வெள்ளி, 4 டிசம்பர், 2020

அரிசியில் சமைக்கும் சோற்றினை குறிக்க தமிழ் நிகண்டுகளில் காணப்படும் சொற்கள்

 புன்கம், 

மிதவை, 

பொம்மல், 

போனகம், 

அன்னம், 

ஓதனம், 

அயினி, 

அடிசில், 

பாளிதம், 

பொருகு, 

மினை, 

பதம், 

பாத்து, 

அமலை, 

உணவு, 

துப்பு, 

அசனம், 

கவளம், 

சொன்றி, 

நிமிரம், 

மடை, 

கூழ், 

புழுங்கல் 

மூரல், 

சோறு, 

மிதவை, 

அமலை, 

சரு, 

வல்சி, 

துற்று, 

புகர். 


இவை எல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? அரிசியில் சமைக்கும் சோற்றினை குறிக்க தமிழ் நிகண்டுகளில் காணப்படும் சொற்கள் தான் இவை. 


.சமைப்பதற்கு பச்சரிசி, புழுங்கலரிசி என்பதான இரு வகையான அரிசியை பயன்படுத்துவது நமது பழக்கத்தில் இருக்கிறது. நெல்லை அவித்து குத்துவது புழுங்கல் அரிசி. அவிக்காமல் குத்தி எடுப்பது பச்சரிசி. 


சோற்றினை அமுது என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. அமுது எனும் சொல் பெருவழக்காகச் சோற்றைக் குறிப்பதால் அமுது செய்தல், அமுதுபடைத்தல் அமுது பாறை அமுது மண்டபம் அமுதூட்டுதல், திருவமுது போன்ற சொல் வழக்குகளும் உண்டு. 

சோற்றுடன் சேர்த்து கொள்ளும் பருப்பு போன்றவற்றை முன்னொட்டாகக் கொண்டும் பருப்பமுது கறியமுது, தயிரமுது, கன்னலமுது என்பதன வழக்குகளும் உண்டு. 


என்ன விதமான சோறு என்ன விதமான பக்குவத்தில் சமைத்தால் அது நம் உடல் நலத்திற்கு என்னவிதமான பயனை தரும் என்று சித்த மருத்துவத்தில் விரிவான குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் சுருக்கமான சில குறிப்புகள். 


புழுங்கல் அரிசி சோறு சாப்பிட்டால் வாத கோபமும், பலமும், வலி ரோகங்களும் நீங்கும். இது நோயாளிக்கு உதவும். பச்சரிசி சாதமானது பலத்தையும், குழந்தைகளுக்கு மாந்தத்தையும் உண்டாக்கும். பித்த கோபத்தையும், கிரிச்சரத்தையும் நீக்கும். இதில் வாயு உள்ளது. நன்றாக சமைக்காத சாதத்தை சாப்பிட்டால் மலசலம் சிக்குவது தவிர, மறுநாளும் சீரணம் ஆகாது. அந்த அன்ன ரசம் உடலில் பரவாது. குழைந்த அன்னத்தை உண்டால் வாத பிரமேகம், இருமல், அக்கினி மந்தம், பலவீனம், பீனிசம் ஆகியவை உண்டாகும். 


சுத்த அன்னத்தை நல்ல காய்கறிகளோடு சேர்த்து சாப்பிட்டால் வாத பித்த சிலேஷ்மம் என்னும் மூன்று வித நோய்களுக்கும் நிவாரணம் உண்டு. சுத்த அன்னம் என்பது பழைய அரிசியை தவிடு, நொய் நீங்கும் படி நன்றாக தீட்டி , முழு அரிசியாக புடைத்து எடுத்து இள வெந்நீரால் கழுவி துணியில் கொட்டி சிறிது ஆற வைத்து ஒரு பாண்டத்தில் அரிசிக்கு மூன்று பங்கு நீர் விட்டு அடுப்பில் ஏற்றி அது நுரைகட்டி கொதிக்கும் போது அரிசியை அதில் போட்டு முக்கால் பாகமாக வெந்தவுடன் கரண்டியால் துழாவி வடித்து கொண்டு மறுபடியும் தணலில் வைத்து பக்குவப்படுத்தி இறக்கி கொள்வதாகும். 


பச்சரிசி பொங்கல் சாதம் சகல அலசரோக வயிற்றுப்பிசம், அங்கலக வாதம், வெப்பம் ஆகியவற்றை உண்டாக்கும். சம்பா பச்சரிசி பொங்கல் சாதம் விந்துவை வளர்க்கும். பாலுஞ்சோறும் உண்டால் பித்த கோபமும், தாகமும் விலகும். கொஞ்சம் மந்தம், உடல் வலிமை, வீரிய விருத்தி உண்டாகும். நெய்யும் சாதமும் கலந்து சாப்பிட்டால் வன்மை, விழிக்குளிர்ச்சி, சீரணம் ஆகியவை உண்டாகும். பித்த விகாரம் விலகும். இது பத்திய உணவாகும். இந்த கிருத உணவு சிகிச்சை வயதானவர்களுக்கே முக்கியமாகும். 


தினமும் சாப்பிடக் கூடிய அதிக சூடுள்ள அன்னமானது உதிரபித்தம், தாக பிரமை, மதரோகம் ஆகியவற்றை உண்டாக்கும். உணவின் இறுதியில் புளித்த தயிரும், உப்பும் சேர்த்து சாப்பிட்டால் தயிருக்கும், நெய்க்கும் நடுவாக தீனிப்பையில் இறங்கியுள்ள சகல பதார்த்தங்களும் உள்ள உணவில் திரி தோஷங்களையும் நீக்குவதோடு அந்த உணவு புழுக்கங் கொண்டு நெருக்கமுற்று சீரணமாகும். 


மோரும், சாதமும் கலந்து சாப்பிட்டால் ஜடராக்கினி அதிகரிப்பதோடு பித்தம், மேக மூத்திரம், முளை மூலம், பாண்டு, தாகம் கிரகணி, சிலேஷ்ம சோபை ஆகியவை நீங்கும். ரணங்களுக்கு ஆகாது. இவை அனைத்தும் அன்ன வகைகள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு சரியான முறையில் அன்னத்தை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம். நெல்லை வெள்ளூவன்

திங்கள், 30 நவம்பர், 2020

தமிழர் பெருமையும் பிரபாகரன் வீரமும் ஒப்பீடு

 நன்றி: குமார் அம்பாயிரம்


* கண்ணகிக்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை


கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க 


பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிரங்கி, யானைமீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து


ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து 


கனக விசயன் தலைமீது பத்தினிக்கல் சுமந்து வரச்செய்து கண்ணகி கோயில் கட்டிய மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை நான் கண்டதில்லை. 


* மௌரிய மன்னன் அசோகனை சோழ எல்லையிலேயே நையப்புடைத்து துளுவ நாட்டைத்தாண்டி பாழிநாடுவரை துரத்தி சென்று பாழிக்கோட்டையை அழித்து செருப்பாழி எறிந்த சோழ மாமன்னன் இளஞ்சேட் சென்னியை கண்டதில்லை


* குழந்தை பருவத்திலேயே ஐந்து வீரவேளிர்களை, இரு பேரரசர்களை  எதிர்த்து பெருவெற்றிகொண்டு தோற்றோடியவர்களை அவர்கள் நாட்டிலேயே போய் அழித்து தலையாலங்கானத்து போரில் வரலாற்று வெற்றியை பதிந்த, கடாரம் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனை கண்டதில்லை. 


*பாரதப்பெரும்போரில் ஓரைவர், ஈரைம்பதின்மருக்கு பெருஞ்சோறு அளித்த சேரப்பேரரசன் பெருஞ்சோற்றுதியனை கண்டதில்லை


*நீதிகாக்க மகனை தேர்க்காலில் இட்ட மனுநீதி சோழனை கண்டதில்லை


*சேரநாடே களையிழந்து சோகத்தில் மூழ்கச்செய்த வெண்ணிப் பறந்தலைப்போர், ஒன்பது மன்னர்கள் ஒன்றிணைந்து எதிர்த்த வாகைப்பறந்தலை போர், சேர பாண்டிய மன்னர்கள் ஒன்றிணைந்த வெண்ணிப்போர் 3 இவற்றில் வெற்றிகொண்டு


எதிர்க்க ஆளின்றி தோள்தினவெடுத்து வடதிசை சென்று வச்சிர, மகத, அவந்தி மன்னர்களிடம் திறைகொண்டு ஆரியப்படை வென்று யவனர்களை வென்று இமயத்தில் புலிப்பொறி நாட்டிய சோழமாமன்னன் கரிகால் பெருவளத்தானை கண்டதில்லை


* கடம்பழித்து கடல் நடுவே இருந்த கடம்பரின் சின்னமான கடம்ப மரத்தை அழித்து யவனர்களை அடிபணியவைத்து கடலாதிக்கம் செலுத்திய சேரன் செங்குட்டுவன் கண்டதில்லை


* புள்ளலூர் போரில் புலிகேசியை கொன்ற பல்லவ மாமன்னன் மகேந்திர வர்மனை கண்டதில்லை


* நரசிம்ம பல்லவனுக்காக வாதாபி கொண்டு போர் அழிவை கண்டு அருட்புகழை நாடிய பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டரை (63நாயன்மாரில் ஒருவர்) கண்டதில்லை


* இலங்கையை வெற்றிகொண்ட மாமன்னன் நரசிம்ம பல்லவனை கண்டதில்லை


*இரு கால்களிழந்து உடம்பில் 96 விழுப்புண்களை கொண்டு தன் மகன் மாதண்ட நாயகனாக களம்புகுந்த "திருப்புறம்பியம் போரை" 90 வயதில் நேரடியாகக் காணவந்து பல்லவ- சோழ படை தோற்கும் நிலையில் இரண்டு வீரர்களின் தோள்மீதமர்ந்து கையில் வாளுடன் வெறியாட்டம் ஆடி வெற்றிக்கனி பறித்த மாவீரன் விஜயாலய சோழனை கண்டதில்லை


* காந்தளூர்ச் சாலை முதல் மாலத்தீவு வரை தெற்காசியாவை கட்டியாண்ட பேரரசன் பெருவுடையார் கோவில் கண்ட மாமன்னன் இராசராசனை கண்டதில்லை.


* தன் உடம்பில் 64 விழுப்புண்களை கொண்டு எம் தலைவனே வியந்த பழுவேட்டரையரை கண்டதில்லை


* 12 லட்சம் படைவீரர்களை கொண்டு மாலத்தீவு முதல் இன்றைய பீஜாப்பூர் வரை வென்றெடுத்து தோல்வி காணாத மாமன்னன், தந்தை இராசராசனை விட வீரமகன் கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய இராசேந்திர சோழனை கண்டதில்லை.


சீனம் , பர்மா, காம்போசம், கன்னோசி, கடாரம் முதல் பல நாடுகளில் சுங்கப்பகிர்வு முதல் பல விசயங்களில் நட்புறவு பேணிய குலோத்துங்க சோழனை கண்டதில்லை


ஆனால் இவர்களை இவர்கள் வீரம், ஆளுமை, செருக்கு, குடிகள் மீதான அன்பு, எதிரிக்கும் இரங்கும் நற்பண்புகளை கொண்ட எம் தலைவன் பிரபாகரனை, அவர்களின் தளபதிகளை, தலைவனுக்காக தன் மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களை ஒருங்கே கண்டு அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை.


காவிரியில் கல்லணை கட்டி நீரின் போக்கை மாற்றி கால்வாய் வெட்டி விவசாயம் காத்தவன் கரிகால் பெருவளத்தான்.


தன் படை தோற்றாலும் சரி இரணைமடு குளத்தை (அணையை) உடைக்க அனுமதிக்க மாட்டேன், என் மக்களின் விவசாயம் பாதிக்கும் என உறுதியாய் நின்றவன் எம் தலைவன்.


இராசேந்திர சோழனுக்கு பின் அவருக்கு நிகரான எந்த மாவீரனும் அவதரிக்க வில்லை. அதேபோல ஆயிரமாண்டுக்கு பின் எம் தலைவன். இன்னும் ஆயிரமாண்டு கடந்தபின்னும் அவர் புகழ், வீரம் போற்றப்படும்.

 

தமிழன் தலைநிமிர்ந்த நாள்


தலைவன் பிறந்த நாள் ..

நவம்பர்26...

சனி, 21 நவம்பர், 2020

வரலாற்றில் ஆண்டு க்கணக்கு -- சக ஆண்டு

     இப்போதெல்லாம் வரலாற்றை சொல்லஆண்டுக்கணக்காக  கி பி ,கி மு என்று கிறிஸ்துவை அடையாளமாகக்கொண்டு சொல்லுகிறோம் .பெரும்பாலும் இத்தகைய முறையே உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது 


இது கிருஸ்துவுக்குப்பிறகுதான் நடைமுறைக்கு வந்தது .

உலகில் பரவலாக பலரும் கிமு, கிபி என  கிறிஸ்துவ ஆண்டையே பயன்படுத்தி வருகின்றனர். முதன்முதலில் ஒலிம்பிக் நடந்த கிமு 776ஐ கிரேக்கர்கள் தேர்ந்தெடுத்து, கிமு 776லிருந்தும்,  ரோமானியர்கள் கிமு 753ல் இருந்தும் இந்த ஆண்டுக்கணக்கை  தொடங்குகின்றனர். 


முகம்மது நபிகளார் மெக்கா விட்டு மதினா சென்ற அந்த பயணத்தை (கிபி 622) ஹிஜிரா ஆண்டாக முஸ்லிம்கள் கணக்கிடுகின்றனர்


ஆனால் தமிழ் நாட்டின் பண்டைய கல்வெட்டுகளிலும் ,பட்டயங்களிலும் வேறு வகை ஆண்டுக்கணக்குகள் பயன்பாட்டில் இருந்திருப்பதை நாம் காண்கிறோம் .


அவைகள் சக ஆண்டு ,கலியாண்டு ,கொல்லம் ஆண்டு ,விக்கிரம ஆண்டு போல இன்னும் பல பயன்பாட்டில் இருந்திருக்கிறது .அவைகளை பற்றிய செய்திகளையும் ,ஆந்த ஆண்டுக்கணக்கை எப்படி தற்போதைய கி மு ,கி பி க்கு மாற்றுவது என்பதை பார்ப்போம் .


சக ஆண்டு

சக ஆண்டு என்பது சாலிவாகன ஆண்டுக் கணிப்பு முறையின் கீழ் குறிக்கப்படும் ஆண்டைக் குறிக்கும்.   என்றும் அழைக்கப்படுகின்ற சாலிவாகனன் என்னும் சாதவாகன மன்னனே அவன் உஜ்ஜயினியின் விக்கிரமாதித்தனுக்கு எதிராகப் பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்காக கிபி 78 ஆம் ஆண்டில் இம் முறையைத் தொடக்கி வைத்ததாகச் சொல்லப்படுகின்றது.

பண்டைய கல்வெட்டுகளில் அதிகம் பயன்பாட்டில் உள்ள ஆண்டுமுறை இதுவே ஆகும் .ஏன் இத்தகைய ஆண்டுமுறை தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது ? தங்களுக்காக ஏன் ஒரு தனி ஆண்டுமுறை அப்போது ஆண்ட மன்னர்கள் ஏற்படுத்தவில்லை என்பது கேள்விக்குறிதான் .கௌதமிபுத்ர சதகர்ணி கி.பி. 78-102) சாதவாகனர் அரச வம்சத்தில் 23ஆம் அரசராக திகழ்ந்தார். சதவாகனர்களில் மிகப்பெரும் மன்னராக இருந்த கௌதமிபுத்ரன் தன் தந்தை சதகர்ணிக்கு பின் அரசன் ஆனார்.

கௌதமிபுத்திர சதகர்ணி தன் பேரரசை பெரிதளவில் விரிவடைய வைத்து இரு அஸ்வமேத யாகங்களை நடத்தியவர். இவரது ஆட்சிக் காலத்தில் சகர்கள், கிரேக்கர்கள், மற்றும் பகலவர்கள் சாதவாகனப் பேரரசின் மீது படையெடுப்புகளை முறியடித்து சாதவாகனப் பேரரசை விரிவு படுத்தினார்.

கௌதமிபுத்திர சதகர்ணியின் ஆட்சிப் பகுதியில் தக்கான பீடபூமி, சௌராஷ்டிரம், அவந்தி, இருந்ததாக நாசிக் கற்சிற்பங்கள் எடுத்துரைக்கிறது. மேலும் தென்னிந்தியாவின் காஞ்சியையும் வென்றுள்ளார்.

ஆனால் சதகர்ணிவ்ன்பவர் யார் என்பதில் இன்னமும் நூற்றுவர் யார் என்பதைக்குறித்து சர்ச்சைகள் உண்டு . தமிழ் நாட்டின் அதிக கல்வெட்டுகளில் காலத்தைக்குறிப்பிட சக ஆண்டு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது .எனவே இந்த சக ஆண்டுவரலாறுஅப்போதைய  தமிழ் மக்கள் அறிந்த வரலாறாகவே இருந்திருக்க வேண்டும் .

நமது மன்னர்கள் சக ஆண்டுக்குறிப்புடன் ஓர் அரசன் எந்த ஆண்டு அரசனாக முடி சூடிக் கொண்டானோ அந்த ஆண்டு முதல் அவன் ஆட்சியாண்டு தொடங்குவதாகப் பெரும்பாலும் எழுதுவர்.  ஓர் அரசன் ஐந்தாம் ஆண்டு ஒரு கட்டளை பிறப்பித்து அவனுடைய ஆறாம் ஆண்டில் கல்லில் கல்வெட்டாக வெட்டப்பட்டால் ‘ஐந்தாவதுக்கு எதிராமாண்டு’ என்று எழுதப்படும்.

