புதன், 24 நவம்பர், 2021

கட்டணம் செலுத்தி ஆன்லைனில் கிராம வரைபடம் பெறும் வசதி துவக்கம் revenue maps can be obtained online

 https://tnlandsurvey.tn.gov.in/index.php/Select/buyerForm

 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் கிராம வரைபடம் பெறும் வசதி துவக்கம்  revenue maps can be obtained online

--------------------

https://tnlandsurvey.tn.gov.in/index.php/Select 

-------------------

சென்னை--கிராம வரைபடங்களை, ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி பெறுவதற்கான புதிய வசதியை, நில அளவை துறை துவக்கி உள்ளது.தமிழகத்தில் நிலம் வாங்குவோர், அது தொடர்பான உண்மை நிலவரங்களை அறிய, பட்டா, நில அளவை வரைபடம் போன்ற ஆவணங்களை ஆய்வு செய்வது அவசியம்.

கணினியில் பதிவேற்றம்

இந்நிலையில், சர்வே எண் வாயிலாக நில அளவை வரைபடங்களை பெறுவதும்; குறிப்பிட்ட சர்வே எண், சம்பந்தப்பட்ட கிராமத்தில் எங்கு அமைந்துள்ளது என்பதை அறிவதும் சிரமமாக உள்ளது.இதற்கு நில அளவை துறையை அணுகி, கிராம வரைபடங்களை பெற வேண்டும். இதற்காக நில அளவை துறை, 16 ஆயிரத்து 721 கிராமங்களின் வரைபடங்களை தயாரித்து உள்ளது. வரைபடங்கள் அனைத்தும், டிஜிட்டல் முறையில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், கிராம வரைபடங்களுக்காக, நில அளவை துறை அலுவலகங்களுக்கு, பொதுமக்கள் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய சேவையை நில அளவைத்துறை துவக்கிஉள்ளது.

நில அளவை துறையின், https://tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தில், இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மாவட்டம், தாலுகா, கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்தால், சம்பந்தப்பட்ட கிராம வரைபடம் தொடர்பான விபரங்கள் வரும். இங்கு விண்ணப்பதாரர் தங்கள் பெயர், முகவரி, அடையாள ஆவண விபரம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.இதன்பின், ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வரைபடத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக, 200 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பிரச்னைகட்டணம் செலுத்தியவுடன் கிராம வரைபடங்களை, உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு நபர் ஒரு மாதத்தில், 10 வரைபடங்களை மட்டுமே பெற முடியும்.அதேநேரத்தில், புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த சேவையில் கட்டணம் செலுத்துவதில், சில தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று நில அளவை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Source: dinamalar

Village, town block and district maps will very soon be made available online for the benefit of land buyers, industrialists and realtors.

As part of the reforms aimed at transparency and efficiency in the Revenue Department, the Tamil Nadu government is strengthening its online services. A senior official told The Hindu, “We are designing a portal for the Survey and Settlement Department, and the services through this portal will be launched soon.”

The survey number correlation statements for every district will also be uploaded online, and this is expected to help landowners with the old and new survey/subdivision numbers of a land parcel, the official said.

At present, village maps can be accessed only in person from the taluk offices or a copy of it can be obtained in person from the offices of the Regional Deputy Directors of Survey or the office of the Director of Survey and Settlement in Chennai. As for the survey number correlation statements, only a few districts have uploaded them online.

Village maps primarily help in identifying waterbodies, especially the lesser known channels or streams, and poromboke lands, and in checking the suitability of a land parcel for agriculture. According to the Revenue Department, all 16,721 village maps have been scanned.

சனி, 20 நவம்பர், 2021

கார்த்திகை நாள்

 கார்த்திகை திருநாள் என்பது கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் அறு மீன் கார்த்திகை விண்மீன் கூட்டமும் நிலவும் நெருங்கும் நாள்.இந்நாளில் வீடுதோறும் பழந்தமிழர் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதன் காரணம் மறைந்து போய் பின்னாளில் அது முருகனின் கார்த்திகை விழாவாகவும்  சிவன் பிரம்மா மாலன் கதையாகவும்  மாறி இந்து சமய விழாவாக மாறிப்போனது.

