாக செம்மண் மற்றும் வெளிபுறம் களிமண் என இரட்டை அடுக்குகளாக செய்யப்பட்டுள்ளன.


சுடுமண் ஊதுகுழல்கள்

பொதுவாக இரும்பு உருக்குதல் என்பது அதிக வெப்பநிலையில், கிட்டத்தட்ட 2000 டிகிரி செல்சியஸில் நிகழ கூடிய செயல்முறையாகும். இந்த அதிகபட்ச வெப்பநிலையை நிலைநிறுத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட உலைகள் மற்றும் துரித்திகளை பயன்படுத்தி இங்கு இரும்பு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் இவ்விடத்தில் சுண்ணாம்பு தாது படிவுகள் அதிக அளவில் கிடைக்கிறது. இரும்பு உருக்கு முறைகளில் கழிவுகளை நீக்க சுண்ணாம்பு முக்கிய பொருளாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

உலைகளினை சுற்றிலும் பலவகை பானை ஓடுகள் குவியல்களாக காணப்படுகின்றன. குறிப்பாக பழமையான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், மெல்லிய கருப்பு நிற பானை ஓடுகள் இங்கு கிடைக்கப் பெறுகிறது. அவற்றில் முக்கிய அம்சமாக வெளிப்புறம் வளவளப்பான மேற்பூச்சு கொண்ட பானை ஓடுகளும் இவ்விடத்தில் கிடைக்கப் பெறுகின்றன.


பானை ஓடுகள்

இந்த பானை ஓடுகள் பல்வேறு அளவுகளில் பயன்பாட்டிலிருந்த மண்பாண்டங்களின் எச்சங்களாக அமைந்துள்ளன. மேலும் பண்டைய காலங்களில் திண்ணை விளையாட்டுகளில் பயன்படுத்தும் சுடுமண் சில்லுகளும் இங்கு காணப்படுகிறது.

விளாப்பட்டிக்கு அருகில் ஆதனப்பட்டி கிராமத்தில் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான குத்துக்கற்களுடன் கூடிய முதுமக்கள் நினைவுசின்னங்கள் அமைந்துள்ளன. அங்கு காணப்படும் பானை ஓடுகளை போன்றே இந்த இரும்பு உருக்கு உலைகளை சுற்றி கிடைக்கபெறும் பானை ஓடுகளும்  அமைந்துள்ளன. ஆகவே இந்த இரும்பு உருக்கு உலைகளும் அதே காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்கவேண்டும் என கருதப்படுகிறது.

ஆதனபட்டி நீத்தார் நினைவு சின்னங்கள்


மண்ணரிப்பு மற்றும் மனித செயல்பாடுகள் காரணமாக பழமையான இந்த உலை அமைப்புகள் தொடர்ந்து சிதைந்து வருகின்றன. எனவே இங்கு கிடைக்கும் உலை மிச்சங்கள், சுடுமண் ஊதுகுழல் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேகரித்து அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.


இரும்பு உலை பொருட்கள் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

*********************************

வணக்கத்துடன்,

பா. முருகபிரசாத், 

கால்நடை ஆய்வாளர்,


நா. நாராயணமூர்த்தி,

உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்),


மு. ராகுல்பிரசாத்,

இளங்கலை (விலங்கியல்) மாணவர்,


கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம்.


#பகிர்வு 


#புதுக்கோட்டைநம்மஊரு

புதன், 29 செப்டம்பர், 2021

கவரிமான் என்பது மான் இனம் அல்ல, அதன் உண்மையான பெயர் கவரிமா.

 

இது தமிழ்நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் எருமை மாட்டு வகையைச் சார்ந்ததாகும். இதையே நமது மக்கள் கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள்.


கவரிமான் எங்கு வசிக்கிறது?. முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா?. எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்?


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.”

என்கிறார் திருவள்ளுவர் (969-ஆம் குறள்)

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானமிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.


ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே?. குழப்பமாக இருக்கிறது அல்லவா?. அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள். அதில் சொல்லப்பட்டு இருப்பது 'கவரி மான்' அல்ல. கவரிமா.


புறநானூற்றில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது.

"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

தண் நிழல் பிணி யோடு வதியும்

வட திசை யதுவே வான் தோய் இமயம்". 

இமயமலைப் பகுதியில் கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு, தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள். 


இந்த கவரிமா குறித்து பதிற்றுப் பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன. முடி, சடை போல தொங்கக் கூடிய விலங்கு தான் கவரிமா. இந்த முடியை வெட்டியெடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். 'கவரி' என்பதில் இருந்துதான் 'சவரி முடி' என்ற இன்றைய சொல் உருவானது. 'மா' என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.


சரி... இந்தக் குறளுக்குப் பொருள் என்ன?. பனிப் பகுதியில் வாழும் கவரிமாவுக்கு, அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும். 


அதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால்,

அவர்கள் வாழ்வது அரியதாகி விடும். எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை. பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை. ஆனால் கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தான் தவறு

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

ஜெயகாந்த் கருத்து #தமிழர் என்றால் ஏன் எரிகிறது?



உண்மையிலேயே ‘தமிழ் களஞ்சியம்’,’திராவிட களஞ்சியம்’ சர்ச்சை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கள யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் சிறந்த உதாரணம்.


இந்த சர்ச்சை தொடங்கும்போதே தெரியும் திராவிட சார்பாளர்களின் வாதங்கள் எப்படி அமையும் என்பது. 


வழமைபோல தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம் என திரிபடைந்த விதம், திருஞான சம்பந்தரை ‘திராவிட சிசு’ என ஆதிசங்கரர் அழைத்தது, அயோத்திதாசர் அந்த பெயரில் பத்திரிகை நடத்தியது என சுற்றி சுற்றி வருவார்கள் என்பது எதிர்ப்பார்த்ததுதான்.


இந்த வரலாற்று நிகழ்வையெல்லாம் நான் மறுக்கவில்லை. 


ஆனால் திராவிட சார்பாளர்கள் ‘வேண்டுமென்றே’ இதில் இருக்கும் ஒரு விடயத்தை ஒளிக்க முயல்கிறார்கள்.


• #ஒளிக்க முயலும் விடயம்


திராவிட சார்பாளர்கள் மேலே சொன்ன வரலாற்று உதாரணங்கள் எல்லாமே நடந்தவைதான்.


#ஆனால் அது பிறமொழியாளர்கள் தமிழை,தமிழரை குறிப்பதற்காக பயன்படுத்திய சொல்லாடல்கள்.நாம் ‘நம்மை’ அழைக்க பயன்படுத்திய பெயர் அல்ல என்பதுதான் அந்த ஒளிக்க முயலும் விடயம்.


• #திராவிட சார்பாளர்களுக்கு உதவ கூடிய இன்னும் சில வரலாற்று உதாரணங்களை தருகிறேன். 


“அத்திக்கும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டில் {BCE 2nd cent} பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.  


இக் கல்வெட்டின் 13 வது வரியில்  113 ஆண்டுகள் 1300 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலிருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியினை காரவேலன் முறியடித்த செய்தி கூறப்படுகின்றது.


இங்கு தமிழர் கூட்டணியினைக் குறிக்கும் திரிபுச் சொல்லாக `த்மிர தேக சங்காத்தம் ` {Dramira } பயன்படுத்தப்படுகின்றது. 


அதே போல கிரேக்கக் குறிப்புகளில் சங்ககாலத் தமிழகம் `Damirica ` எனக் குறிக்கப்படுகின்றது. 


இவைதான் தமிழ் குறித்துக் கிடைக்கும் முதலாவது திரிபுச் சொற்களாகும்.  


`தமிழ்` என்று சொல்ல முடியாத பிற மொழியிலாளர்கள் திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருந்தார்கள். 


அவற்றினை எல்லாம் பொதுமைப்படுத்திய ஒரு திசைச் சொல்லே `திராவிடம்` {Dravida } எனலாம்.


லலிதாவசுத்திர ` Lalitavistara` ( (translated into Chinese in 308 CE) தமிழ் எழுத்துகளை `திராவிட லிபி` ( Dravidalipi ) என அழைக்கின்றது.  


இதுவே `திராவிடம்` என்ற சொல் தமிழினைக் குறிப்பதற்கான நேரடியான முதலாவது சான்றாகும்.


ஏறக்குறைய அதே காலப்பகுதியினைச் சார்ந்த  சமயவங்கா (“Samavayanga Sutta” )என்றொரு சமண நூலில் அக்காலத்தில் வழக்கில் இருந்த 18 மொழிகளின் பட்டியலில் சமசுக்கிருதம் குறிப்பிடப்படவில்லை.   


அதில்  `தாமிலி` / `தமிழி` ( Damilli ) ஒரு எழுத்து வடிவமாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனாலேயே பிற்காலத்தில் கமில் சுவெலபில் ( Kamil Zvelebil ) என்ற அறிஞர் `தமிழ்` என்ற சொல்லைக் குறிக்கும் ஒத்த சொற்களாக `தமிழி `, `திராவிடம்` என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். 


மேலே குறிப்பிட்ட நூல்கள், கல்வெட்டு என்பன பிராகிரத மொழியிலேயே இடம் பெற்றிருந்தன.


(வி.இ.குகநாதன் எழுதிய ‘திராவிடம்` என்றால் என்ன? எனும் கட்டுரையிலிருந்து)


மேலேயுள்ள பந்தி விவரிக்கும் வரலாற்று உதாரணங்களும் தமிழை, தமிழரை குறிக்க பிறமொழியாளர்கள் பயன்படுத்திய சொல்லாடலாகதான் ‘த்மிர’ (Dramira), கிரேக்கர்கள் பயன்படுத்திய ‘Damirica’, லலிதாவசுத்திர குறிப்பிடும் ‘திராவிட லிபி’( Dravidalipi ), சமயவங்கா என்ற சமண நூல் குறிப்பிடும் `தாமிலி` / `தமிழி` ( Damilli ) என்பவை வருகின்றன.


ஆக `தமிழ்` என்ற சொல்லை உச்சரிக்க முடியாத பிற மொழியிலாளர்கள் த்மிர,திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருக்கிறார்கள்.


• #இனி நம்முன் உள்ள கேள்வி


பிறமொழியாளர்கள் தமிழை,தமிழரை உச்சரிக்க முடியாமல் பயன்படுத்திய சொற்கள் என் இனத்திற்கான பெயராக மாறுமா அல்லது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழராகிய நாம் நம்மை அழைக்க பயன்படுத்திய சொல் நமக்கான பெயராக மாறுமா? 


இன்னும் எளிமையாக உங்களுக்கு புரியவைக்க வேண்டுமானால், ஒரு வேடிக்கையான உதாரணத்தை தருகிறேன்.


இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை வெள்ளைக்கார வர்ணணையாளர்கள் ‘முட்றையா முட்டளிடரன்’ என்றுதான் அழைப்பார்கள். காரணம் ஆங்கிலம் பேசும் வெள்ளைக்கார வர்ணணையாளர்களுக்கு இருந்த உச்சரிப்பு சிக்கல்.


இப்பொழுது திராவிட சார்பாளர்களின் வாதத்தின்படி இதை அணுகுவோம்.


‘முட்றையா முட்டளிடரன்’ எனும் சொல்லாடலும் முத்தையா முரளிதரனைத்தான் குறிக்கிறது. 


‘முத்தையா முரளிதரன்’ எனும் பெயரும் முத்தையா முரளிதரனைத்தான் குறிக்கிறது.


அதனால் நாம் ‘முட்றையா முட்டளிடரன்’ என்ற சொல்லையே பயன்படுத்துவோம் என்பதாக இருக்கிறது.


• #திராவிட சார்பாளர்கள் இது அறிந்து செய்கிறார்களா அல்லது அறியாமல் செய்கிறார்களா?


இது தெரிந்தே, வேண்டுமென்றே நுண்ணரசியல் நோக்குடன் செய்யப்படும் காய் நகர்த்தல்.


இன்னும் உடைத்து சொன்னால், ‘மேலேயுள்ள வரலாற்று உதாரணங்களை’ எல்லாம் சொல்லி தமிழரை ‘திராவிடர்’ என அழைப்பதுதான் சரி என வாதிடுபவர்களில் 80% பிறமொழியினராக இருக்கிறார்கள். தங்களின் பெயரை தூய தமிழில் வைத்திருப்பார்கள். ஆனால் அதை முகமூடியாக வைத்துக்கொண்டு இந்த நுண்ணரசியலை செய்கிறார்கள். மீதியுள்ள 20% தமிழர்கள்தான். ஆனால் இவர்கள் இந்த வரலாற்று உதாரணங்களில் உள்ள சாமர்த்தியமான வாதத்தை நம்பி ஏமாந்தவர்கள், அதிகார,பண ஆதாயத்திற்காக கட்சிகளை சார்ந்திருப்பவர்கள் என்பதாக இருக்கும்.


ஆனால் தமிழர்களில் 80% கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள் ‘நாங்கள் தமிழர்’, ‘எமது மொழி தமிழ் மொழி’ என்று.


காரணம் இந்த உணர்வு உளப்பூர்வமாக வருவது.


சங்ககால இலக்கியங்களை ‘திராவிட களஞ்சியம்’ என சொல்லும்போது எங்கோ இலங்கையில் பிறந்து,வளர்ந்த எனக்கு ஏன் பொத்து கொண்டு கோபம் வருகிறது? 


காரணம் இந்த சங்ககால இலக்கியம் என்னுடையது.என் இனத்தினுடையது.இது எனது பெருமிதம்.எனது தாய் மொழியின் செழுமையை,வளமையை கூறுவது.எனது வரலாற்று சொத்து. இதுதான் அந்த உளப்பூர்வமான உணர்வு.


• #இது ஒரு அவலம்


உலகமெங்கும் பரந்து வாழும் சில பத்து லட்சம் மக்களையே கொண்ட எங்களுக்கு எங்களை ‘தமிழர்கள்’ என அழைத்து கொள்ளமுடிகிறது.


தமிழின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தங்களை ‘தமிழர்கள்’ என அழைத்து கொள்ளவே திணற வேண்டியிருக்கிறது.

இது ஒரு பெரும் அவலம்.


