வெள்ளி, 19 அக்டோபர், 2018

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ கேள்வியும் பதிலும்

வைகைப்புயல் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படத்தில் வரும் வசனம் தான் இது:

“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…”

இது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ அல்ல, இதற்கு பின்னணியில் ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கவே கூகுள்'ல என் தேடலை ஆரம்பித்தேன்.

எங்கெங்கோ புகுந்து நெளிந்து வளைந்து ஒரு வழியா அந்த விளக்கம் ஒரு வடிவம் பெற்றபோது நான் அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே,

இது ஒரு தெய்வீக சமாச்சார விடுகதை.....??

குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன்தான் பெருமாளின் குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப்பெருமாள்…

அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப்பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின்மீது நின்றகோலத்தில் செட்டில் ஆகி மக்களுக்கு அருள்புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள். இது தான்
“பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை…” என்ற விடுகதைக்கான விளக்கம்.

இது தான் சாக்குன்று யாராவது அந்த படத்தில் வரும் இன்னொரு விடுகதைக்கு விளக்கம் கேட்டால் என்ன செய்வது என பதறினேன். யாமிருக்க பயமேன் என மீண்டும் கூகிள் கைகொடுத்தது…

“தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…”

இதற்கும் புராணத்தை வைத்து விளக்கிவிடலாம். ரொம்ப முத்தீருச்சின்னு நினைக்கிறேன்(!).

தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான். சரி, சட்டை எதற்காக போடுகிறோம்? நெஞ்சை மறைப்பதற்கு. தட்டானுக்கு சட்டை போடுவது என்றால் தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது, அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள் சரிதான்...??

நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்துவிட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும்போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார். ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக்கொள்கிறார். அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்யறார்?

ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார்.

இது தான் “தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…" என்பதற்கான சிறந்த விளக்கம்…
     
சீரியஸான வாழ்க்கைக்கு நடுவில் இந்த மாதிரி நகைச்சுவைகள் தரும் தெம்பே தனி.

புதன், 15 ஆகஸ்ட், 2018

கணிணி இயக்கத்திற்கு மூலம் தமிழ்

உலக உயிரியக்கத்திற்கு மட்டுமல்ல கணிணி இயக்கத்திற்கும் தொன்மைமிகு தமிழே மூலம் ஐயனே!

பரமேசுவரி

கணினி மொழியின் அடிப்படை விதிகள் நம் தமிழ் மொழியில் இருந்துதான் தோன்றியது என்ற உண்மையை கண்டறிந்தேன் அதை உங்களோடு ஆதாரத்துடன் பகிர்ந்துகொள்வதில் தமிழன் என்று பெருமை கொள்கிறேன்

விளக்கக் கட்டுரை:

யாப்பு இலக்கண விதி சீரும்,  கணினி மொழியின் அடிப்படை விதி
கீழேயுள்ள அட்டவனைப்படி ஒப்பீடு படித்தி பார்த்ததில் கணிமொழி அடிப்படை விதி நம் தமிழில் இருந்துதான் தோன்றியுள்ளது என்பதை
கண்டறிந்தேன்.

சான்றுகள்

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China, and India.

பண்டைய எகிப்து, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பண்பாடுகளில் பைனரி எண்கள் தொடர்பான அமைப்புகள் முன்னர் தோன்றியுள்ளன என்றுஆங்கிலேயர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள் ஆனால் அது சமஸ்கிரத்தில் இருந்துதான் தோன்றியது என்று சொல்வதைவிட  சமஸ்கிரதத்துக்கு மூத்த மொழியான நம் தமிழ் மொழியில் இருந்துதான் தோன்றியது என்று சொல்வதுதான் உண்மை தமிழனுக்கு பெருமை...நம் தமிழ் மொழியின் இத்தகைய சிறப்புகளை திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது என்று எனது இந்த ஆய்வின் மூலம் தெட்ட தெளிவாக தெறிகிறது.

கணினி மொழி bainary number யாப்பு இலக்கண விதியில் இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டது.
Computer programme language fundamental table matching as per below comparison

ஓர் அசைச் சீர் எ.கா single bit example
நேர் ( 0 )
 நிரை  ( 1 )
ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும்.
• ஓரசைச்சீர்கள் . 1  bit binary .LOGIC NAME
1. நேர் 0 LOW
2. நிரை 1 HIGH
• ஈரசைச்சீர்கள் . 2 bit binary .LOGIC NAME
1. நேர்-நேர் 0-0 LOW-LOW
2. நிரை-நேர் 1-0 HIGH-LOW
3. நிரை-நிரை 1-1 HIGH-HIGH
4. நேர்-நிரை 0-1 HIGH-LOW
• மூவசைச்சீர்கள் . 3 bit binary logic name
1. நேர்-நேர்-நேர் 0-0-0  LOW–LOW-LOW
2. நேர்-நேர்-நிரை 0-0-1 LOW-LOW-HIGH
3. நிரை-நேர்-நேர் 1-0-0 HIGH-LOW-LOW
4. நிரை-நேர்-நிரை 1-0-1 HIGH-LOW-LOW
5. நிரை-நிரை-நேர் 1-1-0 HIGH-LOW-LOW
6. நிரை-நிரை-நிரை 1-1-1 HIGH-HIGH-HIGH
7. நேர்-நிரை-நேர் 0-1-0 LOW-HIGH-LOW
8. நேர்-நிரை-நிரை 0-1-1 LOW-HIGH-HIGH
• நாலசைச்சீர்கள் . 4 bit binary logic name
1. நேர்-நேர்-நேர்-நேர் 0-0-0-0 LOW-LOW-LOW-LOW
2. நேர்-நேர்-நேர்-நிரை 0-0-0-1 LOW-LOW-LOW-HIGH
3. நேர்-நேர்-நிரை-நேர் 0-0-1-0 LOW-LOW-HIGH-LOW
4. நேர்-நேர்-நிரை-நிரை 0-0-1-1 LOW-LOW-HIGH-HIGH
5. நிரை-நேர்-நேர்-நேர் 1-0-0-0 HIGH-LOW-LOW-LOW
6. நிரை-நேர்-நேர்-நிரை 1-0-0-1 HIGH-LOW-LOW-HIGH
7. நிரை-நேர்-நிரை-நேர் 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
8. நிரை-நேர்-நிரை-நிரை 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
9. நேர்-நிரை-நேர்-நேர் 0-1-0-0 LOW-HIGH-LOW-LOW
10. நேர்-நிரை-நேர்-நிரை 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
11. நேர்-நிரை-நிரை-நேர் 0-1-1-0 LOW-HIGH-HIGH-LOW
12. நேர்-நிரை-நிரை-நிரை 0-1-1-1 LOW-HIGH-HIGH-HIGH
13. நிரை-நிரை-நேர்-நேர் 1-1-0-0 HIGH-HIGH-LOW-LOW
14. நிரை-நிரை-நேர்-நிரை 1-1-0-1 HIGH-HIGH-LOW-LOW
15. நிரை-நிரை-நிரை-நேர் 1-1-1-0 HIGH-HIGH-HIGH-LOW
16. நிரை-நிரை-நிரை-நிரை 0-0-0-0 LOW-LOW-LOW-LOW

குறிப்பு: யாப்பு எப்போது தோன்றியது?
தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய யாபருங்கலமும், அதன் தொகுப்பாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையும் நேர்பு, நிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன.

எனவே நண்பர்களே இனிமேல் தமிழ் மொழியில் இருந்ததுதான் கணினி மொழி தோன்றியது என்று நினைவில்கொள்வோம் நமது தமிழ் என்று பெருமைகொள்வோம்...!!!

இந்த தொகுப்பின் ஆய்வாளர்,

பி.மதியழகன்

சிங்கப்பூர்

தென்புலத்தார்2 வாட்சப் குழு   04/08/2018

யாழ்பாணர்கள் என்னும் ஆழ்வார்கள் - தமிழனின் தடயங்கள்

     சங்க தமிழ் வளர்த்த 12பாணர்கள்..

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பண் பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல், நடனம் ஆகிய கலைகளைத் தொழிலாக கொண்டோர் பாணர் எனப்பட்டனர். நாடோடிகள் போன்று பல ஊர்களுக்கு சென்று இவர்கள் தம் கலைகளால் மக்களை மகிழ்விப்பர். இக் கலைக்களில் ஆண்களைப் போன்றே பெண்களும் இணையாக ஈடுபட்டனர். பெண்கள் பாடினிகள் என்று அழைக்கப்பட்டனர்.


அக்காலத்தில் பக்தி இலக்கியம் பரவ பாணர் சமூகத்தார் பெரும் பங்காற்றியுள்ளனர். பாணர் சமூகத்தைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சோமசுந்தரக் கடவுள் இவருக்கு தங்கப்பலகையிட்டு ஆலயத்தினுள் அவர்முன் அமர்ந்து யாழிசைக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது.


அதே போல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரை திருவரங்கப் பெருமான் தன் அருகில் இருத்தி பாசுரம் பாடக் கேட்டதாகக் கூறப்படுகிறது.


63 நாயன்மார்களை தமிழ் இலக்கியம் காட்டும் நூல் சேக்கிழார் இயற்றிய

பெரிய புராணம்..


இவர் பெயர் பட்ட பெயரே மாடுகளை வைத்து உழவு புரிபவர் என்றே பொருள் படும்..

மாடுகளை 12நூற்றாண்டு வைத்திருந்த ஆயன்களின் (இடையர்) தலைவன்கள் தொகுப்பே இந்த நாயன்மார்கள்..


நாடுகளில் அடிப்படையில் நாயன்மார்களை நோக்கும் போது பெருவாரியான அடியார்கள் சோழ நாட்டினை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சேர, பாண்டிய நாடுகளோடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு, வடநாடு ஆகிய நாடுகளில் உள்ளோரும் நாயன்மார்களாக இருந்துள்ளார்கள். சோழ நாட்டிற்கு அடுத்தபடியாக தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள் உள்ளார்கள்.


காலம், குலம், நாடு, இயற்பெயர் - காரணப்பெயர் என பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள். இவ்வாறான ஒப்புமை நோக்குமை நாயன்மார்களைப் பற்றிய புரிதல்களை அதிகப்படுத்த உதவுகின்றன.