தொல்காப்பியம் புறத்திணைஇயல்  35 

பரிபாடல்- 10, 11

மலைபடுகடாம் -10, 99-101

புறநானூறு- 229

நற்றிணை - 58, 202

அகநானூறு 141, 185

களவழி நாற்பது -17

என சங்கநாட்களில் கொண்டாடப்பட்ட கார்த்திகை விளக்கு ஒளி நாள் சங்கம் மருவிய காலத்தில் காரணம் மாறி கொண்டாடப்பட்டதை முத்தொள்ளாயிரம் சீவக சிந்தாமணி ஆகிய இலக்கியங்கள்  பதிவு செய்துள்ளன.பிற்பாடு பக்தி இலக்கிய காலத்தில் சமயத்தோடு தொடர்பு படுத்தப்பட்டு காரணம் மாறிக் கொண்டாடப் பட்டதை திருமந்திரம்  தேவார கபாலீச்சுரப்பதிகம் திருவெம்பாவை பெரியபுராணம்  அருணகிரியார் பாடல்களில் காண முடிகிறது.

சங்க நாட்களில் நமது முன்னோர்கள் கொண்டாடிய இந்தப் பழமை விழாவின் காரணம் தற்போது நமக்குப் புரிபடவில்லை. உழவுக்கு உறுதுணையான வடகிழக்குப் பருவமழையினை வரவேற்க வீடு தோறும் விழக்கேற்றி கொண்டாடி  இருக்கலாம். ஆரல் இறால் எரிநாள் அழல் ஆ அல் அளகு அறுமீன் எனக் கடுந்தமிழ்பெயர் கொண்ட இந்நாளில் அனைவருக்கும் தொல்லியலாளர் நாராயணமூர்த்தியின்  கார்த்திகை விளக்கொளிநாள் வாழ்த்துகள்.💥

வியாழன், 7 அக்டோபர், 2021

தமிழில் அரபுச் சொற்கள்

அசல்   أصل மூலம்

மாஜிماضي  முந்தைய

அத்து حد வரம்பு

முகாம்مقام  தங்குமிடம்

அத்தர் عطر மணப்பொருள்

முலாம்ملام  மேற்பூச்சு

அமுல் عمل  நடைமுறை

ரத்துرد  விலக்கு/நீக்கம்

அனாமத்أنعمت கேட்பாரற்ற

ரசீதுرصيد  ஒப்புப் படிவம்

அல்வாحلوه  இனிப்பு

ராஜிراضي  உடன்பாடு

ஆஜர்حاظر  வருகை

ருஜுرجوع  உறுதிப்பாடு

ஆபத்துآفت  துன்பம்

ருமால்رمال  கைக்குட்டை

இனாம்انعام  நன்கொடை

லாயக்لائق  தகுதி

இலாகாعلاقة  துறை

வக்கீல்وكيل  வழக்குரைஞர்

கஜானாخزانة  கருவூலம்

வக்காலத்துوكالة  பரிந்துரை

காலிخالي  வெற்றிடம்

வகையறாوغيره  முதலான

காய்தாقاعدة  

தலைமை/வரம்பு  

வசூல்وصول  திரட்டு

காஜிقاضي  நீதிபதி

வாய்தாوعده  தவணை

கைதிقيد  சிறையாளி

வாரிசுوارث  உரியவர்

சவால்سوال  

அறைகூவல்/கேள்வி  

சர்பத்شربة குளிர்பானம்

ஜாமீன்ضمان  பிணை

சரத்துشرط  நிபந்தனை

ஜில்லாضلعة  மாவட்டம்

தகராறு تكرار வம்பு

தாவாدعوة  வழக்கு

திவான்ديوان  அமைச்சர்

பதில்بدل  மறுமொழி

பாக்கிباقي  நிலுவை

மஹால்محل  மாளிகை

ஜமாபந்தி ஒன்றுகூடல்

ஃபிர்கா அலகு

மகசூல்محصول  அறுவடை

மாமூல்معمول  வழக்கம்

கீரனூர் அருகே 2000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு உலைகள் கண்டெடுப்பு.