க.ஜெயகாந்த்

புதன், 18 ஆகஸ்ட், 2021

பாண்டியனோடு உடன்படிக்கை செய்து தன்னாட்சியைக் காப்பாற்றிக் கொண்டே இந்த்ரனை வெல்ல புறப்பட்டான் என்று கூறுகிறார் காளிதாஸர். பேராசிரியர் சங்கரநாரயணன்

 பாண்டியரும் ராவணனும்


ராவணனின் காலத்தில் பாண்டிய மன்னன் வலிமையாக இருந்தமையால் அவனோடு போரிட்டு வெல்ல முடியாத ராவணன் அவனோடு உடன்படிக்கை செய்துகொண்டான் என்று அவர்களுடைய தளவாய்புரச் செப்பேடு கூறுகிறது. 


தசவதனன் சார்பாகச் சந்துசெய்தும் தார்த்தராஷ்டிரர்

படைமுழுதும் களத்தவியப் பாரதத்துப் பகடோட்டியும்


என்று ராவணனோடு சந்து செய்தியையும் மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கு எதிராகப் படைசெலுத்தியமையும் கூறப்பெறுகிறது. இது ஒன்பதாம் நூற்றாண்டில் திடீரென்று வந்துவிடவில்லை. காளிதாஸன் தன்னுடைய ரகுவம்சத்தில் இதனைக் குறிப்பிடுகிறார்.


அஸ்த்ரம் ஹராதா³ப்தவதா து³ராபம் 

யேன இந்த்³ரலோகாவஜயாய த்³ருப்த꞉ .

புரா ஜனஸ்தா²னவிமர்த³ஶங்கீ 

ஸந்தா⁴ய லங்காதி⁴பதி꞉ ப்ரதஸ்தே² . . 6.62 . .


எவரும் வெல்லவொண்ணாத ப்ரஹ்மாஸ்த்ரத்தைப் பாண்டிய வேந்தன் சிவபெருமானிடமிருந்து பெற்றவன் என்பதனால் ஜனஸ்தானத்தை அழித்து விடுவானோ என்றஞ்சி பாண்டியனோடு உடன்படிக்கை செய்து தன்னாட்சியைக் காப்பாற்றிக் கொண்டே இந்த்ரனை வெல்ல புறப்பட்டான் என்று கூறுகிறார் காளிதாஸர். பேராசிரியர் சங்கரநாரயணன்

சனி, 24 ஜூலை, 2021

சங்ககாலத்தில்‌ வாழ்ந்த தமிழர்களின்‌ வாழ்க்கையின் வணிகம்

 செல்வமலி  தமிழ் நாடு -2 


உள்  நாட்டு வணிகம் ! 


ஒரு நாட்டின்‌ வரலாறு  அந்நாட்டை அரசாண்ட மன்னர்களுடைய 

 வரலாறு மட்டும்‌ அன்று, அந்நாட்டில்‌ வாழ்ந்த 

குடிமக்களின்‌ வாழ்க்கை சமூக  வரலாறும்‌ சேர்ந்ததே. உண்மையான வரலாறு ஆகும் . 


சங்ககாலத்தில்‌ வாழ்ந்த தமிழர்களின்‌ வாழ்க்கை 

வரலாற்றில்‌ ஓரு பகுதி வாணிகத்தைச்‌ சார்ந்தது.நெய்தல் தினை வணிகம் பற்றியதே .அவர்களே நெடு நாட்கள் கடற்கரையில் ,கடலுக்கு அண்மையில் வாழ்ந்தார்கள் 


தென்னாடு அதிக பரப்பு மூன்று திக்கும் கடலால் சூழப்பட்டது அதில் நெய்தல் தினை என்னும் கடலின் அருகில் வாழ்ந்த மக்கள் .கடலின் தன்மையை அருகில் இருந்து நெடு நாட்கள் தொடர்ந்து கவனித்து வந்தனர் .. கடலுடன் நெருங்கி இருந்ததால் கடலிடத்தில் இருந்த அச்சன் சிறுக சிறுக அவர்களிடம் இருந்து விலகியது .


கடலுடன் நட்பு  கொண்டார்கள் .அதை அன்பாக நோக்கினார்கள் .கடலும் அவர்களிடம் காதல் பூண்டது 


சிறுக சிறுக  தைரியம் கொண்டு முதலில் கரையோரம் சென்று பார்த்தனர் .பிறகு ஆழ்கடல்கடந்து  சென்று பல நாடுகளைக்கண்டு திரை மீளர்கள் ஆனார்கள் .


அவர்களே பெரு வணிகர்களாகவும் கடல் கடந்த தொடர்பால் ஆயினர் . இதுவே மிக சுருக்கமான நெய்தல் வரலாறு .


அந்தப்‌ பழங்கால வாணிகத்துக்கும்‌ இக்காலத்து 

விஞ்ஞான உலக வாணிகத்துக்கும்‌ பெருத்த வேறுபாடுகள்‌ 

உள்ளன. ஆனால்‌, அந்தப்‌ பழங்காலத்தவர்‌, அக்காலத்து 

 சூழ்நிலைகளுக்கும்‌ தக்கபடித்‌ 

கரை வாணிகத்தையும்‌ கடல்‌ வாணிகத்தையும்‌ நடத்தினார்‌கள்‌. 


அவர்கள்‌ கூட்டாகச்‌ சேர்ந்து “சாத்து அமைத்துப்‌ 

பெரிய வாணிகத்தை நடத்தினார்கள்‌.

 தரை வாணிகஞ்செய்த வாணிகத்‌ தலைவர்‌ மாசாத்துவர்‌ என்று பெயர்‌ பெற்‌ றனர்‌. கடல்‌ வாணிகத்‌ தலைவா்‌ மாதாய்கர்‌ (மாநாவிகர்‌) 

என்று பெயர்‌ கூறப்பட்டனர்‌. அக்காலத்‌ தமிழகத்திலே பல மாசாத்துவர்களும்‌ பல மாநாய்கார்களும்‌ இருந்தார்கள் இப்போதும் இருக்கிறார்கள் .


சங்ககாலத்துத்‌ தமிழரசர்கள்‌ முதலாக அண்மைய மன்னர்கள் வரை  தங்களுடைய நாடுகளில்‌ 

வணிகர்க்கு ஊக்கமளித்து வாணிகத்தை வளர்த்தார்கள்‌; 

அவர்கள்‌ தங்களுடைய நாடுகளில்‌ வாணிகக்‌ கப்பல்கள்‌ 

வந்துபோகவும்‌ ஏற்றுமதி இறக்குமதி செய்யவும்‌ துறைமுகப்‌ பட்டினங்களை அமைத்தார்கள்‌.

 

இராக்காலத்தில்‌  இருளில் கடலில்‌ 

வருகிற கப்பல்கள்‌ திசை தப்பிப்‌ போகாமலும்‌, துறைமுகத்‌ தை அடையாளப்படுத்திக் காட்டவும்‌ கலங்கரை விளக்குகளை அமைத்தார்கள்‌. 


துறைமுகங்களில்‌ உள்ள வாணிகப்‌ பொருள்கள்‌ களவு 

போகாதபடி தாக்கல் காவல்‌ வைத்தனர்‌. வாணிகஞ்‌ செய்து பெரும்‌பொருள்‌ ஈட்டின வணிகப்‌ பெருமக்களுக்கு “எட்டி” என்னும்‌ 

சிறப்புப்‌ பெயரும்‌, “எட்டிப்பூ' என்னும்‌ பொற்‌ பதக்கத்‌தை யும்‌ அளித்துச்‌ சிறப்பினைச்‌ செய்தார்கள்‌


.அப்படி எட்டிப்பாட்டம் வாங்கியர்களே செட்டிகள் ஆனார்கள் .


 தரை வாணிகமும்‌ கடல்‌ வாணிகமும்‌ பெருகவே, அவற்றைச்‌ சார்ந்து 

பயிர்தொழில்‌ வளர்ச்சியும்‌ கைத்தொழில்‌ வளர்ச்சியும்‌ 

பெருகிப்‌ பொருள்‌ உற்பத்தி அதிகப்பட்டது. 

பொருள்‌களின்‌ உற்பத்தியினாலும்‌ வாணிகத்தினாலும்‌ பொருளா தாரம்‌ உயர்ந்து நாடு செழித்து மக்கள்‌ நல்வாழ்வு வாழ்ந்‌ தாரர்கள்‌. நாட்டு மக்களின்‌ நல்வாழ்வுக்கும்‌ நாகரிக வாழ்க்‌ கைக்கும்‌ கலைகள் வளர்ச்சிக்கும் ,கோயில்கள் பெருகவும் வாணிகம்‌ முக்கிய காரணமாக இருந்தது. 


 பண்டைய நாட்களில் கொற்கை, தொண்டி, பூம்புகார்‌, சோபட்டினம்‌ மாமல்ல புரம் அரிக்க  மேடு  முதலான தமிழ்‌ நாட்டுத்‌ துறைமுகப்‌ பட்டினங்களிலிருந்து 

நாவாய்களில்‌ புறப்பட்டுச்‌ சென்ற தமிழ வாணிகர்‌ கிழக்குக்‌ கடல்‌ ஓரமாகவே நாவாய்களைச்‌ செலுத்தி 


நெல்லூர்‌, கலிங்கப்‌ பட்டினம்‌, தம்ரலிப்தி (வங்காள தேசத்‌ துறைமுகப்‌ பட்டினம்‌) முதலான பட்டினங்களுக்குச்‌ சென்றனர்‌. .

பிறகு கங்கையாறு கடலில்‌ .கலக்கிற வாங்க புகர்‌ முகத்தின்‌ ஊடே கங்கையாற்றில்‌ நுழைந்து கங்கைக்‌ கரையில்‌ இருந்த பாடலிபுரம்‌ , 

காசி (வாரணாசி) முதலான அவர்களில்‌ வாணிகஞ்‌ செய்து பெரும் பொருள் ஈட்டினார்கள் .

 

“கங்கை வங்கம்‌ போகுவர்‌ கொல்லோ, 

என்று நற்றிணை (/89:5) கூறுகிறது. 


கங்கைக்‌ கரையில்‌ 

பாடலிபுரத்தில்‌ தமிழர்‌ வாணிகஞ்‌ செய்த போது, கி மு . 

4 ஆம்‌ நூற்றாண்டில்‌ மகத நாட்டையரசாண்ட நந்த 

அரசர்‌, தங்கஞ்டைய தலைநகரமான பாடலிபுரத்தில்‌ கங்கை யாற்றின்‌ கீழே பெருஞ்‌ செல்வத்தைப்‌ புகைத்து வைத்திருந்‌ குதைப்‌ பற்றி  அவர்கள் அறிந்தனர்‌. 


அப்போதைய தமிழ் வணிகர்கள் இந்த நாட்டின் பரந்த பரப்பில் எங்கும் பரவி வணிகம் செய்தனர் .அங்கு நிலவும் செய்திகள் அனைத்தையும் அறிந்திருந்தனர் 

 தமிழக வாணிகரின்‌ மூலமாக நந்த அரசரின்‌ செல்வப்‌ புதையலைத்‌. தமிழ்‌ நாட்டவர்‌ ௮க்‌ காலத்தில்‌ அறிந்திருந்தார்கள்‌. 

மாமூலனார்‌ என்னும்‌ சங்கப்‌ புலவர்‌ தம்முடைய செய்யுளில்‌. நந்தருடைய நிதியைக்‌ கூறுகிறார் 


“பல்புகம்‌ நிறைந்த வெல்போர்‌ நந்தர்‌ 


சீர்மிகு பாடலிக்‌ குழீஇக்‌ கங்கை 


நீர்முகற்‌ கரந்த நிதியங்‌ கொல்லோ ” 


(அகம்‌, 265: 4-6) 


நந்த அரசரின்‌ செல்வப்‌ புதையலைப்‌ பற்றிய இந்தச்‌ செய்‌தியை இந்தச்‌ செய்யுளில்‌ இருந்து அறிகிறோம்‌, வடநாட்டுப்‌பழைய நூல்களில்‌ இந்தச்‌ செய்தி கூறப்படவில்லை,கங்கைக்கரை புதையலைப்பற்றி தமிழ் இலக்கியம் மட்டுமே பேசுகிறது .  


தமிழ வாணிகர்‌ கலிங்க நாட்டிலே போய்‌ வாணிகஞ்‌ 

செய்தார்கள்‌. அந்த வாணிகச்‌ சாத்து கி மு .மூன்று 

நூற்றாண்டிலிருந்து கி .மு., 750 வரையில்‌ நூற்றைம்பது 

ஆண்டுகள்‌ அங்குக்‌ தங்கி வாணிகம்‌ செய்தது. அவர்களு 

டைய வாணிகம்‌ நாளுக்கு நாள்‌ பெருகிச்‌ செல்வாக்கும்‌ 

பலமும்‌ அடைந்தது. 

அக்காலத்தில்‌ கலிங்க தேசத்தை 

யரசாண்ட காரவேலன்‌ என்னும்‌ அரசன்‌ குமிழ வாணிகரால்‌ 

தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்து உண்டாகும்‌ என்று அஞ்சி 

அந்த வாணிகச்‌ சாத்து அழித்து விட்டான்‌. 


அந்தச்‌ செய்தியை அவ்வர௪ன்‌ எழுதியுள்ள ஹத்தி கும்பா குகைக்‌ 

கல்வெட்டெழுத்துச்‌ சாசனத்திலிருந்து அறிகிறோம்‌. 


கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டமுக்கிய  கல்வெட்டு இது  ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது.


 பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது


அதில் உள்ள மிக முக்கிய செய்தி இது ஆகும் 


 எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு மகதநாட்டில் ராசகிருகத்தைத் தாக்கினார். 


யவன (கிரேக்க) மன்னன் திமெத்ரியசுவை மதுரா நகரத்துக்குப் பின்வாங்க வைத்தார்.ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைக் கழுதைகளைப் பூட்டிய ஏர்களால் உழுது அழித்தார் இதில் ஆவா அரசர்கள் யார் என்று தெரியவில்லை 


பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் அல்லது 130 ஆண்டுகளாக  தம் நாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த தமிர (தமிழ?) நாட்டுக் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முறியடித்தார்.என்று பெருமை  கொள்கிறது .