இத்தகையசக ஆண்டு முறையை இன்றையவழக்கில் உள்ள  கி பி கி மு முறைக்கு மாற்றவேண்டுமானால் அந்த ஆண்டுடன் 78 ஐ கூட்டவேண்டும்

உதாரணமாக சக ஆண்டு 792 ஐ குறிக்கும் கல்வெட்டு ஒன்று இருந்தால்  .அதில் வரகுண பாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது .இதை கி பி ஆண்டு முறைக்கு மாற்றும் போது 792+ 78  கி பி 870 என்று கணக்கிடலாம் .

இப்போதே கட்டுரை நீண்டுவிட்டது மீதி ஆண்டு கணக்குகளை அடுத்துப்பார்க்கலாம் .நன்றி !

தொடரும் ......

#அண்ணாமலைசுகுமாரன் 21/11/19

REPOST  21/11/2020

புதன், 18 நவம்பர், 2020

கடலால் வளர்ந்த தமிழர் பண்பாடு !

மூன்று புறமும் கடலால் சூழப்பட்டது நமது இந்தியப்பெருநாடு .


பண்டைய தமிழ்நாட்டுக்குக் கிழக்கேயும் மேற்கேயும் தெற்கேயும் என முப்புறமும் கடல்கள் சூழ்ந்திருந்தன. இன்றுள்ள கேரள மாநிலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. எனவே, தமிழகத்தின் மூவெல்லையாயும் கடல்களே இருந்தன.   .

வங்காளவிரிகுடா 

அரபிக்கடல் 

இந்திய ப் பெருங்கடல் 

என்றுஅந்தக்கடல்கள்   அழைக்கப்படுகிறது .ஆனால் எத்தனைக்காலமாய இந்தக்கடல்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன .ஏன் இவாறு அழைக்கப்படுகிறது என்பதற்கும் பின்னணியில் வரலாறு இருக்கிறது .


தமிழில் கடலானது 


அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது  


இத்தனை பெயர்கள் இருப்பதில் இருந்தே தொல் தமிழர்களுக்கும் கடலுக்கும் இருந்த நெருங்கியத் தொடர்பை அறியலாம் .


சங்ககாலத்தில் வங்காளவிரிகுடா  குணக்கடல் என்று அழைக்கப்பட்டிருக்கிறது .


கிபி முதல் நூற்றாண்டு இரண்டாம் நூற்றாண்டில் அரபிக்கடல் குடக்கடல் என்று தமிழரால் அழைக்கப்பட்டிருக்கிறது .


தொல் தமிழகத்தில் வணிகம் செய்யவந்த யவனர்கள் இந்திய க்கடலை எரித்திரியக்கடல் என்று அழைத்திருக்கிறார்கள் .


சோழர்கள் தென்கிழக்காசியாவில் முழுவதும் வணிகத்தில் கோலோச்சியபோது வங்காளவிரிகுடாக்கடல் சோழர்கள் கடல் மற்றும் சோழர்கள் ஏரி  என்றே அழைக்கப்பட்டிருக்கிறது .  


பிறகு தென்கிழக்காசியா செல்வது படிப்படியாகக்குறைந்து உள்நாட்டு வணிகத்திற்காக வங்காளத்தின் கங்கை முகத்துவாரத்தில் புகுந்து வாரணாசி ,பாடனா முதலிய உள்நாடுகளில் வணிகம் செய்ததால் ப்பிரும்மபுத்திரா நதிமூலம் வங்காள தேசம் முழுவதும் திபெத் போன்ற இடங்களுக்கு சென்றதும் நடந்திருக்கிறதுஎனவே அது வங்காளக்கடல் என்று அழைக்கப்பட்டிருந்தது போலும் .

 

அதே சமயம் குடக்கடல் எனும் கடல் அரேபியா செல்வதற்கு வழியாக அமைந்ததால் அந்தக்கடல் அரபிக்கடலாக ஆனது போலும் .

வரலாற்றில் அந்தக்கடலுக்கு ரத்தினாகரா என்ற பெயரும் இருந்திருக்கிறது .

அபரா கடல் என்பதே அதன் பெயர். அபரா என்றால் மேற்கு 

நாம் குணக்கடல் குடக்கடல் என்று அழைத்ததைப்போல் வடமொழி இலக்கியங்கள் வங்காளவிரிகுடாவை  பிரச்சிய பயனீதி  prachya payanidhi என்று அழைத்திருக்கின்றன .


வங்காள விரிகுடா என்ற பெயர் ஐரோப்பியர்களால் 17 நூற்றாண்டில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது 


விரிகுடா என்பது நிலப்பரப்பைச் சுற்றி அகல வாக்கில் மிகப்பரந்த அளவில் காணப்படும் கடல் பரப்பாகும்.வளைகுடா என்பது அதற்கு நேர் மாறானதாகும். பெரிய விரிகுடா "வளைகுடா" என்று அழைக்கப்படும்  


இன்னமும் சொல்லப்போனால் கிபி 7 ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா கடல் கலிங்கா சாகர் என்று அழைக்கப்பட்டதற்கும் சான்றுகள் கிடைத்துள்ளன .

In 1196, according to the Sundarbans copper plate of Srimaddomanapala, there existed close to the Ganga's confluence with the sea, a place named Dvarahataka. It was obviously a small riverine market centre (hataka, ie hattaka) functioning as a dvara or gateway o the sea. These inland riverine market centres/ports, whether in Vanga-Samatata area or in the lower regions of Radha, were less 

prominent than Tamralipta or Samandar, but provided the crucial linkages between the littorals and the interior in a nadimatrka region like Bengal. The navigability of the many rivers, including 

the Ganga, in the Bengal delta is unmistakably evident from the epigraphic account of fleets of boats on the Bhagirathi(sa khaluBhagirathipathapravartamana nauvata) and the description of Vikramapura in Vanga as a navigable tract (Vange Vikramapurabhage 

navye).

Interestingly, nearly 480 km-long coastline of Bay of  actual ancient name of Bay of Bengal was Kalinga Sagar or Kalinga Udadhi or Kalingedro.Similarly, renowned writer Chakradhar Mohapatra has given many hints in support of this in his literary work Swasita. There is also an elaborate description of Kalinga Sagar in ancient Buddhist literature 

written during the 7th-8th century AD.


வங்காள விரிகுடாவிற்கு இன்னொரு தமிழ்ப்பெயர் பூர்வ கடல்.  இன்னமும் இதற்க்கு போர்ச்சுகீசியர்கள் தந்த ஒரு பெயர் வேறு இருக்கிறது .


தொல் தமிழர்களும் கடலும் வரலாற்றுக்காலத்திற்கு முன்பே நெருங்கியது தொடர்பு கொண்டிருந்தனர் .


ஆதிச்ச நல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர் சத்யமூர்த்தி அவர்கள், 25.5.2007 இந்து நாளிதழில், பொருள் உற்பத்தி பண்பாடு தெற்கிலிருந்து வடக்கே சென்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக, ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த( 1% ஆய்வில்) பொருட்களின் தயாரிப்பில் உள்ள உயர்தொழில்நுட்பம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். 


தெற்கிருந்து வடக்கே பொருள் உற்பத்தி பண்பாடு பரவியது என்றால், இரும்பு பண்பாடு முதலில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் துவங்கி இருக்க வேண்டும் என்பதோடு அதன் காலம் கி.மு 1200க்கு முன்பாக இருக்க வேண்டும்.. ஆதிச்ச நல்லூர் மற்றும் பிற முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் அகழாய்வு முழுமையாக நடத்தப்பட்டால் , தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு.1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. இலங்கை, ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆய்வுகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன. 


இரும்பு காலத்திற்கு முன்பே, புதிய கற்காலத்திலேயே, மனிதர்கள் கடல் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் மூன்றாம்நிலை புதிய கற்காலம் கி.மு 4000 ஆகும். இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு. 1500ஆகும். ஆக, கி.மு. 4000த்துக்கும், கி.மு. 1500க்கும் இடைபட்ட காலத்தில், தமிழர்கள் கடல் வணிகத்தைத் தொடங்கிவிட்டனர் எனலாம். 


இரும்பு பண்பாட்டின் துவக்க காலத்தில் இருந்து, இக்கடல் வணிகம் ஒரு வளர்ச்சி பெற்ற வணிகமாக மாறுவதோடு, ஒரு நிலையான, தொடர்ச்சியான வணிகமாகவும் மாறியிருக்கும். 


அதற்கு பின்னரே இரும்பு பொருட்களின் ஏற்றுமதி தொடங்கி இருக்க வேண்டும்.

பூம்புகார் ஆய்வு இன்னமும் கிடப்பில் உள்ளது .அது வெளிவந்தால் தான்  தமிழர் உண்மைத்தொன்மை வெளியாகும் .


கடல் மூலம் வாணிகத்திற்காக உலகின் பல நாடுகளுக்குச் சென்ற தமிழ்வணிகர்களின் வரலாறு இன்னமும் சரிவர ஆராயப்படவில்லை .


தமிழர்வரலாறு மன்னர்களைவிட வணிகர்கள் மூலமே உலகம் முழுவதும் நிலைபெற்றது ,மீண்டும் அது வணிகத்தின் வெற்றி மூலமே நிலைபெறும் .


சொல்ல சொல்ல இனிக்கிறது சொல்லத்தான் நேரம் கிடைக்கவில்லை .நன்றி!


#அண்ணாமலைசுகுமாரன்  4/6/2020   Repost16/11/2020

படம் இணையத்தில் பெற்றது .

செவ்வாய், 17 நவம்பர், 2020

கண்டா ஓங்கலுக்கு ‘பெலோரஸ் ஜேக்‘ (Pelorus Jack)

// நியூசிலாந்து நாடு இரண்டு பெரிய தீவுகளைக் கொண்ட நாடு. அந்த இரு தீவுகளுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியை குக் நீரிணை (Cook Strait) என்பார்கள்.




உலகின் மிக ஆபத்தான கடற்பகுதிகளில் இந்த குக் நீரிணையும் ஒன்று. வலிமையான 8 நாட் வரை வேகம் கொண்ட நீரோட்டம், பேரலைகள், கடற்பாறைகள் நிறைந்த பகுதி இது. இந்த நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் பாறையில் மோதி உடைபடவோ, தரைதட்டவோ, உடைந்து நீரில் மூழ்கவோ வாய்ப்புகள் அதிகம்.

குக் நீரிணை என்றாலே கப்பல் மாலுமிகளுக்கு திக்திக் என்று இருந்தநிலையில் அவர்களுக்கு உதவியாக திடீரென ஒருநாள் களத்தில் குதித்தது ஒரு கடலுயிர். அது கண்டா வகை ஓங்கல்.

ஓங்கல்கள் எனப்படும் டால்பின்களில் பலவகைகள் உள்ளன. சீன ஓங்கல் (வெள்ளை ஓங்கல்) (Indo Pacific Humpbacked Dolphin),  கிண்கிணி ஓங்கல், கண்டா ஓங்கல் (Risso), வலவம் ஓங்கல் (Pilot Whale) என ஓங்கல்களில் பலப்பல ரகம்.

இந்தநிலையில் குக் நீரிணைப்பகுதியில் கப்பல்களுக்கு வழிகாட்டியாக ஒரு கண்டா ஓங்கல் 1888ஆம் ஆண்டு திடீரெனத் தோன்றியது. நியூசிலாந்தின் தலைநகரமான வெலிங்டனில் இருந்து தெற்குத் தீவில் உள்ள நெல்சனுக்குப் பயணம் செய்த பிரிண்டில் என்ற கப்பலுக்கு அது வழிகாட்டியது. பாறைகளில் கப்பல் மோதிவிடாமல், சரியான வழியைக் காட்டியபடி கப்பலின் கூடவே அது பாந்தமாக பவனி வந்தது.

ஏறத்தாழ 13 அடி (4 மீட்டர்) நீளமுள்ள ஓங்கல் அது. வெள்ளையில் சாம்பல் நிற வரிகளுடன் காணப்பட்ட அந்த ஓங்கல் ஆணா பெண்ணா என்பது கூட தெரிய வில்லை. ஆனால் கண்டா ஓங்கல்களில் ஆண் ஓங்கல்கள் மட்டுமே 4 மீட்டர் நீளம் வரை வளரும். ஆகவே, இந்த வழிகாட்டி ஓங்கல் ஆண் ஓங்கல்தான் என்ற முடிவுக்கு கப்பல்மாலுமிகள் வந்தார்கள்.

பிரிண்டில் கப்பலுக்கு மட்டுமல்ல, அடுத்த 24 ஆண்டுகளில் நாள்தோறும் இரவும் பகலும் அந்த கண்டா ஓங்கல் அந்த வழியே வரும் அனைத்துக் கப்பல்களுக்கு வழிகாட்ட ஆரம்பித்தது. கட்டணமில்லா சேவை.

அந்த கண்டா ஓங்கலுக்கு ‘பெலோரஸ் ஜேக்‘ (Pelorus Jack) என்று பெயர் சூட்டப்பட்டது. பெலோரஸ் ஜேக் என்பது ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடனத்தின் பெயர். அந்த நடனத்தில் ஆடுபவர்களைப் போலவே நமது கண்டா ஓங்கலும் சுற்றிச்சுழன்று திருநடனம் புரிந்ததால் பெலோரஸ் ஜேக் என்ற பெயர் சூட்டப்பட்டது.

பெலோரஸ் ஜேக், ஒவ்வொரு கப்பலுடன் அரைமணிநேரம் வரை கூடவே வந்து வழிகாட்டும். சிலவேளைகளில் குக் நீரிணைப் பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் பெலோரஸ் ஜேக்குக்காகவே காத்திருக்கும். சில கப்பல் கேப்டன்கள் பெலோரஸ் ஜேக் வராமல் குக் நீரிணையில் பயணப்பட மாட்டார்கள்.




பெலோரஸ் ஜேக் சிலவேளைகளில் கப்பல்களுடன் 8 கிலோ மீட்டர் தொலைவு வரை கூடவே வரும். கப்பலில் இருந்து எழும் அலைகளில் சறுக்கி விளையாடும். ஆனால், குக் நீரிணையில் உள்ள பிரெஞ்சு பாஸ் என்ற பகுதிக்குள் மட்டும் அது நுழையாது. பிரெஞ்சு பாஸ் பகுதி வந்ததும் நின்று கொள்ளும். அங்கிருந்து திரும்பி வரும் கப்பல்களுக்கு மீண்டும் வழிகாட்டும்.

பெலோரஸ் ஜேக்கின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்க நாளிதழ்களில் அதுபற்றி செய்திகள் குவிந்தன. அஞ்சல்அட்டைகளில் பெலோரஸ் ஜேக்கின் படம் இடம்பெற்றது. பெலோரஸ் ஜேக்கைக் காண சுற்றுலாப்பயணிகள் நியூசிலாந்தில் குவியத் தொடங்கினர்.

ஒருமுறை பெங்குவின் என்ற பயணிகள் கப்பலைச் சேர்ந்த குடிகார மாலுமி ஒருவர் பெலோரஸ் ஜேக் ஓங்கலைக் கண்டு கடுப்பாகி, கப்பலின் மேற்தளத்தில் இருந்து அதை துப்பாக்கியால் சுட்டார். நல்லவேளை, பெலோரஸ் ஜேக் நீரில் மூழ்கி தப்பி விட்டது. அந்த குடிகார மாலுமியை மடக்கிப்பிடித்த சுற்றுலாப்பயணிகள் கரை வந்து சேர்ந்ததும் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்த தகவல் இதற்குள் காட்டுத்தீயாகப் பரவ, நியூசிலாந்து நாட்டு நாடாளுமன்றம் கூடி, பெலோரஸ் ஜேக் ஓங்கலைக் காப்பாற்ற சட்டம் பிறப்பித்தது. அந்த ஓங்கல் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் 100 பவுண்ட் வரை தண்டம் என்று அரசு அறிவித்தது. உலக அளவில் தனியொரு கடலுயிரை பாதுகாக்க ஒரு நாட்டின் நாடாளுமன்றம் சட்டம் பிறப்பித்தது அதுவே முதல்முறை.

இதற்கிடையே இன்னொரு வியப்பூட்டும் சங்கதி நடைபெற்றது. குக் நீரிணைக்குவரும் அனைத்துக் கப்பல்களுக்கும் வழிகாட்டி வந்த பெலோரஸ் ஜேக், தன்னைச் சுட முயன்ற கப்பலான பெங்குவினுக்கு மட்டும் அதன்பிறகு வழிகாட்டவேயில்லை. இந்தநிலையில் ஒருநாள் குக் நீரிணைப் பகுதியில் கடற்பாறையில் மோதி பெங்குவின் கப்பல் உடைந்தது. அதில் 75 பேர் வரை பலியானார்கள்.

இதற்கிடையே பெலோரஸ் ஜேக்குக்கு வயதாகத் தொடங்கியது. கண்டா ஓங்கல்கள் 24 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. இந்தநிலையில், 24 ஆண்டுகள் இடைவிடாமல் வழிகாட்டி பணிபுரிந்த பெலோரஸ் ஜேக், அதன் ஓய்வு வயதை எட்டத் தொடங்கியது.
வயதாகி விட்டதால் அதன் வேகம் குறையத் தொடங்கியது. அதற்கேற்ப நீராவிக் கப்பல்களும் பெலோரஸ் ஜேக்குக்கு ஏற்ப தங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டு அதை பின்தொடர ஆரம்பித்தன.

இதற்கிடையே தனது பணி தனக்குப்பிறகும் தொடர்ந்து தொய்வில்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காக நாய்ச்சுறா ஒன்றுடன் பெலோரஸ் ஜேக் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு அந்த நாய்ச்சுறாவை தனக்கு மாற்றாக களமிறக்க முயன்றதாகக்கூட ஒரு கதை உண்டு.
எது எப்படியோ? கடைசியாக 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெலோரஸ் ஜேக் ஒரு கப்பல் மாலுமியின் கண்ணில் பட்டது. அதன்பிறகு அதைக் காணவில்லை. 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குக் நீரிணைப்பகுதியில் நங்கூரமிட்டு நின்ற நார்வே நாட்டு திமிங்கில வேட்டைக்கப்பல் ஒன்று பெலோரஸ் ஜேக்கை வேட்டையாடி விட்டதாக நம்பப்பட்டது.