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, விளாப்பட்டி மற்றும் பெரியமூளிப்பட்டி கிராமங்களுக்கு இடையே இரும்பு காலத்தை சேர்ந்த இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான இரும்பு உருக்கு உலைகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இரும்பு உருக்கு உலைகள்

இது குறித்து கீரனூரை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் கூறியதாவது:-

பெரியமூளிப்பட்டி கிராமத்திலிருந்து விளாப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் பழமையான பானை ஓடுகள் குமியலாக காணப்படுகின்றன. அதனை ஒட்டி மண்ணில் புதைந்த வண்ணம் சுடுமண்ணால் செய்யப்பட்ட பழமையான இரும்பு உருக்கு உலைகள் இருப்பது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.


சிதைவுற்ற நிலையில் உலை

சேதமடைந்த நிலையில், மண்ணில் புதைந்த வண்ணம் ஐந்திற்கும் மேற்பட்ட உலை அமைப்புகள் இங்கு காணப்படுகின்றன. இந்த உலைகளை சுற்றிலும் பல்வேறு இரும்பு கழிவுகள் மற்றும் இரும்பு தாதுக்கள் நிறைந்த கற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக உருக்கப்பட்ட இரும்பு கட்டிகளாக வார்க்க பட்டதற்கு அடையாளமாக உடைந்த இரும்பு கட்டிகள் இங்கு கிடைக்கின்றன.


இரும்பு துண்டுகள்

மேலும் இங்கு இரும்பு உருக்கு தொழில் தொடர்ந்து நடைபெற்றதற்கு அடையாளமாக, ஆலங்க்குடி தாலுகா பொற்பனைக்கோட்டையில் கிடைத்தது போல பத்திற்கும் மேற்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட ஊதுகுழல் துருத்திகள் உலையினை சுற்றிலும் காணப்படுகின்றன. முக்கிய அம்சமாக அவை முதுமக்கள் தாழிகளை போல உட்புறமாக செம்மண் மற்றும் வெளிபுறம் களிமண் என இரட்டை அடுக்குகளாக செய்யப்பட்டுள்ளன.


சுடுமண் ஊதுகுழல்கள்

பொதுவாக இரும்பு உருக்குதல் என்பது அதிக வெப்பநிலையில், கிட்டத்தட்ட 2000 டிகிரி செல்சியஸில் நிகழ கூடிய செயல்முறையாகும். இந்த அதிகபட்ச வெப்பநிலையை நிலைநிறுத்த சுடுமண்ணால் செய்யப்பட்ட உலைகள் மற்றும் துரித்திகளை பயன்படுத்தி இங்கு இரும்பு தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் இவ்விடத்தில் சுண்ணாம்பு தாது படிவுகள் அதிக அளவில் கிடைக்கிறது. இரும்பு உருக்கு முறைகளில் கழிவுகளை நீக்க சுண்ணாம்பு முக்கிய பொருளாக பயன்படுவது குறிப்பிடத்தக்கது.

உலைகளினை சுற்றிலும் பலவகை பானை ஓடுகள் குவியல்களாக காணப்படுகின்றன. குறிப்பாக பழமையான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், மெல்லிய கருப்பு நிற பானை ஓடுகள் இங்கு கிடைக்கப் பெறுகிறது. அவற்றில் முக்கிய அம்சமாக வெளிப்புறம் வளவளப்பான மேற்பூச்சு கொண்ட பானை ஓடுகளும் இவ்விடத்தில் கிடைக்கப் பெறுகின்றன.