அத்தைய தமிர  சங்காத்தம் எனும் கூட்டணி தமிழ் வணிகர்களின் கூட்டணியாக இருக்கவே சாத்தியம்  உண்டு .


கலிங்கதேசத்தில்‌ வாணிகஞ்‌ செய்த தமிழர்‌ கலிங்க நாட்டுப்‌ பொருள்களைத்‌ தமிழகத்துக்கும்‌ தமிழகத்துப்‌ சாத்துகளைக் 

கலிங்க .நாட்டுக்கும்‌ கொண்டு போய்‌ விற்றார்கள்‌. 

கலிங்கநாட்டிலிருந்து தமிழ்‌ நாட்டுக்குக்‌ கொண்டுவரப்பட்ட முக்‌ யமான பொருள்‌ பருத்தித்‌ துணி. பெருவாரியாகக்‌ . சுலிங்கத்‌ துணி தமிழ்‌ நாட்டில்‌ இறக்குமதியாயிற்று. 


கலிங்‌கத்திலிருந்து வந்தபடியால்‌ அத்துணி கலிங்கத்‌ துணி என்‌.று சிறப்பாகப்‌ பெயர்‌ பெற்றது.

 

பிறகு காலப்போக்கில்‌ கலிங்கம்‌ 

என்னும்‌ பெயர்‌ துணிகளுக்குப்‌ பொதுப்‌ பெயராக வழங்கப்‌ பட்டது. 


சங்க நூல்களில்‌ துணிக்குப்‌ பெயராகக்‌ கலிங்கம்‌ 

என்னும்‌ சொல்‌ வழங்கப்பட்டிருக்கிறது. 


கலிங்க நாட்டு.லிருந்து அக்காலத்தில்‌ தமிழ்‌ நாட்டுக்கு வந்த இன்னொரு பொருள்‌ சந்தனக்‌ கல்‌. “


வடவர்‌ தந்த வான்‌ கேழ்‌ வட்டம்‌.' என்று கொண்டாடப்பட்டிருக்கிறது .


இப்போதைய ஆந்திர நாட்டிலே பேர்‌ போன அமராவதி நகரத்திலே (தான்ய கடகம்‌) சங்க காலத்திலே தமிழ்‌ வாணிகர்‌ சென்று வாணிகஞ்‌ செய்தனர்‌. 


அங்கிருந்த அமராவதி பெளத்தக்‌ 

தூபி இ.மு. 200 இல்‌ தொடங்கி கி.பி. 200 வரையில்‌ 

கட்டப்பட்டது. 


அந்தக்‌ கட்டிடத்தைக்‌ கட்டுவதற்குப்‌ பலர்‌ 

பல வகையில்‌ உதவி செய்தார்கள்‌. 

அப்போது அங்குவாணிகஞ்‌ செய்து கொண்டிருந்த தமிழ்‌ வாணிகரும்‌ அக்‌ கட்டிடம்‌ கட்டுவதற்கு உதவி செய்தனர்‌. 

தமிள (தமிழ)கண்ணன்‌ என்னும்‌ வாணிகனும்‌ அவனுடைய தம்பியாகிய 

இளங்கண்ணனும்‌ அவர்களுடைய தங்கையாகிய நாகையும்‌ 

அமராவதி தூபி கட்டுவதற்கருக்‌ கைங்கரியம்‌ செய்துள்ளனர்‌ . 


கண்ணன் என்ற பெயர் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்து இப்போது வரை தொடர்ந்து தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது . இதுவே தமிழின் சீரிளமைக்கு ஒரு சான்றாகும் .


இந்தச்‌ செய்தி அங்கிருந்து கிடைத்த ஒரு கல்‌ சாசனத்தினால்‌ 

தெரிகிறது. 8$ அடி உயரமும்‌ 8 அடி. 8 அங்குல அகலமும்‌ 

உள்ள ஒரு கல்லில்‌ பிரஈமி எழுத்தினால்‌ எழுதப்பட்ட ஒரு சாசனம்‌ இதைக்‌ கூறுகிறது. 


இப்போது இந்தக்‌ கல்வெட்டு  இங்கிலாந்து நாட்டிற்குக்  கொண்டு போகப்பட்டு அங்கு இலண்‌டன்‌ மாநகரத்துக்‌ காட்சி சாலையில்‌ வைக்கப்பட்டிருக்கிறது. 


இதனாலும்‌ கலிங்க நாட்டில்‌ தமிழர்‌ வாணிகஞ்‌ செய்த செய்தி அறியப்படுகிறது.” 


 இவாறெல்லாம் பரந்த பாரதமெங்கும் பரவி  உள்  நாட்டு வணிகம் செய்த  அந்த இனம் எங்கே போனது  ? என்றால் அதுவே இப்போது உள்நாட்டு மீனவர் அல்லது செம்படவர் எனும் சிவன் படையினராக மிஞ்சி இருக்கிறார்கள் .


நெடுங்கடல் தாண்டி இங்குவணிகம் செய்யவந்த பிறகு நம்மை ஆண்டவர்கள்  ஆன  அயல் நாட்டவர் அனைவரும் தங்களின் முக்கிய எதிரியாக இங்கு நினைத்தது இங்கு வாழ்ந்த சிறந்த மாலுமிகளான தொல் தமிழ் நெய்தல் நிலத்தவரை  மட்டுமே அவர்களின் திறமை க்குறித்து அஞ்சினர் .அவர்களை அழித்தால் இன்றி தங்கள் வணிகம் வளராது என்று புரிந்திருந்தனர் .

.அது மூர்கள் எனும் முகமதியர் முதல் அத்தனை ஐரோப்பியர்களுக்கு பொருந்தும் 


.அவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு நசுக்கப்பட்ட அவர்கள் பலவாறு  சிதறினர் பல்வேறு வேறு பெயர்களில் ஒளிந்து கொண்டனர் 


.அப்படியும் தைரியமாக தங்களை வெளிப்படுத்தி வாழ்ந்தவர்கள் இப்போதைய உள் நா ட்டு மீனவர்கள்  இதுவே கடற்கரை ஓரம் வாழும் மீனவர்களுக்கும் பொருந்தும் .இப்போது உள்நாட்டு வணிகத்தைப்பற்றிக்கூறுவதால் உள்நாட்டு பரதவரைக் க்குறிப்பிடுகிறேன்  கடல்பரதவரை ப்பற்றி முழுக்க முழுக்க பின்னல் வருகிறது .


உள்நாட்டு பரதவரில்  செட்டிகள் உண்டு மணியக்காரர் உண்டு ,நா ட்டார்கள் உண்டு நாயக்கர்கள் உண்டு .

அவர்கள் பொதுவாக இப்போது சிவன்படையினர்  என்றும் பர்வத ராஜகுலம் என்றும் இப்போது அ டையாளப்படுத்தப்படுகிறார்கள் .


இதைபற்றி  சொன்னால் பெரிய கதை நீளும் இப்போதைக்கு இதை மட்டும்  இப்போது குறிப்பிட்டு தமிழ் நட்டு வணிக வரலாற்றிற்கு திரும்புவோம் .அடுத்து தொல்  தமிழ் நாட்டின் துறைமுகங்கள் பற்றி காண்போம் .


அண்ணாமலை சுகுமாரன் 23/7/2021

சனி, 10 ஜூலை, 2021

துபாய்கு ஏற்றுமதி

 50 வகையாக   சர்வதேச  இயற்கை வேளாண்மை  சான்றிதழ் பெற்ற பொருட்கள்   துபாய்க்கு தொடர்ந்து  ஏற்றுமதி செய்து வருகிறோம்..


இயற்கை வேளாண்மை செய்யும் உழவர் கள் உங்களுக்கு தெரிந்தால் எங்களுக்கு தெரிய படுத்தவும். அவர் பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கி கொள்கிறோம்.


 நன்றி  நம்மண் 


தொடர்புக்கு : 

 

info@nammann.com,

nammannorganic@gmail.com,

www.nammann.com

Whatsapp : +919092098811,  9787305169


நன்றி.

புதன், 16 ஜூன், 2021

சோதிடம் சார்ந்த நூல்களின் பெயர்கள்:


 நவக்கிரக தர்க்க சோதிடம்.

சோதிட ரத்தினக் களஞ்சியமாலை .

சங்கராசாரியர் சோதிடம்.

இரேகை சாத்திரம்.

நவக்கிரக சிந்தாமணி.

தொடு குறி சாத்திரம்.

சகாதேவர் தொடு குறி சாத்திரம்.

ஆருட நூல்.

ஆஸ்தான கோலாகலம்.

சாதக பாரி சாதம்.

சீதா சக்கரம்.

மரண கண்டிகை.

அலகு நூல்.

சூடாமணி உள்ளமுடையான்.

வானியல் (அண்டத்தியற்கை யோசனை)

கிரகண கணிதம்.

பஞ்சாங்கம்.

சர நூல்.

சோதிடம் கணிப்பு.

சோதிடம் பலன் கூறுதல்.

சோதிடம் – நாடி.

சோதிடம் – முகூர்த்தம்.

கனவு – நிமித்தமும்.

வால்மீகர் தீப சூத்திரம்.

சந்தனக் கயறு .

பஞ்சபட்சி சாத்திரம்.

கவுளி காதல் சாத்திரம்.

சகாதேவர் நூல்.

நட்சத்திர ஆருடம்.

பல்லி சாத்திரம்.

சாக சந்திரிகை .

அட்டவர்க்கப் பலன் –

கனவுகளின் பயன் .

மரணக் குறிப்பு.

ஒட்டியம்.

சத்தியாரூடம்.

சோதிட அரிச்சுவடி .

சோதிடக் களஞ்சியம்.

சோதிட க்ரக சிந்தாமணி.

சோதிடச் சுருக்கம்.

சோதிடச் செய்திகள்.

சோதிட சங்கிரக சாராவலி.

சோதிட சங்கிரகம்.

சோதிட சந்திரகாவியம்.

சோதிட சாஸ்திரம்.

சோதிட சிகாமணி.

சோதிட சிந்தாமணி.

சோதிடத் திரட்டு .

சோதிட தசப் பொருத்தம்.

சோதிட நூல்.

சோதிட நூற்குறிப்பு.

சோதிட நூற் றிரட்டு.

சோதிட பாவங்கள்.

சோதிட பிந்து .

சோதிடம் பல சாத்திரம்.

சோதிடம் பல திரட்டு.

சேரிடம் பல மாலை .

சோதிடம் யோக பலன்.

சோதிட மஞ்சரி .

சோதிடரத்தினம் .

சோதிட ரத்தினமாலை .

சோதிட லட்சணம்.

சோதிப்பத்து.

அங்கத்துடிப்புகளும் பலன்களும்

அதிர்ஷ்ட நியுமரலாஜீ ஜோதிடம்

அனுபோக ஜாதக ரகசியம்

ஆயுள் பாவங்கள்

எண்கணித சோதிடத்தில் கர்ம எண்

எளிய ஸ்ரீஜோதி முழுமையான நூல்

க்ரந்தாகூர சமஸ்க்ருத பாலபாடம்

கர்ம எண்

காலக்கண்ணாடி

கிரக அவஸ்தைகள்

குதிரை பந்தய லாவணி

கெளசிக சிந்தாமணி

கேரளா சோதிடம்

கைரேகை ஜோதிட ஞானம்

சந்தான தீபிகை

சந்திரகாவியம்

சாதக கணிதாமிர்தம்

சிற்ப சாத்திர செய்தி அடைவு

சுந்தரசேகரம்

சூடாமணி உள்ள முடையான்

சோதிட அகராதி

சோதிட ஆனந்த களிப்பு

சோதிட கோட்சார சிந்தாமணி

சோதிட வாசகம் 2

தமிழ் மாத பிறந்தவர்களின் பலன்கள்

தஜ க நீலகண்டேயம்

நியூமரலாஜீ

நீயூமரலாஜீ 1

பஞ்சாங்க கணனம் – 1

பஞ்சாங்க கணனம் – 2

பஞ்சாங்க கணனம்

பீரங்கி முனிவர் ஜோதிடம் 300

பிரஞ் ஞான தீபிகை

புத்ரபாவம்

புலிப்பாணி சோதிடம் -300

பெண்கள் ஜாதகமும் பலனும்

பெரிய சோதிட சாதக கணித பாலசிட்சை

பெரிய ஜோதிட சில்லறைக்கோர்வை

மச்சமுனி ஜோதிடம்

மனையடி சிற்ப சிந்தாமணி

ஜாதக பாஸ்கரன்

யோகப் பொருளகராதி

ராசி நட்சத்திரங்கள்

ராமசேகரம்

வானவியல் மூலமும் வரலாறும்

விதி விளக்கம்

விவாக வியாக்கினம்

வீமகவி

ஜாதக உண்மை திறவுகோல் – 2 ம் பாகம்

ஜாதக தெசாரிஷ்ட நிவாரணி

ஜெயமுனி

ஜோதிட திறவுகோல்

ஜோதிட பால போதினி

ஜோதிட வாசகம்

ஜோதிட பேரகராதி

ஜோதிடராகலாம்

ஜாதக கணித சாகரம்

தொகுதி 1 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 2 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 3 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 4 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 5 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 6 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 7 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