இவர்கள் தலைவர்கள்.. ஒவ்வொரு குலத்திற்கு பின்னர் தலைவனாக மாறியவர்கள்.. பாட்டை எளிய நடையில் அனைத்து சமூகத்தினருக்கும் கொண்டு சேர்த்தனர்.. இவர்கள் பாடிய

திருத்தலம் ஊர்கள் வாழ்ந்தயிடமே..


நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர்ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.



தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம்(அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.


4000 பாடல் கொண்ட தெய்வீக பா ஸ்வரம் (பண் இசை குறுகள்)


குறிப்பாக அக்காலத்தில் பாயிரம் மற்றும் பிரபந்தம்  (ஸ்லோகம்) மாகவே செய்யுள் இயற்றப்பட்டது..



இந்த 4000 பாசுரங்களில் ஒவ்வொரு ஆழ்வார்களும் எவ்வளவு பாடினார்கள் என்பது குறித்த தகவல்


பொய்கையாழ்வார் - 100

பூதத்தாழ்வார் - 100

பேயாழ்வார் - 100

திருமழிசையாழ்வார் - 216

மதுரகவியாழ்வார் - 11

நம்மாழ்வார் - 1296

குலசேகராழ்வார் - 105

பெரியாழ்வார் - 473

ஆண்டாள் - 173

தொண்டரடிப் பொடியாழ்வார் - 55

திருப்பாணாழ்வார் - 10

திருமங்கையாழ்வார் - 1361


அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும்  வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.


ஆனால் யார் இவர்கள்?


நாகர் இன மக்களின் இடபெயர்ந்த இடையர் என்னும் ஆயர்களே இந்த யாழ் பாணார்கள்..


குறிப்பாக இவர்கள் பாக்கள் சுரமாக வகைபடுத்தபட்டு அதனை எளியமுறையில் கொடுத்துள்ளனர்..


இவர்கள் 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர்.  இவை தவறாக புகுத்தியதாகவே தெரிகிறது காரணம் இவர்கள் பிறந்த காலத்தை பக்தி இலக்கியம் வடித்த புராணம் பெயரோடு தொடுத்துள்ளனர்..


மேலும் சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.


புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார்கள்காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள்என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.


சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன் (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தார் இவரே 12 ஆழ்வார்களை வரிசைபடுத்திய நாதமுனி..


இராமானுசரும், வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் தமிழை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா வரை ஆன்மீகத்தை பரப்பியுள்ளனர்.


 அரங்கத்துறையும் இறைவனின் அருளும், அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர்.


நாதமுனிகள் காலத்திற்கு முன் ஆழ்வார்களின் அருமையான செந்திறத்த தமிழோசை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாக ஒரு சில பதிகங்களை மட்டுமே ஓதி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்று பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டது.


தமிழ் பாசுரங்ளை சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஒரியா மொழிகளில் எழுதி வைத்து, அந்த தேசத்து வைணவப்பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தது. வேதம், ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக் கூட பைந்தமிழ் பாசுரங்களை இசைத்து பாடுவதால் அப்பிழையைக் கூட கடவுள் பொறுப்பதாக கூறியதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுசர் அனைத்து வைணவ ஆலயங்கள், இல்லங்களிலும் பூஜை முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.


 திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார். இல்லறச் சடங்குகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் ஓதிவரும் வழக்கம் இன்றும் உள்ளது.


1000.. வருடங்கள் பழமையான {காந்திஸ்வரம்} சிவன் கோயில், எட்டு சித்தர்கள் தவம்செய்த விலாங்காய்மரங்கள், எட்டு சித்தர்கள் வழிபட்ட லிங்கம் ராமர் காலடி பாதம் பதித்த பழமையான கல்வெட்டு இப்படி பல சிறப்புகளை கோண்டது ஆழ்வார்தோப்பு..


ஆழ்வார் தோப்பு நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இராமசுவாமி திருகோயில். ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வெள்ளி கிழமை கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெரும். இந்த திருவிழாவை காண அனைத்து ஆழ்வார்தோப்பு வெளியூர்வாசிகளும் குடும்பத்தாருடன் வந்து இந்த திருவிழாவை தவறாமல் கண்டுகளித்து எம்பெருமான் ராமனின் அருளை பெற்று செல்வார்கள்.

இன்றைய இக்குலபிரிவினர் அக்காலத்தில் வில்லடித்து பாடிய வில்லுப்பாட்டு காரனே..


அதே போல் இராமனும் காடுகளில் வேட்டையாடும் மற்றும் வில்லடித்து அரங்கத்தில் பாடும் அரங்கநாதனே..


நாகர்கோவிலை ஆண்ட காரிமாறன் தம்பதினருக்கு பிறந்தவர் சடகோபன் என்னும் *நம்மாழ்வார்* இவரும் வில்லடித்து பாடும் வில்லுப்பாட்டு பாடும் ஈழவர் சமூகத்தின் வழி வந்தவர்..



 இவருக்கு பின்னர் இவர் மாணவனாகவும் சீடராகவும் மதுரகவி ஆழ்வார் வந்தார்.. இவர் மதுரை கவி ஆழ்வாரே..


மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூரில் என்பது இன்றைய தூத்துகுடி (தூதுவர்கள் குடி புகுந்த இடமே) பாணார்கள் ஊர்கள் ஊராக செல்லும் போது தூதுவர் ஆனார்கள்...


திருவெக்கா என்னும் இன்றைய காஞ்சியில் பிறந்தவர் பொய்கையாழ்வார்..

திருமயிலை என்னும் இன்றைய சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் பேயாழ்வார்..


இன்றைய மகாபலிபுரம்  (மாமல்லபுரம் ) த்தில்

பிறந்தவர் பூதத்தாழ்வார்..


இவர்கள் மூவரும் வில்லடித்து பாடிய யாழிசை பாணார்கள்..


 திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு குலசேகராழ்வார்  பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!.



இவர்களே யாழ் மீட்டிய பாணர்கள்.. இலக்கியத்தில் அல்லது கல்வெட்டுகள் யாரும் குறிப்புகள் எதுவும் எழுதவில்லையே.. யாழ்பாணார் இவர்களா?


ஆம் யாழ் பாணார்கள் இவர்கள்.. ஆதிகாலத்தில் இலங்கையில் இருந்து இடபெயர்ந்த இடையர்கள்..

இவர்கள் நாகர் இன மக்கள் இவர்களின் இரு பிரிவினர் சேர்ந்த இடமே இன்றைய நாகர்கோவில் மற்றும் நாகப்பட்டினம்..


தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியேபள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.


இவர் பிறந்த ஊர் திருமண்டகுடி இப்போதைய சோழநாடு..


இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலக்கிரமத்தில் தீண்டாக்குலமானது. அக்குலத்தில் பாண் பெருமாள் எனும் பெயரோடு ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக பிறந்த இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும் அம்மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனை பாடிவந்தார்.

இவரை கல்லால் அடித்த கதைகள் உண்டு.. இவர் பிறந்த ஊர் இன்றைய திருச்சி.. அமலனாதிபிரான் என்ற பெயர் இவருக்கு உண்டு.. அனாதையாக சுற்றி திரிந்து பாடுபவர் என்றே பொருள்..


பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலி திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். 'கலியன்' என்னும் இயற்பெயர் கொண்ட இவர் முத்தரையர் இனத்தை சார்ந்தவர் . ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார்.  இவ்ஊரும் சோழ மண்டலத்தில் உள்ள சீர்காழி இவர் பிறந்த ஊர்..சாரங்கம் என்பது திருமால் வில்லின் பெயராகும். இதனை ஏந்தியமையால் திருமால் சாரங்கன் என்றும், சாரங்க பாணியென்றும் அறியப்பெறுகிறார். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் சாரங்கத்தின் அம்சமாக அறியப்பெறுகிறார்.


பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விதணு சித்தர்' என்பது இவர் இயற்பெயர்.


இவரது பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின்முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள்), 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன.


கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்துள்ளன. இவர் பெரிய யாழ் வகையில் மீட்டும் வல்லமையுடையோர்..


அவ்வாறிருக்க இவர் பிறந்த ஊர் இவரின் அடையாளம் இன்றைய திருவில்லிபுத்தூர்..

குறிப்பாக நாகர் இனமக்களை  குடிபுகுந்தயிடம் நாகங்கள் புத்தில் வசித்து வருவதால் நாகர்  இனமக்கள் வாழும் இடத்தை புத்தூர் என்று அழைக்கப்படும்.. வில்லிபுத்தூர் என்னும் வில்லடித்து பாடும் நாகர் இனமக்கள் வாழ்ந்த இடமே..


ஆண்டாள் திருவில்லிபுத்தூர் ஊரில் பெரியாழ்வார் ல் வளர்க்கபட்டவர் ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழிஎன்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.


தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.


தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.


இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.


திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணம்.


திருப்பாவையின் இந்த முச்சுவையும் தித்திக்கும் பாக்களில் இரண்டொன்றைக் கீழே காணலாம்:


கோதை நமக்கு அளிக்கும் பக்திச் சுவையைக் காணலாம். ஓரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் இயம்புகிறாள் கோதை:


 நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. பாடல்கள் அனைத்திலும் காதல் சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம்.


இந்நூல் ஒவ்வொன்றும் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்களில் அமைந்துள்ளன.


முதற் பத்துப் பாடல்கள், கண்ணனை இணக்கு எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை. இவை அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களாக அமைந்துள்ளன.


இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைந்தவை. இப் பாடல்கள் கலிவிருத்தங்களாக அமைந்தவை.


கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்ததது..

 மூன்றாம் பத்து. இப் பாடல்கள் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள்.


நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை. இவை கலிவிருத்தப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளன.குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளவை..


 ஐந்தாம் பத்தைச் சேர்ந்த பாடல்கள். இவை எழுசீர் ஆசிரிய விருத்தங்களாக அமைந்துள்ளன.மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்த பாடல்கள்..


 ஆறாம் பத்தில் அமைந்துள்ளன. இவையும் கலிவிருத்தப் பாடல்கள் ஆகும்.


ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை. கலிவிருத்தப் பாடல்கள்.


மேகவிடுதூதாக அமைந்தவை..


 எட்டாம் பத்து தரவுக் கொச்சகக் கலிப்ப்பா எனும் பாவகையில் ஆக்கப்பட்டுள்ளது.


ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்ளன. இவை கலிநிலைத்துறை எனும் பாவகையில் உள்ளன.


மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்ட பத்தாம் பத்து, கலிநிலைத்துறை எனும் பாவகையைச் சேர்ந்தது.


திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்த பதினோராம் பத்துப் பாடல்கள் தரவுக் கொச்சக் கலிப்பா வகையைச் சேர்ந்தவை.



பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள் சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனவை.


அவலம் தணி என இறைவனைக் கோரும் பதின்மூன்றாம் பத்தும் அறுசீர் ஆசிரிய விருத்தப்பாக்களால் ஆனவையே.


பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக்கூறும் இறுதிப் பாடல்களும் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாக்களே.


சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார்.


அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.


ஆனால் இளவயதில் இவருக்கு கண்ணன் பற்றிய பாடல்கள் பின்னாளில் முழ்கி சிறகை விரித்தாலும்.. ஏன் திருவரங்கம் அழைத்து வந்து அரங்கநாதனை மணக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது?


இவர் கருவறை சென்ற படி முக்தியடைந்தை எடுத்துக்கொண்டாலும் ஏன் அருகிலேயே கிருஷ்ணன் கோயில் இருக்க திருவரங்கம் வரவேண்டும்..


பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சிறுவயதில் நேர்ந்து விடப்பட்ட பெண்கள் ஆவர் தேவரடியர்கள்..


அரையர் என்போர் வைணவக்கோயில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். *இவர்கள் அனைவரும் ஆடவரே.*


 இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை என்று அழைக்கப்படுகிறது.


இன்று திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகிய தமிழக வைணவக் கோயில்களிலும் தென்கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை  திருநாராயணபுரம் கோயிலில் மட்டுமே அரையர் சேவை வழக்கில் உள்ளது. மார்கழி மாத பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவங்களில் அரையர் சேவை சிறப்பாக நடைபெறுகிறது.


அரையர் என்பவர் கோயில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற்பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப்பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறைமுன் அரையர் சேவை செய்வதை 9 ம் நூற்றாண்டில் கட்டாயமாக்கியுள்ளனர்..

 


இவர்கள் ஏன் பெருமாள் மற்றும் கிருஷ்ணனை பாடவேண்டும்?


சக்கரத்தாழ்வார் -மயன் என்னும் மாயோன் இவரே..

ரதம் வடித்த முதல் தச்சன் என்னும் தச்சரதன் மயன் என்னும் மாயோனே ..


வில்லடித்து பாடிய வில்லுப்பாட்டு காரனே மயனின் மகன் இராமன் என்ற இராகவன்.. கிருஷ்ணன் லட்சுமணன் -ஊர்மிளை  மகன்.. திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன் பிறந்த ஊரே.. ஆயர்பாடியில் என்பது திருவில்லிபுத்தூரே இன்றும் பால்கோவா விற்கு பெயர் கொண்டுள்ளது.


சொல்ல போனால் பாபாணர்களே (பாடல் பாடியவரே) பார்பனர்கள்..

இராமனுக்கு பின்பு சாத்தனர் என்ற (சாஸ்தா) குருக்களே பிராமணர்.. பிரம்மன் என்பவர் ராமனே..


வில்லடித்து பாடும் ராமன் துணைவி வீனை மீட்டும் கலைவாணியே. .


***** *சுபம்* ******

கவுரியர் வாட்சப் குழு   20/06/2018

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

சனி, 7 ஜூலை, 2018

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?  ஒரு பார்வை...

குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.

நன்றி
துரை சித்தப்பா _  வீரபாண்டி வாட்சப்குழு 

வியாழன், 28 ஜூன், 2018

ஜம்பை ஏரியைப் பராமரிப்பவர் காலடியில் என் தலையை வைக்கிறேன்!’ – மன்னரின் கல்வெட்டு

     1000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் ஆட்சியாளர் ஒருவரின் மன நிலையைப் பாருங்கள்… ஏரியைப் பராமரிப்பவர்களின் காலடியில் என் தலையை வைக்கிறேன் என்று கல்வெட்டே எழுதி வைத்திருக்கிறார் என்றால், விவசாயத்தையும், பாசன முறைகளையும் அவர்கள் எப்படியெல்லாம் போற்றிப் பாதுகாத்திருக்கிறார்கள்!


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கல்வெட்டைப் பதிவு செய்துள்ளார் இப்பகுதியை ஆட்சி செய்த குறுநில மன்னர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலுர் வட்டத்தில் திருக்கோயிலூர்- திருவண்ணாமலை வழித்தடத்தில் மணலூர்பேட்டையில் இருந்து மேலந்தல் கிராமம்செல்லும் வழியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் #ஜம்பைஎன்ற சிற்றூர் அமைந்துள்ளது.
இவ்வூரின் கிழக்கில் உள்ள குன்றில் அதியமான் பற்றிய குறிப்புகள் அடங்கிய தமிழ் பிராமி கல்வெட்டு உள்ளது.
இந்த குன்றின் மேற்கில் உள்ள ஏரியில், கல் உரல் ஒன்று உள்ளது. ஐந்தடி உயரமும், மூன்றடி விட்டமும் உள்ள இந்த உரலில் நடுப்பகுதி குழி ஓரடி ஆழமும் கொண்டுள்ளது.
உரலின் மேல் விளிம்பில் 10 செ.மீ. அகலம் உள்ள பகுதியில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகள் கரடுமுரடாக இருப்பதால் இது ஏதாவது ஒரு இடத்தில் நிலையாக புதைத்து வைத்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் உருவ அமைப்பைக் கொண்டு இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம்.
கல்வெட்டு கூறும் செய்தி…
இந்த கல்வெட்டில், “வ த ஸ்ரீ கள்ளையன் செய்த தருமம் கழத்துவப்பட்டியும் பனைப் பெரிக்கட்டின இவை என்முடி மெலன’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏரியை கள்ளையன் என்பவர் உருவாக்கி இருக்கலாம். களத்துமேடு மூலமாகப் பெறப்படும் வருவாயிலிருந்தும், பனை மர குத்தகை மூலமாகவும் பாதுகாக்க வேண்டும் எனவும், இந்த பொறுப்பை தொடர்ந்து நிலைநாட்டி வருபவர்களின் காலடியை என் தலைமேல் வைத்துக்கொள்வேன்’ என்று கள்ளையன் கூறுவதாக இதில் காணப்படும் வாசகங்களுக்கு கல்வெட்டாய்வாளர்கள் பொருள் கூறுகின்றனர்”
பாசனத்துக்காக ஏரிகளை உருவாக்கி அதனால் பயனடையும் விவசாயிகளிடம் இருந்து களத்துமேட்டு பயன்படுத்தியதற்கான வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏரியின் அருகில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டும் அவற்றை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் கிடைத்த வருவாயையும் பயன்படுத்தி ஏரியை பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளதை இந்த கல்வெட்டுச் செய்தி உறுதி செய்கிறது.
கி.பி. 900-ம் ஆண்டு பல்லவர்கள் ஆட்சி முடிந்து சோழர்கள் ஆட்சிக்காலம் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படும் செய்திகளின் அடிப்படையில், ஜம்பை ஏரியில் கிடைத்த உரலில் குறிப்பிடப்படும் கள்ளையன் இப் பகுதியின் குறுநில ஆட்சியாளராக இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

நன்றி  அண்பழகன்

செவ்வாய், 26 ஜூன், 2018

நபது உணவு முறையை குறை கூறிய பண்ணாட்டு வியபாரி அந்த பழைய உணவு முறையை புதுமை என்று வியபாரம் செய்கின்றான்

       இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல் விக்கிறான்.

உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான்.

மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் .

நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான்.

இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம்.

நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செய்கிறேன் என்பது தான் கசப்பான உண்மை.

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புலுக்கையை அ ள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம், நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம், திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது.

நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்...🌒💐🙏

10/6/2018 கவுரியா வாட்சப்குழு இளங்கோவன்

சங்க இலக்கியத்தில் வழிபாட்டுத் தொன்மங்கள்

     சங்க இலக்கியத்தில் வழிபாட்டுத் தொன்மங்கள்
முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் - 641 028
பேச : 9842495241.