பானை ஓடுகள்

இந்த பானை ஓடுகள் பல்வேறு அளவுகளில் பயன்பாட்டிலிருந்த மண்பாண்டங்களின் எச்சங்களாக அமைந்துள்ளன. மேலும் பண்டைய காலங்களில் திண்ணை விளையாட்டுகளில் பயன்படுத்தும் சுடுமண் சில்லுகளும் இங்கு காணப்படுகிறது.

விளாப்பட்டிக்கு அருகில் ஆதனப்பட்டி கிராமத்தில் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான குத்துக்கற்களுடன் கூடிய முதுமக்கள் நினைவுசின்னங்கள் அமைந்துள்ளன. அங்கு காணப்படும் பானை ஓடுகளை போன்றே இந்த இரும்பு உருக்கு உலைகளை சுற்றி கிடைக்கபெறும் பானை ஓடுகளும்  அமைந்துள்ளன. ஆகவே இந்த இரும்பு உருக்கு உலைகளும் அதே காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்கவேண்டும் என கருதப்படுகிறது.

ஆதனபட்டி நீத்தார் நினைவு சின்னங்கள்


மண்ணரிப்பு மற்றும் மனித செயல்பாடுகள் காரணமாக பழமையான இந்த உலை அமைப்புகள் தொடர்ந்து சிதைந்து வருகின்றன. எனவே இங்கு கிடைக்கும் உலை மிச்சங்கள், சுடுமண் ஊதுகுழல் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேகரித்து அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.


இரும்பு உலை பொருட்கள் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

*********************************

வணக்கத்துடன்,

பா. முருகபிரசாத், 

கால்நடை ஆய்வாளர்,


நா. நாராயணமூர்த்தி,

உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்),


மு. ராகுல்பிரசாத்,

இளங்கலை (விலங்கியல்) மாணவர்,


கீரனூர்,

புதுக்கோட்டை மாவட்டம்.


#பகிர்வு 


#புதுக்கோட்டைநம்மஊரு

புதன், 29 செப்டம்பர், 2021

கவரிமான் என்பது மான் இனம் அல்ல, அதன் உண்மையான பெயர் கவரிமா.

 

இது தமிழ்நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் எருமை மாட்டு வகையைச் சார்ந்ததாகும். இதையே நமது மக்கள் கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள்.


கவரிமான் எங்கு வசிக்கிறது?. முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா?. எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்?


"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.”

என்கிறார் திருவள்ளுவர் (969-ஆம் குறள்)

கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானமிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.


ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே?. குழப்பமாக இருக்கிறது அல்லவா?. அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள். அதில் சொல்லப்பட்டு இருப்பது 'கவரி மான்' அல்ல. கவரிமா.


புறநானூற்றில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது.

"நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி

தண் நிழல் பிணி யோடு வதியும்

வட திசை யதுவே வான் தோய் இமயம்". 

இமயமலைப் பகுதியில் கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு, தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள். 


இந்த கவரிமா குறித்து பதிற்றுப் பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன. முடி, சடை போல தொங்கக் கூடிய விலங்கு தான் கவரிமா. இந்த முடியை வெட்டியெடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். 'கவரி' என்பதில் இருந்துதான் 'சவரி முடி' என்ற இன்றைய சொல் உருவானது. 'மா' என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.


சரி... இந்தக் குறளுக்குப் பொருள் என்ன?. பனிப் பகுதியில் வாழும் கவரிமாவுக்கு, அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும். 


அதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால்,

அவர்கள் வாழ்வது அரியதாகி விடும். எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை. பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை. ஆனால் கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தான் தவறு

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

ஜெயகாந்த் கருத்து #தமிழர் என்றால் ஏன் எரிகிறது?



உண்மையிலேயே ‘தமிழ் களஞ்சியம்’,’திராவிட களஞ்சியம்’ சர்ச்சை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கள யதார்த்தத்தை எடுத்துக்காட்டும் சிறந்த உதாரணம்.


இந்த சர்ச்சை தொடங்கும்போதே தெரியும் திராவிட சார்பாளர்களின் வாதங்கள் எப்படி அமையும் என்பது. 


வழமைபோல தமிழம்>த்ரமிளம்>த்ரமிடம்>த்ராமிடம்>த்ராவிடம் என திரிபடைந்த விதம், திருஞான சம்பந்தரை ‘திராவிட சிசு’ என ஆதிசங்கரர் அழைத்தது, அயோத்திதாசர் அந்த பெயரில் பத்திரிகை நடத்தியது என சுற்றி சுற்றி வருவார்கள் என்பது எதிர்ப்பார்த்ததுதான்.


இந்த வரலாற்று நிகழ்வையெல்லாம் நான் மறுக்கவில்லை. 


ஆனால் திராவிட சார்பாளர்கள் ‘வேண்டுமென்றே’ இதில் இருக்கும் ஒரு விடயத்தை ஒளிக்க முயல்கிறார்கள்.


• #ஒளிக்க முயலும் விடயம்


திராவிட சார்பாளர்கள் மேலே சொன்ன வரலாற்று உதாரணங்கள் எல்லாமே நடந்தவைதான்.


#ஆனால் அது பிறமொழியாளர்கள் தமிழை,தமிழரை குறிப்பதற்காக பயன்படுத்திய சொல்லாடல்கள்.நாம் ‘நம்மை’ அழைக்க பயன்படுத்திய பெயர் அல்ல என்பதுதான் அந்த ஒளிக்க முயலும் விடயம்.


• #திராவிட சார்பாளர்களுக்கு உதவ கூடிய இன்னும் சில வரலாற்று உதாரணங்களை தருகிறேன். 


“அத்திக்கும்பா கல்வெட்டு என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டில் {BCE 2nd cent} பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும்.  


இக் கல்வெட்டின் 13 வது வரியில்  113 ஆண்டுகள் 1300 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலிருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியினை காரவேலன் முறியடித்த செய்தி கூறப்படுகின்றது.


இங்கு தமிழர் கூட்டணியினைக் குறிக்கும் திரிபுச் சொல்லாக `த்மிர தேக சங்காத்தம் ` {Dramira } பயன்படுத்தப்படுகின்றது. 


அதே போல கிரேக்கக் குறிப்புகளில் சங்ககாலத் தமிழகம் `Damirica ` எனக் குறிக்கப்படுகின்றது. 


இவைதான் தமிழ் குறித்துக் கிடைக்கும் முதலாவது திரிபுச் சொற்களாகும்.  


`தமிழ்` என்று சொல்ல முடியாத பிற மொழியிலாளர்கள் திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருந்தார்கள். 


அவற்றினை எல்லாம் பொதுமைப்படுத்திய ஒரு திசைச் சொல்லே `திராவிடம்` {Dravida } எனலாம்.


லலிதாவசுத்திர ` Lalitavistara` ( (translated into Chinese in 308 CE) தமிழ் எழுத்துகளை `திராவிட லிபி` ( Dravidalipi ) என அழைக்கின்றது.  


இதுவே `திராவிடம்` என்ற சொல் தமிழினைக் குறிப்பதற்கான நேரடியான முதலாவது சான்றாகும்.


ஏறக்குறைய அதே காலப்பகுதியினைச் சார்ந்த  சமயவங்கா (“Samavayanga Sutta” )என்றொரு சமண நூலில் அக்காலத்தில் வழக்கில் இருந்த 18 மொழிகளின் பட்டியலில் சமசுக்கிருதம் குறிப்பிடப்படவில்லை.   


அதில்  `தாமிலி` / `தமிழி` ( Damilli ) ஒரு எழுத்து வடிவமாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனாலேயே பிற்காலத்தில் கமில் சுவெலபில் ( Kamil Zvelebil ) என்ற அறிஞர் `தமிழ்` என்ற சொல்லைக் குறிக்கும் ஒத்த சொற்களாக `தமிழி `, `திராவிடம்` என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். 


மேலே குறிப்பிட்ட நூல்கள், கல்வெட்டு என்பன பிராகிரத மொழியிலேயே இடம் பெற்றிருந்தன.


(வி.இ.குகநாதன் எழுதிய ‘திராவிடம்` என்றால் என்ன? எனும் கட்டுரையிலிருந்து)


மேலேயுள்ள பந்தி விவரிக்கும் வரலாற்று உதாரணங்களும் தமிழை, தமிழரை குறிக்க பிறமொழியாளர்கள் பயன்படுத்திய சொல்லாடலாகதான் ‘த்மிர’ (Dramira), கிரேக்கர்கள் பயன்படுத்திய ‘Damirica’, லலிதாவசுத்திர குறிப்பிடும் ‘திராவிட லிபி’( Dravidalipi ), சமயவங்கா என்ற சமண நூல் குறிப்பிடும் `தாமிலி` / `தமிழி` ( Damilli ) என்பவை வருகின்றன.


ஆக `தமிழ்` என்ற சொல்லை உச்சரிக்க முடியாத பிற மொழியிலாளர்கள் த்மிர,திராவிட, தம்மிரிக, திரமிள எனப் பல்வேறு சொற்களில் அழைத்திருக்கிறார்கள்.


• #இனி நம்முன் உள்ள கேள்வி


பிறமொழியாளர்கள் தமிழை,தமிழரை உச்சரிக்க முடியாமல் பயன்படுத்திய சொற்கள் என் இனத்திற்கான பெயராக மாறுமா அல்லது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழராகிய நாம் நம்மை அழைக்க பயன்படுத்திய சொல் நமக்கான பெயராக மாறுமா? 


இன்னும் எளிமையாக உங்களுக்கு புரியவைக்க வேண்டுமானால், ஒரு வேடிக்கையான உதாரணத்தை தருகிறேன்.


இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை வெள்ளைக்கார வர்ணணையாளர்கள் ‘முட்றையா முட்டளிடரன்’ என்றுதான் அழைப்பார்கள். காரணம் ஆங்கிலம் பேசும் வெள்ளைக்கார வர்ணணையாளர்களுக்கு இருந்த உச்சரிப்பு சிக்கல்.


இப்பொழுது திராவிட சார்பாளர்களின் வாதத்தின்படி இதை அணுகுவோம்.


‘முட்றையா முட்டளிடரன்’ எனும் சொல்லாடலும் முத்தையா முரளிதரனைத்தான் குறிக்கிறது. 


‘முத்தையா முரளிதரன்’ எனும் பெயரும் முத்தையா முரளிதரனைத்தான் குறிக்கிறது.


அதனால் நாம் ‘முட்றையா முட்டளிடரன்’ என்ற சொல்லையே பயன்படுத்துவோம் என்பதாக இருக்கிறது.


• #திராவிட சார்பாளர்கள் இது அறிந்து செய்கிறார்களா அல்லது அறியாமல் செய்கிறார்களா?


இது தெரிந்தே, வேண்டுமென்றே நுண்ணரசியல் நோக்குடன் செய்யப்படும் காய் நகர்த்தல்.


இன்னும் உடைத்து சொன்னால், ‘மேலேயுள்ள வரலாற்று உதாரணங்களை’ எல்லாம் சொல்லி தமிழரை ‘திராவிடர்’ என அழைப்பதுதான் சரி என வாதிடுபவர்களில் 80% பிறமொழியினராக இருக்கிறார்கள். தங்களின் பெயரை தூய தமிழில் வைத்திருப்பார்கள். ஆனால் அதை முகமூடியாக வைத்துக்கொண்டு இந்த நுண்ணரசியலை செய்கிறார்கள். மீதியுள்ள 20% தமிழர்கள்தான். ஆனால் இவர்கள் இந்த வரலாற்று உதாரணங்களில் உள்ள சாமர்த்தியமான வாதத்தை நம்பி ஏமாந்தவர்கள், அதிகார,பண ஆதாயத்திற்காக கட்சிகளை சார்ந்திருப்பவர்கள் என்பதாக இருக்கும்.


ஆனால் தமிழர்களில் 80% கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள் ‘நாங்கள் தமிழர்’, ‘எமது மொழி தமிழ் மொழி’ என்று.


காரணம் இந்த உணர்வு உளப்பூர்வமாக வருவது.


சங்ககால இலக்கியங்களை ‘திராவிட களஞ்சியம்’ என சொல்லும்போது எங்கோ இலங்கையில் பிறந்து,வளர்ந்த எனக்கு ஏன் பொத்து கொண்டு கோபம் வருகிறது? 


காரணம் இந்த சங்ககால இலக்கியம் என்னுடையது.என் இனத்தினுடையது.இது எனது பெருமிதம்.எனது தாய் மொழியின் செழுமையை,வளமையை கூறுவது.எனது வரலாற்று சொத்து. இதுதான் அந்த உளப்பூர்வமான உணர்வு.


• #இது ஒரு அவலம்


உலகமெங்கும் பரந்து வாழும் சில பத்து லட்சம் மக்களையே கொண்ட எங்களுக்கு எங்களை ‘தமிழர்கள்’ என அழைத்து கொள்ளமுடிகிறது.


தமிழின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு தங்களை ‘தமிழர்கள்’ என அழைத்து கொள்ளவே திணற வேண்டியிருக்கிறது.

இது ஒரு பெரும் அவலம்.


க.ஜெயகாந்த்

புதன், 18 ஆகஸ்ட், 2021

பாண்டியனோடு உடன்படிக்கை செய்து தன்னாட்சியைக் காப்பாற்றிக் கொண்டே இந்த்ரனை வெல்ல புறப்பட்டான் என்று கூறுகிறார் காளிதாஸர். பேராசிரியர் சங்கரநாரயணன்

 பாண்டியரும் ராவணனும்


ராவணனின் காலத்தில் பாண்டிய மன்னன் வலிமையாக இருந்தமையால் அவனோடு போரிட்டு வெல்ல முடியாத ராவணன் அவனோடு உடன்படிக்கை செய்துகொண்டான் என்று அவர்களுடைய தளவாய்புரச் செப்பேடு கூறுகிறது. 


தசவதனன் சார்பாகச் சந்துசெய்தும் தார்த்தராஷ்டிரர்

படைமுழுதும் களத்தவியப் பாரதத்துப் பகடோட்டியும்


என்று ராவணனோடு சந்து செய்தியையும் மஹாபாரதத்தில் கௌரவர்களுக்கு எதிராகப் படைசெலுத்தியமையும் கூறப்பெறுகிறது. இது ஒன்பதாம் நூற்றாண்டில் திடீரென்று வந்துவிடவில்லை. காளிதாஸன் தன்னுடைய ரகுவம்சத்தில் இதனைக் குறிப்பிடுகிறார்.


அஸ்த்ரம் ஹராதா³ப்தவதா து³ராபம் 

யேன இந்த்³ரலோகாவஜயாய த்³ருப்த꞉ .

புரா ஜனஸ்தா²னவிமர்த³ஶங்கீ 

ஸந்தா⁴ய லங்காதி⁴பதி꞉ ப்ரதஸ்தே² . . 6.62 . .


எவரும் வெல்லவொண்ணாத ப்ரஹ்மாஸ்த்ரத்தைப் பாண்டிய வேந்தன் சிவபெருமானிடமிருந்து பெற்றவன் என்பதனால் ஜனஸ்தானத்தை அழித்து விடுவானோ என்றஞ்சி பாண்டியனோடு உடன்படிக்கை செய்து தன்னாட்சியைக் காப்பாற்றிக் கொண்டே இந்த்ரனை வெல்ல புறப்பட்டான் என்று கூறுகிறார் காளிதாஸர். பேராசிரியர் சங்கரநாரயணன்