நவரச சுருதிகள்

பாராசரியம் திசா புக்தி பாடல்கள் மட்டும்

கௌசிக சிந்தாமணி

ஜோதிட ரத்னா திரட்டு

வீமகவி மூலமும் உறையும் 1937 படைப்பு

வர்க்க பலன் தரும் யோகங்கள்

பணமழை

பிரம்மரிஷி வாக்கியம்

பஞ்சாங்க ரகசியம்

ஜாதக சாகரம் தொகுதி - 1

ஜாதக சாகரம் தொகுதி - 2

பராசரர் ஹோரை பாவகபலன்

விவாக விஞ்ஞானம்

களத்திர பாவம்

ஜோதிடமும் மருத்துவமும்

வழிபாடும் பரிகாரமும் ,

இறையாற்றல் யந்திரங்கள் ,

ஸ்ரீ சுயம்வர பார்வதி பூஜை ,

தன ஆகர்ஷன குபரே யந்திர மந்திர பூஜை

திருமணப்பொருத்தம் ,

செவ்வாய் தோஷமும்,பொருத்தமும்

புத்திர பாவம்

ஜோதிட விதி விளக்கம்

ஜோதிட யோகாதி யோகங்கள் தொகுதி - 1

ஜோதிட யோகாதி யோகங்கள் தொகுதி - 2

ஜோதிட யோகாதி யோகங்கள்தொகுதி

நல்ல நாள் பார்ப்பது எப்படி

அனுபோக ஜாதக ரகசியம்

30 நாட்களில் ஜோதிடம் எளிதாக கற்ப்பது எப்படி

ஜோதிஷமும் சங்கீதமும்

கணித முருக சேகரம்

தொழில் மலர் 1௦ ஆம் பாவம்

ஜோதிஷ ஆச்சாரியா முகூர்த்த சித்தாந்தம்

அனுபோக ஜாதக ரகசியம்

பராசரர் ஹோரை பாவக பலன்கள்

களத்ர பாவம்

ஜோதிடத்தில் யோகாத யோகங்கள் தொகுதி RS

ஜோதிடத்தில் யோகாதியோகங்கள் தொகுதி

ஜோதிட விதி விளக்கம்

புத்திர பாவம்

ஜோதிட ரத்தினா திரட்டு

நல்ல நாள் பார்ப்பது எப்படி

ஜோதிடமும் மருத்துவமும்

குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர்

நல்ல நாள் பார்ப்பது எப்படி

ஜோதிடமும் மருத்துவமும்

குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர்

திருமண யோகம்

ஜாதக தேஷ் மார்க்கா

ஜோதிடம் என்றால்

மணிகண்ட கேரளம்

இனிய நல்வாழ்க்கை வழி காட்டி

கிரகங்களும் உணவு வகைகளும்

சுலபமாக ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் RS

நவ கிரகங்கள் நின்ற ஸ்தான பலன்கள்

ஜாதகமும் ஜோதிடமும்

களத்திர பாவமும் இல்வாழ்க்கையும்

உங்கள் வருவாய் யோகம் எப்படி

உங்கள் ஜாதகப்படி என்ன உத்தியோகம் பார்க்கலாம் –80

12 ராசிக்காரர்களின் காமம் காதல் வாழ்க்கை –

மச்சங்களின் அதிர்ஷ்ட பலன்கள்

ஜோதிடத்தில் மங்கையர் ஜாதக மகிமை

உங்கள் ஜாதகம் பேசுகிறது


பஞ்சாங்கம்


துன்மதி வருட சபரி பஞ்சாங்கம்

துன்மதி வருட ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம்


எண் கணிதம்


வெற்றிக்கு வழி காட்டும் அதிருஷ்ட எண்கள்

அதிருஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள்


துருவ கணிதம்


சகோதர தத்துவநாடிதுருவகணிதம

ஜோதிட பலன் தரும் துருவ கணிதம்

ஜோதிடமும் நடைமுறை வாழ்க்கை துருவம்

தெயவங்களின் ஜாதகமும்

வீமகவி மூலமும் உறையும் 1937 படைப்பு


நாடி :


கார்க்கேயர் நாடி

சகாதேவநாடி

சகாதேவர் சோதிட நாடி

பதிணென் சித்தர்களின் நாடி சாஸ்திரம்

சப்த ரிஷி நாடி கன்யா லக்னம்

சப்த ரிஷி நாடிமேஷ லக்னம்

சுகர் நாடி

நாடி ஜோதிடம்

நாடிச் சக்கரம்

புஜண்டர் நாடி முதற் பாகம்

கந்தர்நாடி

பிறவியை அறியும் பிருகு நாடி பலன்

பிரசன்ன நாடியும் பிறவியின்பலன்களும்

சூரியசந்திர நாடிமுறையில் தொழில் நிர்ணயம்

ஜீவன காரகன் சனி

நாடி ஜோதிட விதிகள்

நாடியில் பிரசன்னம்


வாஸ்து :


வாஸ்து ஐஸ்வர்யங்கள்

வர்த்தக வாஸ்து

வரைபடமும் வாஸ்தும்

வாஸ்து களஞ்சியம்

சிற்ப சாஸ்திர மெனும் மனையடி

வாஸ்து டிப்ஸ்

இனியவை இருபது வாஸ்து

மனையியல் வாஸ்து


பிரசன்னம் & ஆரூடம் :


அகத்தியர் ஆரூடம்

அகத்தியர் பஞ்சபட்சி ஆரூடம்

அனுபோக ஆரூட சிந்தாமணி

அஷ்டதிக் ஆருடம்

ஆஞ்சநேயர் ஆரூடசாஸ்திரம்

ஆரூட அலங்காரம்

கந்தராரூடம்

சாமக்கோள் ஆரூடம்

நட்சத்திர ஆரூட சிந்தாமணி

பட்சி ஆரூடம்

பாய்ச்சிகை ஆருடம்

வராகி ஆருடம்

வால்மீகர் ஆரூடசாஸ்திரம்

வான்மீகர் ஆரூடம் – 40

ஜெயமுனிவர் ஆரூட சாஸ்திரம்

ஸ்ரீ கணேச ஆரூட தீபிகை

ப்ரசன்ன ஆரூடம்

ஹோரா பிரசன்ன ஜோதிடம்

மச்ச முனி ஆருடம்

புலிப்பாணி கஸ்ட நாஸ்ட ஜாதக கணிதம்

அனுபவ ஆருடம்

ஜாதகம் இல்லாதவர்கள் ஜாதகம் பார்ப்பது எப்படி


சாஸ்திரங்கள் :


கூப சாஸ்திரம்

வராகர் ஒரா சாத்திரம்

அகத்தியர் தற்க சாத்திரம்

கப்பல் சாத்திரம்

களவு காணும் சாஸ்திரம்

குருநாடி சாஸ்திரம்

கெ வுளி சாஸ்திரம்

சர்வ பிராயண சாஸ்திரம்

சாமுத்ரிகா லட்சணம்

சாஸ்திரமும் மழையும்

அகத்தியர் சாமுத்ரீகா லட்சணம்

தும்ம நூல் சாஸ்திரம்

நந்தி நூல் ரேகை சாஸ்திரம் – 110

பாச்சிகை சாஸ்திரம்

பூமிசாஸ்திரம்

மச்ச சாஸ்திரம்

மனைக் குறி சாஸ்திரம்

முக்கால ரேகை சாஸ்திரம்

ருது நூல் சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம்

விவாக சாஸ்திரம்


பஞ்ச பட்சி:


சுக்கும பஞ்ச பட்சி

நிமிஷப் பஞ்சபட்சி

பஞ்ச பட்சி

சுருக்கு பஞ்சபட்சி


ஆன்மிகம் மற்றும் சாஸ்த்திரம்


ஆகாமிய கர்மா

திண்டுக்கல் மாவட்ட பரிகார ஸ்தலங்கள்

சைவ ஆகம சாரமும் சிவ வழிபாட்டு முறைகளும்—RS

நவதிருப்பதி வழிகாட்டி

அறியாதவை ஆனால் அறியக் கூடியவ

தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதும் செய்யக்

கூடாததும் பழக்க வழக்கங்கள்

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பரிகார நூல்

விதுர நீதி

108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டி

சனி பகவானும் பரிகாரமும்

சர்வ தேவதா வசியம்

ஸ்ரீ விநாயகர் கவசம்

அனுமன் சாலிசா

கனக தாரா ஸ்தோதறம்

குபேர லக்ஷ்மி

பைரவர் வழிபாடு

அம்மன் டிக்ஷன்ரி

தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்

நவ திருப்பதி


பரிகாரகம்


பதினெண் சித்தர்களின் பரிகார தொகுப்புகள்

அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள்

அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் RS

அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் 3

சிவா மஹா மந்திரம்

நவக்கிரக மஹா மந்திரம்

27 நட்சத்ர காயத்ரி மந்திரங்கள்

செவ்வாய் தோஷம்

ஸ்ரீ குரு பகவான் வழிபாடு சுலோகம்

சங்கடம் தீர்க்கும் சனி பகவான்

தினசரி வழிபாட்டு துதிகள்

மகத்தான எளிய தமிழ் மந்திரங்கள்

எளிய தெய்வப் பரிகாரங்கள்


விடுபட்ட நூல்கள் :


ஜ்யோதிஷ ஞான போதினி

சிற்றம்பலசேகரம்

சோதிடகளஞ்சியம்

ஸ்ரீபதி ஜாதக சந்திரிகை விளக்கம்

அருட் கொடி சிற்ப சாஸ்திரக் கண்ணாடி

காக்கையர் சிற்பம்

சாத காலங்காரம்

குரு – சிஷ்ய சம்வாத ஹஸ்த இரேகை

அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்

சினேந்திர மாலை

அநு பவ ஹஸ்த ரேகை சாஸ்திரம்

பெரிய வருஷாதி நூல்

சோதிட அரிச்சுவடி முதல் பாகம்

நந்தி தேவர் சோதிடமர்மம்

ஜாதக கணிதம் முதல் பாகம்

அனுபவ கை ரேகை விஞ்ஞானம்

கைரேகை விளக்கம்

சோதிட பிரச்சாரம்

சோதிட பராக்கிரமம்

கைறேகைக் களஞ்சியம்

ஜாதக ராஜ மனோரஞ்சிதம்

ஜோதிட ஆராய்சி திரட்டு

கைரேகைக் கலை

சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி

செவ்வாய், 15 ஜூன், 2021

மெகஸ்தெனிஸ் நூல் இன்டிகா தொடர்பான பாண்டியர் வரலாற்றுக்கு என் விளக்கக் குறிப்பு

 இச்செய்தி  திரு செந்தில் வேல் அவர்கள் இட்ட பதிவு  மெகஸ்தெனிஸ் நூல் இன்டிகா தொடர்பான பாண்டியர் வரலாற்றுக்கு என் விளக்கக்  குறிப்பே . 









பண்டேயா - பாண்டிமா தேவி 

தடாதகைப் பிராட்டி. 


        இச்செய்தி இன்டிகா என்ற நூலில்  கிமு 320 அளவில் எழுதப்பட்டுள்ளது .  சந்திரகுப்த மௌரியரின் அவைக்கு வந்த மெகஸ்தனிஸ் எழுதிய நூல் அது . இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும் அவர் பாண்டிய நாட்டைப்பற்றிய பல செய்திகளைச் சொல்கிறார் . பெண்ணால் ஆளப்பட்டது என்பது அவற்றுள் ஒன்று . இதே காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அர்த்த சாஸ்திரம் தமிழகத்தின் வணிக மதிப்பை மட்டுமே சொல்கிறது . ஆனால் இது பிற்காலத்தில் எழுதப்பட்டது என்றே ஆய்வாளர் மதிப்பிடுகின்றனர் . ஆனால் , மெகஸ்தெனிஸ்  இந்தியா வருவதற்கு முன்பே தமிழகத்தைப்பற்றி மிகுதியாகக் தெரிந்து வைத்துள்ளார் என்று புரிகிறது . ஏனெனில் மகதத்தை கிரேக்கர் அறிவதற்கு முன்பே அவர்கள் தமிழகத்தை அறிவார்கள் .


      கிமு 1000 அளவிலேயே சாலமன் அரசர் காலத்திலிருந்தே கிரேக்கர் பொனீசியர் வழியே தமிழகத்துடன் வணிகம் செய்து வந்தனர் . கிமு 500 அளவிற்குப் பிறகு கிரேக்கர் நேரடி வணிகம் செய்தனர் . மிளகு  ,  முத்து  ,  சந்தனம்  , ஏலம் வணிகத்தில் கடல் கொள்ளாத பாண்டிய நாட்டுத் துறைமுகங்களே பெரும் பங்காற்றின  .  கொற்கை அப்போது பெரு நகரமாக  --  துறைமுகமாக இன்னும் மேற்கே பலகாத தொலைவு பரந்திருந்தது  .   பெருநகர் புகார்  -- காவிரிப்பூம்பட்டினம் போல   பரந்து விரிந்த நகரம் .  ஆதிச்சநல்லூர் பல நூறு ஆண்டுகள் கொற்கையின  இடுகாடாக இருந்த இடமே . அத்தகைய  பெருநகரம் இல்லாமல் ஆதிச்சநல்லூர் போன்ற 113 ஏக்கர் விரிந்த இடுகாடு இருக்க முடியாது  . மேலும் பல்வேறு  உலக இனமக்கள் அங்கு தாழிகளில் புதைக்கப்பட்டிருந்த கரணம் அதுவே . 


        எனவே ,  பாண்டிய நாடு கடல் வணிகத்தால் மேலைநாடுகளில் புகழ் பெற்றிருந்தது . கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஆண்ட சுமேரிய  அசூர் பணிபால் என்ற மன்னன் ஏடுகளில் பாண்டியநாடு பாடே என்றும் , தலைநகர் கூடல் கூடே என்றும் குறிக்கப்படுவதாக ரொமிலா தாபர் குறிப்பிட்டு பாண்டியரின் பெருமைக்கு அவர்கள் நாகரிகப் பாங்கே காரணம் என்கிறார் .  பாண்டிய நாட்டுடன் தங்களுக்குரிய நட்புறவால் தோன்றிய மரபுச் செய்திதான் கிரேக்கர் அறிந்திருந்த பாண்டேயா கதை .  கிரேக்கர் தங்களுக்குள் இத்தகைய தொன்மத்தைப் பெற்றிருந்தும் தெளிவாகிறது . இதில் வரும் கிராகிளிஸ் கிரேக்க நாட்டு வீரர் அல்ல . கிரேக்கர் தாங்களறிந்த எல்லா வீரர்களையும்  ஹர்குலிஸ்  ,  ஹிராகிளிஸ் என்று ஒப்பீட்டுப் பெயர் கொடுத்து அழைப்பர் . அத்துடன் அல்லி அரசாணி நாடோடிப்  பாடல்  கதை  ,  அர்ஜூனன் பிற்காலக் கதை  ,  பாண்டிய நாட்டின் நமக்குத் தெரியாத மறந்துபோன பெரு வீரரான மன்னன் வரலாறு  ,  பேரரசி தடாதகைப் பிராட்டி வரலாறு ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை . தடாதகை வரலாற்றைத் தமிழர் தொன்மமாகத் தொடரவிட்டிருந்தால் தமிழர் வரலாற்றுத் தொன்மம் ஆகி இருக்கும் .