     பண்டையத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் சிறப்பு வாய்ந்த நூலாக விளங்குவது குறுந்தொகை ஆகும். இஃது எட்டுத் தொகையில் இடம் பெறும் அகநூல்களுள் ஒன்றாகும். இதில் கடவுளரைப் பற்றியும், கடவுள் வழிபாடு குறித்தும் பல்வேறு தொன்மக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழந்தமிழரின் சமய நம்பிக்கைகளை எடுத்துரைப்பனவாக உள்ளன.
தொன்மம் – விளக்கம்
தொன்மம் (ஆலவா) என்பது பழமை எனப் பொருள்படும். அகராதிகள் தொன்மம் என்பதற்கு பழமை, செய்யுளில் இடம் பெறும் எண்வகை வனப்புகளில் ஒன்று எனப் பொருள் தருகின்றன.பொதுவாக தொன்மம் எனப்படுவது பண்டைய மக்களின் சமயம், பழக்கவழக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கலைகள் போன்ற வாழ்க்கையைச் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்கு முறைகளைக் குறிக்கும்.
‘‘தமிழில் வீரம் என்பதற்கு நிகரான சொல்லாக ‘பெருமிதம்’ என்பதனை பழந்தமிழர்கள் பயன்படுத்தினர். அதுபோலவே புராணம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாக ‘தொன்மை’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது’’(யாழ். சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப., 8)
தொன்மம் என்பது நமக்குள் புதிதாக உருவாவதன்று அது நம் பிறப்பிலிருந்தே உண்டு என்பதை, ‘‘தொன்மமானது மனத்தின் விழிப்புநிலையில் ஆழ்மனத்தில் கருப்பெறுகின்றது. நம்மைக் கேட்காமலேயே உடல் வளர்வதைப் போலவே இயற்கையாகவே தொன்மங்கள் உரம் பெறுகின்றன’’     ( கதிர்.மகாதேவன், தொன்மம், ப. 19) என்கிறார் கதிர் மகாதேவன்.
‘‘தொன்மம் என்பது புனிதமான உண்மை (ளுயஉசநன வுசரநன) என்கிறது அமெரிக்கானா கலைக்களஞ்சியம்.  மேலும், தொன்மம் செயல்பாட்டின் அடிப்படையில் சடங்குகளுடனும் சமயங்களுடனும் தொடர்புடைய சமுதாயம் சார்ந்த கதை’’ (யாழ்.சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப. 49) எனலாம்.
ஆலவா (மித்) என்ற ஆங்கிலச் சொல் ஆலவா என்ற கிரேக்கச் சொல்லின் வேர்ச் சொல்லாகும். இதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக ‘தொன்மம்’ கையாளப்பட்டு வருகிறது. கடவுள் பற்றியும் உயர்மனிதர்கள் பற்றியும் அமைந்த செய்திகள் தொன்மத்தில் அடங்கும்.
தொன்மம், பழமரபுக் கதைகள் இரண்டும் ஒன்றுமையுடையதாக இருப்பினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு தொன்மம் கடவுளர் செயல்களை விரித்துரைப்பது; பழமரபுக் கதைகள் மனிதர்களை முதன்மைப்படுத்துவது; சமயம் சார்ந்தும் சடங்குகளைப் பற்றி விளக்குவதும் தொன்மத்தில் அடங்கும்.
தொல்காப்பியம் தரும் விளக்கம்
தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் தொன்மம் என்பதற்கு,
‘‘தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே’’
என்கிறது தொன்மை எனப்படுவது, உரையோடு கூடிய பழமையாகிய கதைப் பொருளில் வருவது’’ (தொல் – செய். இளம்பூரணர் உரை, நூ.எ., 538)என்று இளம்பூரணர் உரை விளக்கமளிக்கிறது.
மேலும், முதல் பொருளுள் நிலம் பற்றிக் கூற விளைந்த தொல்காப்பியர்,
‘‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’
(தொல்., அகத்திணை., நூற்பா, 5)
என்ற இந்நூற்பாவின் மூலம் கடவுளர் பற்றிய தொன்மங்களைப் பதிவு செய்கிறார்.
குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்
குறுந்தொகையில் இடம் பெறும் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை,
1.முருகன் பற்றிய தொன்மம்
2.கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்
3.இயற்கை வழிபாடு
4.நடுகல் வழிபாடு  என நான்கு வகையாகப் பகுக்கலாம்.
முருகன் பற்றிய தொன்மம்
‘‘சேயோன் மேய மைவரை உலகம்’’ எனத் தொல்காப்பியம் செப்புவதிலிருந்து குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் என்பது புலனாகிறது.
குறுந்தொகையில் முருகன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.  முருகப் பெருமான் அசுரர்களை அழித்த புராணச் செய்தியை,
‘‘செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த
செங்கோ லம்பின் செங்கோட்டி யானை
கழல்தொடிச் சேஎய் குன்றம்’’ (குறுந்.,பா.உ.1)
என்ற வரிகள் விளக்கி நிற்கின்றன.  இதேபோல் முருகன் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை,
‘‘அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இனர்
மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து’’
(திருமுருகாற்றுப்படை, 59-60 வரிகள்)
எனத் திருமுருகாற்றுப்படையும்,
‘‘பாய்இரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு
சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர்உழக்கி
தீஅழல் துவைப்ப திரிய விட்டெறிந்து
நோயுடை நுடங்கு சூர்மா முதல் தடிந்து
…………………
மாய அவுணர் மருங்குஅறத் தபுத்த வேல்’’
(பரிபாடல் செவ்வேள் 5 : 1-7 வரிகள்)
எனப் பரிபாடலும் எடுத்துரைக்கின்றன.  இச்செய்தியினைக் கந்தபுராணத்திலும் காணலாம்.
கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்
மலையின் ஒரு பகுதியில் இடம் பெற்ற அணங்கு போன்ற பெண் தெய்வம் அல்லது தெய்வத்தால் வரையப்பட்ட பாவை கொல்லிப்பாவையாகும்.
சேர மன்னனின் மலையின் மேற்குப் பகுதியில் வருத்தக் கூடிய கொல்லித் தெய்வம் இருந்ததனை,
‘‘பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய
நல்லியற் பாவை’’ (குறுந்தொகை, ப., 130)
என்ற பாட்டாலும்,
‘‘வல்வில் ஓரி கொல்லிக் குடவரை
பாவையின் …….. ……….. ……..’’
என்ற பாட்டாலும் அறிய முடிகிறது. மேலும்,
‘‘…………. ………… பயங்கெழு பலவின்
கொல்லிக் குடவரை பூதம் புணர்த்த
புதிதியல் பாவை’’                      
(குறுந்தொகை, ப., 145)
என்ற பாடல் வாயிலாகவும், கொல்லிமலையின் மேற்குப் புறத்தில் தெய்வத்தால் வரையப்பட்ட பாவை உண்டென்பதை,
‘‘பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லிக்
குடவயின் ……….. …………… ……………
நெடுவரைத் தெய்வம் எழுதிய
வினைமான் பாவை’’
(நற்றிணை, பா.எ., 192)
என்ற பாடலின் வாயிலாகவும் உணர முடிகிறது. இவை கொல்லித் தெய்வம் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை விளக்கும் வகையில் அமைந்துள்ளன.
இயற்கை வழிபாடு
பண்டையத் தமிழர்கள் இயற்கையைக் கண்டு அஞ்சி வாழ்ந்தனர்.  அதனால், அச்சத்தைப் போக்க எண்ணி இயற்கையோடு கூடியியைந்து வாழ்ந்தனர்.
சங்க கால மக்கள் பெண்கள் பிறையைத் தெய்வமாக தொழுது வணங்கினர் என்பதை,
‘‘செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே’’
(குறுந்தொகை, ப., 459)
என்ற குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. இப்பாடலில் பிறையைப் பலசமயத்தோடும் தொழுதனர் என்ற செய்தி இடம் பெறுகிறது.  மேலும் கன்னிப் பெண்களும் பிறையை வணங்கினர். இச்செய்தியை,
‘‘ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்
புல்லென் மாலை’’       (அகநானூறு, பா.எ., 239)
என்னும் அகநானூற்றுப் பாடல் வரிகளும்,
‘‘குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழி சிறக்க நின்வலம்படு கொற்றம்’’
(மதுரைக் காஞ்சி, 193-194 வரிகள்)
எனும் மதுரைக் காஞ்சி வரிகளும் புலப்படுத்துகின்றன.
‘‘கன்னிப் பெண்கள் மட்டும் பிறையைத் தொழுவதற்கானக் காரணம் நல்ல கணவனைப் பெற்று இல்லறம் சிறக்கவும், கரு வயிற்றில் உருவாகவும், மழைவளம் சுரந்து வளம் பொழிய வேண்டும் என்பதற்காகவும் ஆகும்’’ (மேற்கோள் விளக்கம் – கோ.ப. சுதந்திரம், பொதுச்சடங்குகளில் இலக்கியம், ப., 62).
நடுகல் வழிபாடு
தம் நாட்டினைக் காக்கும் பொருட்டு, பகைவரோடு போரிட்டுப் பட்டு வீழ்ந்த வீரனுக்காக எடுக்கப்படுவது ‘நடுகல்’ எனப்படும்.
இந்நடுகல்லில் இறந்துபட்ட வீரனின் பெயரும் பீடும் எழுதி, தெய்வமாக வழிபட்டு வந்ததைத் தொல்காப்பியர் காலந்தொட்டு அறிய முடிகிறது.  இதனையே,
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மரபின் கல்லொடு புணர’’
(தொல், புறத்., இளமபூரணர் உரை, நூ.எ., 63)
எனத் தொல்காப்பியம் மொழிகிறது.
மறக்குடியில் பிறந்த அனைவரும் இந்த நடுகல் வழிபாட்டைத் தம் இனத்திற்குச் சிறந்ததெய்வ வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தனர். இச்செய்தியை,
‘‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவினல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலமே’’
(புறநானூறு, பா.எ., 335)
எனும் இப்புறநானூற்றுப் பாடலும் புலப்படுத்துகிறது.
இத்தகு புகழ்வாய்ந்த நடுகல்லில் வீரரது பெயரும் பீடும் பொறிக்கப்பட்டு இருப்பதற்கு,
‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலிசூட்டிய பிறங்குநிலை மறவர்’’ (பா.எ., 67)
என்ற அகநானூற்றுப் பாடலே சிறந்த சான்றாகும்.
இவ்வாறு எடுக்கப்பட்ட நடுகல்லிற்கு வீரர்கள் தங்களது கிடுகினையும், வேல்களையும் வரிசையாய் நிரல்களாக நட்டு அரண் செய்தனர். இந்தச் செய்தியை,
‘‘மாலைவேல் நட்டு வேலி யாகும்’’ (குறுந்தொகை, ப., 358)
எனும் குறுந்தொகைப் பாடல் வரியும்,
‘‘கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லின் அரண் போல’’ (பட்டினப் பாலை, 78-79 வரிகள்)
என்ற பட்டினப் பாலை வரிகளும் தெளிவாக உணர்த்துகின்றன.    இங்ஙனம் பழந்தமிழ் செவ்வியல் இலக்கியமான குறுந்தொகையில் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்கள் அமைந்து தமிழர் தம் பண்பாட்டினையும் சமயஞ்சார்ந்த நம்பிக்கையினையும் புலப்படுத்துகின்றன.

16/6/2018 கவுரியா வாட்சப்குழு

புதன், 20 ஜூன், 2018

சங்க இலக்கியம் குறிப்பிடும் கடற்கொள்ளையர்கள்…..

     வடக்கே வேங்கட மலையும் தெற்கே தென்குமரியும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட பரந்த தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களுள் சேரர் என்பவர் இன்றைய கேரளப் பகுதிகளை ஆண்டவர்கள் எனப் புரிதலுக்காகக் குறிப்பிடலாம்.

சேர மன்னர்களின் வரலாற்றை அறிவிக்கும் நூல்போல் விளங்குவது பதிற்றுப்பத்து என்னும் சங்க இலக்கியமாகும். இதில் பத்துப் புலவர்கள் பத்து சேர மன்னர்களைப் பற்றிப் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுதியான நூறு பாடல்களை இந்நூல் கொண்டிருந்தது. முதற் பத்தும் கடைசிப் பத்தும் நீங்கலாக எண்பது பாடல்கள்தான் அதாவது எட்டுப் பத்துகள்தான் இன்று கிடைத்துள்ளன.

இவற்றுள் இரண்டாம் பத்து என்னும் பகுதியைப் பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார் ஆவார்.இவர் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்புலவரைச் சிறப்பிக்க நினைத்த மன்னன் இமயவரம்பன் உம்பற்காட்டுப் பகுதியில்(மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்குப் பகுதி) ஐந்நூறு ஊர்களையும், தென்னாட்டு வருவாயில் முப்பத்தெட்டு ஆண்டுவரை பகுதியும் வழங்கினான் என அறிய முடிகிறது.