ஆனால், குக் நீரிணை பகுதியில் கடலோர விளக்குகளை பராமரித்து வந்த சார்லி மொய்லர் என்பவர் பெலோரஸ் ஜேக் போன்ற ஒரு கண்டா ஓங்கல் இறந்து கரை ஒதுங்கியதாகக் கூறினார். அந்த ஓங்கலின் உடல் துணுக்குகளை ஆய்வு செய்ததில் அது 24 முதல் 30 வயதான ஓங்கல் எனத் தெரிய வந்தது. அது பெலோரஸ் ஜேக்கின் உடல்தான். முதுமை காரணமாக பெலோரஸ் ஜேக் இயற்கை மரணம் அடைந்து விட்டது என கருதப்பட்டது.

உலக அளவில் பெலோரஸ் ஜேக்கைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றப்பட்டன. ஒரு சாக்லெட்டுக்கு பெலோரஸ் ஜேக்கின் பெயர் சூட்டப்பட்டது. நியூசிலாந்தில் பெலோரஸ் ஜேக்கின் மிகப்பெரிய வெண்கலசிலை நிறுவப்பட்டது.

இதற்கிடையே பெலோரஸ் ஜேக்கை பிடிக்காத சிலரும் அப்போது இருந்தார்கள். ‘பெலோரஸ் ஜேக் ஒன்றும் கப்பல்களுக்கு வழிகாட்டவில்லை. அது கப்பல்களால் உருவாகும் அலைகளைப் பயன்படுத்தி அலைச்சறுக்கு செய்யத்தான் கப்பல்களுடன் பயணித்தது‘  என்பது அவர்களது கருத்தாக இருந்த து.

எது எப்படியோ? பெலோரஸ் ஜேக் இருந்த வரை, குக் நீரிணைப் பகுதியில் அது வழிகாட்டிய எந்த ஒரு கப்பலும் விபத்தில் சிக்கவில்லை.//

(நன்றி : Stephen Deli, உவரி)

திங்கள், 16 நவம்பர், 2020

தமிழர் பண்பாட்டில் பழங்காலம் தொட்டே பொன் நகைகளுக்குத் தனி இடம் உண்டு அவை

 புன்சிரிப்பு முகத்திற்கு அழகு என்பர். குமிழ்வாயின் புன்சிரிப்பு எனும் அலங்கார உவமை வரி இலக்கியங்களில் உண்டு. புன்சிரிப்பு என்கிற புன்னகையுடன் பொன் நகையும் சேர்ந்தால் அழகு. அது பெண்களின் அழகுக்கு அழகூட்டும் என்பர். தமிழர் பண்பாட்டில் பழங்காலம் தொட்டே பொன் நகைகளுக்குத் தனி இடம் உண்டு. 





தமிழ் இலக்கியத்தின் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி எனும் ஐந்தும் அணிகளின் அதாவது நகைகளின் பெயரையே கொண்டிருக்கின்றன. 

சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி 

மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி 

குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். 

வளையாபதி - வளையல் அணிந்த பெண் 

சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் கிரீடத்தில் பதிக்கப்படும் மணிக்கல். 


இப்படி தமிழ்பண்பாட்டிலிருந்து பிரிக்க முடியாத இந்த நகைகளை அணிந்து மகிழ்ந்த மனிதன் அதை தான் வணங்கும் தெய்வங்களுக்கும் சூட்டி மகிழ்ந்தான். கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் நகைகளின் பெயர்களை ஏராளமாக நாம் காண முடிகிறது. அவற்றில் பல இன்று நாம் அணியும் வழக்கத்திலிருந்தே காணாமல் போய்விட்டன. நமது பழம் பண்பாட்டில் இருந்து வந்த சில நகைகளின் பெயர் பட்டியல் இதோ:


ஏகவல்லி [கழுத்து அணி - ஒற்றைச் சரமாலை]

காறை [கழுத்து அணி ]

கச்சோலம் [ இடை அணி]

கலாவம் [இடை அணி]

காந்த நாண் புள்ளிகை [கழுத்து அணி]

மோதிரம் [இரத்தினம் முத்து ]

முத்து மாத்திரை [காது அணி]

பஞ்சசாரி [ஐந்து சங்கிலி கொண்டது ]

பதக்கம். 

காந்திகை ( கழுத்து அணி)

கடகம்,

கொப்பு ( காதணி)

மகுடம், 

குதம்பை ( காதணி)

பட்டம் (மகுடம்)

பட்டக் காறை ( தாலியை கோர்க்கும் பூண் நூல்)

சப்தசரி ( ஏழு சங்கிலிகள்)

சிடுக்கு, சூடகம் (வளையல்)

பாத சாயலம் ( கால் அணி)

சூரி சுட்டி (நெற்றியில் அணிவது)

வீரப்பட்டம் (தலையில் அணிவது)

வாளி (காதணி)

காறை கம்பி (காதணி)

திருகு, மகரம் (காதணி)

உருட்டு திரிசரம் ( கழுத்து அணி)

தூக்கம் (காதணி)

நயனம் (கண்மூடி)

பொற்பூ,

பொட்டு.

பாசமாலை

தோள் வளை

தாலி

தாலி மணிவடம் 

புலிப்பல் தாலி

தாழ்வடம்

தகடு

திரள்மணி வடம்

வளையல்

வடுக வாளி

வடம்

தோடு

திருவடிக்காறை

கால் வடம்

கால் மோதிரம்

சன்ன வடம் திருகு

கால் காறை

கைக் காறை மாலை

பாம்படம்

தண்டட்டி 


இப்படி இன்னும் எத்தனையோ.....

இந்த நகைகளில் பதிக்கப்பட்ட நவமணிகளின் வகைகள் முத்துக்களில் 23 வகையும் இரத்தினங்களில் 11 வகையும் வைரங்களில் 11ம் இருந்தன என்று தெரியவருகிறது. நெல்லை வெள்ளூவன்

வியாழன், 23 ஏப்ரல், 2020

இந்தச் சொல்லுக்கு ஏன் இந்தப் பொருள் ? (துணுக்கு விளக்கம்)

இரா. திருமாவளவன்

 0. அம்மான்> மாமன் = அம்மா அல்லது அம்மையின் உடன் பிறந்தவர்
 0. அத்தை > அத்தன் = அப்பா/ தந்தை >> தந்தையின் உடன்பிறந்தவள் ( அம்மை > அம்மான்/ அத்தன்> அத்தை)
 0. மருமகன்> குடும்பத்திற்குப் பொருந்திய மகன் ( மருவிய மகன்) மகளின் கணவன்
 0. மருமகள்> குடும்பத்திற்குப் பொருந்திய மகள் ( மருவிய மகள் ) >> மகனின் மனைவி
 0. மாமன் > மருவிய அம்மான்
 0. மாமி > மாமன் மனைவி
 0. அண்ணன் > தமக்கும் மேலான அகவையுடைய உடன் பிறந்தான். அண் = மேல்
 0. தம்பி = தமக்குப் பின்னால் பிறந்தவன் >> தம் பின்> தம்பின்> தம்பி
 0. தங்கை > தம் பின் பிறந்த சிறியவள் , இளைவள் ( கை = சிறிய) >>> தம் + கை = தங்கை
 0. தா > கையை முன்னே தள்ளி, நீட்டிப் பெறுவது / கொடுப்பது( முன் தள்ளல் பொருள்) 
 0. மா = பெரிய , உல்> முல்> மல் = திரட்சிப் பொருள், திரண்டது பருக்கும். உல்> முல்> முழு > முகு > மிகு, முகு> மகு > மகம்= பருமை , மகம் >மக> மா, ( மகன்> மான் எனத் திரிதல் போல்) மா = பெருமை, பருமை
 0. மாரி > கரிய மழை முகிலிலிருந்து பொழியும் மழை ( உல் = கருமை பொருள் வேர். உல்>முல்>மல்>மால்= கரிய முகில், மால்>மார்> மாரி)
 0. மயிர் > கரிய தலை முடி ( உல்>முல்>மல்>மய்>மை = கண்ணுக்குப் பூசும் கருமை நிறம்; மய்>மயிர் )
 0. அயிர் > நுண்ணிய மணல் ( உல்>அல்= நுண்மைப் பொருள் வேர். உல்>அல்>அய்>அயிர் )
 0. நிலா > ஒளி வீசும் துணைக்கோள் ( உல்>நுல்= ஒளிப் பொருள் வேர். உல்>நுல்> நில்>நிலா, நில்>நிலவு )
 0. காரி >கரிய படலம் சூழ்ந்த கோள். ( உல்>குல்= கருமைப் பொருள் வேர். உல்>குல்>கல்>கர்>கரி>காரி. < கல்>கலி>சனி ~ வடமொழித் திரிபு)
 0. கரி > கரிய நிற யானை ( உல்>குல்>கல்>கரி)
 0. சாவு > உயிரற்று உடல் சாய்தல் நிலை. ( உல்>சுல்= வளைவு பொருள் வேர். உல்>சுல்>சல்>சால்>சாய்>சாய்வு>சாவு.  சாவு >சா= இறப்பு)
 0. சூரியன்> சுரீர் எனக் குத்தும் வெப்ப ஒளி வீசும் கோள். உல்>சுல்>சுர்>சுரீர். சுர்>சூர்>சூரி> சூரியன்)
 0. பூனை > கால்களால் அடிக்கடி தன் முகத்தைத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் விலங்கு. ( பூசு>பூசை > பூனை . )
 0. உழவு> நிலத்தைக் குத்திக் கிளறி பயிர் செய்தல்( உல்> துளைத்தல் பொருள் வேர். உல்>உழ்>உழு>உழவு)
 0. வா> சென்று மீண்டும் திரும்புகை. அள்>வள்= வளைதல் கருத்து வேர். வள்>வர்>வரு> வருகை. வள்>வர்>வார்> வா = வளைந்து வருதல்)
 0. முள்ளம் பழம்> முள் நிறைந்த பழம். ~ டுரியான். ( உல்= கூர்மை பொருள் வேர். உல்>முல்>முள்> முள்+அம்= முள்ளம்)
 0. புரை > துளை, உல்= துளைத்தல் கருத்து, உல்>புல்> புர்>புரை ( புரை bore)
 0. புல்> மூங்கில் ( உள்ளே துளை உள்ளது) உல்> புல்=>துளை
 0. புல்லாங்குழல்> புல் + ஆம் + குழல்= மூங்கிலால் செய்யப்பட்ட குழல்
 0. குழல்> உள் துளையுடைய தூம்பு. உல்>குல்> துளைத்தல் பொருள் வேர். குல்> குழ்>குழல்
 0. தூம்பு> உள் துளையுடைய குழாய். உல்>துள்>தும்>தும்பு>தூம்பு( tube)
 0. சுழியம்> வெறுமை வட்ட அடையாளம்; zero, உல்>சுல்= வளைவுப் பொருள் வேர், சுல்>சுழ்>சுழி>சுழியம்
 0. சிவம்> சிவப்பு நிற இயற்கைத் தீயின் நிறத்தன்மை, உல்> வெப்பக் கருத்து வேர், உல்>சுல்>செல்>செம்> செம்மை>செவ்வை>செவ்வம்>சிவ்வம்>சிவம்
 0. சிவப்பு> தீயின் நிறம், சுல்>செல்>செம்>செம்மை> செவ்வை> சிவ்வை>சிவம்>சிவப்பு.
 0. சிவப்பு>சிகப்பு ( வ> க திரிபு முறை)
 0. சேய்> செந்நிறம், சுல்>செல்>சேல்>சேய்
 0. சேயோன்> செந்நிறக் கதிரவன், சுல்>செல்>சேல்>சேய்> சேயோன்
 0. சொலிப்பு> ஒளிர் விடுதல், சுல்>சொல்>சொலிப்பு
 0. முருகன் > இளமை வடிவினன். உல்> தோன்றல் கருத்து வேர். தோன்றுவது இளமையாகி இளமைக் கருத்தைத் தரும். உல்>முல்>முள்>முரு>முருகு= இளமை. முருகு>முருகன் = இளமையன்
 0. குமரன்> இளமையானவன். உல்>கும்>குமரன். ( கும்= திரட்சிப் பொருள் வேர். இளமையானது  வலிவுடையதாய் விளங்கும்)
 0. குமரி > உருண்டு திரண்டு வலிவுற்று விளங்கும் இளம்பெண். உல்>குல்>கும்>குமரி.
 0. உயரம் > மேல் நோக்கி முன் இயங்கியிருப்பது. உல்> முன்செலல் கருத்து வேர். உல்>உய்>உயர்>உயரம்.
 0. உயிர்> முன்னோக்கி  உந்தி இயங்கிக்கொண்டிருப்பது. உல்>உய்>உயிர். உயிருடைய ஒன்று இயங்கும் வளரும்.
 0. காளான்> கரிய நிறமுடைய பூக்காத் திணை. உல்>கல்= கருமை கருத்து வேர். உல்>குல்>கல்>கள்>காள்>காளான்
 0. காளி> வெப்பம் மிகுந்த கரிய வறண்ட பாலைத் திணை இயற்கைத் தன்மை. உல்>குள்>கள்>காள்>காளி.
 0. அந்தணன்> அகத்தைத் தணித்தவன். ஆசை வெறிகொண்டைலையாது அடங்கி இருப்பவர். அகம் + தணன்> அம்+ தணன் = அந்தணன். அகம்> அம்.
 0. ஆல மரம் > அகன்று விரிந்த மரம். அகல்> ஆல். அகலம்>ஆலம். அகல மரம் > ஆல மரம்.
 0. தென்னை மரம்> வளைந்த மரம். உல்> துள்> வளைவு பொருள் வேர். உல்>துல்>தெல்>தென்> தென்னு = வளைவு . தென்>தென்னை= ஓங்கி உயர்ந்து வளைந்த மரம்
 0. மேற்கு > மேல் நோக்கிய மலையுள்ள திசை. உல்>முல்>மேல்> மேற்கு.
 0. கிழக்கு> மேற்கின் எதிர்புறமாய் கீழ்நோக்கிய திசை. உல்>குல்> தாழ்வு, படுப்பு பொருள் வேர். உல்>குல்>கீழ்>கீழ்க்கு> கிழக்கு.
 0. மண்> சேர்ந்திருப்பது. உல் = சேர்தல் கருத்து வேர். உல்>முல்>முள்>முண்>மண்.
 0. மணம்> பொருந்திய , இசைந்த வாசனை, இரு உள்ளங்கள் பொருந்திய கலியாணம். திருமணம். உல்>முள்>முண்>மண்.
 0. கலகம்> எதிரிகள் சேர்ந்து பொருதுவது. கைகலப்பது. உல்> சேர்தல் கருத்து வேர். உல்>குல்>கல்>கலவு> கலகம்
 0. கலாம்> கலகம். உல்>குல்>கல்>கலாம்
 0. போர்> இரு நாடுகள் சேர்ந்து பொருதுவது. உல்>புல்>பொல்> பொர்> போர்( war)
 0. களவு> மறைந்து செய்யும் திருடு. உல்> குல்> குள்>கள்= கருமை கருத்து வேர். கருமை>> இருட்டு. இருட்டில் ஒளி இல்லாததால் உரு மறையும். இவ்வாறு உருமறைந்து யாருக்கும் தெரியாமல் செய்யும் திருடு. குள்>கள்>களவு.
 0. கள்ளம்> உள்ளத்துள் மறைவாய் கிடக்கும் தீய உணர்வு. உல்> குல்>குள்>கள்>கள்ளம்.
 0. கரவு > கரிய நிறம் மறைவுணர்வுக்குக் குறியீடாகி மறைவான தீய எண்ணத்திற்கு ஆகி வந்து கரவானது. கரவு> மறைவான தீய எண்ணம். உல்>குல்>கல்>கர்>கரி> கரவு
 0. காயம்> கரியதான வானம். உல்>குல்>கல்>கய்>காய்>காயம். ( ஆகாயம்> ஆகாசம்( வடமொழி )
 0. வெப்பம் > சூடு. சூரிய ஒளி வெண்மை நிறமாகவும் இருத்தலால் வெள்ளை சூட்டுக்கும் ஆகி வந்தது. உல்> முல்>மில்> விள்> வெள்> வெய்> வெய்ம்மை> வெம்மை. வெம்பு>வெப்பு> வெப்பம்.
 0. கரம்> கடும் வெயிலில் உழவு தொழில் செய்தமையால் கருத்த கை. உல்>குல்>கல்>கர்>கரம்
 0. குளம்> நிலத்தில் குடைவாய் கிடக்கும் தாழ்பகுதியில் தேங்கும் நீர் நிலை. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்> குளம்
 0. அடுப்பு > சமையல் செய்வதற்கு உணவைச் சூடேற்றும் கருவி. உல்> சேர்தல் , தொடுதல், பொருந்துதல் கருத்து வேர். சேர்வது தேயும் தேய்வது சூடேறும் சூடேறியது தீயாகும், குத்தும் எரிக்கும் ; கருக்கும் . உல்> அல்> அள் = கூர்மை, வெப்பக் கிளைக் கருத்து. அள்> அட்டு=  வெப்பம். அள்>அடு = சேர்தல், மோதல், >> மோதுவது வெப்பமாவதால் வெப்பப் பொருளுமாகியது. அள்> அடு = அடுப்பு .
 0. அட்டை = சேர்ந்து அடுக்கப்பட்டு திண்மையாகிய தாள். உடலில் ஒட்டி குருதி உறிஞ்சும் உயிரி. உல்= சேர்தல் கருத்து வேர், உல்> அல்>அள்> அடு > அட்டு > அட்டை.
 0. பசை > ஒட்டி இரு பொருள்களைச் சேரச்செய்யும் பொருள். உல்> சேர்தல், பொருந்தல் கருத்து வேர். உல்> புல்= சேர்தல், பொருந்துதல் ; உல்>புல்>பல்> பய்> பயை>பசை.
 0. பற்று > சேர்தல், ஒட்டுதல். தொற்றுதல்; உல்>புல்>பல்> பற்று ( பற்று > பற்றி> பத்தி)
 0. பல்லி> சுவரில் , நிலத்தில் பற்றி நகரும் உயிரி. உல்> புல்>பல்> பல்லி
 0. உடை > உடலில் ஒட்டி ஏற்றவாறு பொருந்த அணியும் ஆடை. உல்> சேர்தல் கருத்து வேர். உல்> உள்> உடு> உடை.
 0. உடுப்பு > உல் = சேர்தல் கருத்து வேர். உல்>உள்> உடு> உடுப்பு
 0. உடும்பு > சுவரை உறுதியாய்ப் பற்றிப் பிடித்து நகரும் உயிரி. உல்> உடு> உடும்பு
 0. ஊர்> மக்கள் சேர்ந்து பொருந்தி வாழும் இடம். உல்> உர்> ஊர்.
 0. ஊர்வன> நிலத்தோடு பொருந்தி ஒட்டி நகரும் உயிரிகள். உல்> உர்> ஊர்> ஊர்வன.
 0. உறைவிடம்> மக்கள் சேர்ந்து பொருந்தி வாழும் இடம். உல்> உர்> உறு > உறை > உறைவு > உறைவு இடம் > உறைவிடம்
 0. உறவு > பொருந்திய சேர்ந்த ஒட்டிய தொடர்பு. உல்> உர்> உறு > உறவு
 0. உறவினர் > ஒட்டிய தொடர்பினர். உல்> உறு>உறவு>உறவினர்
 0. தொடர்பு > ஒட்டிச் சேர்ந்திருக்கும் உறவு. உல்> துல்> துள்> தொள்> தொடு > தொடர்> தொடர்பு
 0. தொடரி > ஒட்டிச் சேர்ந்து நீட்சிபடும் பொருள். ( சங்கிலி) உல்> துல்> துள்>தொள்>தொடர்> தொடரி
 0. தொடை > இடுப்போடு காலை சேர்த்துத் தொடுத்திருப்பது/ பாக்களில் சீர்களையும் அடிகளையும் இணைப்பது. உல்> துள்>தொள்> தொடு>தொடை
 0. தொடுப்பு > கள்ள உறவு / தொடர்பு . உல்> தொள்> தொடு > தொடுப்பு
 0. தொடலை > பூக்களால் இணைக்கப்பெற்ற மாலை . உல்> தொள்> தொடு > தொடல்> தொடலை
 0. நடு > உள்ளே அளவாய்ப் பொதிந்த பகுதி/ புள்ளி. உல் > துளைத்தல் கருத்து. உல்> உள்> நுள்> நள்> நடு.
 0. நள்ளிரவு > நடு இரவு ( இரவு 12 மணி) உல்>துளைத்தல் கருத்து. உல்> உள்> நுள்>நள்= நடு. நள்> நள்ளிரவு
 0. நண்பகல்> நடுப்பகல்.  உல்>துளைத்தல் கருத்து . உல்> நுள்> நள்> நண்பகல்.
 0. உள்ளங்கை = கையின் உட்பகுதியாய் விளங்கும் நடுப்பகுதி.உல்>துளைத்தல் கருத்து     உல்> உள்>உள்ளம்> உள்ளங்கை.
 0. அகம்> உட்குடைவாய் உள்ள வீடு. உள் பொதிந்த உள்ளம். உல்> அல்>அகு> அகம். நடுவிடம்.
 0. அங்கை > உள்ளங்கை. அகம்= உள்பொதிந்ததால் அளவுற்று நடுவிடமானது. உல்> அல்>அகு>அகம்> அகம் கை> அகங்கை> அகம்>> அம் எனத் திரிந்து அங்கை ஆனது.
 0. நயன்> நடுவானத் தன்மை. நயன்மை. உல்>நுல்>நல்> நய்> நயன். ( நயன்> நயம்> நியம்> நியாயம்> ஞாயம்>> வடமொழி) நயன்> நயன்மை ( தமிழ்) நியாயம்/ ஞாயம் ( வடத்திரிபு)
 0. பேய்> பே எனும் அச்சக் குறிப்பு. பேபே.. என விழித்தல். அச்சத்தால் ஆக்கிக் கொண்ட உருவகம். பே>பேய்
 0. பேதை> பே அச்சக் குறிப்பு. பே> பேது= அறியாமை, பே>பேது>பேதை = அறியாமை உடையவர்.
 0. பேதலிப்பு > அறியாமையாலும் அச்சத்தாலும் நிலைத் தடுமாறல். பே> பேது > பேதலிப்பு
 0. பேக்கு> பே= அச்சக் குறிப்பு. அச்சத்தால் அறியாமை உண்டாகும். அத்தகு அறியாமை பேக்கு என்னப்பட்டது.
 0. பேக்கான் > பே>பேக்கு> பேக்கான். அச்சத்தின் நிமித்தமாய் அறியாமையுற்று அறிவு முடமான ஆள்
 0. பேமானி> பே>பேமானி அறிவு குன்றிய மாந்தன்
 0. அரத்தம்> சிவப்பு நிறத்திலான குருதி. உல்> சேர்தல் கருத்து வேர். சேர்ந்தது உராசும், குத்தும், துளைக்கும். வெப்பம் உருவாகுதற்கு இவ்வினை இன்றியமையாதது . இதனால் உல்> எரிதல் கருத்தாகியது. உல்>அல்>அர்= எரிவது செந்நிறமாதலால் சிவப்பு நிறக் கருத்தாயிற்று. அர்>அரம்> சிவப்பு நிறம். அர்>அரம்> அரத்தம் = சிவப்பு நிறக் குருதி.
 0. அரம்பம்> அறுக்கும் கருவி. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>உர்>அர் = துளைப்பது பொருள்களை வெட்டும், பகுக்கும், துளையிடும். அர் > பொருள்களை வெட்டும் கருத்துக் கிளைக் கருத்து வேர். அர்> அரம் = பொருள்களை அராவி வெட்டும், தீட்டும் கருவி. அர்>அரம்>அரம்பம் = பொருள்களை அறுக்கும் கருவி.
 0. அரிமா = கூரிய நகங்களாலும் , பற்களாலும் ஏனைய உயிரினங்களைக் குத்திக் குதறிக் கொல்லும் விலங்கு. உல் > துளைத்தல் கருத்து வேர். உல்> உர்>அர்> அரி > அரிமா
 0. அரன் > செந்நிறமான சிவன். உல்= எரிதல் கருத்து வேர். எரிவது சிவக்கும். சிவந்தவன் சிவன். உல்>உர்>அர் > செந்நிறக் கருத்து. அர்> அரன் = செந்நிறமான சிவன்.
 0. உடன்> சேர்ந்திருத்தல், இணைந்திருத்தல் பொருளைத் தரும் வேற்றுமை உருபு. உல் > சேர்தல் கருத்து வேர். உல்> உள் > உடு> உடன்.
 0. ஓடு > இணைந்திருத்தல் வேற்றுமை உருபு. உள்>சேர்தல்  , பொருந்துதல் கருத்து வேர். உல்> உள்> ஒள்> ஒடு> ஓடு.
 0. கண்> பக்கம், இடம், நெருங்கல் எனும் பொருள் தரும் வேற்றுமை உருபு. உல்> கூடல், நெருங்கல் கருத்து வேர். உல்> குல்> குள்> கள்> கண் . “அவன்கண் கொடு”
 0. பால்> பக்கம் எனும் பொருளை உணர்த்தும் சொல் . வேற்றுமை உருபு. உல்> பொருந்துதல், நெருங்கல், சேர்தல், துளைத்தல் கருத்து வேர். உல்>புல்> துளைத்தல் கருத்து. புல்> புகு> பகு>பகல்> பால் = பகுப்பு. பகுக்கப் பட்டது பகுதியாகும். ஒன்றாக இருந்தது பகுக்கப்பட்டதாயினும் அருகே இருப்பதால் பக்கம் , அருகு எனும் பொருளைத் தந்தது. அவன் பால் கொடு  எனின் அவனிடத்து நெருங்கிக் கொடு எனவாகும்.
 0. ஐ > பக்கம், சேர்தல், உயர்வு, நுட்பம் முதலானப் பொருளைத் தரும். இரண்டாம் வேற்றுமை உருபு. உல்> அல் = நெருங்கல் கருத்து வேர். உல்>அல்>அய்> ஐ = சார்ந்த பொருள் தரும் வேற்றுமை உருபு. “மரத்தை வெட்டினான்”. ( மரத்தைச் சார்ந்தால்தான் , பொருந்தினால்தான் வெட்ட முடியும்.
 0. கு = சேர்தல் பொருள் நான்காம் வேற்றுமை உருபு. உல்> குல் = சேர்தல், பொருந்துதல், நெருங்கல். உல்>குல்> கு... ஈறு மறைந்து வேற்றுமை உருபானது. வீட்டுக்குச் சென்றான்.
 0. அது > உடமைப் பொருள் வேற்றுமை உருபு. ஒருமையைக் குறித்தது. உல்> சேர்தல் பொருள் வேர். உல்> அல்>அது. அவனது புத்தகம்.
 0. கள் > பன்மை பொருள் சாரியை. உல்> சேர்தல் , கூடல் கருத்து தரும் வேர். உல்>குல்>குள்>கள் = பன்மை விகுதி. சேர்ந்தன; அதிகரிக்கும். ஒன்றுக்கும் மேற்பட்டு கூடுவன. படங்கள் , வீடுகள் .
 0. கணம் > கூட்டத் தொகுதி. உல்> சேர்தல் கருத்து வேர். உல்>குல்>குள்>கள்>கண்>கணம். சிவகணம். தூக்கணங் குருவி. தொங்கும் வகையில் தொகுதியாகக் கூடு கட்டும் குருவி.
 0. கணக்கு > எண்களைக் கூட்டியும் பெருக்கியும் செய்யும் எண்ணியம். உல்>குல்= சேர்தல், கூட்டல் கருத்து. உல்>குல்>கல்>கள்>கண்>கணம்>கணக்கு.
 0. கடம் > உள் குடைவாக உள்ள குடம் போன்ற தாளக் கருவி. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்> கள்>கடு>கடம். உள் குடைந்து துளைத்தக் குடம்.
 0. குடம்> உள் குடைவாக உள்ள மட்பானை. உல்> துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்>குடு>குடம்.  ( உல்>குள்>குடு>குடுவை)
 0. மாத்திரை > கால அளவு. உல்> பொருந்துதல் கருத்து வேர். உல்>முல்> முத்து. பொருந்துதல். முத்து> மத்து= பொருந்தி, தேய்த்துக் கடையும் கோல். உல்>மல்> மால்>மாத்தல்= பொருத்தி ஒப்பிட்டு அளத்தல். பொருத்தமுற மதிப்பிடல். மால்>மா> மாத்திரை = காலத்தை பொருத்தமுற மதிப்பிடல்.
 0. மதி > காலத்தை அளக்கப் பயன்படும் துணைக்கோள். உல்>முல்>மல்> மதி
 0. நெருப்பு> தேய்த்தலால் உருவான தீ. உல்> சேர்தல், தேய்த்தல், துளைத்தல் கருத்து வேர். சேர்வது தேயும் தேய்வது சூடேறும் சூடேறியது எரியும். உல் > சேர்தல் கருத்து வேர். உல்>நுல்>நுர்= ஒளி. நுல்> நெல் = ஒளி. உல்>நுல்>நெல்>நெர்>நெருப்பு.
 0. கலம்> உட்குடையப்பட்ட ஏனம். உல்= துளைத்தல் கருத்து வேர். உல்>குல்>கல்> கலம்.
 0. பட்டயம்> தட்டி பட்டையாக்கப் பெற்ற ஆவணம். உல்= பொருத்தல், மோதல் கருத்து வேர். உல்> புல்> புள்> பள்> பட்டு > பட்டை >> ஓங்கி பட்டென அடித்தலால் பட்டையானது. பட்டையான தகட்டில் எழுதப்பெற்ற உரிமை ஆவணம்.
 0. பட்டா > நிலப்பட்டா. பட்டையத்தில் எழுதப்பெற்ற நில உரிமை ஆவணம். ( grand)
 0. தட்டை> தட்டப்பெற்றுப் பட்டையாக்கப் பெற்ற ஏனம். உல்> துல்> துள்> தள்> தட்டு. தட்டு> தட்டை. ( உல்= பொருந்தல், மோதல் கருத்து வேர்)
 0. துணி> துணிக்கப் பெற்ற பஞ்சு நெயவு. உல்= துளைத்தல் கருத்து வேர். துளைத்தலால் பொருள்கள் சிதைந்து பிரியும். உல்> தும்> துண்> துணி.
 0. துண்டு > வெட்டப்பட்ட தனிப்பகுதி. உல்> துல்>தும்> துண்> துண்டு. துண்டுத் துணி ( towel) இறைச்சித் துண்டு. துண்டு + அம் = துண்டம். இறைச்சித் துண்டம்.
 0. கிளி > உணவைக் கிள்ளுவது போல்  கொத்தித் தின்னும் பறவை. உல்> குல்= குத்தல் கருத்து வேர். உல்>குல்>குள்>கிள்> கிளி.
 0. கிள்ளை = கிளி. உல்>குல்>குள்>கிள் >கிள்ளை
 0. புழு> ஓட்டைப் போட்டுச் சென்று உணவுண்ணும் உயிரி. உல்> புல்= துளைத்தல் கருத்து வேர். உல்>புல்>புழு
 0. பல்> உணவை கூர்மையால் வெட்டி சிதைக்கும் வாயுறுப்பு. உல்> புல்= கூர்மை, குத்துதல் , துளைத்தல் கருத்து வேர். உல்>புல்>பல்.
 0. பலா> பருத்த பழம். பெரிதாய் இருப்பதால் இப்பெயர் பெற்றது. உல்= திரட்சி பொருள் வேர். உல் > புல்> பல்> பல. பல்> பலா . பல்> பர்> பருமை.
 0. சில்லி = சிறிய கற்கள், சிறுத்த பொருள் , சில்லி மூக்கு. உல்> துளைத்தல் பொருள் வேர். துளைக்கப் படுவது சிதைந்து சிறுக்கும். உல்>இல்> சில் = சிறுமைப் பொருள் அடி. சில்> சில்லி
 0. சிறுமை > அளவில் குறுகிய வடிவு, குறுகிய பண்பு. உல்>இல்>சில்>சிறு> சிறுமை
 0. சிட்டு> சிறிய பறவை, சிறியது. உல்>இல்>சில்> சிள்>சிட்டு.
 0. சிட்டை = சிறிதாய்த் துண்டு செயப்பெற்ற தாள். உல்> இல்> சில்> சிள்> சிட்டு> சிட்டை
 0. சீட்டு = சிறியதாய் நறுக்கப் பெற்ற தாள் துண்டு. உல்> இல்> சில்> சிள் > சிட்டு > சீட்டு
 0. அல்லி = இரவில் பூக்கும் மலர். உல் > அல் = கருமைப் பொருள் வேர். அல்= கருமையான இரவு. அல்லி = இரவில் பூக்கும் மலர்.
 0. பிணி > தொற்றும் நோய். உல் > சேர்தல் கருத்து வேர். உல்>புல்> புள்> பிள்> பிண்>பிணி.
 0. நோய்> உடலை நலியச் செய்யும் நோவு. உல்= துளைத்தல் கருத்து வேர். துளைக்கப்பட்ட பொருள் மெலியும் , நலியும், சிதையும். உல்>நுல்>நொல்> நொலி>நலி. உல்>நுல்>நொல்>நொய்>நோய்.
 0. நஞ்சு> உயிரை நலியச் செய்து சிதைக்கும் பொருள். உல்> துளைத்தல் கருத்துவேர். உல்>நுல்> நல்>நய்> நைந்து. நல்> நய்>நய்ந்து> நய்ஞ்சு> நஞ்சு
 0. பாசை> கரப்பான் பூச்சி. பசை போல் ஒட்டி அரிக்கும் பூச்சி. உல்= பொருந்துதல், சேர்தல், ஒட்டுதல் கருத்து வேர். உல்> புல்>பல்>பய்>பயை> பசை>பாசை
 0. கரப்பான்> கரிய இருட்டில் மறைந்து வாழும் பூச்சி. உல்> குல்>கல்= கருமைப் பொருள் வேர். கல்> கர்>கரு. கல்> கர்>கரப்பு> கரப்பான்.
 0. கரா> நீரில் மறைந்து வாழும் முதலை. உல்> குல்>கல்>கர்>கரா. ( croc)
 0. முதலை > தலையை நீட்டி முந்தித் தள்ளிக்கொண்டிருக்கும் ஊருயிரி ( ஊரி). உல்= முற்படுதல் கருத்து வேர். உல்> முல்> முது> முதல்> முதலை.
 0. எருமை > கரிய நிறமுடைய மா. உல்> இல்> இரு>இருமை> எருமை.

தொடரும்

இரா. திருமாவளவன்

புதன், 15 ஏப்ரல், 2020

மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கோறனி நோய் (கொரோனா- COVID 19) தொடர்பான கலைச்சொற்கள் :

இனிய வணக்கம் நண்பர்களே!

1. Lockdown > பொதுமுடக்கம்
2. Stethoscope > நாடிமானி
3. Thermometer> வெப்பமானி
4. Plasters > மருந்தொட்டி
5. Dropper > சொட்டி
6. Dropping bottle> சொட்டல் புட்டி
7. Stretcher> தூக்குப் படுக்கை
8. Eye chart> பார்வை ஆய்வட்டை/ கண் ஆய்வட்டை
9. Mask > முகக்கவரி
10. Facial mask > முகக் கவரிழை
11. Surgical mask > அறுவை முகக்கவரி
12. Oxygen mask > உயிர்வளி முகக்கவரி
13. First ait kit box  > முதலுதவி பொருட்பேழை
14. Blood bag > குருதிப்பை
15. Blood bank > குருதியகம்/ குருதி வைப்பகம்
16. Self monitor > தற்காணிப்பு
17. Middle East Respiratory Syndrome > நடுக்கிழக்கு சளிக்காய்ச்சல்  நோய் ( MERS- CoV)
18. Severe Acute Respiratory Syndrome > கொடுஞ் சளிக்காய்ச்சல்  நோய் ( nCoV)
19. Alveoli > அள்வளை/ நுண்ணறை ( அள் = நுண்மை , அள்வளை= நுண்ணிய வளைப்பைகள், >> வளை> எலிவளை= எலி மறையும், வாழும் அறை)
20. asymptomatic > நோக்குறியிலி = நோவுக்குரிய அடையாளமின்மை
21. Centre of disease control ( CDC) > நோய் கட்டுப்பாட்டு நடுவம்
22. communicable > தொற்றி / பிணி ( எளிமையில் தொற்றும் நோய் )
23. coronavirus > கோறனி நச்சில்
24. Virus >  நச்சில்
25. severe acute respiratory syndrome coronavirus 2 ( SARS-CoV-2.) > கொடுஞ் சளிக்காய்ச்சல்  கோறனி நச்சில் 2.
26. COVID-19 > கொவிட் 19 (>> கோ.ந. நோய் 19 >> கோறனி நச்சில் நோய் 19)
27. epidemic > குறுந்தொற்றி/ வட்டாரப் பிணி
28. epidemiologist > கொள்ளைநோயியலர்
29. Pandemic > பெருந்தொற்றி / பெரும்பிணி
30. exponential > அடுக்குக்குறி ( நோயின் பரவலால் அடுக்கி வரும் எண்ணிக்கை)
31. exponential growth > அடுக்குக்குறி பெருக்கம் / மடக்கை வளர்ச்சி ( நோயின் எண்ணிக்கை மடங்காய்ப் பெருகல் )
32. exponential curve > அடுக்குக்குறிக் கோடு
33. flatten the curve >வளைச்சமனாக்கல்
34. furlough > இடைவிடுப்பு ( இடைக்கால பணி விடுப்பு)
35. herd immunity > குழும நோய்த்தடுப்பாற்றல்/ மந்தை தடுப்பாற்றல்
36. immunity > தடுப்பாற்றல் ( நோய்த்தடுப்பாற்றல்)
37. incubation period > நுண்ணி அரும்பல் காலம்
38. incubation > நுண்ணியரும்பல்
39. Microorganism > நுண்ணி
40. isolation > தனிப்படுத்தம் / கடுந்தனிமை
41. Self-isolation > தன் தனிமை
42. mitigation > தணிப்பு
43. Social distance > கூடல் இடைவெளி
44. antimicrobial product > நுண்ணியெதிர் பொருள்
45. antimicrobial > நுண்ணியெதிரம்
46. case fatality rate (CFR) > பிணி மரிக்கை மதிப்பீடு
47. circulatory system > குருதிச்சுற்று முறைமை
48. clinical trial > பண்டுவ முயல்வு
49. community transmission > மக்களிடை கடத்தம் ( மக்களிடையே நச்சில்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கடத்தப்படுதல் )
50. confirmed case > உறுதி நேர்வு
51. CT scan > கணினி மெய்யூடி
52. DNA > இருமத்தீ உட்கரு காடி / மரபணு/ மரபி
53. encephalitis > மூளைக்காய்ச்சல்
54. enzyme > நொதியம்
55. epidemiology > கொள்ளை நோயியல்
56. GenBank > மரபியல் தரவகம்
57. immunocompromised > தடுப்பாற்றல் தடங்கல்
58. immunosuppression > தடுப்பாற்றல் ஒடுக்கல்
59. Morbidity rate > நோயியல் அளவீடு
60. outbreak > வெளிப்பரவல்/ வெடிப்பரவல்/ கடும்பரவல்
61. pathogen > நோய்நுண்ணி
62. personal protective equipments  (PPE) > தனியாள் காப்பணிகள்/ நோய்க் காப்பணிகள்
63. pneumonia> கொடுஞ்சளிக் காய்ச்சல்
64. preexisting conditions > கட்டுமீறிய  உடல்நிலை
65. PUI (Person Under Investigation) > ஆய்வுக்குரியவர்
66. PUM ( Person under monitoring) > கண்காணிப்புக்குரியவர்
67. pulmonary > நுரையீரல் சார்
68. physical distancing > தீண்டல் தவிர்ப்பு
69. respirator > மூச்சுக்கவரி             
70. screening > பீடிப்பாய்வு / பிணிப்பாய்வு
71. shelter in place > உள்ளிருப்பு
72. ventilator > மூச்சுப்பொறி
73. WHO > உலக நலவியல் நிறுவனம்
74. zoonotic > விலங்கத்தொற்றி
75. Close contact > நெருக்கத் தொடர்பு
76. cordon sanitaire > தடைவளாகத் துப்புரவு / தொற்றெல்லை அரண் ( நோய் தொற்றாமல் பரவிய வளாகத்தைத் தடைப்படுத்தி அடுத்த இடத்திற்குப் பரவாமல் துப்புரவு நடவடிக்கை மேற்கொள்ளல்)
77. Communicable disease > தொற்று நோய்
78. Communicable > தொற்றக்கூடிய
79. Contagion > தொடுப்பொட்டி / தொற்றொட்டி ( தொற்றிய ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றுதல் அல்லது ஒட்டுதல்) / ஒட்டுவாரொட்டி
80. community spread > கூட்டுப் பரவல் ( யாரிடமிருந்து பரவியது என அறியமுடியாமல் ஒரு கூட்டுப்பரவல் நோய்)
81. mortality > இறப்புநிலை/ இறப்பியல்
82. upper respiratory infection> மேல் மூச்சுறுப்புத் தொற்று
83. Confirmed > உறுதிப்படுத்தப்பட்டது / உறுதிப்பட்டவர்
84. Suspected > ஐயப்பாட்டுக்குரியவர்/ ஐயத்திற்குரியர்
85. Exposed > அணித்தவர்/ தொடர்புற்றவர்/ தொடர்புபட்டவர்/ வெளிப்பாடு
86. Treatment > பண்டுவம்/ மருத்துவம்
87. Voluntary> தன்னார்வலர்
88. Involuntary > ஆணைப்பணியாளர்/ கட்டாயப் பணியாளர்
89. Direct Medical > நேரடி மருத்துவம்/ நேரடிப் பண்டுவம்
90. Index case > குறியீட்டு நேர்வு
91. Index patient > குறியீட்டு நோயர்
92. Patient zero > முதற்பிணியர்
93. Contact tracing > தொடர்பர்  துப்பாய்வு/ தொடர்பர் கண்டறிதல்
94. Super spereader > பாரிய பரப்பாளர்
95. Front line workers > முனைமுகப் பணியாளர்/ முன்னணிப் பணியாளர்கள்
96. Infection precautions > தொற்று தடுப்புப்பணி/ முன்நடவடிக்கைகள்
97. CT protocol > கணினி மெய்யூடி வரைமுறை
98. Ultrasound > மிகையொலி/ மீயொலி/ புறவொலி
99. Nuclear medicine > அணுவியல் மருத்துவம்
100. Red zone > சிவப்பு வளாகம்
101. Yellow zone > மஞ்சள் வளாகம்
102. Green zone > பச்சை வளாகம்
103. Critical > கடுமை/ கடுநிலை
104. High risk > உயரிடர் / கடும் இடர்
105. term loan > காலவரைக் கடன்/ தவணைக் கடன்
106. Moratorium > தவணைக் கடன் நீட்சி/ தவணை நீட்சி
107. Unsung heroes > மறை நாயகர் (பின்னணிச் செயல்வீரர் /  பின் களப்பணி நாயகர்கள் )
108. One off > ஓரோக்கால்
109. Agglutination  - ஒட்டுத்திரள்
110. Antibody - காப்பி / நோவெதிரி ( உடலில் தொற்றும் நச்சில்களையோ , குச்சியங்களையோ எதிர்த்து உடலைக் காக்கும் காப்பிகள் அல்லது காவலிகள்  / நோய் எதிர்ப்பாற்றல் )
111. Antigen - காப்பாக்கி ( உடலைக் காக்கும் காப்பிகளை உருவாக்குபவை, காப்பிகளை ஆக்குபவை)
112. Case fatality rate (CFR) > நோயர் இறப்பு மதிப்பீடு/ வீதம்
113. Droplet transmission/spread > நீர்த்துளிப் பரவல்
114. Elective surgerie > பாணிப்பறுவை / தாழ்ச்சி அறுவை ( முகாமையற்ற அறுவையைத்  தள்ளி வைத்தல்/ முறையான அணியத்திற்காக காலந்தாழ்த்திச் செய்யும் அறுவை )
115. Epidemic> குறுந்தொற்றி/ வட்டாரப்பிணி
116. Flattening the curve > வளைவைச் சமனாக்கல் ( நோயர் எண்ணிக்கை கூடும் வேளை குறிவில்     ஏறிக்கொண்டுச் செல்லும் வளைவை, நோயர் எண்ணிக்கையைக் குறைத்துச் சமனாக்குதல் )
117. Essential activities > இன்றியமையா நடவடிக்கைகள்
118. Essential government functions> இன்றியமையா அரசு நிகழ்ச்சிகள்
119. Fomite > தொற்றுவி ( தொற்றுக் கருவி / நச்சில்கள் தொற்றக் கூடிய ஏது பொருட்கள்)

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

வானியல் அடிப்படையில் வருடத் துவக்கம்


365 நாட்கள் கொண்டதே ஓர் ஆண்டு என்ற கருத்தில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.  ஆனால் ஆண்டுத் துவக்கம் சித்திரை முதல்நாளா? அல்லது தை முதல் நாளா? என்பதில்தான் கருத்துவேறுபாடு.
ஆண்டு என்பது பூமியின் சுழற்சிக் காலமாகும்.  பூமியிலிருந்து பார்க்கும் போது, சித்திரை முதல்நாளோ அல்லது தைமுதல் நாளோ எதுவாகினம் சரி.  அன்று, வான்வெளியில் சூரியன் ஏதேனும் ஒரு நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து இருக்கும்.  தினமும் சிறிது சிறிதாகக் கிழக்குநோக்கி நகர்ந்து,365 நாட்களில் 360 பாகை பயணித்து, ஓராண்டு முடிவில் மீண்டும் முன்பிருந்த அதே நட்சத்திரக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்து விடும்.  இந்த வானியற்  கருத்திலும் யாருக்கும் மாற்றுக் கருத்து கியைடாது.

“விண்ஞான” அறிவியல் அடிப்படையில் -
பூமியில் இருந்து பார்க்கும் போது,
தை முதல் நாளில் சூரியன் மகரராசியில், உத்திராடம் நட்சத்திரத்தில் 2ஆம் பாகத்தில் காணப்படும்.
சித்திரை முதல் நாளில்  சூரியனானது,  ஆடு (மேஷம்) இராசியில், முதல் நட்சத்திரமான அசுபதி நட்சத்திரத்தில் 1ஆம் பாகத்தில் காணப்படும்.
மகரராசியை எந்தவொரு தமிழ் இலக்கியமும் தலைராசி எனக் குறிப்பிட வில்லை. ஆனால்,  முத்தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவன் நக்கீரனின் நெடுநல்வாடையில் “ஆடு” தலையாக (முதன்மையாக)க் குறிப்பிடப் பெற்றுள்ளது.

நெடுநல்வாடை ...
.... நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கால்
ஊறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக                             160
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா
மாயிதழ் ஏந்திய மலிந்துவீழ் அரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப்            165
புலம்பொடு வதியு நலங்கிளர் அரிவைக்கு ....

பண்டைத் தமிழ் இலக்கியமான நெடுநல்வாடையை அடிப்படையாகக் கொண்டால் ஆடு(மேஷ) இராசியை முதல் இராசியாகக் கொள்ள வேண்டியுள்ளது.  ஆட்டிற்குத் (மேஷத்திற்கத்) தமிழில் வருடை என்றொரு பெயரும் உண்டு.  வருடை என்ற பெயர் சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள்ளது.   ஆடு அல்லது வருடை ( மேஷ ) இராசியில் முதல் நட்சத்திரம் அசுபதி நட்சத்திரமாகும்.  ஒவ்வொரு வருடமும் சித்திரை 1ஆம் நாள் இந்த நட்சத்திரத்தில் சூரியனான் காணப்படும்.  மேஷராசியில் அல்து ஆடுராசியில் அல்லது வருடை இராசியில் சூரியன் தோன்றத் துவங்கும் நாளே வருடத்தின் துவக்க நாளாகும்.  ஒவ்வொரு நாளும் ஒருபாகை என்ற அளவில் சிறிது சிறிதாக ஒவ்வொரு நட்சத்திரமாக நகர்ந்து சென்று, 365 நாட்கள் கழித்து மீண்டும் சூரியனானது மேஷஇராசியில் உள்ள அசுபதி நட்சத்திரத்திற்கே வந்து விடும்.
ஆடு (மேஷ) இராசியில் அசுபதியில் துவங்கும் நட்சத்திரக் கட்டத்தை ஆவுடையார்கோயிலில் மாணிக்கவாசகர் சந்நிதியின் நிலைக்கதவின் நெற்றியில் சிற்பமாகச் செதுக்கியும் வைத்துள்ளனர்.
மேற்கண்ட “வானியல் ” அடிப்படையிலும், தமிழரின் நெடுநல்வாடையின் அடிப்படையிலும் தமிழருடைய ஆண்டுப் பிறப்பு என்பது சித்திரை முதல் நாளே ஆகும்.

பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு இரண்டும் வேறுவேறானவை. இவற்றை ஒன்றாக்கினால் காலப்போக்கில் நாம் நமது இந்த இரு பண்பாடுகளில் ஏதேனும் ஒன்றை இழந்து விட நேரிடும்.
பொங்கலும் புத்தாண்டும் ஒன்றானால்,
(1) நாளடைவில் உழவர் திருநாள் என்பது மறைந்துவிடும்.
(2) பொங்கலிடுவது தமிழ்ப்புத்தாண்டிற்கானது என்றாகி விடும்.
(3) பின்வருடங்களில் ஆண்டுப் பிறப்பிற்கும் ஏறுதழுவுதலுக்கும் தொடர்பு இல்லை என்று வரும்.
(4) அதன் பின்வருடங்களில் ஆண்டுப் பிறப்பிற்குப் பொங்கல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாகி விடும்.
எனவே அன்புத் தமிழர்களே நமது முன்னோர் ஆய்ந்தறிந்து கண்ட மரபுவிழா நாட்களை மாற்ற முயல்வதைத் தவிர்ப்போம்.

சித்திரை 1 அன்று வருடப்பிறப்பு என்பது இது வானியல் அடிப்படையில் ஆனது. முதல் இராசியான ஆடு (மேஷ)இராசியில் சூரியன் தோன்றும் நாளான சித்திரை 1 அன்று வருடப் பிறப்ப் கொண்டாடப் படுகிறது.
இது எந்தவொரு மதத்தின் அடிப்படையிலோ, மொழியின் அடிப்படையிலோ, புலமையின் அடிப்படையிலோ, அரசியல் அடிப்படையிலோ அமைந்தது அல்ல. வானியல் அடிப்படையில் அமைந்தது. எனவே இதுவே உலகமக்கள் அனைவருக்கும் பொதுவான வருடப்பிறப்பு ஆகும். இன்னும் ஒருபடி மேலே சொல்வதென்றால் இதுவே உலகில் உள்ள உயிர்களுக் கெல்லாம் பொதுவான வருடப் பிறப்பு ஆகும்.

வருடையில் (மேஷராசியில்) சூரியன் தோன்றும் நாளை வருடப் பிறப்பாகக் கொண்டாடுவோம்.
https://letters-kalairajan.blogspot.com/2019/01/blog-post_15.html

அனைவருக்கும் சாரிவரி தமிழ்வருடப்பிறப்பு நல்வாழ்த்துகள்.
அல்லவை தேய்ந்து அறம் பெருகட்டும்...
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
சாரிவரி, சித்திரை 1, செவ்வாய்க் கிழமை.

வியாழன், 9 ஏப்ரல், 2020

ஒரே உச்சரிப்புள்ள வார்த்தைகளின் அர்த்தங்கள்


பறி                - pluck
பரி                 - horse

பணி             - job
பனி               - Ice, dew

பறந்த           - fly
பரந்த            - broad

பள்ளி           - school
பல்லி            - lizard

பழி                - revenge
பலி               – sacrifice

பாலம்           - bridge
பாளம்           - block

பால்              - milk
பாழ்               - ruin

புலி                - tiger
புளி                - tamarind

பினை           - mix
பிணை         - bail

பெரும்          - huge
பெறும்          - receive

போளி           - dessert
போலி           - duplicate

பொரி            - roast
பொறி           – engrave,
                           machine

பேண்             - sustain
பேன்              – head lice

மறி                 - block 
மரி                  - dead

மனை            - home
மணை           - seat

மலை              - hill
மழை               - rain

மாரி                 - rain
மாறி                – alternate,
                              change

மான்                - deer
மாண்              - pride

முன்னால்       - front 
முன்னாள்       - ex, ago

மூலை              - corner 
மூளை              - brain

வழி                   - path 
வலி                  - pain

வழு                   - defect
வலு                  - strenth

வலை               - net
வளை               - bend

வாழை             - banana 
வாளை            – fish, sword

வாள்                - sword
வால்                - tail
வாழ்                 - live

வாழி                - prosper
வாளி               - bucket

வானம்            - sky
வாணம்           - rocket

விளக்கு           - lamp,explain 
விலக்கு           – exempt,
                              avoid

விளக்கினார் - explain 
விலக்கினார் - disband,
                             exclude

விலா               - costa
விழா                - festival

விழை              - aspire
விளை             - cultivate

விளி                 - call
விழி                  - awake

விளங்கு          - shine 
விலங்கு          - animal

வெல்லம்         - jaggery 
வெள்ளம்         - flood

வேலை             - job
வேளை             - during, day

கள்              – toddy
                        (alcohol drink ) 
கல்              - stone

கறி             – curry, meat
கரி              - charcoal

கழகம்        - association
கலகம்       - riot

கனி           - fruit
கணி          - calculate

கன்னி       - virgo   
கண்ணி    - trap

கழி             - pole 
களி            - rejoice

கறுத்து      - black
கருத்து      – opinion, abstract

கணம்       - moment
கனம்         - weight

கறை         - stain
கரை          - bank

கணை      – cough /rickets
கனை        - roar

களை        - weed
கலை        - art

காலை      - morning 
காளை      - bull

கிளி           - parrot 
கிலி           - fear
கிழி            - tear

கிளவி       - word 
கிழவி        – old woman

கீரி              - mangoose
கீறி             - scratch

குளம்         - pond 
குலம்         - race

குரல்          - tone 
குறள்         - couplet

குளவி        - wasp
குழவி         - infant

குழம்பு        - curry
குளம்பு       - horse shoe

குழி             - ditch
குளி            - bathe

குழை          - mix 
குலை         – disband, bunch

குறை          - abate
குரை           - bark

கூரை          - ceiling
கூறை         - wedding saree

கூரிய          - sharp 
கூறிய         - told

கொல்லும்  - fatal 
கொள்ளும் - adapt

கொல்லை  - backyard 
கொள்ளை  - robbery

கோல்           – staff 
கோள்           – planet

கோலம்        - decoration 
கோளம்        - globe

கோலி          - marble
கோழி          - chicken

சளி               - cold 
சலி               - dejected

சிரை            - shave 
சிறை           - jail

சொறி         - scall
சொரி          - pour

சோளம்       - corrn
சோழம்       – ancient country

தண்மை     - kindness
 தன்மை       - quality

தலை           - head 
தழை            - sprout

தனி              - lonely
தணி            - extinguise

தரி               - wear 
தறி              – loom

தணி           - extinguish 
தனி             - alone

தாள்            - paper
தாழ்             - latch

தாலி           – mangal sutra 
தாழி           – pig pot

துறை         - department 
துரை          - name

தோல்         - skin 
தோள்         - shoulder

திறை         - tax 
திரை          - curtain

நீளம்           - length
நீலம்           - blue

களைத்தல் - tired
 கலைத்தல் - disband

ஞாயிறு, 22 மார்ச், 2020

கொரானாவிற்கு மருந்து கண்டறிந்து முதன்முதலாக வெற்றிகண்டுள்ளார் பெருத்தமிழ் மருத்துவர் ஐயா திருதணிக்காச்சலம் அவர்கள்


_இது தமிழர் மரபு வழிமுறையை பறைசாற்றும் வெற்றி_👍🏼
_பழந்தமிழர்  வாழ்வியலுக்கான வெற்றி_💚

_சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு இடங்களில் கொரானாவால் பாதிக்கப்பட்ட நபர்களை அணுகி இலவசமாக மருந்துகள் அனுப்பி உலகின் #விரைவாக_குணமடைய செய்து கொரானாவிலிருந்து முற்றிலும் விடுப்பட செய்த ஐயா திருதணிக்காசலம் அவர்களுக்கு இனமான பாரட்டுக்கள்...🔥❤🔥_

_ஆங்கில வணிக கும்பலுக்கு சவுக்கடி கொடுத்து தன்னையும் தமிழர் முறையையும் நிருபித்து காட்டியுள்ளார்..._

_மருந்து மற்றும் ஆலோசனை தொடர்ப்புக்கு_
*_சித்தர் க திருத்தணிகாசலம்_*
*_rathnasiddha@gmail.com_*
*_9962812345_*
*_9092888888_*

_மேலும் இது ஏற்க மணிமில்லாத வணிக கும்பலின் அடிமைகள் கடந்து போகவும்..._

https://www.facebook.com/drthiruthani
__எனும் ஐயாவின் முகநூல் கணக்கில் முழுவிபரமும் அதற்கான சான்றும் இருக்கிறது #உதவி மற்றும் சந்தேகங்களுக்கு அவரது முகநூல் முகவரியை அணுகவும்_🤝🏽👍🏼

திங்கள், 16 மார்ச், 2020

அட்ட வீரட்டான தலங்கள்




தமிழ்நாட்டில் உள்ள எட்டு திருத்தலங்களில் சிவபெருமானின் எட்டு வீரச் செயல்கள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அந்த எட்டு வீரச் செயல்களையும் அட்ட வீரட்டகாசம் என்றும், எட்டு தலங்களையும் அட்ட வீரட்டான தலங்கள் என்றும் கூறுவது வழக்கம். எட்டு வீரட்டான தலங்களிலும் ஈசனின் பெயர் வீரட்டானேசுவரர் என்பதாகும்.

1) திருக்கண்டியூர்

தஞ்சாவூர் திருவையாறு மார்க்கத்தில், திருவையாற்றுக்கு இரண்டு கி.மீ. முன்பாக இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் மங்களநாயகி. இத்தலத்தில் பிரம்மனின் சிரசை ஈசன் தன் சூலத்தால் கண்டனம் செய்தார். அதனால் கண்டனபுரம் என அழைக்கப்பட்டு, மேலும் மருவி கண்டியூர் ஆயிற்று.

2) திருக்குறுக்கை

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு செல்லும் வழியில், நீடூர் தாண்டி கொண்டால் என்ற இடத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் ஞானாம்பிகை. இத்தலத்தில், தன் மீது காமபாணம் தொடுத்து நின்ற மன்மதனை ஈசன் சாம்பலாக்கினார். காமனைத் தகனம் செய்த இடம் ‘விபூதிக்குட்டை’ என்ற பெயரில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது;

3) திருப்பறியலூர்

மயிலாடுதுறையிலிருந்து திருகடுவூர் செல்லும் வழியில் செம்பனார் கோயிலிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இறைவியின் பெயர் இளங்கொடி அம்மை. பிரம்மனின் மூத்த குமாரனுமான, அன்னை பார்வதியின் தந்தையுமான தக்ஷனை, சிவபெருமான் வீரபத்திரர் சொரூபமாக) இங்கேதான் தலையைக் கொய்து அழித்தார். இத்தலம் தக்ஷபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

4) திருவழுவூர்

மயிலாடுதுறையிலிருந்து ஏழு கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் பால குஜாம்பாள். கஜாசுரன் என்ற அரக்கனை, ஈசன் ஆயிரம் கோடி சூரியன் திரண்டாற்போன்ற பேரொளி பொங்கும் தோற்றம் கொண்டு தோலை உரித்து மார்பைப் பிளந்து கொன்றார். மாசி மாத மகத்தன்று கஜ சம்ஹார நடனம் விசேஷமாக நடைபெறும்.

5) திருவிற்குடி

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் மார்க்கத்தில், நன்னி லத்திற்கு அடுத்த ரயில் நிலையம் அருகில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் ஏலவார்குழலி (பரிமளாம்பிகை). ஜலந்தரன் என்ற அரக்கனை அழித்த தலம். ஈசன் தன் திருவடியால், நிலத்தில் ஒரு வட்டம் கீறினார். சக்கரமாக மாறிய அந்த வட்டத்தைப் பிளந்து எடுக்குமாறு ஜலந்தரனை சவால் செய்தார். சக்கரத்தைப் பிளந்து எடுத்து தலையில் ஆணவத்தோடு வைத்தவுடன் ஜலந்தரன் தலைவெடித்து இரு கூறானது.

6) திருவதிகை

கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ருட்டியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இறைவியின் பெயர் பெரியநாயகி (திரிபுரசுந்தரி). தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அரக்கர்கள் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளை அமைத்து முனிவர்களைத் துன்புறுத்தி வந்தனர். ஈசன் பிரம்மாண்டமான தேரில் அமர்ந்து போருக்குச் சென்று அரக்கர்களை அழித்து முப்புரங்களையும் சாம்பலாக்கினார்.

7) திருக்கோவிலூர்

விழுப்புரம் திருவண்ணாமலை மார்க்கத்தில் தென்பெண்ணை யாற்றின் கரையில் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் சிவானந்த வல்லி. ஈசனிடமிருந்தே அருள்பெற்று ஆணவத்தில் தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்த அந்தகாசுரனை அழித்த இடம் அது. அந்தகாசுரனைக் கீழே தள்ளி மிதித்துக்கொண்டு அவன் மேல் சூலத்தை பாய்ச்சும் நிலையில் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி தோற்றமளிக்கிறார்.

8) திருக்கடவூர் (அ) திருக்கடையூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில், மயிலாடுதுறை தரங்கம்பாடி மார்க்கத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவியின் பெயர் அபிராமி. எமதர்மனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் முயற்சியில் மார்க்கண்டேயன் தன்னை சிவலிங்கத்தோடு சேர்த்து கட்டிக்கொண்டான். எமதர்மன் பாசக்கயிற்றை வீச அது லிங்கத்தையும் சுற்றிவிட்டது.

இறைவன் லிங்கத்திலிருந்து வெடித்து எழுந்து எமனைக் காலால் உதைத்து மாய்த்த தலம் இது. கார்த்திக்கை மாதம் சோமவார அபிஷேகம் நடக்கையில் இறைவன் திருமேனியில், எமதர்மன் பாசக்கயிற்றால் இழுத்த போது ஏற்பட்ட தழும்பைக் காணலாம் இக்கோயிலில் தினமும் திருமணங்கள், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் போன்ற சடங்குகள் நடக்கும்.

திருசிற்றம்பலம்

செவ்வாய், 3 மார்ச், 2020

108-ம் அதன் சிறப்புக்களும்

     108ன் சிறப்பு தெரியுமா? அவற்றை பார்ப்போம்
படைத்த கடவுளுக்கும் சிவபெருமானுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள்.

பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம்அதற்கு இதோ ஒரு சில உதாரணங்கள்

* வேதத்தில் 108 உபநிடதங்கள்.
* பஞ்சபூதத் தலங்கள், அறுபடை வீடுகள் என்பதுகோல சைவ, வைணவ திவ்ய ÷க்ஷத்திரங்கள் 108.
* பிரபஞ்ச அமைப்பில், பூமிக்கும்
சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத் தைப் போல் 108 மடங்கு.

* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத் தைப் போல 108 மடங்கு.
* நடராஜரின் கரணங்கள் 108. தாளங்கள் 108

* அர்ச்சனையில் 108 நாமங்கள்
* அரமரத்தையும் பல தெய்வங்களையும் வலம் வருவது 108 முறை.
* சூரியனின் விட்டம் பூ மியில் விட்டத்தைப்.போ ல 108 மடங்கு.
ஒர் எண் சிறப்பான இடம் பெறும்போது அதேஎண் ணிக் கையில் பல விஷயங்களும்அமைகின்றன.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக.நட்சத்திரங்கள்.
* திபெத்திய புத்த சமயப் பிரிவில் பாவங்களின்.எண்ணிக் கை 108
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது.வருடம் 108 மணி ஓசைகளால்
வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத் தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள.வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
* மகா நிர்வாணத்தை அடைய 108 படிகள்.உள்ளதாக புத்த மதம் கூறுகிறது.

* முக்திநாத் ÷க்ஷத்திரத்தில் 108 நீரூற்றுக்கள்.
* உத்தராகண்டில் ஜோகேஸ்வரர் சிவன்.கோவிலில் 108 சிவசந்நிதிகள்.
* உடலில் 108 மர்ம ஸ்தா னங்கள் என வர்மக்கலை கூறு கிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப்புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* மனித மனதின் ஆசைகளும் 108 விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள கம்பளி ஜப மாலையையே பயன்படுத்துவார்கள்.
* 108 சக்தி நாடிகள் உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இருதய ஸ்தானத்தில் குவிவ தாக தந்திர சாஸ்திரம் கூறு கிறது.
108 என்பது வரையறைக்கு ட்பட்ட எண்ணாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையைஉணர்த்துகிறது.
“1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் “0 என்பது சூன்யத்தை அல்லது ஆன்மிகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டுத் திக்குகளிலும்உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.
ஜபமாலையில் 108 மணிகள் ஏன்?ஜபமாலையில்108 அல்லது 54அல்லது 27
மணிகள் கொண்ட மாலைகளும் உண்டு. இந்தஎண்ணிக்கை களைக் கூட்டினால் ஒன்பது வருகிறது. (1+0+8: 5+4 : 2+7).
 நம்முடைய வழி பாடுகளில்,நாம் பயன்படுத்தும் பூஜை பொருட்களெல்லாம் ஒற்றை படையில் இருக்கும்.குத்து விளக்கு இரண்டு,வாழைமரம் கட்டும்போது இருபுறமும் இரண்டு வைப்பார்கள்.ஆனால் சுவாமி படங்கள் ஒற்றை படையில்தான் இருக்கும்.
மாவிலை தோரணங்கள் கட்டப்படும்போது ஒற்றை ப்படை இலைகளாக வைத்துதான் கட்டுவார்கள்.மந்திர சாஸ்திரத்தில் இந்த எண்ணிக்கைகள் 108க்கும் 1008க்கும் மகத்தான மகிமை இருக்கிறது.இந்த 108 முறை மந்திரம் சொல்லப்படும் வேளையில் மந்திர அதிர்வுகளின் சாஸ்வதம்,நாம் இழுக்கின்ற மூச்சுக் காற்றில் கலந்துள்ள பிராணவாயுவோடு சேர்ந்து, இரத்தத்தோடு கலந்து விடுகிறது.
அந்த மந்திரங்களை முழு மையான எண்ணிக்கையில் கூறி பூர்த்தி செய்யும்போது,நம் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு தூய்மை அடைந்து,மந்திர அதிர்வுகளையும் உள்வாங்கி ரத்தத்துடன் உடலின் பல பாகங்களுக்கும் சென்று சேர்கிறது என்று மெய்ஞானிகள் கூறியுள்ளனர்.இதற்கு வேறொரு காரணமும் சொல்லப்படுகிறது.27 நட்சத்திரங்களையும்,ஒரு நாளின், நான்கு பாதங்களையும் கணக்கிட்டால் வருகின்ற எண்ணிக்கை 108 ஆகும்.அதோடு இந்த பிரபஞ்சமே ஒரு வட்டப்பாதை என்று சொல்லப்படுகிறது.ஒரு ராசி மண்டலம் என்பது 30 பாகையை கொண்டது.12 ராசி மண்டலங்கள் 360 பாகையைக் கொண்டது.நாம் சொல்லக்கூடிய மந்திரங்கள் இந்த 27 நட்சத்திரங்களையும் கடந்து இந்த 360 பாகை சுழற்சியை பூர்த்தி செய்கிறது.இந்த உள் அர்த்தத்தை வைத்துதான் நாம் மந்திரங்களை 108 முறை ஜபிக்கிறோம்.
 ஞானேந்திரியங்கள் ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து, புலனைந்து பருவுடல் நுன்னுடல் அறிவுடல் என்னும் உடல்கள் மூன்று ஆக மொத்தம் பதினெட்டு. இந்த பதினெட்டையும் ஒவ்வொரு ஆதாரமாக ஜபித்து கடக்க வேண்டும். ஆதாரங்கள் ஆறு. முதலில் மூலாதாரம் மண் தத்துவம் விநாயகர் அடுத்தது ஸ்வாதிஷ்டானம் நீர் தத்துவம் பிரம்மா, மூன்றாவது மணிப்பூரகம் என்னும் அக்னி தத்துவம் மகாவிஷ்ணு, நான்காவது அநாகதம் வாயு தத்துவம் ருத்ரன், ஐந்தாவது ஆகாய தத்துவம் கண்டம் மகேஸ்வரன், ஆறாவதாக சுழிமுனை நுன் ஆகாயம் என்ற தத்துவம் சதாசிவம். இவ்வாறாக 108 முறை ஜபிக்கும் போது மனம் என்னும் திரை விலகி ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாகும். அதேசமயம் மந்திரம் உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும் காரணம் புறத்தில் ஜபிக்க பிராணன் விரயமாகிறது. மனமும் உள்ளே ஒடுங்காது சந்தோஷம்.
நாம் தெரிந்து கொள்ளவேண்டும்
திருச்சிற்றம்பலம்
108 என்ற எண்ணில் சூட்சுமம்.
சூரியனும், சந்திரனும் உலகத்தின் இயக்கத்திலும், மனித வாழ்க்கையிலும்
முக்கியப் பங்கு வகிக்கிறது.
நமக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தூரம்,
சூரியனது குறுக்களவின் (விட்டம்) 108 மடங்குகள்  ஆகும்.
அது போலவே, நமக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம்,
சந்திரனது குறுக்களவின் 108 மடங்குகள் ஆகும்.
இதை நோக்கும் போது, 108 என்ற எண்ணில்
ஏதோ இரு சூட்சுமம் இருக்கிறது என்று தெரிகிறது.
அந்தச் சூட்சுமத்தை வேத ஞானம் கைக்கொண்டுள்ளது.
மந்திர ஜபங்களைச் சொல்ல வேண்டும் என்றால்,
108 அல்லது அதன் மடங்குகளில் சொல்ல வேண்டும்
என்பது வேத ஞானம்.
அது போலவே வேத வழிபாட்டுக்கான யாக சாலைகளின் அளவிலும்,
இந்த 108 என்னும் எண் வருகிறது.

தென்புலத்தார் தொல்லியல் வாட்சப் குழுவில் திரு காளியப்பன் 02/03/2020 பகிர்ந்தது

வியாழன், 27 பிப்ரவரி, 2020

தமிழ் மாமன்னர்களின் வெற்றி

கண்ணகிக்கு கோயில்கட்ட இமயத்தில் கல்லெடுக்க வடதிசை சென்ற சேர மாமன்னனை கொங்கணரும், கலிங்கரும், கருநாடகரும், பங்களரும், கங்கரும், கட்டியரும், ஆரியருடன் 51 தேச அரசர்களுடன் கனகனும் விசயனும் இணைந்து எதிர்த்து நிற்க

பேருவகை அடைந்து பெருமகிழ்வுடன் களமிரங்கி, யானைமீதமர்ந்து ஒரு பகற்பொழுதில் அவர்களை குயிலூலுவப் போரில் (கங்கை கரையில்) தோற்கடித்து ஒரேநாளில் இவ்வளவு பேரை கொல்ல முடியுமா என எமனுக்கே பயம்கொள்ள செய்து

கனக விசயன் தலைமீது பத்தினிக்கல் சுமந்து வரச்செய்து கண்ணகி கோயில் கட்டிய மாமன்னன் இமயவரம்பன் சேரன் செங்குட்டுவனை நான் கண்டதில்லை.

* மௌரிய மன்னன் அசோகனை சோழ எல்லையிலேயே நையப்புடைத்து துளுவ நாட்டைத்தாண்டி பாழிநாடுவரை துரத்தி சென்று பாழிக்கோட்டையை அழித்து செருப்பாழி எறிந்த சோழ மாமன்னன் இளஞ்சேட் சென்னியை கண்டதில்லை

* குழந்தை பருவத்திலேயே ஐந்து வீரவேளிர்களை, இரு பேரரசர்களை எதிர்த்து பெருவெற்றிகொண்டு தோற்றோடியவர்களை அவர்கள் நாட்டிலேயே போய் அழித்து தலையாலங்கானத்து போரில் வரலாற்று வெற்றியை பதிந்த, கடாரம் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனை கண்டதில்லை.

*பாரதப்பெரும்போரில் ஓரைவர், ஈரைம்பதின்மருக்கு பெருஞ்சோறு அளித்த சேரப்பேரரசன் பெருஞ்சோற்றுதியனை கண்டதில்லை

*நீதிகாக்க மகனை தேர்க்காலில் இட்ட மனுநீதி சோழனை கண்டதில்லை

*சேரநாடே களையிழந்து சோகத்தில் மூழ்கச்செய்த வெண்ணிப் பறந்தலைப்போர், ஒன்பது மன்னர்கள் ஒன்றிணைந்து எதிர்த்த வாகைப்பறந்தலை போர், சேர பாண்டிய மன்னர்கள் ஒன்றிணைந்த வெண்ணிப்போர் 3 இவற்றில் வெற்றிகொண்டு

எதிர்க்க ஆளின்றி தோள்தினவெடுத்து வடதிசை சென்று வச்சிர, மகத, அவந்தி மன்னர்களிடம் திறைகொண்டு ஆரியப்படை வென்று யவனர்களை வென்று இமயத்தில் புலிப்பொறி நாட்டிய சோழமாமன்னன் கரிகால் பெருவளத்தானை கண்டதில்லை

* கடம்பழித்து கடல் நடுவே இருந்த கடம்பரின் சின்னமான கடம்ப மரத்தை அழித்து யவனர்களை அடிபணியவைத்து கடலாதிக்கம் செலுத்திய நெடுஞ்சேரலாதனை கண்டதில்லை

* புள்ளலூர் போரில் புலிகேசியை கொன்ற பல்லவ மாமன்னன் மகேந்திர வர்மனை கண்டதில்லை...

* நரசிம்ம பல்லவனுக்காக வாதாபி கொண்டு போர் அழிவை கண்டு அருட்புகழை நாடிய பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டரை (63நாயன்மாரில் ஒருவர்) கண்டதில்லை

* இலங்கையை வெற்றிகொண்ட மாமன்னன் நரசிம்ம பல்லவனை கண்டதில்லை

*இரு கால்களிழந்து உடம்பில் 96 விழுப்புண்களை கொண்டு தன் மகன் மாதண்ட நாயகனாக களம்புகுந்த "திருப்புறம்பியம் போரை" 90 வயதில் நேரடியாகக் காணவந்து பல்லவ- சோழ படை தோற்கும் நிலையில் இரண்டு வீரர்களின் தோள்மீதமர்ந்து கையில் வாளுடன் வெறியாட்டம் ஆடி வெற்றிக்கனி பறித்த மாவீரன் விஜயாலய சோழனை கண்டதில்லை

* காந்தளூர்ச் சாலை முதல் மாலத்தீவு வரை தெற்காசியாவை கட்டியாண்ட பேரரசன் பெருவுடையார் கோவில் கண்ட மாமன்னன் இராசராசனை கண்டதில்லை.

* தன் உடம்பில் 64 விழுப்புண்களை கொண்டு எம் தலைவனே வியந்த பழுவேட்டரையரை கண்டதில்லை
* 12 லட்சம் படைவீரர்களை கொண்டு மாலத்தீவு முதல் இன்றைய பீஜாப்பூர் வரை வென்றெடுத்து தோல்வி காணாத மாமன்னன், தந்தை இராசராசனை மிஞ்சிய வீரமகன் கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய இராசேந்திர சோழனை கண்டதில்லை.

சீனம் , பர்மா, காம்போசம், கன்னோசி, கடாரம் முதல் பல நாடுகளில் சுங்கப்பகிர்வு முதல் பல விசயங்களில் நட்புறவு பேணிய குலோத்துங்க சோழனை கண்டதில்லை

பிற்கால பாண்டியர்கள் நெல்லூரில் வெற்றி மாமுடியும் வீரமாமுடியும் சூடிய சுந்தரபாண்டியனை கண்டிருக்கவில்லை

மார்க்கோ போலோ வியந்த குலசேகர பாண்டியனை கண்டிருக்கவில்லை இன்னும் பலர் உண்டு

ஆனால் இவர்களை இவர்களின் வீரம், ஆளுமை, செருக்கு, குடிகள் மீதான அன்பு, எதிரிக்கும் இரங்கும் நற்பண்புகளை ஒருங்கே கொண்ட எம் தலைவன் பிரபாகரனை, அவர்களின் தளபதிகளை, தலைவனுக்காக தன் மண்ணுக்காக உயிர்நீத்த மாவீரர்களை ஒருங்கே கண்டு அவர்கள் வாழ்ந்த சமகாலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதே எனக்கு பெருமை.

காவிரியில் கல்லணை கட்டி நீரின் போக்கை மாற்றி கால்வாய் வெட்டி விவசாயம் காத்தவன் கரிகால் பெருவளத்தான்.

தன் படை தோற்றாலும் சரி இரணைமடு குளத்தை (அணையை) உடைக்க அனுமதிக்க மாட்டேன், என் மக்களின் விவசாயம், வாழ்வாதாரம் பாதிக்கும் என உறுதியாய் நின்றவன் எம் தலைவன்.

இராசேந்திர சோழனுக்கு பின் அவருக்கு நிகரான எந்த மாவீரனும் அவதரிக்க வில்லை. அதேபோல ஆயிரமாண்டுக்கு பின் எம் தலைவன். இன்னும் ஆயிரமாண்டு கடந்தபின்னும் அவர் புகழ், வீரம் போற்றப்படும்.

 வரலாறென படிக்கும் எம் குழந்தைகள் இந்த மாவீரர்களின் வெற்றிக்கதைகளை படிக்க வேண்டும்

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

நாட்டு ரக விதைகள் எனது தோட்டத்தில் கிடைக்கும்.

வாரந்தோறும் புதன்கிழமை மதியம் 3மணி முதல் 5மணி வரை நாட்டு ரக விதைகள் எனது தோட்டத்தில் கிடைக்கும். தேவைப்படுவோர் நேரடியாக வந்தும் பெற்று செல்லலாம். வருவதற்கு முன் 8526366796 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு உறுதி செய்துவிட்டு வரவும்.

பரமேஸ்வரன்.
ஊத்துப்பள்ள தோட்டம்,
குட்டியாகவுண்டன்புதூர்,
கொன்றங்கி கீரனூர் அருகே,
ஒட்டன்சத்திரம்.
திண்டுக்கல் மாவட்டம்.

விதைகள் மிக குறைந்த அளவில் கிடைக்கும். ஒரு முறை பயிர் செய்தால் தலைமுறைக்கும் விதைகளை அழியாது பார்த்துக்கொள்ளலாம்.

உங்களிடமுள்ள நாட்டு ரக விதைகளை கொடுத்து உங்களுக்கு தேவையான விதைகளை பண்டமாற்று முறையிலும் பெற்றுக்கொள்ளலாம். விதைகளை கொரியரிலும் தேவைப்படுவோருக்கு அனுப்பி வைக்கின்றோம்.

காய்கறிகள்,கீரைகள்,மூலிகைகள், மரவிதைகள்,பழங்கள், தானியங்கள்,பயிறு வகைகள் என எல்லா நாட்டு விதைகளையும் சேகரிக்கறோம்.

#நாங்கள்_தேடும்_விதைகள்:
திண்டுக்கல் தக்காளி
ஆத்தூர் தக்காளி

பழுபாகல் கிழங்கு
வெள்ளைபாகல்
செவ்வகத்தி

தமிழக கத்தரி ரகங்கள்:
1)கொட்டபட்டி கத்தரி
2)புளியம்பூ கத்தரி
3)பவானி கத்தரி
4)பூனைத்தலை கத்தரி
5)ஏந்தல் கத்தரி
6)வேட்டைமங்கலம் கத்தரி
7)ஆத்தூர் சலங்கை கத்தரி
8)குலசை கத்தரி
9)குளத்தூர் வெள்ளை கத்தரி (மானாவரி கத்தரி)
10)பொய்யூர் கத்திரி
11)சிந்தம்பட்டி பொன்னி கத்தரி
12)புழுதிக்கத்தரி
13)சுண்டக்குடி கத்தரி
14)பவானி நீளவரி கத்தரி
15)தொண்டாமுத்தூர் சம்பா வரி கத்தரி

நாட்டு முருங்கை ரகங்கள்:
1)யாழ்ப்பாண முருங்கை
2)சாவகச்சேரி முருங்கை
3)பால் முருங்கை
4)குடுமியான் மலை முருங்கை
5)வலையபட்டி முருங்கை
6)செம்முருங்கை
7)கொடிக்கால் முருங்கை
8)ஏர்வாடி முருங்கை
9)பேய் முருங்கை அ பொண முருங்கை அ மலை முருங்கை
10)பள்ளபட்டி மானாவரி முருங்கை
11)ஆத்தூர் முருங்கை
13)களி முருங்கை,
14)வலியன் முருங்கை,
15)கட்டை முருங்கை,
16)உலாந்தா முருங்கை (srilanka)
17)கரும்பு முருங்கை
18)மூலனூர் மரமுருங்கை
19)பூனை முருங்கை

நாட்டு ரகங்களில் வெவ்வேறான சுரை, பூசணி, அவரை, பீர்க்கு,
ஒலக்கூர் புடலை
வரிப்புடலை
சாம்பல் புடலை
காந்தாரி மிளகாய் ரகங்கள்
மானாவரி பகுதிக்கான நெல் ரகங்கள்,

என காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், மரவிதைகள், பழங்கள், தானியங்கள்,பயிறு வகைகள் என எல்லா நாட்டு விதைகளையும் சேகரிக்கறோம்.
___________________________________
#தற்போது_எங்களிடமுள்ள_மரபு_ரக_விதைகள்.

• 2014-16ஆம் ஆண்டுகளில் சேகரித்த 110க்கும் மேற்பட்ட மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ளவும்.

தக்காளி:
• •அன்னஞ்சி தக்காளி
• • கொடி தக்காளி
• • மஞ்சள் காட்டுத்தக்காளி
• • சிவப்பு காட்டுத்தக்காளி

கத்தரி:
• *பச்சை கத்திரி
• *நெகமம் வரி கத்திரி
• *உடுமலை சம்பா கத்தரி
• *உடுமலை உருண்டை கத்தரி
• *திண்டுக்கல் ஊதா கத்தரி
• *மணப்பாறை கத்தரி
• *எலவம்பாடி கத்தரி அ வேலூர் முள் கத்தரி
• *சேலம் முள் கத்தரி
• *கண்ணாடி கத்தரி
• *நத்தம் கீரி கத்தரி
• *கும்கோணம் குண்டு கத்திரி
• *தொப்பி அ தக்காளி கத்தரி
• *கல்லம்பட்டி கத்தரி
• *நந்தவன பச்சை கத்தரி
• *கோபி பச்சை கத்தரி
• *ஊதா முள் கத்தரி
• *கொத்து கத்தரி
• *நாமக்கல் பொன்னு கத்தரி
• *வெள்ளை வரி கத்தரி
• *பச்சை குண்டு கத்தரி
• *வெண்வரி சம்பா கத்தரி
• *வெண்வரி  உருண்டை கத்தரி
• *மணச்சநல்லூர் கத்தரி
• *காரமடை வரி கத்தரி
• *காரமடை ஊதா கத்தரி
• *கடவூர் உருண்டை கத்தரி
• *வெங்கேரி கத்தரி

மிளகாய்
• *சம்பா மிளகாய்
• *முட்டி மிளகாய்
• *காந்தாரி மிளகாய் சிறியது
• *காந்தாரி மிளகாய் பெரியது
•  *குண்டு மிளகாய்
• *தோடு மிளகாய்

வெண்டை:
•     *வெண்டைக்காய்
•     *மலை வெண்டை
•     *சிவப்பு வெண்டை

கொடி வகைகள்:
• • பாகல்
• • மிதி பாகல்

• குடுவை சுரை
• நீளச் சுரை
• கும்பச்சுரை
• ஆள் உயர சுரை
•  உருட்டு சுரை
• செம்பு சுரை

•  திருச்சி நீள புடலை
•  தேனி நீள புடலை
•  குட்டை புடலை
•   பாப்பனூத்து தரை புடலை
 
• பச்சை பட்டை அவரை
•  பெல்ட் அவரை
•  கோழி அவரை
•  செடி அவரை
•  தம்பட்ட அவரை
•  கொத்தவரை

• நீள பீர்க்கங்காய்
• மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்

• வெள்ளை பூசணி
• கையளவு பூசணி
• சக்கரைப் பூசணி
• பரங்கிக்காய்

பொரியல் தட்டை
• வெள்ளை தட்டை

பல்லாண்டு ரகங்கள்:
• மரத்துவரை
• கருங்கண் பருத்தி
• கோவில்பட்டி முருங்கை
• • பப்பாளி
• சுண்டக்காய்
• நாட்டு ஆமணக்கு


மலைக்காய்கறி ரகங்கள்:
• • வெள்ளை முள்ளங்கி
•  சிவப்பு முள்ளங்கி

• பீன்ஸ்
• வரி பீன்ஸ்
• கருப்பு பீன்ஸ்
• சிவப்பு பீன்ஸ்
• ரெட்டை பீன்ஸ்
• குத்துசெடி பீன்ஸ்
• இலங்கை பீன்ஸ்
• பச்சை பட்டாணி
• பழ வெள்ளரி
• வரி வெள்ளரி
• குமரி வெள்ளரி

கீரை ரகங்கள்
• அரைக்கீரை
• • முளைக்கீரை
• • பச்சை சிறுகீரை
• • சிவப்பு சிறுகீரை
• • பச்சை தண்டங்கீரை
• • சிவப்பு தண்டங்கீரை
• • பச்சை புளிச்சகீரை
• • சிவப்பு புளிச்சகீரை
• • மணதக்காளி கீரை
• • கொத்தல்லி
• • பருப்பு கீரை
• • பாலக்கீரை
• • அகத்திக்கீரை
• • காசினிக்கீரை
• • சிவப்பு முள் தண்டு கீரை
•     பச்சை முள் தண்டு கீரை
•     கொடி பசலைக்கீரை
•     சவுரிக்கீரை
தொய்யக்கீரை
குப்பை கீரை

• மூலிகைகள்•
• பூனைக்காலி
   தூதுவளை
• • முடக்கற்றான்
• • துளசி
• • திருநீற்றுப்பச்சிலை thaai basil & Italian basil
• *சதகுப்பை கீரை
• • செண்டுமல்லி அ துலுக்கசாமந்தி-மஞ்சள்-2ரகம்
• செண்டுமல்லி-ஆரஞ்சு-2ரகம்

விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கிடைக்காது ..
வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விதைகள் கொடுக்கப்படுகிறது.
• அந்த பருவத்தில் விவசாயம் செய்ய....கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது..மேலே குறிப்பிட்டுள்ள விதைகள் ஒவ்வொன்றும் 10ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது.
தேவைப்படுவோர் தேவைப்படும் விதைகளை மட்டும் வாங்கிக்கொள்ளவும். வேலைப்பளு இருப்பதால் வாரம் ஒருமுறை புதன்கிழமை மட்டுமே விதைகளை அனுப்பி வைக்கப்படும்.. தமிழகத்திற்குள் கொரியர் செலவு 50ரூபாய்..
மொத்த விதைகள் தேவை என்றாலும் அனுப்பி வைக்கப்படும். 110க்கும் மேற்பட்ட விதைகள் உள்ளன.. எங்களிடமுள்ள மொத்த விதைகளும் தேவைப்படுமாயின் ரூ.1100 என்று கொடுக்கின்றோம்.

விதைகளுக்கு பணம் செலுத்த
Acc no:912010045000240
name:A.Parameshwaran
BANK: axis bankbranch:KETHAIURAMBU,ODDANCHATRAM
ifsc:UTIB0001745
micr:625211005

பணம் செலுத்ததிய ரசீதை paramez.zurich@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டு 8526366796 எண்ணிற்கு தெரியப்படுத்தவும் ...
மின்னஞ்சலில் பணம் செலுத்திய ரசீதுடன் தங்களுடைய முகவரி மற்றும் கைபேசி எண்ணையும் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன்..!
நன்றி

நன்றி..#பரமேஸ்....

தகவல்களுக்கு 8526366796

...!

மரபு விதைகளை சேகரிப்பது தான் நோக்கம் .. வாழ்வாதாரம் கருதி விற்க செய்கிறோம்.. தங்களிடம் மரபு விதைகள் ஏதேனுமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.. பாரம்பரிய கத்தரி வகைகள் நம் நாட்டில் 4000வகைகள் உண்டாம் .. தங்களுக்கு ஏதேனும் விவரம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளவும்


வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

இத்தனை வேறு பாடா? தொல்காப்பியரின் பேச்சு வகைகள்:-

பேசு( speak)
பகர்( speak with data)
செப்பு(speak with answer)
கூறு ( speak categorically)
உரை ( speak meaningfuly)
நவில்( speak rhymingly)
இயம்பு( speak musically)
பறை ( speak to reveal)
சாற்று ( speak to declare)
நுவல் (speak with introduction)
ஓது ( speak to recite)
கழறு( speak with censure)
கரை( speak with calling)
விளம்பு( speak with a message)

தொல்காப்பியர் இத்தனை வகையான பேச்சுகளைக் குறிப்பிடுகிறார்.

தமிழ்  மொழியில் இத்தகைய சொல்லாக்கமா  !

தென்புலத்தார்...1 வாட்சப் குழுவில்
திரு.சன்முகம் அவர்கள் 20/02/2020 பகிர்தது

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகை தொகுப்பு

* அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
* உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
* உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
* குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
* தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
* துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
* நக்கல் - நாக்கினால் துழாவி உட்கொள்ளுதல்.
* நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
* பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
* மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
* மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
* விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

தென்புலத்தார்...1 வாட்சப் குழுவில் திரு.உமாதேவ் அவர்கள் 19/02/2020 பகிர்தது 

வியாழன், 13 பிப்ரவரி, 2020

இளைய தலைமுறைக்கான ஆய்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி குமரிக்கண்டம் ஆய்வாளர் ஒரிசா பாலு வுடன் கலந்துரையாடல் .

பள்ளிக்கரணை சான் அக்காடமியில்
குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானிகள்-

ஸ்ரீகரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வுக்குப்பின்னர். 8.2.2020 , அன்று காலை7.30 மணிக்கு மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் புறப்பட்டு சென்னை பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும்
சான் அகாடமியை சென்றடைந்தோம்.
எங்களை இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்
அங்கு ‘தமிழ்நாட்டின் பாரம்பரியம்’ என்ற பொருளில்  எங்கள் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
நிகழ்ச்சியை ஜானிகா தொகுத்து வழங்கினார். தமிழ்தாய் வாழ்த்து நிகழ்வுக்குப்பின்னர்   இளம் விஞ்ஞானி பார்வதி குமரி அறிவியல் பேரவையின்  இவ்வாண்டு செயல்பாடுகள் குறித்து (2019-2020) தொகுத்து கூறினார்.
பள்ளியின் முதல்வர் திருமதி.சுஜாதா சரவணன் அவர்கள் வரவேற்புரை கூறினார்கள்.
குமரி அறிவியல் பேரவையின் நிறுவனர் முள்ளஞ்சேரி மு.வேலைய்யன் அறிமுக  உரை வழங்கி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சான் அகாடமிக்கு நன்றி கூறி,
அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்சியின் சிறப்பு விருந்தினரான ஒரிசா பாலு அவர்களைப் பற்றிய முகவுரையை ஜானிகா கூறிவிட்டு அவரை வரவேற்று பேசினார்.....
ஒரிசா பாலு அவர்கள் தனது உரையை துவங்கினார். தமிழ்நாட்டையும் தமிழர்கள் பண்டைய நாகரீகம்  பற்றியும் பல அரிய உண்மைகளை  ஆதாரங்களுடன் விளக்கினார்.
முதலில் அவர் தனது பெயருடன் தனது ரத்த வகையை சேர்த்திருப்பதன் காரணத்தை தெரிவித்தார். பல வருடங்களுக்கு
முன்னர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் இரத்த வகை தெரியாத காரணத்தால், சரியான நேரத்தில் இரத்தம் கிடைக்காததால் உயிரிழக்க நேரிட்டது. இதை உணர்ந்த பாலு அவர்கள் பின்பற்ற துவங்கியவுடன் பலர் இதை பின்பற்றினர். இதனால் பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன எனக்கூறினார்.
நமது உடல் வெப்பமண்டல காலநிலையை தாங்கும்படி உள்ளது என்றும் தனக்கு மிகவும் விருப்பமான இடம் கன்னியாகுமரி என்பதை தெரிவித்தார்.
குமரிக் கடல் தற்பொழுது லட்சதீவு கடல் என்று அழைக்கப்படுகிறது.
 நாடுகளைப் பற்றி பல சுவையான செய்திகளை தெரிவித்தார்.
 ஐக்கிய நாடுகள் அமைப்பில் 197 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. அறிஞர்கள் பலர் உலக நாடுகளுக்குச் சென்று தமிழை பரப்பிய காரணத்தால்
75 நாடுகளில்  தமிழ் பேசுகின்றனர் என்றார்.
நாம் உலகம் முழுவதும் ஆங்கிலம் பேசுவதாக நினைத்திருக்கிறோம். ஆனால் 130 நாடுகளில் தான் ஆங்கிலம் பயன்படுத்துகிறார்கள்.
218 நாடுகளில் கடவுச்சீட்டு (Passport) பழக்கத்தில் உள்ளது.
111நாடுகளில் தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர். தமிழ் இமயமலை முதல் மடகஸ்கார் வரை பரவி உள்ளது.பழந்தமிழர்கள் காலநிலை மற்றும் வானிலை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கினர்.
இந்தியாவின் வேர் கன்னியாகுமரி மாவட்டம். இங்குள்ள
முத்து குளிவயல் என்ற இடத்தில் தான் பண்டைய அறிவியல் அறிஞர்கள் வானிலை ஆய்வுகளை மேற்கொண்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலையின் வயது ஐந்து கோடி வருடங்களுக்கும் மேல்ஆகும்.பண்டைக்
காலங்களில் சுறா பிடிக்கும் போட்டிகள் நடந்துள்ளன.
அதில் தூத்தூர் மக்கள் வெற்றிபெற்றுள்ளனர் என்ற குறிப்பும் கிடைத்துள்ளது என்றார் . வால்மீகி இராமாயணத்தில் ‘மகேந்திரகிரி’
என்ற சொல் காணப்படுகிறது.
தமிழர்கள் அடிப்படை அறிவியலை நன்கு அறிந்திருந்தினர்.
உளியின்  கண்டுபிடிப்பின் மூலம் உலோகங்கள் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் என்ற  அங்கீகாரம் கிடைத்தது. 1863 ஆம் ஆண்டில் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரம் என்னும் இடத்தில் முதல் கல்கோடாரி கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இதுபோன்ற பல கைகோடாரிகள் கிடைத்தன.
இதை ‘ Madras Stone Age factory’ என்றுஅழைக்கப்பட்டது.
 பல அதிசயங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைந்துள்ளன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்பொழுதும்கூட            ஆறு கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது.மலைவாழ் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்றார்.கோயம்பத்தூரில்
உள்ள ஆழி ஆறு கடலில் கலக்காது என தெரிவித்தார்...
 35 நாடுகளில் தமிழ் ஓலைச்சுவடிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அத்திரப்பாக்கம் என்ற ஊர் உள்ளது ,
இங்குதான் பழைய கற்கால மக்களின் வாழ்க்கை ஆரம்பித்
திருக்கிறது என்பதற்கான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
 தொல்காப்பியத்தை கற்பதன் மூலம் பழந்தமிழ் மக்களின்வாழ்க்கை முறைகளை அறிய இயலும் என்று அறிவுறுத்தினார். 1300 தமிழ் Rock Art கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித்தவர்  திருப்பதியில் இருந்தும் கிடைக்கப்பட்டுள்ளது
என்றார்.
தமிழ் மக்கள் வீரத்திலும் சிறந்து விளங்கினர். ஒரிசாவை ஆண்ட கலிங்க மன்னன் காரவேளன், தமிழ்நாட்டை போரிட்டு வெற்றிகொள்ள முடியாததால் தமிழ்நாட்டுடன் நட்பு பூண்டார் என குறிப்புகள் உள்ளன .
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் இவரையிலும் செய்யப்பட்ட ஆய்வுகள் ஒரு சிறு பகுதிதான்.
வைகை ஆற்றுப் படுகையில் இருந்து பெரிய கல்சிற்பங்கள் கிடைத்துள்ளது.
1000 வருடங்களுக்கு முன்னர் திருப்பூரில் வாணிக சமயம் என்ற காலம் இருந்துள்ளது. இங்கு வணிகர்கள் கடல்வழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளது.
கடலுக்கு அடியில் சென்றுவிட்டு திரும்பிவருபவர்கள் திரை மீளர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
மீனவ மக்களே பெரும்பாலும் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.
தமிழ் மக்கள் உலகம் முழுவதும் இடம் பெயர்ந்திருந்தனர்.
பழந்தமிழ் மக்கள் கப்பல் கட்டும் தொழிலிலும் கடல்வழி வணிகத்திலும் சிறந்துவிளங்கினர்.
42 மரங்களைக் கொண்டு பாய்மர கப்பல்களை உருவாக்கினர், அதில் பயன்படுத்திய கருங்காலி மரம் இடி தாங்கியாக பயன்பட்டது.
எல்லா துறைமுகங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. 12,000 க்கும் அதிகமான கடல் வழிகள் இருந்தன.
 தமிழ் மக்கள்தான் முதன்முதலில் மண்பாண்டங்களை உருவாக்கினர்.
அம்மி செய்ய அறிந்திருந்தனர்.
குமரி மாவட்டம் முன்பு கௌரியன் நாடு என்று அழைக்கப்பட்டது. பழங்காலத்தில் ஒரு வித தோடுகளை பணமாக பயன்படுத்தினர்.
குமரி கண்டம் கடல் கோளால் அழியப் பட்டதற்கு மற்றுமொரு ஆதாரம் முட்டம் பகுதியில் கடலுக்குள் காணப்படும் ஆடு மேய்ச்சான் பாறை ஆகும்.
 பண்டைக்காலத்தில் மக்கள் இப்பகுதியில் ஆடுமாடுகளை மேய்த்திருந்தனர்  அதனாலேயே இப்பெயர் கிடைத்தது. கலிங்கராஜபுரத்தில்            7 மீ உயரமுள்ள சிவன் கோயில் ஒன்று மண்ணில் புதையுண்டது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லட்சதீவில் தாவரங்களின் புதை படிவங்கள் கிடைத்துள்ளன.
 முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம்’  என்ற சோழர் கால கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 12,000 தீவுகளில் 9,000 தீவுகள் கடலில் மூழ்கின என்பதாகும்  பழந் தமிழர்களின் கணக்கிடும் திறமையும்ஆச்சரியமானதுதான். 1959 - 1965 வரை 14 நாடுகள் இணைந்து நடத்திய International Indian Ocean Expedition என்ற ஆராய்ச்சி மூலம் தமிழர்கள் பற்றிய பல தகவல்கள் சேகரிக்கப்பட்டது.
ஒரிசா பாலு அவர்கள் மீனவர்கள் உதவியுடன் கடலுக்கு அடியில் சென்று லெமூரியா கண்டம் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்....
ராமநாதபுரம் முற்காலத்தில் முகவை என்று அழைக்கப்பட்டது.... முகவை என்ற சொல் பல நாடுகளில்காணப்படுகிறதுதமிழ்நாட்டில் உள்ள கீரை வகைகளில் ஒன்றான புளிச்சகீரை Canof என்னும் இடத்தில் தற்பொழுது காணப்படுகிறது. கேமரூன், மடகஸ்கார், பெல்ஜியம், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்து கின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன்னரே கடன் அட்டைகளை (Debit Card) பயன்படுத்தினர்.
பாண்டியர்கள் ஏதென்ஸ் நாட்டை ஆண்டதற்கான சான்றுகள்கிடைத்துள்ளன. துருக்கியில் அதியமான் என்ற பெயருள்ள இடம் உள்ளது. பழனி என்ற பெயரில் 16 ஊர்கள் உள்ளன.வேனாடு என்ற ஊர் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஸ்ரீகரிகோட்டாவிலும் உள்ளது.
 பிலிப்பைன்சில் இன்றும் ஓலைப்பெட்டிகளை பயன்படுத்துகின்றனர். கொரியா மக்கள் ஆதிகேசவனை வழிபடுகின்றனர். இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
பண்டைக்காலத்தில் காளையை பாண்டி என அழைத்தனர். ஆமைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தனர்.
கோயில்களில் ஆமைகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. சென்னையில்                  திருஆமையூர் என்ற இடம் உள்ளது. உலகத்தில் மொத்தம் 1024 திசைகள் உள்ளன.தமிழ்நாட்டில்தான் அதிகமாக நீரில் மூழ்கும் பெண்கள் இருந்தனர். மணக்குடி என்னும் இடத்தில் முத்துக்கள் அதிகமாக கிடைத்தன.
தெப்பம், நங்கூரம், ஏவுகணை, நீர்மூழ்கிக்கப்பல் போன்றவற்றின் தொழில் நுட்பங்களை அறிந்திருந்தனர் தமிழர்கள் என்ற பல செய்திகளை கூறினார்.
இவற்றில் இருந்து தமிழ் மக்களின் கலாச்சாரத்தை நன்கு அறிய முடிந்தது.
எங்களில் ஜானிகா ,காயத்ரி, பார்வதி ஆகியோர்  பின்னுட்டம் வழங்கினோம். பின்னர் பொங்கல் புனிதா வாழ்த்துரை வழங்கினார்

ஒரிசா பாலு  தன்  உரை         யில் தன் பெயருக்கு பின்னால் தன் இரத்த வகையை சேர்த்திருப்பது மக்களிடையே இரத்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக என கேள்விக்கு பதிலளித்தார் .
கன்யாகுமரி தனக்கு மிகவும் பிடித்த மான இடம் எனவும்.ஏனெனில் கன்யாகுமரி வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடம் என்றார்.
மற்றொரு கேள்விக்கு
நீரில் மூழ்கி இருக்கும் குமரிக் கண்டத்தில் மீனின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது அதனால் மீன்வளம் அதிகம் என்று கூறினார்.
205 நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது என ஐநா சபை அறிவித்துள்ளது என்றார்.மேலும் தமிழர்கள் பல நாடுகளில் குடியுரிமை பெற்று மிகப்பெரிய பதவிக ளை வகித்து வருகின்றனர்.
இந்தியாவின் தென்பகுதி மக்கள் வானியலில் பழங்காலத்திலேயே ஞானத்தினைப்
பெற்றுள்ளர் என்று கூறினார்.
கன்யாகுமரி தென்மேற்கு வடகிழக்கு  பருவக்காற்றால்  மழை பெறும் பகுதியாகவுள்ளது .
தமிழர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றனர் என்றும் கூறினார்.

நம் தலைநகரமான சென்னையில் பழங்கால நாகரிக அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பர்மா,சீனா,ஓமன் போன்ற நாடுகளில் அகழ்வாராய்ச்சி யில் தமிழ்  கலாச்சாரச் சுவடுகள்கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
தமிழ்மொழியில் மட்டுமே கடல்வழி பயணக் குறிப்புக்கள் இருப்பதன் மூலமாக பழங்காலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வெகுதூரம் சென்று ற்றுள்ளது
 நமக்கு தெரிகிறது என்றார். தொல்காப்பியம் நூலை நாம் படிப்பதால் தமிழ் ஆராய்ச்சிக் கான அறிவினை நாம் பெறலாம் என்று கூறினார்
அதிரம்பாக்கத்தில் 1.5 மில்லியன் பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழனது வீரம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பாய்மரக் கப்பல்
பற்றியும் விரிவாக விளக்கினார்.
மேலும் அவர் ஆங்கிலத்தை கல்வியறிவுக்காவும் தாய்மொழியாம் தமிழினை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்தியதாக கூறினார்.
பழந்தமிழர்கள் இரும்பு, பட்டுத் துணி, நறுமணப் பொருள் களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவந்த தகவலினையும் கூறினார்.
பாண்டிச்சேரிக்கடலில் பெரிய கடற்சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அது மிகவும் பழமையானதும் என்றார்.
குமரிக் கண்டத்தினை பற்றிய ஆராய்ச்சிக்கு  மீனவர்கள் பெரிதும் உதவியதாக   கூறினார்

தமிழர்கள்  பல இடங்களில் வாழ்ந்திருந்த காரணத்தால்  தமிழ் வார்த்தை கள்  பல இடங்களில் பயன் படுத்தப்படுத்தபடுகிறது.  ..
ஆமைகள் பற்றிய  அவரது ஆராய்ச்சிபற்றி.விரிவாக விளக்கம்அளித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை போன்று வெளிநாடுகளில் இருப்பதன் மூலம் பண்டைய தமிழரின்   இடம் பெயர்வை நாம் அறியமுடியும் என்றார்.
நம் நாட்டின் வளத்தினை கண்டே அன்னியர் படையெடுத்து வந்தனர். என்றார்.
மேலும் நம் தமிழக விளையாட்டுகள் இன்றும் வெளிநாடுகளில்  விளையாடப்பட்டு வருகிறது..என்றுரைத்தார்.
இவரது உரையின் மூலம் தமிழகத்தின் பெருமையையும் தமிழினத்தினைப்பற்றியும் குமரிக்கண்டத்தினைப் பற்றியும் தெளிந்த அறிவினைப் பெற்றோம்.
ஜாண்ரபிகுமார் நன்றிகூறினார் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு உதவிய துர்க்கதிரவியம் அவர்களுக்கு அனைவரும் நன்றியறிதலைத்தெரிவித்தனர். பாலகிருஷ்ணன் பேராசிரியர் சஜிவ் ஜாண்சன் எட்வின்சாம் திருவேங்கடம் சைனிஏஞ்சல் கனகம் விமலா பபிதா ஆகியோர் வழிகாட்டிகளாக செயல்பட்டனர்.ஒரு வரலாற்று ஆய்வாளருடான கலந்துரையாடல் இளையதலைமுறையினருக்கு ஆய்வு சிந்தனையை ஏற்படுத்தியது.
தொகுப்பு:
காயத்திரி
ஜானிகா.

தென்புலத்தார் குழுமத்தின் தொல்லியல் பயில்வோம் குழுவில் பாலு ஐயா  பகிர்ந்தது