       மதுரை மீனாட்சியை பிராமணியப்படுத்த தடாதகையார் வரலாற்றை அவருக்கு மூன்று  மார்பகங்கள் இருந்தன என்ற அபத்தப்  புராணக்  கதையாக மாற்றி பிராமணீயப் புராணிகர்கள் வரலாற்றை அழித்துவிட்டனர் . தடாதகை ஆணுக்குச் சமமான மறக்குலப்பெண் ஆகவே நாணம் அறியாதவர் அவர் எந்த ஆண்டவனைக் கண்டு நாணம் அடைகிறாரோ அப்போது பெண்மை பெறுவார் என்பதே உண்மைத் தமிழரது  தொன்மமாக இருக்க முடியும் . தடாதகை படைநடத்திச் சென்ற இடங்கள் அவரது தொன்மக் கதையில் உள்ளன . அதன் வருணனை கடல் கொண்ட பாண்டிநாட்டின் இலங்கை உட்பட கிழக்கு நிலப்பகுதியே என்பதில் ஐயமில்லை . அப்போது இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே சதுப்பு நிலங்களும் , காடுகளும் , மணற்பாங்கான பாலைகளும் இருந்தன என்று தெரிகிறது  .  பாண்டிச்சேரிக்குக் கிழக்கில் கடலில்  அணந்துபோன எரிமலை வாய்கள் இருப்பதாக கடற்தரை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர் . அத்தகைய பெருவீரப் பெண்மணியான தடாதகைப் பிராட்டியையே பாண்டேயா என்று மெகஸ்தெனிஸ் குறிப்பது  என்பது என் கருத்து  . அவரது தந்தை புகழ் பெற்றதொரு மாமன்னர் ஆக இருக்க  வேண்டும் . மெகஸ்தனிஸ் இன்டிகா  குறிப்பின் அடிப்படை இதுதான் . தடாதகைப் பிராட்டியே பண்டேயா என்ற பெயரில் மெகஸ்தெனிஸ் குறிக்கிறார் . 


     இன்னொரு செய்தி :  சங்க காலப் பாடல்களைத்  தங்கள் அரசர்கள் , தங்கள் நாட்டு நலம் , தமக்குப் பிடித்த  பாடல்  , தமக்குப் பெரும்புலவர் என்று தோன்றிய சிலர் என்றில்லாமல் ,  தொன்மையான படல்களையும் ,  திணை துறை என்ற வேறுபாடு இன்றி எண்ணிக்கை  பார்க்காமல் அப்போது கிடைத்த அனைத்துப் பாடல்களையும் பல தொகுதிகளாகத் தொகுத்து வைத்திருந்தால் பழம்பாடல்கள் அழியாது காப்பாற்றப் பட்டிருக்கும் . தமிழக வரலாறு விளக்கம் பெற்றிருக்கும்  . 

பூர்ண சந்திர ஜீவா முக நூலில்

சூன் -16, சின்ன மருதுவின் "ஜம்புத்தீவு பிரகடனம்"

ஜே.கோர்லே என்னும் ஸ்காட்லாந்தியர் 1813 ஆம் ஆண்டு எழுதிய "MAHRADU" என்ற இந்நூல், இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த ஆங்கில நூலாகும். மருதரசர்கள் 1801 யில் மறைந்த பின்பு 

12 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த நூலாகும். மருதரசர்களின் வரலாற்றை பதிவு செய்த நூல்களில் மிக பழமையான நூல். 


சின்ன மருதுவின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அறிக்கையை முழுமையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக் கிறது. இந்த அறிக்கையைக் கி.பி. முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலா வின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்காகஸ் என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் ஒப்பாக சின்ன மருதுவின் சுதந்திரப் பிரகடனத்தை ஒப்பிடுகிறார்.


அந்த ஆங்கில நூலில்  14 முதல் 26 வரை உள்ள பக்கங்களில் பதிவிடப்பட்ட சின்ன மருதுவின் ஜம்புத்தீவு பிரகடனத்தின் தமிழாக்கத்தின் பகுதியை தமிழ்க் கூறும் நல்லுலகின் பார்வைக்கு வைக்கிறேன். இந்த ஆங்கில நூலை தமிழில் தந்தவர் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர், 

பேரா நா.தர்மராசன் அவர்கள் ஆவார். 


ஜே.கோர்லேவின் "MAHRADU"  

நூலில் இருந்து.....

--------------------------------------------------------

1800 ஆம் ஆண்டில் திப்பு மரணமடைந்து மைசூரைக் கைப்பற்றிய பின்னர் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு எல்லா திசைகளிலும் மனித நேயத்துக்கு எதிரான முறையில் தன்னை விஸ்தரித்துக் கொண்டிருந்தபொழுது, சிற்றரசர்கள் ஒவ்வொருவரையும் அழித்த பிறகு, அவர்களுடைய உடைமைகளை தான் கைப்பற்றியதோடு, வீரர்களை கொள்ளையடிக்க அனுமதித்த காலத்தில் மருது என்ற பாளையக்காரர் வாழ்ந்தார். அவர் பழமையான கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் முன்னோர்கள் இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் மதுரைப் பிராந்தியத்தில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய ஒரு பகுதியை ஒட்டிய கணிசமான ஒரு பிரதேசத்தை மூதாதையர்களிடமிருந்து பெற்றிருந்தனர்.


அரசுகளும், பேரரசுகளும் சரிந்து கொண்டிருக்கிற காலத்தில் வறுமை மற்றும் துன்பத்தால் மருது பரம்பரையில் படிப்படியாக வளம் குன்றியது. மருது சிறந்த பண்பாளர் கண்ணியமானவர். கிழக்கிந்திய கம்பெனியுடன் (இந்தியாவில் அவரது அரசுகளுடன் என்று குறிப்பிடுவது பொருந்தமானது) பல போர்களில் அவர் ஈடுபட்டார். ஒவ்வொரு சண்டையிலும் அவர் தோல்வியடைந்தாலும் கம்பெனி இராணுவத்திற்கு வெற்றி சுலபமாகக் கிடைக்கவில்லை. கடைசியில் கம்பெனிக்குக் கப்பம் கட்டுகின்ற தாழ்வு நிலைக்குத் தள்ளப்பட்டார். பிறகு கம்பெனி அரசாங்கம் அவருடைய ஆட்சிப் பிரதேசத்தைக் குறைத்தது. அதிகமான கப்பம் வசூலித்தது. அவமதிப்பான ஆணைகளை அனுப்பியது மற்றும் கொடுங்கோன்மையான இதர வழிகளையும் கடைப்பிடித்தது. மருது தன்னுடைய முன்னோர்களின் அதிகாரத்தை இழந்து அவர்களின் நிழலாக மாறினார்.


மருது, தன்னுடைய படிப்படியான வீழ்ச்சியைப்பற்றி அடிக்கடி சிந்தித்தார். பொதுமக்களும் நாள்தோறும் புகார் செய்தார்கள். அவருடைய சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றாலும் அதை மறுபடியும் பெறுவதற்கு மற்றொரு முயற்சியை செய்ய அவரால் முடியாது. தன்னுடைய கெளரவத்தை சிறிதும் குறையாத அளவில் மரபுரிமையாக தன்னுடைய சந்ததியினரிடம் அவர் ஒப்படைக்க வேண்டும் என்று அவருடைய மதமும், கல்வியும் கற்பித்திருந்தன. திப்புவின் மறைவிற்குப் பிறகு அவரது வலிமையான குடும்பம் மற்றும் நாட்டின் எல்லா அரசர்களும் ஆங்கிலேயர்களின் காலடியில் கிடப்பதைப் பார்த்தார். ஒரு கெட்ட நேரத்தில் மருது பின்வரும் பிரகடனத்தை எழுதினார். கோட்டைகளின் முன் வாயில்களிலும் நாட்டிலுள்ள பொது இடங்களிலும் அதை ஒட்டச் செய்தார்.


"நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரகடனத்தை கவனமாகப் படிக்க வேண்டும். 


ஜம்பு தீபத்திலுள்ள எல்லாச் சாதியினர், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் முசல்மான்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.


கர்நாடகத்தின் அரசராகிய முகம்மது அலி நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர் களுக்கு இடத்தைக் கொடுத்து இப்பொழுது விதவையைப் போல ஆகிவிட்டார். ஐரோப்பியர்கள் தங்களுடைய வாக்குறுதியை மீறி இந்த நாட்டைக் கைப்பற்றி விட்டார்கள். அவர்கள் இங்கு வசிப்பவர்களை நாய்களாக்க் கருதி அவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள். மேலே குறிப்பிட்ட சாதியினரிடம் ஒற்றுமை யில்லை. நட்புணர்ச்சியில்லை. சுதேசி அரசர்கள், ஐரோப்பியர்களின் மோசடி களைப் புரிந்து கொள்ளாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்து நாட்டை முற்றாக அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள்.


இந்த இழிபிறவிகளால் ஆளப்படுகின்ற இராஜ்ஜியங்களில் வசிப்பவர்கள் ஏழைகளாகிவிட்டார்கள். வயிற்றுக்குச் சோறில்லை. அவர்கள் துன்பப்பட்டாலும் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு மனிதன் ஆயிரமாண்டுகள் வாழ்ந்தால் கூட முடிவில் மரணம் வருவது நிச்சயம். கர்நாடக நவாப், திருமலை நாயக்கர் பரம்பரையில் விசுவநாத நாயக்கர் (தஞ்சாவூர்) ஆகியோர் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் சிறிதும் பாதிக்கப்படாதபடி தங்களது பரம்பரை உரிமையைப் பெறுவார்கள். அவருடைய இராஜ்ஜியங் களில் ஐரோப்பியர்களின் அதிகாரம் ஒழிந்து போவதால் நவாப்புகள் ஆட்சியில் இருந்ததைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியும்.


இழிபிறவிகளை ஒழிப்பதற்கு ஒவ்வொரு பாளையத்திலும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள எல்லோரும் ஆயுதங்களோடு ஒன்று சேர வேண்டும். அப்பொழுது ஏழைகளுக்கும் துன்பமடைந்தவர் களுக்கும் உணவு கிடைக்கும். ஆனால் யாராவது இந்த இழிபிறவிகளின் ஆணைகளை நிறைவேற்றி நாய்களைப் போல மகிழ்ச்சியடைந்தால் அவர்கள் கருவறுக்கப்படவேண்டும். இந்த இழிப்பிறவிகள் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து கொண்டு இந்த நாட்டை எப்படி அடிமைப்படுத்தினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே, பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் முசல்மான்கள் ஆகியோர் மீசை வைத்திருப்பவர்கள், வயலில் அல்லது மற்ற இடங்களில் பாடுபடுபவர்கள், இழிபிறவிகளிடம் வேலை செய்கின்ற சுபேதார்கள், ஜமீன்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் முதல் கட்டத்தில் தங்களுடைய  வீரத்தைக் காட்டட்டும். அதாவது இந்த இழிபிறவிகளை எங்கு பார்த்தாலும் கொல்லட்டும். இந்த இழிபிறவிகளிடம் வேலை செய்பவர்கள் தங்களுடைய மரணத்திற்குப் பிறகும் நிம்மதி அனுபவிக்க மாட்டார்கள். 

இதை மறவாதீர்கள்! இதை 

பின்பற்றாதவனுடைய மீசை என் மறைவிடத்து மயிருக்குச் சமம். அவன் உணவு ருசியில்லாமல் போவதுடன் ஊட்டமளிக்காது. அவர் மனைவி சோரம் போவாள். அவனுடைய குழந்தைகள் இழிப்பிறவிகளுக்குப் பிறந்த பிறவிகளாகக் கருதப்படும்.


ஐரோப்பியர்களால் இரத்தம் கலப்படமாகாத எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இதை யார் படித்தாலும் அல்லது படிக்கச் சொல்லிக் கேட்டாலும் இதை எழுதி தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலே சொன்னபடி இதை எழுதாதவர்கள், சுற்றறிக்கையாக  இதை அனுப்பாதவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை செய்தவர்களாகக் கருதப் படுவார்கள். நரகத்தின் எல்லா தண்டனைகளும் அவர்களுக்குக் கிடைக்கும். இதைச் செய்யாத முசல்மான்கள் பன்றியின் இரத்தத்தைக் குடித்த பாவியாக இருப்பான். இந்தப் பிரகடனம் ஒட்டப்பட்டிருக்கும் சுவரில் இருந்து இந்தப் பிரகடனத்தை கிழிப்பவர்கள் ஐந்து மாபெரும் பாவங்களைச் செய்த குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரும் இந்த பிரகடனத்தைப் படித்து இதைப் பிரதியெடுத்துக் கொள்ள வேண்டும்.


                                                        இப்படிக்கு

                                           மருதுபாண்டியன்,

                               பேரரசர்களின் ஊழியன்          ஐரோப்பிய இழிபிறவிகளுக்கு ஜென்ம எதிரி.


சீரங்கத்தில் வசிக்கின்ற புரோகிதர்கள் மற்றும் புண்ணியவான்களுக்கு மருது பாண்டியன் உங்களின் பாதங்களில் விழுந்து பலமுறை வணங்குகிறேன். தென்னாட்டு அரசர்கள், கோட்டைகளையும், மாதா கோயில்களையும், ஆலயங் களையும், தொழுகையிடங்களையும் கட்டினார்கள். அந்த மாபெரும் அரசர்களின் வழிவந்த பாளையக்காரர்கள், இந்த இழிப்பிறவிகளின் அநீதியான நடவடிக்கையால் வறுமையில் வாடுகிறார்கள். எவ்வளவு உயர்ந்த மனிதர்கள் இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த இழிநிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டாமா? எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவர் நீங்கள். இந்தப்பணி வென்றிட..... என்னை ஆசிர்வதியுங்கள்."