கடம்பர் என்ற கடற்கொள்ளையரை அழித்து வெற்றியுடன் மீண்ட இமயவரம்பன் செடுஞ்சேர லாதனை அவன் நாட்டு மக்கள் பாராட்டி வரவேற்றனர். அக்காட்சியைக் கண்ட புலவர் பெருமா னுக்குக், கடலுள் மாமர வடிவில் இருந்த சூரபத்மனை அழித்து மீண்ட முருகன் நினைவுக்கு வருகின்றான். அம் முருகனாகவே புலவர் இமயவரம்பனை எண்ணிப் பாடியுள்ளார்.

கடம்பர்கள் என்பவர்கள் கடலிடை உள்ள தீவுகளை வாழிடமாகக் கொண்டு அவ்வழிச் செல்லும் கலங்களைக் (கப்பல்களை) கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இக் கொடியவர்களால் தம் நாட்டில் நடைபெற்று வந்த கடல்வணிகம் பாதிக்கப்பட்டதை அறிந்த இமயவரம்பன் அக்கடம்பர் பகுதி மீது(அரபிக்கடல் பகுதியில்)படையெடுத்தான்.

சேரநாட்டுப் படை மறவர்கள் கடம்பர்களின் கலத்தையும் நாட்டையும் பாழ்படுத்தினர். சேரர் படையுடன் போரில் வெற்றிபெற முடியாது என உணர்ந்த கடம்பர்கள் தங்கள் காவல் மரத்தை மட்டுமாவது காத்துக்கொள்ள நினைத்தனர். அவர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை அழிக்கும் முன் கடம்பர்களையும் சேரர் படை அழித்தது. கடம்ப மரத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி, வீழ்ந்த கடம்பமரதைக் குடைந்து முரசாக்கி மறவர்கள் முழக்கம் செய்தனர். அம் முழக்கொலி கேட்ட சேரநாட்டுப் படை மறவர்களும் மக்களும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.

இதனைக் கண்ட குமட்டூர்க் கண்ணனார்,

“வரைமருள் புணரி வான்பிசிர் உடைய,
வளிபாய்ந்து அட்ட துளங்கு இரும் கமஞ்சூல்
ஒளிஇரும் பரப்பின் மாக்கடல் முன்னி
அணங்குடை அவுணர் ஏமம் புணர்க்கும்
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறள்வேள் களிறு ஊர்ந்தாங்கு…
“பலர்மொசிந்(து) ஓம்பிய அலர்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்று எறி முழங்குபணை செய்த வெல்போர்
நார்அரி நறவின் ஆர மார்பின்,
போர்அடு தானைச் சேர லாத!” (பதிற்றுப்பத்து 2: 1-16)
எனவும்,

“துளங்கு பிசிர்உடைய மாக்கடல் நீக்கிக்
கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை” (பதிற்றுப்பத்து 17: 4-5)
எனவும்

“இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச்சென்று
கடம்புமுதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேர லாதன் ” (பதிற்றுப்பத்து 20 :2-5)
எனவும் பாடியுள்ளார்.

அகநானூற்றுப் புலவர் மாமூலனார் அவர்கள் (கி.மு.மூன்றாம் நூற்றாண்டு. பார்க்க: பே.க.வேலாயுதனாரின் சங்ககால மன்னர் வரிசை,1997)

“சால்பெரும் தானைச் சேரலாதன்
மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய
பண்அமை முரசின் கண்அதிர்ந்தன்ன”(அகம். 347)

(பொருள் : பெரும் படையுடையவன் சேரலாதன். அவன் பெரிய கடலில் பகைவர்களை அழித்து அவர்களின் கடம்ப மரத்தை அறுத்து முரசு செய்தான். அம் முரசு முழங்கியது போல) எனவும்

“வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பறுத்து” (அகம். 127 )

(பொருள்: வெற்றி தரும் முரசத்தையுடையவன் சேரலாதன்.அவன் கடலில் பகைவரை வென்று அவரது காவல் மரத்தை வெட்டினான்) எனவும் பாராட்டியுள்ளனர்.

பண்டு கிரேக்க, உரோமை நாடுகளுக்குச் சேரநாட்டு யானைத் தந்தங்கள், மிளகு முதலிய பொருள்களும் பாண்டியநாட்டு முத்து உள்ளிட்டவையும் மேலைக்கடற்கரை வழிச் சென்றமையும் அந்நாட்டின் செல்வம், பொருள்கள் தமிழகம் வந்ததையும் வரலாற்றால் அறிகிறோம். அவற்றைக் கடம்பர்கள் கொள்ளையடித்ததையும் ஒருவாறு உய்த்துணர முடிகிறது.

இப்பாடலடிகளின் வழியாக இன்று சோமாலிய கடற்கொள்ளையர்கள் செய்யும் வேலைகளைப் பண்டைய கடம்பர்கள் செய்தனர் போலும். இவை பற்றி விரிவாக ஆராய இடம் உள்ளது. கடம்பர்கள் இல்லை. கதம்பர்கள் எனப் பொருள்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர்.இக் கதம்பர்கள் மைசூர் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனவும் அறியமுடிகிறது. தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

– முனைவர் மு.இளங்கோவன்

கவுரியா வாட்சப் குழு ஒரிசா பாலு 10/06/2018

அறிவியல் பேசும் சங்க இலக்கியங்கள்

Thursday, 03 July 2014 03:19
நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

     அறிவியல் என்பதற்கு விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், ஆய்வுத்துறை, அறிவு, பொருளாய்வுத்துறை, புறநிலை ஆய்வுநூல், அறிவு பற்றிய துறை, பருப் பொருள்களை ஆயும் நூல் தொகுதி ஆகிய கருத்துக்கள் அகராதியை அலங்கரித்து நிற்கின்றன. மனித இனம், வாழ்வு, வளம், நலம், பண்பு, வசதிகள் யாவும் மேன்னிலையடைவதற்கு உறுதுணையாயிருப்பது உலகில் உலாவும் அறிவியலாகும். மண்ணியல், வானியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் ஆகிய பல துறைகள் அறிவியலில் அடங்கும். இவ்வாறான அறிவியலைப் பூமித் தாயின் மக்களில் ஒரு சிலர் அறிவியற் பூங்காவில் நுளைந்து தத்தமக்கான துறைகளில் ஆர்வங் கொண்டு உலக முன்னேற்றத்தில் உதவிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சேவை மகேசன் சேவையாகும். இனி, பண்டைத் தமிழர்களின் பழமை வாய்ந்த அறிவியல் பற்றிய செய்திகள் பழந் தமிழ் இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்ற பாங்கினையும் காண்போம்.

தொல்காப்பியம்
தொல்காப்பியம் இடைச் சங்க காலத்தில் எழுந்த முதல்  இலக்கண,  இலக்கிய  நூலை  யாத்த  தொல்காப்பியர் (கி.மு. 711) இவ்வுலகத்தின் ஐம்பெரும் பூதங்களான சேர்க்கைத் தோற்றம் பற்றியும், உலகிலுள்ள ஆறறிவு உயிர்களின் வளர்ச்சி பற்றியும் ஆய்ந்து, தொகுத்து மரபியலில் சூத்திரம் அமைத்த சிறப்பினையும் காண்கின்றோம். மரபியலென்பது முன்னோர் சொல் வழக்கு, அன்றுதொட்டு வழிவழியாக வரும் பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறப்படுவதாகும்.

 (1) இவ்வுலகம்  ஐம்பெரும்  பூதங்களான நிலம், ஆகாயம், காற்று, தீ, நீர், என்பன கலந்ததொரு மயக்கமான சூழ்நிலையில் இவ்வுலகம் தோன்றிற்று என்பது ஓர் அறிவியல் உண்மையாகும். இவ்வுண்மையைத் தொல்காப்பியர் இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2,700) ஆண்டுகளுக்கு முன்னால் பின்வரும் பாடல் வரிகளில் நிறுவியுள்ளமை போற்றற்குரியதாகும்.

                       'நிலம், தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்
          கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
          இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாமைத்
          திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.'
                                          – (தொல். பொருள். மரபியல் - 635)  

உலகமானது நிலம், தீ, நீர், வளி, விசும்பு ஆகிய ஐம்பெரும் பூதங்கலந்த மயக்கமாதலான், மேற்கூறப்பட்ட பொருள்களைத் திணையும் பாலும் வழுவுதல் இல்லாமல், திரிவுபடாத சொல்லோடு தழுவுதல் வேண்டும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். இவ்வண்ணம் தொல்காப்பியர் ஒரு விண்வெளி விஞ்ஞானியாய் நிலவெளி, விண்வெளி விஞ்ஞானம் பேசுவதையும் காண்கின்றோம்.

(2) புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றிற்கு உயிர் இல்லை என்று கூறுவோர் பலர் இருந்த காலமது. இந்நிலையிற்றான் இந்தியத் தாவரவிஞ்ஞான மேதை ஜெகதீஸ் சந்திர போஸ் (Jegadish Chandra Bose,  கி.பி.30.11.1858- 23.11.1937) அவர்கள் தாவரங்களுக்கு உயிர், உணர்வு, அறிவு என்பன உள்ளன என்பதை நிரூபித்துக் காட்டிப் பரிசும், பாராட்டும் பெற்றுக்கொண்டார். இதன்பின்புதான் மக்களும் அவைகளுக்கு உயிர் உண்டென்ற நிலைப்பாட்டுக்கு வந்தனர்.

ஆனால் இதற்கு இரண்டாயிரத்து ஐந்து நூறு (2,500) ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல்காப்பியனார்  தாவரத்தின்  உயிர், உணர்வு, அறிவு  பற்றியும், மற்றைய  உயிரினங்களின்  அறிவு, உணர்வு, உயிர் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறிச் சூத்திரங்கள் அமைத்துள்ளார். அதில் பின்வரும் சூத்திரத்தில் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர், ஐந்தறிவுயிர், ஆறறிவுயிர் ஆகிய ஆறு வகையான உயிரினங்களில் உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களையும் அடக்கிக் காட்டப்பட்ட சீரினையும் காண்கின்றோம்.

                           'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
            இரண்டறி வதுவே அதனொடு நாவே
            மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
            நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
            ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
            ஆறறி வதுவே அவற்றொடு மனமே
            நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.' – (பொருள். 571)

ஓரறிவு உயிராவது உடம்பினாலே அறிவது என்றும், ஈரறிவு உயிராவது உடம்பினாலும;> வாயினாலும் அறிவது என்றும், மூவறிவு உயிராவது உடம்பினாலும;>  வாயினாலும், மூக்கினாலும் அறிவது என்றும், நாலறிவு உயிராவது உடம்பினாலும;>  வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும் அறிவது என்றும், ஐந்தறிவு உயிரானது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும் அறிவது என்றும், ஆறறிவு உயிராவது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும், மனத்தினாலும் அறிவது என்றும் தொல்காப்பியர் கூறுகின்றார். இவ்வண்ணம் உயிர்கள் ஆறு வகை ஆயின.
மேலும் தொல்காப்பியர் ஓரறிவிலிருந்து ஆறறிவுக்குரிய உயிரினங்களின் பெயர்ப் பட்டியலையும் தனித்தனியே வகுத்துத் தந்துள்ள சூத்திரச் சிறப்பினையும் பார்ப்போம்.

1. ஓரறிவு உயிர்கள்

                  'புல்லும் மரனும் ஓரறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' – (பொருள். 572)

2. ஈரறிவு உயிர்கள்

                   'நந்தும் முரளும் ஈரறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' – (பொருள். 573)

3. மூவறிவு உயிர்கள்

                   'சிதலும் எறும்பும் மூவறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' – (பொருள். 574)

4. நாலறிவு உயிர்கள்

                  'நண்டும் தும்பியும் நான்கறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.'  -- (பொருள். 575)

5. ஐயறிவு உயிர்கள்

                  'மாவும் புள்ளும் ஐயறி வினவே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.' --  (பொருள். 576)

6. ஆறறிவு உயிர்கள்

                  'மக்கள் தாமே ஆறறி வுயிரே
        பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.'  --  (பொருள். 577)

புல், மரம், கொட்டி, தாமரை ஆகியவை ஓரறிவு உடையனவென்றும் நந்தும், முரளும், சங்கு, நத்தை, அலகு, நொள்ளை, சிப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன ஈரறிவு உடையனவென்றும் சிதலும், எறும்பும், அட்டை முதலியன மூவறிவு உடையனவென்றும் நண்டு, தும்பி, ஞிமிறு, சுரும்பு போன்றவை நான்கு அறிவினை உடையனவென்றும் நாற்கால் விலங்குகள், பறவைகள், பாம்பு, மீன், முதலை, ஆமை என்பன ஐவகை அறிவினை உடையனவென்றும் மக்கள், தேவர், அசுரர், இயக்கர் முதலாயினார் ஆறறிவு உயிர்களென்றும் கூறி உலக உயிரனைத்தையும் ஆறு வகையில் அடக்கிக் காண்பித்தவர் தொல்காப்பியர். இவற்றை உற்று நோக்கின், தொல்காப்பியர் காலத்தில் தாவரவியல், உடற்கூற்றியல், பறவையியல், விலங்கியல் போன்ற அறிவியற் துறைகள் மேம்பட்டிருந்தமை புலனாகின்றது.

புறநானூறு

(1) கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் ஐம்பெரும் பூதங்களான (i) நிலனையும், (ii)  வானையும், (iii)  காற்றையும், (iv)  நெருப்பையும், (v)  நீரையும், உலகம் கொண்டுள்ளது என்று சங்ககாலப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் ஓர் அறிவியற் பாடலைப் பாடியுள்ளார்.

                                              'மண் திணிந்த நிலனும்,
                    நிலம் ஏந்திய விசும்பும்,
                    விசும்பு தைவரு வளியும்,
                    வளித் தலைஇய தீயும்,
                    தீ முரணிய நீரும், என்றாங்கு
                    ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்.....' (புறம். 2: 1-6)

இதில் மண் செறிந்த நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும், நெருப்பிலிருந்த நீரும் உண்டாயின என்ற அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.

(2) சங்க காலப் புலவரான உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர் கீழ்க் காணும் புறநானூற்றுப் பாடலில் 'செஞ்ஞாயிற்றின் வீதியும், அஞ்ஞாயிற்றின் இயக்கமும், இயக்கத்தால் சூழப்படும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானமும், என்றிவற்றைச் தாமே அவ்விடஞ் சென்று அளந்து அறிந்தவரைப் போல, அவை இப்படிப்பட்டவை என உரைக்கும் அறிவுடையோரும் உளர்' என்று விண்ணியல் விஞ்ஞானம் விரிவாய்ப் பேசப்படும் இலக்கிய விந்தையைக் காண்கின்றோம்.

                                 'செஞ்ஞா யிற்றுச் செலவும்,
              அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்,
              பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
              வளி திரிதரு திசையும்,
              வறிது நிலைஇய காயமும், என்றிவை
              சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
              இனைத்து என்போரும் உளரே....'  - (புறம். 30: 1-7)

அகநானூறு

கடைச் சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் 'தோழி வாழ்வாயாக! நான் கூறுவதையும் கேட்பாயாக! மழையானது பெய்யும் இடத்தை விட்டுச் சென்ற ஆகாயத்திலே, சிறுமுயலாகிய மறுவானது தன் மார்பகத்தே விளங்கச் சந்திரன் நிறைந்தவனாகி, உரோகிணி தன்னுடன் சேரும் இருளகன்ற நடு இரவில், அதாவது திருக்கார்த்திகைத் திருவிழா நாள் இரவில், வீதிகளிலே விளக்கு வைத்து, மாலைகள் தொங்கவிட்டுப் பழமையைத் தனக்குப் பெருமையாகவுடைய மூதூரில் பலருடன் ஒன்று கூடி விழாக் கொண்டாடுவார்கள்...' என்று சங்கப் புலவர் நக்கீரர் ஒரு சிறந்த பாடலைத் தந்துள்ளார்.

                            'அம்ம வாழி, தோழி! கைம்மிகக்
                              .................................................................
             மழைகால் நீங்கிய மாக விசும்பில்
            குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து,
            அறுமீன் சேறும் அகல்இருள் நடு நாள்:
            மறுகுவிளக் குறுத்து, மாலை தூக்கிப்,
            பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
            விழவுஉடன் அயர, வருகதில் அம்ம!
                             ...........................................................................'     – (அகம். 141: 1, 6-11)

திருக்கார்த்திகைத் திருவிழாக் கொண்டாடும் வழக்கம் அன்றைய மக்கள் மத்தியில் நிறைந்திருப்பதை எம்மால் உணரமுடிகின்றது. சந்திரனும் கார்த்திகை நட்சத்திரமும் அண்மித்திருக்கும் நாளைத் திருக்கார்த்திகை நாள் என்று விழாவெடுத்துக் கொண்டாடினர். இதில், ஆகாயம், சந்திரன், உரோகிணி, திருக்கார்த்திகை என்று விண்வெளி அறிவியல் பேசப்படுவதையும் காண்கின்றோம்.

பதிற்றுப்பத்து

கடைச் சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் அறிவியல் பற்றிய செய்திகள் எவ்வண்ணம் பேசப்படுகின்றன என்பதையும் காண்போம்.

(1) நிலம், நீர், காற்று (வளி), வானம் (விசும்பு) ஆகிய நான்கினதும், விண்மீன்கள் (நாள்), கிரகங்கள் (கோள்), சந்திரன் (திங்கள்), சூரியன் (ஞாயிறு), பெருநெருப்பு (கணை அழல்) ஆகிய ஐந்தினதும் அளப்பரிய பேராற்றல்களைச் சங்கப் புலவர் குமட்டூர்க் கண்ணணார் சிறந்ததொரு பாடலை இரண்டாம் பத்தில் தந்துள்ளார்.

                                          'நிலம், நீர், வளி, விசும்பு, என்ற நான்கின்
                  அளப்பு அரியையே;
                  நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்
                  ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை; ....'- (14: 1-4)

(2)  இனி மூன்றாம் பத்தில் சங்கப் புலவரான பாலைக் கௌதமனார் பாடியுள்ள ஒரு சீரிய பாடலையும் பார்ப்போம். நீண்ட தொலைவிலுள்ள வானத்திலிருந்து ஒளிவிடும் மின்னல் வெளிச்சம் விண்ணிலும் மண்ணிலும் பரவி நிற்பதாகவும், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களின் ஆற்றல் பற்றியும், ஒளி வீசிக் கொண்டு வானில் கதிரவன் சுடர்பரப்ப, அதற்குச்  சற்று  வடக்கேயுள்ள சிறப்புமிகு  வெள்ளிக்கோள் என்னும்  சுக்கிரன், பலன் தரும் மற்றக் கோள்நிலைகளும் பொருந்தி நிற்கையில் நல்ல மழை பொழியும் என்று கூறப்படுகின்றது.

                                  'நெடு வயின் ஒளிறு மின்னுப் பரந்தாங்கு
                                    .................................................................................
               நீர், நிலம், தீ, வளி, விசும்போடு, ஐந்தும்
                                    ...................................................................................
               வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர,
               வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
               பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப,
               கலிழும் கருவியொடு கை உற வணங்கி....' – (24: 1, 15, 23-26)

வெள்ளிக் கோள் வடக்கே தோன்றினால் நல்ல மழை பொழியும் என்பது ஒரு வழக்காகும். வானம், மின்னல், வெளிச்சம், விண், மண், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், கதிரவன், சுக்கிரன், மழை ஆகிய இயற்கை வளங்களைத் தொட்டுச் செல்லும் புலவர் ஆகாயத்தில் பறந்து திரியும் ஒர் அற்புதக் காட்சியை நம் முன் வைத்துச் சென்றுள்ளார்.
 
பரிபாடல்

கடைச் சங்கத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் அறிவியல் பேசும் பாங்கினை நல்லெழுநியார் என்னும் புலவர் யாத்த ஒரு பாடலில் காண்போம். 'சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு என்று உரைக்கப்படும் ஐந்தான அவையும் நீயே யாவாய்! இசைமை எனப்படும் முதலான ஓசையால் அறியப்படும் வானமும் நீயே! ஓசை, ஊறு என்னும் இரண்டானும் அறியப்படும் காற்றும் நீயே! ஓசை, ஊறு, ஒளி என்னும் மூன்றானும் உணரப்படும் தீயும் நீயே! ஓசை, ஊறு, ஒளி, சுவை என்னும் நான்கானும் உணரப்படும் நீரும் நீயே! ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐந்தானும் முற்ற உணரப்படும் நிலனும் நீயே! என்று திருமாலைப் போற்றுகின்றார்.

                       '....................................................
          சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
                        ...................................................
          ஓன்றனிற் போற்றிய விசும்பும் நீயே!
          இரண்டி னுணரும் வளியும் நீயே!
          மூன்றி னுணரும் தீயும் நீயே!
          நான்கி னுணரும் நீரும் நீயே!
          ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே!.......' – (பாடல் 13: 14, 18-22)


விசும்பும், வளியும், தீயும், நீரும், நிலமும் ஆகிய இயற்கையான ஐம்பொறிகளும் இங்கேயும் பேசப்படுகின்றன.

ஐங்குறுநூறு


இந்நூலின் பின்வரும் கடவுள் வாழ்த்தைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனும் கடைச் சங்கப் புலவர் பாடியுள்ளார்.

                                          'நீலமேனி வாலிழை பாகத்து
                  ஒருவன் இருதாள் நிழல்கீழ்
                  மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே.'


நீலநிற மேனியையும் தூய அணிகளையும் உடைய உமையவளைத் தன் உடலில் ஒரு பாகமாய்க் கொண்ட ஒப்பில்லாத சிவபெருமானின் இரண்டு திருவடிக் கீழ் மூன்று வகைப்பட்ட உலகங்களும் நிலை பெற்றுள்ளன. மூவகையுலகு என்பது மேல், நடு, கீழ் என்பனவாம். அவைதான் விண், மண், பாதலம் ஆகும். பரம்பொருளிலிருந்து வானம் தோன்றியது, வானத்திலிருந்து காற்றுத் தோன்றியது. காற்றிலிருந்து தீ தோன்றியது. தீயிலிருந்து நீர் தோன்றியது. நீரிலிருந்து நிலம் தோன்றியது என்று சிலர் உரைப்பர். இங்கே ஐம்பூதங்களின் பரம்பொருளையும் காண்கின்றோம்.

சிலப்பதிகாரம்

சங்கம் மருவிய காலத்தில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்  'திங்களைப் போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! மாமழை போற்றுதும்!' என்று பரந்த வானியல் பேசப்படுவதையும் காண்கின்றோம். இங்கே இயற்கையான சந்திரனையும், சூரியனையும், மாமழையையும் ஒரே நேரத்தில் ஏற்றிப் போற்றும் இலக்கிய மேதை இளங்கோவடிகள் விண்வெளி பேசும் விஞ்ஞானியாய் விண்ணில் பறந்து திரிவதையும்  உற்று நோக்கிப் பார்க்கின் தெளிவாகும்.

முடிவுரை

இதுகாறும் தொல்காப்பியத்தில் நிலம், ஆகாயம், தீ, நீர், காற்று ஆகிய ஐம்பூதங்கள் பற்றியும், தாவரத்தின் உயிர், உணர்வு பற்றியும், மற்றைய உயிரினங்களின் அறிவு, உயிர், உணர்வு பற்றியும், ஓரறிவிலிருந்து ஆறறிவுள்ள உயிரினங்களின் பெயர்ப்பட்டியல் பற்றியும், புறநானூற்றில் நிலனையும், வானையும், காற்றையும், நெருப்பையும், நீரையும் உலகம் கொண்டுள்ளது பற்றியும், ஞாயிற்றின் வீதியும், இயக்கமும், இயக்கத்தால் சூழும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானம் ஆகியவை பற்றியும், அகநானூற்றில் ஆகாயம், சந்திரன், உரோகிணி, திருக்கார்த்திகை ஆகியவை பற்றியும், பதிற்றுப்பத்தில் விண்மீன்கள், கிரகங்கள், சந்திரன், ஞாயிறு, நெருப்பு மின்னல், வெள்ளிக்கோள் ஆகியவற்றின் ஆற்றல் பற்றியும், பரிபாடலில் சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு என்பன பற்றியும், ஐங்குறுநூற்றில் விண், மண், பாதலம் ஆகிய மூவுலகு பற்றியும், சிலப்பதிகாரத்தில் சந்திரன், சூரியன், மாமழை என்று பரந்த வானியல் பற்றியும் பேசப்பட்டுள்ளதை மேலே பார்த்தோம்.

சங்க இலக்கியங்களில் இலக்கியம் மட்டும்தான் உள்ளது என்று கூறமுடியாது. அவற்றில் அறிவியல் சார்ந்த விடயங்களும் நிறைந்துள்ளன என்பதை மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். உலகம் நவீனமயமடைந்த வண்ணமுள்ளது. எனவே அறிவியல் சார்ந்த கல்வி மிக முக்கியம் வேண்டற்பாலது. தனி இலக்கியங்களைவிட அறிவியல் சார்ந்த இலக்கியங்கள் மக்களுக்குப் பெரும் பயனை நல்கும்.

சில இலக்கியங்களில் அறிவியலும் கலந்திருப்பது உண்மை. இதற்கு மேற்காட்டிய நூல்கள் சான்றாகும். இவற்றை இலக்கியக் கண்கொண்டு படித்தால் இலக்கியம் முன்வந்து நிற்கும். அதை அறிவியற் கண்கொண்டு பார்த்தால் அறிவியல்தான் முந்திநிற்கும். எனவே இலக்கியமும், அறிவியலும் சமநிலையில் அமைவது சாலச் சிறந்ததாகும்.

காலத்தால் மூத்த இலக்கிய, இலக்கண நூலான தொல்காப்பியத்தில் அறிவியல் சார்ந்த செய்திகளையும் புகுத்தி முதற் காலடியெடுத்து வைத்த பெருமை தொல்காப்பியனாரைச் சாரும். இவரைத் தொடர்ந்து பின்னெழுந்த சங்க இலக்கிய நூல்களிலும் அறிவியற் செய்திகள் பரந்து செறிந்துள்ளதையும் காண்கின்றோம். அறிவியல் சார்ந்த இலக்கியங்களின் வாழ்நாள் மிக நீண்டதென்பதும் தெளிவாகின்றது. மேற் காட்டிய நூல்கள் இதற்குச் சான்று பகரும். எனவே அறிவியலை முன்னிலைப்படுத்தி அதனால் வரும் பயனை ஏற்று எம் வாழ்வியலை மேம்படுத்தத் திடசித்தம் கொள்வோமாக!

wijey@talktalk.net

கவுரியா வாட்சப் குழு 10/06/2018 ஒரிசா பாலு அவர்கள் பகிர்தது

ஞாயிறு, 17 ஜூன், 2018

சங்க இலக்கியத்தில் வானியல்


     மனிதனின் அறிவியல் பிரிவின் ஒரு கூறே வானியல். இன்றைக்கு வானியலின் வளர்ச்சி மனிதனை வேற்று கிரகவாசிகளாக மாற்றும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. ஸ்பிரிட், ஆப்பர்சினிட்டி ஆகிய விண்கலங்கள் செவ்வாய்க் கோளை ஆராய மனிதனால் ஏவப்
பட்டவை. மேலும், இன்றைய அறிவியலாளர்கள் ஞாயிறை விட 320 மடங்கு பெரிய, 1 கோடி மடங்கு ஒளி வீசக்கூடிய, இதுவரை வானியல் அறிஞர்களே கண்டிராத மிகப்பெரிய விண்மீனை லண்டனில் உள்ள "ஷெபீல்ட்' வானியல் துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்விண்மீனுக்கு மான்ஸ்டர் ஸ்டார் (ராட்சத நட்சத்திரம்) என்று பெயரிட்டுள்ளனர். இக்கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக தொல் மனிதர்களின் வானியல் கண்டுபிடிப்பே அடிப்படை ஆகும். உலகில் உள்ள தொன்மையான மனித இனங்களில் ஒன்றான தமிழினம் தமக்கென வானியல் கொள்கையை சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.

பழந்தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள். தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன. சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

சங்கத் தமிழர் ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை வெளிப்படுத்தும்போது பரந்து விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியுள்ள அறிவியல் உண்மையை இவ்வுலகுக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
(பரிபாடல்:2)

இப்பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது. முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.

தமிழர் இவ்வுலகிலுள்ள உயிர்கள் நிலைத்து வாழ ஞாயிறே முதன்மைக் காரணம் என்பதை உணர்ந்திருந்தனர். தமிழரின் பொங்கல் திருநாள் ஞாயிறை முதன்மைப்படுத்துவது ஈண்டு நோக்கத்தக்கது. திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரிகள், உயிர்கள் மகிழ ஞாயிறு எழுவதாக நக்கீரர் பதிவு செய்கிறார்.

உலக முவப்பு வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
(திருமுருகு:1-3)

இங்கு, உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது. அப்பாடலடிகள் வருமாறு.

வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு
(நற்:163)

இதன் மூலம், பழந்தமிழர்கள் ஞாயிறை நெருப்புக் கோளம் என்கின்றனர். இன்றைய அறிவியல் அறிஞர்களும் ஞாயிறு வடிவமற்று எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்புக் கோளம் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இன்றைய வானியலறிஞர்கள் ஞாயிறை ஒன்பது கோள்கள் சுற்றுவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்நிகழ்வின் எச்சத்தை சிறுபாணாற்றுப்படையில் காணமுடிகிறது.

வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
(சிறுபாண்: 242-43)

என்னும் வரிகள், ஞாயிறைச் சுற்றிலும் கோள்கள் சூழ்ந்துள்ள உண்மைப் பதிவைப் புலப்படுத்துகின்றன. இதன் மூலம் பல கோள்கள் ஞாயிறைச் சுற்றிவந்தன என்று தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பூமியை ஞாயிறின் கோளாக இவர்கள் கண்டறியவில்லை. மாறாக காட்சிப் பார்வையின் அடிப்படையில் பூமியை ஞாயிறும் சந்திரனும் சுற்றுவதாக நம்பினர். இதை,

குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின்
(பதிற்று: 22:33-34)

இங்கு, ஞாயிறு கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதையும், பூமி நிலையாக ஓரிடத்திலேயே இருப்பதாகவும் காட்சிப் பார்வையின் அடிப்படையில் அறிவியல் உண்மையை அறியாது இருந்த செய்தியும் வெளிப்பட்டு நிற்கிறது.

மேலும், திருப்பாவை 13, புறம்:26:1-2; புறம் 117:1-2; பதிற்றுப்பத்து 13:25-26; ஆகிய பாடல்கள் மூலமும் அறியமுடிகிறது.

தமிழரின் வானியல் அறிவு இன்றைய அறிவுசார் உலகுக்கு ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை.

சனி, 16 ஜூன், 2018

சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள்


     மழை என்பது எல்லா காலங்களிலும் கொடைக்கு உவமையாகவே புலவர்களால் கையாளப்படு வந்துள்ளது. இவ்வுலக உயிர்கள் யாவும் வாழ்வதற்குக் காரணமானது  மழை என்பதை அனைவருக்கும் உணர்வர்.  அதனால்தான் புலவர்கள் மழையைக் கொடைக்கு உவமையாக்கினர். அவ்வாறு உவமைக்காக கூறப்பட்ட பல செய்திகள் இன்றைய வேளாண் அறிவியலோடு ஒத்திருப்பதை ஊன்றிக் கற்போரால் உணரமுடியும். இவ்வாறு மழையை உவமையாகக் கூறுகின்ற அதே நேரத்தில் அம்மழை தோன்றுவதற்கான அறிவியல் காரணத்தையும் பண்டைத் தமிழர்கள் மிகச்  சிறப்பாக அறிந்திருந்தனர். அந்த வகையில் சங்க இலக்கியத்திலுள்ள மழை பற்றிய அறிவியல் செய்திகளை வெளிக்கொணர்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மழையின் சிறப்பு;

     கொடை வள்ளல்களில் சிறந்த இடத்திலுள்ள பாரியின் கொடைத்தன்மையைக் கூறவந்த சுபிலர்.
''மாரியுமுண்டு ஈங்கு உலகு புரப்பதுவே''  (புறம் 107)
எனக் கூறிப்பிடுகிறார். வள்ளுவரும் மழையின் சிறப்பை பத்து குறட்பாக்களில் கூறுகிறார். அவற்றில்,

விசும்பின் துளிவீழின் அல்லால் மாற்றாங்கே
பசும்புல் தலைகாண்ப தரிது. (குறள் 16)

எனப் புல் வாழ்வதற்குக்கூட மழை மிக இன்றியமையாதது என குறிப்பிடுவதையும் இங்கு எண்ணிப்பாரக்கத் தக்கது.

மழையும் அறிவியலும்

     சூரிய வெப்பத்தால் நீரானது நீராவியாக மாறி மேலே சென்று மேகமாக மாறுகிறது. இந்தச் செயல் மீண்டும் மீண்டும் நடைபெறும்போது மேகத்தின் அடர்த்தி அதிகரிக்கிறது. இந்நிலையில் மேகங்கள் காற்றின் போக்கிற்கேற்ப செல்கிறது. இவ்வாறு செல்கிற மேகங்களை மலைகள் தடுக்கின்றன் மலைகளில் காணப்படும் தாவரச் சூழல் காரணமாக அப்பகுதி குளிர்ச்சியாகக் காணப்படுகிறது இதனால் மேகங்களாகக் காணப்படும் நீராவியானது குளிர்ச்சியடைந்து மழையாக பெய்கின்றது.
அதேபோல ஒரு இரத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது அங்குள்ள வெப்பமானக் காற்று மேல்நோக்கி செல்கைறது அவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கு குளிர்ந்த காற்று வந்து சேர்கின்றது. இவ்வாறு குளிர்க்காற்று வருவதும் மேகங்கள் மழைபொழிவதற்குக் காரணமாகிறது. காடுகள் மிகவும் அதிகாம இருப்பதாலும் சுற்றுசூழல் குளிர்விக்கப் பட்டு மழைப்பெய்கின்றது. இவையாவும் மழை பொழிவிற்கான அறிவியல் காரணங்களாகும்.

இலக்கியமும் மழையும்

     மழை உருவாக்கத்திற்குரிய நீரில் பெரும் பகுதி நீண்டு விரிந்த கடலில் இருந்து பெறப்படுகிறது. ‘’ பெரும்பாகமான தண்ணீர் கடலில் இருந்து சூரியனால் நீராக்கப்படுகிறது. இந்த நீராவியை, பூமியின் காற்று மண்டலத்தில் வீசிக்கொண்டிருக்கும் காற்றோட்டங்கள், நிலப்பரப்புக்கு இழுத்து வருகின்றன’’
பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே   (அகம் 183)

என்று குறிப்பிடப்படுகின்றது. பெருங்கடலில் முகந்து கொள்ளப்படும் நீர் ஆவியாகி மேலே செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும் நீர் மேகத்தின் அடர்த்தியைப் பொறுத்து அதுமிதந்து செல்லும் உயரம் அமைகிறது.

பெயில் உலர்ந்து எழுந்த பொங்கல் வெண்மழை [நெடு 20]

     அதிக நீர் கொள்ளாத மேகம் மேலே உயர்ந்து செல்கின்றது. அதனால் மேகத்தில் அதிகளவு நீர்த்தன்மை இருக்கின்ற மேகம் உயர்ந்து செல்லாது, தாழ்ந்து செல்வதை,’’ கடுஞ்சூல் மகளிர்’’ போன்று இருப்பதாகக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.
காற்றும் மழையும்

மழைபொழிதலில் காற்றின் பங்கு மிக முக்கியமான இடத்தைப்பெறுகின்றது. நீராவி மேகமாக மாறிய நிலையில் அதனைப் பிற இடங்களுக்கு அடித்துசெல்கின்ற பணியைக் காற்று செல்கிறது. இல்லையெனில் பல பகுதிகளில் மழை இல்லாமல் போய்விடும்.
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே ( ஐங். 492)
எனக்கார்கால மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுகிறது விளக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவக்காற்று காலமே மழைப்பொழிவதற்குரிய காலமாகும். இக்காலத்தில் காற்று வடக்கிலிருந்து வீசுகின்றது அது பருவ சுழற்சியின் காரணத்தாலும் தமிழகம் புவியின்  நடுக்கோட்டின் கீழ் இருப்பதனாலும் கிழக்கிலிருந்து மேற்காக காற்று வீசுகிறது இதை நன்குணர்ந்த பண்டைத் தமிழர்கள் மேகம் வலமாகச் சுற்றுவதை

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்   (ஐங். 469)
என்றும்
கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு (அகம். 43)

என்றும் சுட்டப்படுகின்றன. காற்று வலம் நோக்கி செல்வதற்கான காரணத்தை மிகத்தெளிவாக பின்வரும் பாடல் குறிப்பிடுகின்றது.

நனந்தலை உலகம் வளையி நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை   (முல்லை. 1-2)
என்றும் முல்லைப் பாட்டு குறிப்பிடுகின்றது.

இதனை வலியுறுத்தும் விதமாக
பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ (அகம் 840

எனக் குறிப்பிடுகின்றது. காற்றின் போக்கினை தெளிவாக உணர்ந்திருந்த காரணத்தால் அக்கால தமிழ் மக்கள் கடல் தொழில் செய்வதிலும் வல்லவர்களாக இருந்தனர். கீழ்காற்று கடல் தொழில் செய்வதற்கு ஏற்றதல்ல என்பதும் இக்காலத்தில் கடலிலிருந்து காற்று கரை நோக்கி  வீசுவதால் பாய்மரத்தின் உதவியால் படகை கடலுக்குள் செலுத்த முடியாது என்பதும் இக்காலம் மழைக்காலம் என்றும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர்.
கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த [ நற். 140]
 
என்று நற்றிணை குறிப்பிடுவதையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்கத் தக்கதாகும்.

மலையும் மழையும்

     காற்றுக்களால் அடித்துச் செல்லப்படும் மேகங்களை மலைகள் தடுக்கின்றன இவ்வாறு தடுக்கப்படும் மேகங்கள் அம்மலைகளில் காணப்படும் தாவரங்களின் குளிர்ச்சியால் நீரின் அடர்த்தி அதிகமாகின்றன. காடுகளில் வளர்ந்திருக்கும் பெருமரங்கள் தாவரங்கள் எல்லாமே அதிகளவு மழை நீரை வேர்களீன் மூலமாக உறிஞ்சுகினறன. ஆனால் மிக குறைந்த அளவு தண்ணீரையே தங்கள் உணவை தயாரிக்க பயன் படுகின்றன. இதனால் தான்  மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்கள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.ஏனென்றால் எஞ்சிய பெருமளவு நீர் இலைத்துளைகளின் வழியாக  நீராவியாக காற்று மண்டலத்தில் மீண்டும் செலுத்தப்படுகிறது.இந்த கருத்தை வலியுறுத்தும் விதமாக நற்றிணைப் பாடல் ஒன்று உள்ளது

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து..(நற்றிணை 289)

இப்பாடல் அடர்த்தி அதிகமாகி மழைப் பொழிவதைக் காட்டுகிறது. அடர்த்தி அதிகரித்தல் என்பதை செறிதக எனும் சொல்லால் சுட்டபடுகிறது. காற்று வீசும் திசைக்கு குறுக்காக உள்ள மலைகள் மழையைத் தடுப்பதை கூர்ந்து கவனித்த புலவர்கள் தங்கள் பாடல்களில் அதனை பதிவு செய்துள்ளனர்.

கருவி வானம் தண்டளி தலைஇய
வடதெற்கு விலங்கி விலகுதலைத் தெழிலிய .. [பதி. 31]

என்றும்

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து.  (நற்றிணை 261)

என்றும் குறிப்பிடுகின்றன. இதற்கு மருதலையாக மலைகள் மேகங்களை தடுத்து சிகரங்களில் மழையை பெய்விக்கின்றன. இவ்வாறு காற்றினால் தள்ளப்படும் மேகம் மலையில் மழைப் பொழிவதை

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்.. [ பதி . 12]

எனும் பாடல் வரிகள் தெளிவாக விளக்குகின்றன.

சங்க இலக்கியங்கள் என்பவை காலத்தின் பெட்டகங்களாக பண்டை தமிழரின் அழகிய வாழ்வின் அடையாளங்களாக, அறிவியல் சிந்தனைகளின் புதையல்களாகக் காணப்படுகின்றன. அவ்வகையில் மழைக்கான அறிகுறிகளையும் அதற்கானக் காரணங்களையும் பண்டை தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை இகட்டுரையின் வழி அறிய முடிகின்றது.


நன்றியோடு - சு.ஆனந்தராசு நம்மண் நிரவாகி தென்புலத்தார்  குழுமம்


கவுரியர் என்ற வாட்சப் குழுவில் 10/06/2018ல் ஒரிசா பாலு அய்யா பகிர்ந்தது