இதைப் படித்த பொழுது இதே மாதிரியான பிரகடனத்தை நான் எங்கோ படித்திருந்ததாக உணர்ச்சி ஏற்பட்டது. ஆம்! சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அக்ரி கோலாவின் தலைமையில் வந்த ரோமானியப் படையெடுப்பாளர் 

களை எதிர்த்துப் போர் புரியுங்கள் என்று கலடோனியா தளபதியான கால்காகஸ் தன்னுடைய படைவீரர்கள் முன்னால் நிகழ்த்திய உரை என் நினைவிற்கு வந்தது. மனித இயல்பு எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கும். அன்னியர்கள் எல்லோரும் கொடியவர்கள்; பணத்தாசை உள்ளவர்கள், உண்மையான வீரர்களுக்குரிய பெருந்தன்மை அவர்களுக்கு இருக்காது என்று எடுத்துக்காட்டுவது மருது பாண்டியரது பிரகடனத்தின் முக்கியமான நோக்கமாகும். கால்காகஸ்ஸின் நோக்கமும் அதுவே. அவர் ரோமானியர் களின் காட்டுமிராண்டித்தனம், பேராசை, ஊதாரித்தனம் ஆகியவற்றை வன்மையாக கண்டனம் செய்கிறார். தன்னுடைய நாட்டு மக்களின் முன்னோர்களின் நினைவு களைக் கூறி அவர்களின் குடும்பங்களைப் பற்றிப் பேசி அவனது ஆண்மையைத் தூண்டுகிறார். "ஆயுதங்கள் வீரர்களுக்குப் பெருமை சேர்கின்றன. இப்பொழுது கோழைகளுக்கு கடைசிப் புகலிடமாக இருக்கின்றன" என்றார்.


பிரிட்டனில் வசிக்கின்ற மிகச் சிறந்த மனிதர்களாகிய நாம், அடிமைப்படுத்திய நாடுகளிலிருந்து நெடுந்தூரத்தில் வசிக்கின்ற நாம், அந்த அடிமைகளைப் பார்க்காததன் மூலம் நமது கண்களை மாசு படியாமல் காப்பாற்றிக் கொண்ட நாம்,  இத்தகையக் கொடுஞ்செயல்களை அனுமதிக்கலாமா?  படையெடுப்பாளர் களின் ஆணவத்திற்கு நாம் அடிபணிய மாட்டோம். இவர்கள் உலகத்தைக் கொள்ளையடித்தவர்கள், நாடுகளைச் சூறையாடிய பிறகும் கடல்களைத் தாண்டிச் சென்று கொள்ளையடிக் கிறார்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் நசுக்குகிறார்கள். கிழக்கிலும் மேற்கிலும் அவர்கள் அலைகிறார்கள். செல்வத்தையும்,  வறுமையையும் ஒரே மாதிரியான தீவிரத்துடன் பார்க்கிறார்கள். போலியான உரிமைகளைச் சொல்லிக் கொள்ளையடித்தும், மனிதர்களைப் படுகொலை செய்தும் அவர்கள் பேரரசுகளை உருவாக்குகிறார்கள். 

அவர்கள் அதைச் சமாதானம் என்கிறார்கள். நம்முடைய அன்புப் புதல்வர்களைக் கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்து வெளிநாடுகளில் சண்டை போட அனுப்புகிறார்கள்.


நம்முடைய மனைவியர்களையும், புதல்வியர்களையும் நாம் மிகவும் நேசிக்கிறோம். அவர்கள் இந்தக் காட்டுமிராண்டிகளின் வன்முறைக்குத் தப்பினால், நட்பு என்ற முகமூடியால் காயப்படுத்தபடுகிறார்கள். நம்முடைய சொத்துக்களைக் கப்பம் என்ற பெயரில் அள்ளிக்கொண்டு போகிறார்கள். நாம் விளைவித்த தானியங்களைப் பறிமுதல் செய்கிறார்கள். சவுக்கடியாலும், கடுஞ்சொற்களாலும் நம்முடைய வலிமையை அழிக்கிறார்கள். அடிமைகள் முதலில் விலைக்கு வாங்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். பிறகு அந்த எஜமானர்கள் அவர்களுக்கு உணவு தருகிறார்கள். சீரழிந்து போன பிரிட்டன் அடிமையாக இருப்பதற்கும் அந்த அடிமைத்தனம் நீடிப்பதற்கும் கப்பம் கட்டித் திருப்தியடைகிறது.


இனிமேல் தப்பமுடியும் என்கிற நம்பிக்கை அழிந்துவிட்டது. ஏனென்றால் தம்மிடம் எஞ்சியிருக்கின்ற வீரமும், சுதந்திர உணர்ச்சியும் நம்முடைய மூர்க்கத்தனமான எஜமானர்களிடம் அதிக வெறுப்பைத் தூண்டுகிறது. ஆகவே, "அன்பார்ந்த சகோதரர்களே! சுதந்திர உணர்ச்சி இனிமேலும் இழக்காமல் காப்பாற்றியுள்ள நீங்கள் கலிடோனியாவைப் பாதுகாப்பதற்கு நாங்கள் இன்னுயிர்களை அர்ப்பணிப்போம் என்று அறிவியுங்கள். ரோமானியர்கள், அமைதிக் காலத்தில் ஆணவத்தோடு நடந்து கொள்வதைப் போல, வீரத்தோடும் போர் புரிவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நம்முடைய பிரிவினைகளும், வேற்றுமைகளும் அவர்களுக்கு உதவுகின்றன. எதிரிகளின் தவறுகளைப் பயன்படுத்தி அவர்களது இராணுவம் வெற்றி பெறுகிறது. வெற்றிதான் அந்த இராணுவத்தை சேர்த்து வைத்திருக்கிறது. தோல்வி யடைந்தால் அவர்கள் விரைவில் சிதறிப் போய் விடுவார்கள்."


பேராண்மை எனப்படுவது சுதேசியிடம் தான் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து. மேலே தரப்பட்ட உரை, 19 ஆம் நூற்றாண்டின் ஆன்மாவைத் தூண்டக்கூடியது. ஆனால் நமது தத்துவ ஞானிகளால் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அதை பிரதியெடுக்க முடியாது. கவனமுள்ள வாசகர்கள் இந்த வீர உரைக்கும் மருதுபாண்டியருடைய பிரகடனத்திற்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டுபிடித்திருப்பார்கள். தன்னம்பிக்கையும் பெருமிதமும் உள்ள ஒரு வீரரை இந்தப் பிரகடனத்தில் பார்க்கலாம். மறுபக்கத்தில் இரும்புக் கரங்களால் ஒடுக்கப்பட்டு, பூமியில் அழுத்தப்பட்டுள்ள ஒரு வீரரின் வேதனைக் குரலை கேட்கிறோம்.


நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட நண்பர், இந்த பிரகடனத்தின் பிரதியை என்னிடம் தந்தார். இந்தியாவில்  நம்முடைய பிரதேசங்களில் வசிக்கின்ற சுதேசிகளில் எண்ணற்றவர்கள் இப்படித்தான் சிந்திக்கிறார்கள். ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்திய அரசாங்கங்கள் மற்றும் ஆங்கிலேயர் களிடமிருந்து இந்தச் சிந்தனைகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மருது தனக்கு எதிராக வீசுகின்ற சூறாவளிக் காற்றை எதிர்த்து நின்று கொண்டு இதை முழங்குகிறார். மற்றவர்கள் இதைப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லலாம். ஆனால் என்னுடைய கருத்து அதற்கு எதிரானது.


இந்தப் பிரகடனத்தைப் பற்றிய செய்தி ஒரு மாவட்ட ஆட்சியருக்குக் கிடைத்தது. அவர் உடனே அதைப் பிரதியெடுத்து தலைமை அதிகாரிக்கு மிக அவசரமாக அனுப்பினார். தேசத் துரோகம்! கலகம்! என்று அவர்கள் கூக்குரலிட்ட்டார்கள். மருதுவையும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் வாரிசுகள் அனைவரையும் கேவலமான முறையில் ஒழிப்பதற்கு உத்தரவுகள் உடனடியாக வெளியிடப் பட்டன. மருதுபாண்டியர் மிகவும் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டபடியால் மருது இந்தப் பிரகடனத்தைத் தயாரித்தார் என்று நான் கூறவில்லை. மருது இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நற்பண்புகளையெம், இனிமையான சுபாவத்தையும் அவமதித்துவிட்டார் என்று ஒத்துக்கொள்வதற்குக் கூட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மருது குடும்பத்திற்கு நடந்த மிகவும் பயங்கரமான கொடுமையை யாரும் கற்பனையில் கூட நியாயப்படுத்த முடியாது.


                                            "ஜே.கோர்லே"

                                            ‎         (1813)

----------------------------------------------------------------------

அகமுடையார் வரலாற்று 

மீட்புப் பணியில்..... 


சோ.பாலமுருகன் 


புலனம் (WhatsApp) எண் : 94429 38890.

*சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து - வலம் இடமாக வாசிக்கவும். வரும் வார்த்தை- அதே;அதே.*


கம்பம்

பொன்னன்

ரம்பம்

பாதிமதி

சிம்மம்

நீதிபதி

கும்பம்

அன்பன்

அதிபதி

காசிவாசி 

கோடுபோடு

இடுகாடு- சுடுகாடு

வீடுதேடு

கோல்மால்

பாசிஊசி

ஆல்போல்

பிம்பம்

சோலைமலை

கடைமடை

கூடைமுடை 

சடுகுடு

சின்னன்- சின்னான்

மெய்யாய்-பொய்யாய்

கைலைமலை

பாரிஓரி

மன்னன்...

                                 *-யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்  இனிதாவதெங்குங் காணோம்....*


🌹🌹🌹👌🏽👍🙏🏻

திங்கள், 14 ஜூன், 2021

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் கூறும் அறிவுரைகள்.....

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.


(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)


2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.


(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)


3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.


(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.) 


4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....


(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)


5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...


(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)


6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....


(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)

---------------------


இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!


► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!


நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. 


ஓடுவது முள் அல்ல..! 

நம் வாழ்க்கை...

ஞாயிறு, 13 ஜூன், 2021

*ஜோதிடத்தில் நவகிரக சனி பற்றிய விரிவான பதிவு !*

சனி கிரகம் சூரியனுக்கு சுமார் 88,66,000 மைல்கள் அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. 


ஒரு தடவை சுரியனை சுற்றி வர 29 வருடகாலம் ஆகிறது. 


சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். 


அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். 


சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். 


அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார்.


சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது அந்த அளவுக்கு நன்மையை தருவார். 


சனிபகவானுக்கு 3,7,10 என்ற பார்வை உண்டு. 

இரவில் வலிமை,

எருமை,யானை,அடிமை வாழ்வு,எண்ணெய்,வீண்கலகம்,கள்ளத்தனம்,கருநிறமுள்ள தானியம்,இரும்பு,கல்,மண்,

சுடுகாடு, மதுகுடித்தல்,

கஷ்டகாலம்,சிறைவாழ்வு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். 


சனிபகவான் மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. 


அனுஷம், பூசம், உத்திரட்டாதி  நட்சந்திரங்களுக்கு நாயாகன். 


துலாம், சனிபகவானுக்கு 

உச்ச வீடு. 


மேஷம் நீச வீடு


நீசம்  பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். 


உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி  வழங்குவார். 


சனிபகவான் பார்வை கொடியது. 


சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும்  இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. 


நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். 


வாகனம் காகம்.  கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு. 


ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில்  இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். 


சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும்  பெறவாய்ப்பு உண்டு. 


ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும்  வாய்ப்பு உண்டு.


வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம்,  

பெரிய இயந்திர தொழிற்சாலை, 

தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். 


சனிபகவான் பலம்  பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும்  வாரி வழங்குவார். 

                                                    

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். 


நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. 


சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். 


சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. 


ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். 


எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. 


கருமை இவனுக்கு உகந்த நிறம். இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. 


உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான். 


மேற்குத்திசை சனிக்கு உரியது. 


திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். 


சனிக்கு அதி தேவதை யமன். 


பிரத்யதி தேவதை பிரஜாபதி. 


நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். 


காகமே சனியின் வாகனம். 


சனி பகவான் படைக்கலன்கள் ஏதுமின்றி பரமானந்த சொரூபமாக விளங்குகிறார். 


சனித்தொல்லையால் வாடும் எவரும் திருநள்ளாறை அடைந்து நளதீர்த்தத்தில் 

மூழ்கி சனி பகவானின், பாதம் பணியலாம். 


சனீஸ்வர பகவானுக்கு கருங்குவளை மாலை அணிவித்து நல்லெண்ணை தீபம் ஏற்றி வந்தால் வறுமைகள், துன்பங்கள் நீங்கி தொழில் சிறப்புரும்


திருநள்ளாறு:


இறைவர் திருப்பெயர்      : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர் 


இறைவியார் திருப்பெயர்   : போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை 


தல மரம்  : தர்ப்பை


தீர்த்தம்  : நளதீர்த்தம்

சிவகங்கை 


வழிபட்டோர்: திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர்,  அர்ச்சுனர், 

நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள்,  வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி 


தேவாரப் பாடல்கள் : 

1. சம்பந்தர் - 

1. பாடக மெல்லடிப் பாவை,  

2. போகமார்த்த பூண்முலையாள்,  

3. ஏடுமலி கொன்றையர,

 4. தளிரிள வளரொளி.

2. அப்பர்   -

1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள், 

2. ஆதிகண்ணான் முகத்திலொன்று.

3. சுந்தரர்  -          செம்பொன் மேனிவெண் ணீறணி.


தல வரலாறு இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. 


இறைவனருளால், 

நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான். 


திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, 

அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.


சிறப்புக்கள்: இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று(தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்). 


இது, சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம்.


இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். 


இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்.. 


இது,தருமை ஆதீனக் கோவிலாகும். 


சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.


அமைவிடம்: மாநிலம் : 

தமிழ் நாடு 


இது, பேரளம் - காரைக்கால் இரயில் பாதையில் உள்ள நிலையமாகும். 


இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. 


காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.


 தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 52வது தலம். 


திருவிழா: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.


தல சிறப்பு:இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் 

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

(மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி) சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது.


இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். 


காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 


அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம். புதுச்சேரி-609 606. 


இது சிவத்தலமாயினும் சனிபகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. 


இத்தல விநாயகர் சொர்ணவிநாயகர் 

என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 


திருமால், பிரமன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்,நளன் முதலியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம். 


கோயிலின் தென்புறம் இடையனார் கோயில் உள்ளது. 


இங்கு இடையன், அவன் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன. 


சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். 


பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:சோமாஸ்கந்த

மூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம்


திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். 


திருமாலுக்கு குழந்தையில்லாமல் 

இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். 


அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார். 


இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான். 


ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். 


இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். 


அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். 


அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது "தியாகவிடங்கர்' என வழங்கப்படுகிறது. 


தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது. 


தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.


திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். 


ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை. 


நளன் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்துக்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ 

என்று பயந்த சனீஸ்வரன் வாசல்படியோடு நின்று, அவனை விட்டு நீங்கி விட்டதாக சொல்வர். 


ஆனால், இறைவன் சனீஸ்வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார்.


தீர்த்தங்கள் : திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே நிஜம். 


தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. 


இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. 


இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன. 


ஒரு காலத்தில் உலகிற்கு ஏதேனும் கேடு நேர இருக்குமானால் கங்கா, பிரம்ம மற்றும் நள தீர்த்தங்களின் நீர் சிவப்பாக மாறிவிடுமாம். 


இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தகுந்த பரிகார பூஜைகள் செய்து மக்கள் தப்பித்திருக்கிறார்கள் என்கின்றனர்.


சனீஸ்வரனை வணங்கும் முறை : காலை 5 மணிக்கு 

நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். 


கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். 


இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும். 


பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். 


இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். 


அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். 


பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல 

வேண்டும். 


சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க 

சென்று விடுகின்றனர். 


இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.


தங்கக்கவசம் :சனிப்பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில் தங்கக்கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். 


சனீஸ்வரனைக் கண்டால் எல்லாருமே ஓட்டம் பிடிக்கும் நிலைமையில், இங்கே தங்கக்கவச சனீஸ்வரனைத் தரிசிக்க கூட்டம் அலை மோதும். 


தமிழகத்தை தவிர கன்னட மக்களுக்கு சனீஸ்வரன் மீது நம்பிக்கை அதிகம். 


எனவே, தமிழ் மக்களுக்கு 

ஈடாக கர்நாடக மாநில மக்களும் இங்கு அதிக அளவில் வருகிறார்கள்.


சனீஸ்வரன் வரலாறு :

சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா. இவள் சூரியனின் வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தங்கியிருந்தாள். 


சாயாதேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார். பின்னர் உண்மை தெரிந்தது. 


சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். 


அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார். 


சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் 

இடம் பெற்றார்.


சனி-அறிவியல் தகவல் : இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். 


பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. 


சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். 


பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.


சனீஸ்வரனுக்கு உரியவை 

ராசி-மகரம், கும்பம் 

திசை-மேற்கு 

அதிதேவதை-எமன் 

நிறம்-கருப்பு 

வாகனம்-காகம் 

தானியம்-எள் 

பால்-அலி 

நட்பு-புதன்,சுக்கிரன்,

இராகு.கேது. 

பகை-சூரியன்,சந்திரன்.

செவ்வாய் 

சமம்-குரு 

திசைகாலம்-19 வருடங்கள் 

மலர்-கருங்குவளை 

நட்சத்திரங்கள்- பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி. 

மலர்-கருங்குவளை 

வஸ்திரம்-கருப்பு ஆடை 

ரத்தினம்-நீலமணி 

நிவேதனம்-எள்ளுப்பொடி சாதம் 

சமித்து-வன்னி 

உலோகம்-இரும்பு.


தல வரலாறு:நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். 


ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். 


சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். 


மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை. 


ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். 


அப்போது சனி அவனை 

விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். 


கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். 


நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.


ஒதுங்கிய நந்தி : இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். 


இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்து

வந்தான். 


கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். 


செய்தியறிந்த மன்னன் 

கோபம் கொண்டான். 


அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். 


அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. 


சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்.


அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் 

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி. சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது)  


சனி பகவான் :ஒரு சிறந்த பரிகாரம்:

ஏழுதலைமுறைக்கு முன் 

செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம். 


எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - 


அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார்.  


ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். 


பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,

விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு 

அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.


அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். 


வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். 


சனிக்கிழமைகளில் 

இதை செய்யவும். அப்படித்தூக்கிச்சென்ற 

பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.


எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.


இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.


இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.


இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,

அதன் வலு இழந்துபோய்விடும்.


இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.


ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  


இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. 


ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,

கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.  


உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.


ராசி கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சனி இருந்தால் என்ன பலன்  


சனி 1 ஆம் வீட்டில்  இருந்தால் மந்த புத்தி இருக்கும். வறுமை இருக்கும். துணைவர் மூலம் பிரச்சினை உருவாகும். நண்பர்களிடத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளைய சகோதர சகோதரிகளிடத்தில் சுமுக உறவு இருக்காது. வாழ்வின் பின்பகுதி நன்றாக இருக்கும். இளம் வயதில் மூத்த வயதுபோல் தோற்றம் இருக்கும். சில நபருக்கு திருமண வாழ்வில் பிரச்சினைகள் 1 ஆம் வீட்டில் சனியால் வருகிறது. 


சனி 2 ஆம் வீட்டில்  இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும் தாயாரின் உடல் நலம் கெடும். குழந்தை பாக்கியம் இருக்காது. ஆயுள் நன்றாக இருக்கும். தார தோஷத்தை ஏற்படுத்துவார்.வீட்டில் எப்போதும் ஒரு வெறுப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமணம் ஆனாலும் தொழில் விசயமாக துணையை விட்டு பிரிந்து சென்று வெளியில் தங்கிவிடுவார். வீட்டின் தொடர்பு மிக குறைவாகதான் இருக்கும்.


சனி 3 ஆம் வீட்டில்  இருந்தால நல்ல தைரியம் இருக்கும். சகோதர்கள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் பகையாக இருப்பார். இந்த வீட்டில் சனி இருப்பது நல்லது தான் ஆனால் குழந்தை பாக்கியம் தள்ளி போகும். அண்டை அயலார் வீட்டுடன் சண்டை சச்சரவு இருக்கும். இசையின் மேல் அவ்வளவு ஆர்வம் இருக்காது. கடித போக்குவரத்தால் வில்லங்கம் தான் வரும். பயணம் செல்லும்போது அடிபடும். 


சனி 4 ஆம் வீட்டில்  இருந்தால் தாயாரின் உடல்நிலை கெடும். சொத்துக்கள் நாசம் ஆகும். வயிற்று வலி ஏற்படும். உடலில் முதுமை தெரியும். பழைய வாகனங்கள் வாங்கினால் யோகம் உண்டு. சிலபேர் பழைய வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழில் செய்யலாம். சிலபேர் வீட்டை இடித்து தரும் தொழில்கள் செய்வார்கள். நான்காம் வீடு தங்கி இருக்கும் வீட்டை குறிப்பதால் பழைமையான வீட்டில் தங்கி இருப்பார்கள். 


சனி 5 ஆம் வீட்டில்  இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும்.வருமான குறைவு ஏற்படும். மனதில் நிம்மதி இருக்காது. ஐந்தில் சனி இருப்பவர்கள் வில்லங்க பார்ட்டியாக இருப்பார்கள. உணர்ச்சி வசப்படகூடியவர்கள். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தை குறிப்பதால் புத்திர தோஷம் ஏற்படும். திருமணத்திற்க்கு முன்பும் பின்பும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அப்பொழுது தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்தவுடன் வருடம் ஒருமுறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும். சில நபர்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். தங்கள் பிள்ளைகளுக்கு கொள்ளி போடுவார்கள் அவர்களின் ஜாதகங்களில் எல்லாம் ஐந்தாம் வீட்டுடன் சனி சம்பந்தப்பட்டு இருப்பார்.


இதற்கு தகுந்த பரிகாரம் ராமேஸ்வரம் தான். ஐந்தாம் வீடு குலதெய்வத்தை குறிப்பதால் கிராம தேவதையை வணங்கலாம்.


சனி 6 ஆம் வீட்டில்  இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். வேலை ஆட்களால் பிரச்சினை ஏற்படாது. மாமன் வீட்டுடன் சுமூகமான உறவு இருக்காது. கணவன் மனைவியுடன் சிறிய தகராறு வந்து செல்லும். பிறர் பாராட்டும் படியான காரியங்களில் இறங்கி வெற்றி அடைவார்கள். பணவரவு நன்றாக இருக்கும்.காலில் அடிபட வாய்ப்பு உள்ளது. 


சனி 7 ஆம் வீட்டில்  இருந்தால் முதுமை தோற்றம் தெரியும். மர்ம பாகங்களில் முடி அதிகமாக தோன்றும்.திருமணம் தள்ளி போகும். துணைவருடன் எப்பொழும் சண்டை சச்சரவு இருக்கும். இளம்வயதில் திருமணம் நடந்தால் துணைவர் இரண்டு அமைவர்.உடம்பில் ஊனம் ஏற்படும். வறுமை இருக்கும். முகத்தில் கவலை தோன்றும். பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவார்கள். இவர்களுடன கூட்டு சேருபவர்கள் குள்ளமானவராக இருப்பார்கள். தாயாரின் உடல் நிலை கெடும்.


சனி 8 ஆம் வீட்டில்  இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டி இருக்கும். நிரம்தரமாக உடலில் நோய் இருக்கும். அதிக வாழ்நாள் இருப்பார். இறக்கும் போது மிகவும் கஷ்டபட்டு நோய்வாய் பட்டு இறப்பார். லக்கினாதிபதி ஆக இருந்து எட்டாம் வீட்டில் இருந்தால் உடல் அடிக்கடி முழு சக்தியையும் இழக்கும். அனைத்துக்கும் கஷ்டபட வேண்டி இருக்கும். சில பேர் இறப்பு சம்பந்தபட்ட தொழில்களில் இருப்பார்கள்.குழந்தை பாக்கியம் ஏற்படாது சில பேருக்கு குழந்தை பாக்கியம் தள்ளி போகும். 


சனி 9 ஆம் வீட்டில்  இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். தந்தையுடன் சண்டை சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சிலபேருக்கு காதல் திருமணம் நடைபெறும். மூத்த சகோர சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். நண்பர்களால் சண்டை வரும் வாய்ப்பு உள்ளது. 


சனி 10 ஆம் வீட்டில்  இருந்தால் தொழில் கொடி கட்டி பறப்பார். பெரும் பணக்காரராக்குவார். சமூகத்தில் பிறர் போற்றும் படி வாழ்வார். மிக பெரும் நிறுவனத்தில் தலைமைபொறுப்பு தேடி வரும். வருமானம் போல செலவும் அதிகமாக இருக்கும். புண்ணிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சமயம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். பழைமையை விரும்புவார்கள். மனைவியிடம் சண்டை சச்சரவு இருந்து வரும். 


சனி 11 ஆம் வீட்டில்  இருந்தால் வருமானம் நிரந்தரமாக இருக்கும். தொழிலில் சிறந்து விளங்குவார். வியாபார சம்பந்தபட்ட விஷயங்களில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டவைப்பார். இளம்வயதில் நரை தோன்றும். நல்ல ஆயுள் இருக்கும். வருமானம் அதிகமாக வந்தாலும் மனதில் கவலை தோன்ற செய்யும். சிலபேருக்கு உயில் இன்ஸ்சுரன்ஸ் மூலம் வருமானம் வரும். 


சனி 12 ஆம் வீட்டில்  இருந்தால் வியாபாரத்தில் வீழ்ச்சி வரும். செலவு அதிகமாக இருக்கும். மருத்துவ செலவு அதிகம் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளிடம் சண்டை ஏற்படும். தந்தையாரின் உடல் நிலை கெடும். தந்தையின் உறவு நன்றாக இருக்காது. மூத்தவர்களின் சாபத்திற்க்கு ஆளாகலாம். சனி நல்ல நிலையில் இருந்தால் தீமை குறைந்து நல்லது நடக்கலாம். விரைய ஸ்தானமாக இருப்பதால் சுபசெலவுகளும் செய்ய வேண்டிவரும்.


சனி பகவான் (வீடு, மனை வாங்க)

ஓம் காகத்வஜாய வித்மஹே 

கட்கஹஸ்தாய தீமஹி 

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் 

ஓம் ரவிசுதாய வித்மஹே 

மந்தக்ரஹாய தீமஹி 

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் 

ஓம் காகத்வஜாய வித்மஹே 

கட்கஹஸ்தாய தீமஹி 

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் 

ஓம் வைவஸ்வதாய வித்மஹே 

பங்குபாதாய தீமஹி 

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் 

ஓம் சனீஸ்வராய வித்மஹே 

சாயாபுத்ராய தீமஹி 

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் 

ஓம் சதுர்புஜாய வித்மஹே 

தண்டஹஸ்தாய தீமஹி 

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்.

வெள்ளி, 11 ஜூன், 2021

3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபனேரியில் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழமையானது

 *உலகிலேயே ஆழமான கிணறு*


. இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமயமலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம் பெறும்.


இந்த அதிசயக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகளைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு. இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். 


இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றைக் குறிக்கும்).


இங்குள்ள பாமர மக்கள் இந்தக் கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்.காதால் கேட்பதை விட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும். இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டு விட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. 


ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும் போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.


ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறு உள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை. அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார்,


பகிர்வு

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் 1492ல் இந்தியாவைத் தேடி அமெரிக்காவை அடைவதற்கு முன்னரே தமிழர்கள் அமெரிக்காவில் குடியேறினர் என கடல்சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவிக்கிறார்

 அமெரிக்கப் பழங்குடிகளில் தமிழர் மரபு : கொண்டாடும் தமிழச்சிகள் 


உலகை வணிகத்தால் கட்டமைத்த அமெரிக்காவை கண்டுப்பிடித்தது கொலம்பஸ் என வரலாறு கூறுவதுண்டு. ஆனால், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் 1492ல் இந்தியாவைத் தேடி அமெரிக்காவை அடைவதற்கு முன்னரே தமிழர்கள் அமெரிக்காவில் குடியேறினர் என கடல்சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவிக்கிறார். இது குறித்து FX16TV செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது,  



" ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் 1492ல் இந்தியர்களை கண்டுபிடிக்க கடல் வழிப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது, அட்லாண்டிக் கடற்கரை வழியான பயணத்தில் அமெரிக்கை என்ற மலை அருகில் செவ்விந்தியர்களை கண்டறிந்தார். அதனையே, அமெரிக்கா என வரையறுத்து, அமெரிக்கர்களை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து, ஐரோப்பியர்கள் 1,500ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு கடல் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்த பல பழங்குடிகளின் வரலாற்றை மறைத்து அமெரிக்க நாகரீகத்தை உருவாக்கினார்கள். ஆனால், அமெரிக்காவில் 1,500 ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளாக இருந்த அமெரிக்க பழங்குடியினருடன் தமிழர்கள் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளனர். இதனை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரின் வரலாற்றில் தமிழர்கள் தொன்மம் ஏராளம் நிறைந்துள்ளது. 



அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாறை ஓவியங்களில் சுமாா் 30 பழங்குடி இனங்களின் வரலாறு பதிந்துள்ளது. இங்குதான் அமெரிக்காவிலேயே அதிகமான பாறை ஓவியங்கள் உள்ளன. அலமேடா (Alameda) என்னும் ஊர், 'மரங்கள் சூழ்ந்த நிழற்பகுதி ' என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தப் பெயர் 'ஆலமரம் ' என்பதில் இருந்து மருவி இவ்வாறு உருவாகியுள்ளது. முருங்கைக் கீரை Moringa leaf என்ற பெயரிலேயே விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட செம்பருத்தி செடியும் அரளி செடியும், நார்த்தங்காயும் கலிஃபோர்னியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் உள்ளது. 




சான்டா பாா்பரா பகுதியில் வாழ்ந்த சுமாஸ் ( Chumash) பழங்குடிகளின் இன்றைய தலைமுறையினர் ஆமைப் படத்தை தங்கள் கொடியில் வைத்துள்ளாா்கள். இதன் மூலம், கடல்சார்புடன் தொடர்புடையவர்கள் பழங்குடியினர் என்பதை விளக்கும் வகையில் உள்ளது. உலகிற்கு முதன் முதலில் "சோழியை" பணமாக அறிமுகப்படுத்தியவர்கள் பாண்டியர்கள் தான். அந்த சோழியின் ஆங்கிலப்பெயர் கவுரி என கொள்ளப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் பாண்டியர்களை கவுரியர்கள் என்று ஆவணப்படுத்தி உள்ளது. இதன் மூலம், ஆப்ரிக்கா முதல் அமெரிக்கா வரை கவுரியை காசாக அறிமுகப்படுத்தியர்கள் பாண்டியர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கலன்கள் செய்யப்பயன்படும் மாக்கல் கொண்டு, அமெரிக்காவின் கேடலினா தீவில் வாழ்ந்த பழங்குடிகள் ( Gabrielino) மாக்கல் கொண்டு சமையல் கலன்கள் செய்து வருகின்றனர். 



பழங்குடிகளின் வழிபாட்டு இடத்தில் தமிழர்களை போன்று சூரியன் மற்றும் சந்திரன் படங்களையும் வரைந்து வைத்துள்ளனர். இவர்களின் நம்பிக்கைகளில் காக்கை, ஆந்தை மற்றும் பருந்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். பெண்கள் பூக்களை தலையில் சூடியும், கழுத்தில் சுற்றியும்  (Hawaiian leis போன்று),  காதுகளில் வைத்தும் தமிழர்களை சேர்ந்தவர்களை போன்று அழகு படுத்திக் வருகின்றனர். யோகுட் ( Yokut) என்ற பழங்குடிகளின் ஒரு குழு, தங்களின் உட்பிரிவுகளுக்கு பறவை மற்றும் மிருகங்களின் பெயரை வைத்திருக்கிறாா்கள். தாஹோ ( Lake Tahoe) பகுதியில் வாழ்ந்த Wahoe குடியினர் புல்லாங்குழல் பயன்படுத்துகிறாா்கள். முக்கியமாக தமிழர்களின் நாட்டார் கலையின் முக்கிய இசைக்கருவியான பறையை போன்று மற்றொரு இசைக் கருவி  நினைவுபடுத்துவதாக உள்ளது. பழங்குடிகளின் கழுகாட்டம் நம்மூர் மயிலாட்டத்தை போன்று உள்ளது.



அமெரிக்க பழங்குடியினரும், தமிழர்களும் ஒன்றோடு, ஒன்றிணைந்து தொடர்பு கொண்டவர்கள் என்பதை விளக்கும் வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்களின் குடும்பத்தினர் பெயரில் தமுலிபாஸ் (tamilipas), தமியன்  (thamiyan), தமுக்கன்(tammuka/tamcan), சாலினன்(salinan), பயட்டு (paiute), களரிபயட்டு (kalariyaddu), யானை  (yana), முகவாய் (mohave). ஈழம் (yelamu), தொலைவு (tolowa), தொங்குவன் (tongva), தெற்கு மேடு, சாஸ்தா southern maidu. .since southern is therku இப்படி பல தமிழ் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அரிசோனா மாகாணத்தில் வாழ்ந்த பழங்குடியினர் உணவு முறையில் அரிசி, தினை, கிழங்கு வகைகள் போன்றவை தமிழர் முல்லை நில மக்களின் உணவு முறையோடு ஒத்துபோகின்றது. 


அரிசோனாவுக்கு மேற்கே இருக்கும் சான் பிரான்சிஸ்கோ peak  ல் தனது முன்னோரின் ஆன்மா வசிப்பதாகவே இன்றும் கருதுகின்றனர். முக்கியமாக விஸ்கான்சின் மாகாணத்தின் மிகப்பெரிய பழங்குடியின் தெய்வம் menominee tribe ( மனோன்மணி) என்பதும், அகத்தியர் வழிப்பாட்டை நினைவுப்படுத்தும் அகத்தியர் சிகரம் Agazzis peak அங்கே உள்ளது. விஸ்கானிஸ்னில் வசிக்கும் ஆய்வாளர் ரேணுகா தேவி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதுபோல, தமிழர்களின் சித்தர் வழிமுறையை பழங்குடியினர்கள் பின்பற்றுவதாக அமைந்துள்ளது. 


பழந் தமிழரின் மூதாதையர் வழிபாடு, இயற்கை வழிபாடு போன்றவற்றை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. சூரிய சந்திரனின் பயணங்களை வைத்து தமது விவசாயத்தை நடைமுறைபடுத்தி வருகின்றனர். விஸ்கான்சின் (wisconsin) மாகாணத்தின் முக்கிய பழங்குடி மக்களான சிப்பிவா இந்தியர்களில் வழக்கத்தில் இருக்கும் ஒசிபி இனத்தவரின் பூர்வீக கதை ஆமை வழித்தடக் கூற்றை உறுதி செய்யும் விதம் உள்ளது. 


அமெரிக்க , கனாடா நாட்டின் கிழக்குக்கரையாரேங்களில் வசித்த கியூபக் பழங்குடியினரின் நம்பிக்கைகளில் ஏழு கடல் தெய்வங்களில் (miigi-luminant with 7 colors..sapta kanni ) ஒன்று, வெள்ளை இனத்தவரால் துன்பம் வரும் என்றும், அதனால்  மேற்கு நோக்கி போக வேண்டாம் என்றும் அறிவுறுத்தி மேற்கு நோக்கி நகர்ந்தனர். அப்படி அவர்கள் சென்ற ஏழு இடங்கள் (Saint Lawrance river,ottawa river,Lake Nipissing and then to the great lakes of Wisconsin ) ஆமை வழியை பின்பற்றி சென்றதால் ஆமைத்தீவுகள் என்ற பெயர் இன்றளவும் குறிப்பிடப்பட்டு வருகின்றன. 


இதில் இன்னும் ஆச்சரியமாக, பிலிப்பைன்ஸ் தீவுகளில் இர்ந்து சிங்கப்பூர் வரை பல இடங்களில் ஆமைகள் வசிக்கும் ஆமைத்தீவுகள் உள்ளது. இந்த தென்கிழக்கு ஆசியா தீவுகளுக்கு சீனர்கள் ஆசிய தென்கரை என்ற பெயரை தமிழ் பெயரிலே வைத்துள்ளனர். இதிலிருந்து, தமிழர்கள் தென் கிழக்கு ஆசிய பகுதிகளின் வழியாக கடல் நீரோட்டத்தில் வலசை பயணம் செய்யும் ஆமைகள் வழியாக முதலில் கட்டுமரம், தெப்பம், மிதவை போன்றவைகளில் ஒரு வழிப் பயணம் செய்து, பின்னர், பாய் மரங்களை பயன்படுத்தி இருவழி பயணத்தை துவக்கி துவக்கி வைத்த திரைமீளர்களாக காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


தமிழர்களுக்கும், அமெரிக்க பழங்குடியினருக்கும் இடையிலான பல நூறு ஒற்றுமைகளை விளக்கும் வகையில், அமெரிக்காவில் பல கடற்கரை மாநிலங்களில் கடந்த 60 வருடங்களாக பழங்குடியினர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 4ம் வெள்ளியன்று இக்கொண்டாடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, கலிஃபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் தொல்லியல் கற்போம், பெண்கள் இணைய குழு மூலம் நாளை பழங்குடியினர் நாள் கொண்டாட இருக்கிறார்கள்.


அமெரிக்காவின் பழங்குடிகளில் கலந்து இருக்கும் தமிழர்களின் மொழி, மரபு, பண்பாடு, கடலோடும் தன்மையை நினைவுப்படுத்தும் வகையிலே இந்நாள் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதி மக்களின் வாழ்வியலில் அமெரிக்கா என்பது பிழைப்புக்காக சென்ற இடம் என்ற மன நிலையும் கொண்டுள்ளனர். 


அமெரிக்காவில் வரலாறு, பண்பாடு இவற்றில் இன்றளவும் ஈடுபாடு கொள்ளாமல், தாம் சென்ற தாய்நாட்டையே நினைத்த வண்ணம் உள்ளார்கள்.  உலகம் முழுவதும் கடலில் சென்று திரைமீளர்களாக திரும்பி வந்த தமிழர்களுக்கு அமெரிக்க மண்ணில் ஊடுருவியுள்ள தமிழரின் வரலாற்றை தெளிவாக சொல்ல அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் பெண்களால் தொல்லியல் கற்போம் என்ற இணைய குழு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பிரிமாண்ட் என்ற ஊரில் வசிக்கும் ஆசிரியை சத்தியா நடராஜன், தமிழ் ஆர்வலர்கள் கனகலட்சுமி, பிரியா, சவுந்திர நாயகி, சுகந்தி, ரேணுகா தேவி, செந்தாமரை, லஷ்மி மற்றும் பலரால் அந்நாட்டின் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பழங்குடி மையங்கள் போன்றவற்றில் இருக்கும் அமெரிக்க பழங்குடி வரலாற்றில் உள்ள தமிழரின் தொன்மையை தேடி வருகிறார்கள்


இதுபோன்று உலக அளவில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் குழு மூலம், இந்தோ-பசுபிக் கடல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், பிலிஃபைன்ஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா, வியட்நாம், சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் ஆசியாவின் கடைக்கோடியில் உள்ள ரஷ்யாவின் காம்சட்கா போன்ற இடங்களில் இருந்து நீண்ட பசுபிக் பெருங்கடலை கடந்து அலாஸ்கா, கனடா மேற்கு வட அமெரிக்கா, மெக்சிக்கோ, கிருத்தமாலா, நிகாரிகோவா, பெரு, சிலி, அர்ஜெண்டினா வரை உள்ள கடற்கரைகளில் ஊடுருவி உள்ள தமிழர் பண்பாட்டை இடப்பெயர் மக்களின் பெயர், மரபு, பண்பாடு, நாட்டார் வழக்கியல், கடலோடும் தன்மை, இயற்கையின் மரங்கள், உயிரினங்கள், பெயர்களை ஒப்புமை செய்து, நீரோட்டங்களில் ஆமைகளின் வழித்தடத்தை பின் தொடர்ந்து, காற்றையும், கடல் நீரோட்டத்தையும் புரிந்துக்கொண்டு, புலம் பெயர்ந்த பழங்கற்கால மக்களின் கடலோடிய தன்மையை ஆய்வு செய்து வருகிறோம். 



நான் தனி ஒருவராக பல வருடங்களாக செய்த ஆய்வை வயது கருதி குழுக்களை உருவாக்கிக் கொண்டு அந்தெந்த நாடுகளில் உள்ள மக்களின் மனதில் தமிழர்களின் புரிதலை ஏற்படுத்த முயன்று வருகிறேன். அதனுடன், அறிஞர் சாமன்லால், எழுத்தாளர்கள் கி.மனோகரன், சீனிவாசன், ராமநாதன் கடந்த 1940களில் இந்தியவியல் கட்டுரைகளில் தமிழர்களின் பண்பாடுகள் மெக்சிகோ நாட்டில் இருப்பதை அடையாளப்படுத்தியுள்ளது, முக்கியமாக, அமெரிக்காவில் உள்ள பல அருங்காட்சியகங்களில் தமிழர்களின் கலைப்பொருட்கள் பல ஆயிரக்கணக்கில் இருப்பதை, சிலை கடத்துபவர்கள் கொடுக்கும் வாக்குமூலம் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, தமிழகத்தின் வரலாற்றை மீட்பதற்கு பெரும் முயற்சியாக அமையும். அமெரிக்காவில் பழங்குடியினர் நாளை கொண்டாடி, தமிழருக்கும், அமெரிக்க பூர்வகுடிகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் வகையில், உலக அளவில் 183 நாடுகளில் தமிழர்களுக்கும், அந்நாட்டின் பூர்வகுடிகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டின் தமிழர்கள் ஒன்றிணைந்து பழங்குடியினர் நாள் கொண்டாட வேண்டும். இதன் மூலம், தமிழர்களின் கடல்சார் வரலாற்றை மீட்டு, தமிழர்களின் உண்மை வரலாற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் கடல் சார் தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு.