புதன், 16 ஜூன், 2021

சோதிடம் சார்ந்த நூல்களின் பெயர்கள்:


 நவக்கிரக தர்க்க சோதிடம்.

சோதிட ரத்தினக் களஞ்சியமாலை .

சங்கராசாரியர் சோதிடம்.

இரேகை சாத்திரம்.

நவக்கிரக சிந்தாமணி.

தொடு குறி சாத்திரம்.

சகாதேவர் தொடு குறி சாத்திரம்.

ஆருட நூல்.

ஆஸ்தான கோலாகலம்.

சாதக பாரி சாதம்.

சீதா சக்கரம்.

மரண கண்டிகை.

அலகு நூல்.

சூடாமணி உள்ளமுடையான்.

வானியல் (அண்டத்தியற்கை யோசனை)

கிரகண கணிதம்.

பஞ்சாங்கம்.

சர நூல்.

சோதிடம் கணிப்பு.

சோதிடம் பலன் கூறுதல்.

சோதிடம் – நாடி.

சோதிடம் – முகூர்த்தம்.

கனவு – நிமித்தமும்.

வால்மீகர் தீப சூத்திரம்.

சந்தனக் கயறு .

பஞ்சபட்சி சாத்திரம்.

கவுளி காதல் சாத்திரம்.

சகாதேவர் நூல்.

நட்சத்திர ஆருடம்.

பல்லி சாத்திரம்.

சாக சந்திரிகை .

அட்டவர்க்கப் பலன் –

கனவுகளின் பயன் .

மரணக் குறிப்பு.

ஒட்டியம்.

சத்தியாரூடம்.

சோதிட அரிச்சுவடி .

சோதிடக் களஞ்சியம்.

சோதிட க்ரக சிந்தாமணி.

சோதிடச் சுருக்கம்.

சோதிடச் செய்திகள்.

சோதிட சங்கிரக சாராவலி.

சோதிட சங்கிரகம்.

சோதிட சந்திரகாவியம்.

சோதிட சாஸ்திரம்.

சோதிட சிகாமணி.

சோதிட சிந்தாமணி.

சோதிடத் திரட்டு .

சோதிட தசப் பொருத்தம்.

சோதிட நூல்.

சோதிட நூற்குறிப்பு.

சோதிட நூற் றிரட்டு.

சோதிட பாவங்கள்.

சோதிட பிந்து .

சோதிடம் பல சாத்திரம்.

சோதிடம் பல திரட்டு.

சேரிடம் பல மாலை .

சோதிடம் யோக பலன்.

சோதிட மஞ்சரி .

சோதிடரத்தினம் .

சோதிட ரத்தினமாலை .

சோதிட லட்சணம்.

சோதிப்பத்து.

அங்கத்துடிப்புகளும் பலன்களும்

அதிர்ஷ்ட நியுமரலாஜீ ஜோதிடம்

அனுபோக ஜாதக ரகசியம்

ஆயுள் பாவங்கள்

எண்கணித சோதிடத்தில் கர்ம எண்

எளிய ஸ்ரீஜோதி முழுமையான நூல்

க்ரந்தாகூர சமஸ்க்ருத பாலபாடம்

கர்ம எண்

காலக்கண்ணாடி

கிரக அவஸ்தைகள்

குதிரை பந்தய லாவணி

கெளசிக சிந்தாமணி

கேரளா சோதிடம்

கைரேகை ஜோதிட ஞானம்

சந்தான தீபிகை

சந்திரகாவியம்

சாதக கணிதாமிர்தம்

சிற்ப சாத்திர செய்தி அடைவு

சுந்தரசேகரம்

சூடாமணி உள்ள முடையான்

சோதிட அகராதி

சோதிட ஆனந்த களிப்பு

சோதிட கோட்சார சிந்தாமணி

சோதிட வாசகம் 2

தமிழ் மாத பிறந்தவர்களின் பலன்கள்

தஜ க நீலகண்டேயம்

நியூமரலாஜீ

நீயூமரலாஜீ 1

பஞ்சாங்க கணனம் – 1

பஞ்சாங்க கணனம் – 2

பஞ்சாங்க கணனம்

பீரங்கி முனிவர் ஜோதிடம் 300

பிரஞ் ஞான தீபிகை

புத்ரபாவம்

புலிப்பாணி சோதிடம் -300

பெண்கள் ஜாதகமும் பலனும்

பெரிய சோதிட சாதக கணித பாலசிட்சை

பெரிய ஜோதிட சில்லறைக்கோர்வை

மச்சமுனி ஜோதிடம்

மனையடி சிற்ப சிந்தாமணி

ஜாதக பாஸ்கரன்

யோகப் பொருளகராதி

ராசி நட்சத்திரங்கள்

ராமசேகரம்

வானவியல் மூலமும் வரலாறும்

விதி விளக்கம்

விவாக வியாக்கினம்

வீமகவி

ஜாதக உண்மை திறவுகோல் – 2 ம் பாகம்

ஜாதக தெசாரிஷ்ட நிவாரணி

ஜெயமுனி

ஜோதிட திறவுகோல்

ஜோதிட பால போதினி

ஜோதிட வாசகம்

ஜோதிட பேரகராதி

ஜோதிடராகலாம்

ஜாதக கணித சாகரம்

தொகுதி 1 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 2 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 3 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 4 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 5 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 6 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

தொகுதி 7 தொழில் முறை ஜோதிட பாடங்கள்

நவரச சுருதிகள்

பாராசரியம் திசா புக்தி பாடல்கள் மட்டும்

கௌசிக சிந்தாமணி

ஜோதிட ரத்னா திரட்டு

வீமகவி மூலமும் உறையும் 1937 படைப்பு

வர்க்க பலன் தரும் யோகங்கள்

பணமழை

பிரம்மரிஷி வாக்கியம்

பஞ்சாங்க ரகசியம்

ஜாதக சாகரம் தொகுதி - 1

ஜாதக சாகரம் தொகுதி - 2

பராசரர் ஹோரை பாவகபலன்

விவாக விஞ்ஞானம்

களத்திர பாவம்

ஜோதிடமும் மருத்துவமும்

வழிபாடும் பரிகாரமும் ,

இறையாற்றல் யந்திரங்கள் ,

ஸ்ரீ சுயம்வர பார்வதி பூஜை ,

தன ஆகர்ஷன குபரே யந்திர மந்திர பூஜை

திருமணப்பொருத்தம் ,

செவ்வாய் தோஷமும்,பொருத்தமும்

புத்திர பாவம்

ஜோதிட விதி விளக்கம்

ஜோதிட யோகாதி யோகங்கள் தொகுதி - 1

ஜோதிட யோகாதி யோகங்கள் தொகுதி - 2

ஜோதிட யோகாதி யோகங்கள்தொகுதி

நல்ல நாள் பார்ப்பது எப்படி

அனுபோக ஜாதக ரகசியம்

30 நாட்களில் ஜோதிடம் எளிதாக கற்ப்பது எப்படி

ஜோதிஷமும் சங்கீதமும்

கணித முருக சேகரம்

தொழில் மலர் 1௦ ஆம் பாவம்

ஜோதிஷ ஆச்சாரியா முகூர்த்த சித்தாந்தம்

அனுபோக ஜாதக ரகசியம்

பராசரர் ஹோரை பாவக பலன்கள்

களத்ர பாவம்

ஜோதிடத்தில் யோகாத யோகங்கள் தொகுதி RS

ஜோதிடத்தில் யோகாதியோகங்கள் தொகுதி

ஜோதிட விதி விளக்கம்

புத்திர பாவம்

ஜோதிட ரத்தினா திரட்டு

நல்ல நாள் பார்ப்பது எப்படி

ஜோதிடமும் மருத்துவமும்

குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர்

நல்ல நாள் பார்ப்பது எப்படி

ஜோதிடமும் மருத்துவமும்

குளிகாதி ஐவர் தூமாதி பஞ்சவர்

திருமண யோகம்

ஜாதக தேஷ் மார்க்கா

ஜோதிடம் என்றால்

மணிகண்ட கேரளம்

இனிய நல்வாழ்க்கை வழி காட்டி

கிரகங்களும் உணவு வகைகளும்

சுலபமாக ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள் RS

நவ கிரகங்கள் நின்ற ஸ்தான பலன்கள்

ஜாதகமும் ஜோதிடமும்

களத்திர பாவமும் இல்வாழ்க்கையும்

உங்கள் வருவாய் யோகம் எப்படி

உங்கள் ஜாதகப்படி என்ன உத்தியோகம் பார்க்கலாம் –80

12 ராசிக்காரர்களின் காமம் காதல் வாழ்க்கை –

மச்சங்களின் அதிர்ஷ்ட பலன்கள்

ஜோதிடத்தில் மங்கையர் ஜாதக மகிமை

உங்கள் ஜாதகம் பேசுகிறது


பஞ்சாங்கம்


துன்மதி வருட சபரி பஞ்சாங்கம்

துன்மதி வருட ஸ்ரீனிவாசன் பஞ்சாங்கம்


எண் கணிதம்


வெற்றிக்கு வழி காட்டும் அதிருஷ்ட எண்கள்

அதிருஷ்டம் அளிக்கும் அற்புத எண்கள்


துருவ கணிதம்


சகோதர தத்துவநாடிதுருவகணிதம

ஜோதிட பலன் தரும் துருவ கணிதம்

ஜோதிடமும் நடைமுறை வாழ்க்கை துருவம்

தெயவங்களின் ஜாதகமும்

வீமகவி மூலமும் உறையும் 1937 படைப்பு


நாடி :


கார்க்கேயர் நாடி

சகாதேவநாடி

சகாதேவர் சோதிட நாடி

பதிணென் சித்தர்களின் நாடி சாஸ்திரம்

சப்த ரிஷி நாடி கன்யா லக்னம்

சப்த ரிஷி நாடிமேஷ லக்னம்

சுகர் நாடி

நாடி ஜோதிடம்

நாடிச் சக்கரம்

புஜண்டர் நாடி முதற் பாகம்

கந்தர்நாடி

பிறவியை அறியும் பிருகு நாடி பலன்

பிரசன்ன நாடியும் பிறவியின்பலன்களும்

சூரியசந்திர நாடிமுறையில் தொழில் நிர்ணயம்

ஜீவன காரகன் சனி

நாடி ஜோதிட விதிகள்

நாடியில் பிரசன்னம்


வாஸ்து :


வாஸ்து ஐஸ்வர்யங்கள்

வர்த்தக வாஸ்து

வரைபடமும் வாஸ்தும்

வாஸ்து களஞ்சியம்

சிற்ப சாஸ்திர மெனும் மனையடி

வாஸ்து டிப்ஸ்

இனியவை இருபது வாஸ்து

மனையியல் வாஸ்து


பிரசன்னம் & ஆரூடம் :


அகத்தியர் ஆரூடம்

அகத்தியர் பஞ்சபட்சி ஆரூடம்

அனுபோக ஆரூட சிந்தாமணி

அஷ்டதிக் ஆருடம்

ஆஞ்சநேயர் ஆரூடசாஸ்திரம்

ஆரூட அலங்காரம்

கந்தராரூடம்

சாமக்கோள் ஆரூடம்

நட்சத்திர ஆரூட சிந்தாமணி

பட்சி ஆரூடம்

பாய்ச்சிகை ஆருடம்

வராகி ஆருடம்

வால்மீகர் ஆரூடசாஸ்திரம்

வான்மீகர் ஆரூடம் – 40

ஜெயமுனிவர் ஆரூட சாஸ்திரம்

ஸ்ரீ கணேச ஆரூட தீபிகை

ப்ரசன்ன ஆரூடம்

ஹோரா பிரசன்ன ஜோதிடம்

மச்ச முனி ஆருடம்

புலிப்பாணி கஸ்ட நாஸ்ட ஜாதக கணிதம்

அனுபவ ஆருடம்

ஜாதகம் இல்லாதவர்கள் ஜாதகம் பார்ப்பது எப்படி


சாஸ்திரங்கள் :


கூப சாஸ்திரம்

வராகர் ஒரா சாத்திரம்

அகத்தியர் தற்க சாத்திரம்

கப்பல் சாத்திரம்

களவு காணும் சாஸ்திரம்

குருநாடி சாஸ்திரம்

கெ வுளி சாஸ்திரம்

சர்வ பிராயண சாஸ்திரம்

சாமுத்ரிகா லட்சணம்

சாஸ்திரமும் மழையும்

அகத்தியர் சாமுத்ரீகா லட்சணம்

தும்ம நூல் சாஸ்திரம்

நந்தி நூல் ரேகை சாஸ்திரம் – 110

பாச்சிகை சாஸ்திரம்

பூமிசாஸ்திரம்

மச்ச சாஸ்திரம்

மனைக் குறி சாஸ்திரம்

முக்கால ரேகை சாஸ்திரம்

ருது நூல் சாஸ்திரம்

வாஸ்து சாஸ்திரம்

விவாக சாஸ்திரம்


பஞ்ச பட்சி:


சுக்கும பஞ்ச பட்சி

நிமிஷப் பஞ்சபட்சி

பஞ்ச பட்சி

சுருக்கு பஞ்சபட்சி


ஆன்மிகம் மற்றும் சாஸ்த்திரம்


ஆகாமிய கர்மா

திண்டுக்கல் மாவட்ட பரிகார ஸ்தலங்கள்

சைவ ஆகம சாரமும் சிவ வழிபாட்டு முறைகளும்—RS

நவதிருப்பதி வழிகாட்டி

அறியாதவை ஆனால் அறியக் கூடியவ

தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதும் செய்யக்

கூடாததும் பழக்க வழக்கங்கள்

ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய பரிகார நூல்

விதுர நீதி

108 வைஷ்ணவ ஸ்தல வழிகாட்டி

சனி பகவானும் பரிகாரமும்

சர்வ தேவதா வசியம்

ஸ்ரீ விநாயகர் கவசம்

அனுமன் சாலிசா

கனக தாரா ஸ்தோதறம்

குபேர லக்ஷ்மி

பைரவர் வழிபாடு

அம்மன் டிக்ஷன்ரி

தினசரி வாழ்வில் செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்

நவ திருப்பதி


பரிகாரகம்


பதினெண் சித்தர்களின் பரிகார தொகுப்புகள்

அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள்

அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் RS

அனுபவத்தில் வெற்றி பெற்ற பரிகாரங்கள் 3

சிவா மஹா மந்திரம்

நவக்கிரக மஹா மந்திரம்

27 நட்சத்ர காயத்ரி மந்திரங்கள்

செவ்வாய் தோஷம்

ஸ்ரீ குரு பகவான் வழிபாடு சுலோகம்

சங்கடம் தீர்க்கும் சனி பகவான்

தினசரி வழிபாட்டு துதிகள்

மகத்தான எளிய தமிழ் மந்திரங்கள்

எளிய தெய்வப் பரிகாரங்கள்


விடுபட்ட நூல்கள் :


ஜ்யோதிஷ ஞான போதினி

சிற்றம்பலசேகரம்

சோதிடகளஞ்சியம்

ஸ்ரீபதி ஜாதக சந்திரிகை விளக்கம்

அருட் கொடி சிற்ப சாஸ்திரக் கண்ணாடி

காக்கையர் சிற்பம்

சாத காலங்காரம்

குரு – சிஷ்ய சம்வாத ஹஸ்த இரேகை

அதிர்ஷ்ட ஜோதிட சாஸ்திரம்

சினேந்திர மாலை

அநு பவ ஹஸ்த ரேகை சாஸ்திரம்

பெரிய வருஷாதி நூல்

சோதிட அரிச்சுவடி முதல் பாகம்

நந்தி தேவர் சோதிடமர்மம்

ஜாதக கணிதம் முதல் பாகம்

அனுபவ கை ரேகை விஞ்ஞானம்

கைரேகை விளக்கம்

சோதிட பிரச்சாரம்

சோதிட பராக்கிரமம்

கைறேகைக் களஞ்சியம்

ஜாதக ராஜ மனோரஞ்சிதம்

ஜோதிட ஆராய்சி திரட்டு

கைரேகைக் கலை

சுகர் நாடி என்னும் ஜோதிட சிகாமணி

செவ்வாய், 15 ஜூன், 2021

மெகஸ்தெனிஸ் நூல் இன்டிகா தொடர்பான பாண்டியர் வரலாற்றுக்கு என் விளக்கக் குறிப்பு

 இச்செய்தி  திரு செந்தில் வேல் அவர்கள் இட்ட பதிவு  மெகஸ்தெனிஸ் நூல் இன்டிகா தொடர்பான பாண்டியர் வரலாற்றுக்கு என் விளக்கக்  குறிப்பே . 









பண்டேயா - பாண்டிமா தேவி 

தடாதகைப் பிராட்டி. 


        இச்செய்தி இன்டிகா என்ற நூலில்  கிமு 320 அளவில் எழுதப்பட்டுள்ளது .  சந்திரகுப்த மௌரியரின் அவைக்கு வந்த மெகஸ்தனிஸ் எழுதிய நூல் அது . இந்தியாவைப் பற்றிக் குறிப்பிடும் அவர் பாண்டிய நாட்டைப்பற்றிய பல செய்திகளைச் சொல்கிறார் . பெண்ணால் ஆளப்பட்டது என்பது அவற்றுள் ஒன்று . இதே காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அர்த்த சாஸ்திரம் தமிழகத்தின் வணிக மதிப்பை மட்டுமே சொல்கிறது . ஆனால் இது பிற்காலத்தில் எழுதப்பட்டது என்றே ஆய்வாளர் மதிப்பிடுகின்றனர் . ஆனால் , மெகஸ்தெனிஸ்  இந்தியா வருவதற்கு முன்பே தமிழகத்தைப்பற்றி மிகுதியாகக் தெரிந்து வைத்துள்ளார் என்று புரிகிறது . ஏனெனில் மகதத்தை கிரேக்கர் அறிவதற்கு முன்பே அவர்கள் தமிழகத்தை அறிவார்கள் .


      கிமு 1000 அளவிலேயே சாலமன் அரசர் காலத்திலிருந்தே கிரேக்கர் பொனீசியர் வழியே தமிழகத்துடன் வணிகம் செய்து வந்தனர் . கிமு 500 அளவிற்குப் பிறகு கிரேக்கர் நேரடி வணிகம் செய்தனர் . மிளகு  ,  முத்து  ,  சந்தனம்  , ஏலம் வணிகத்தில் கடல் கொள்ளாத பாண்டிய நாட்டுத் துறைமுகங்களே பெரும் பங்காற்றின  .  கொற்கை அப்போது பெரு நகரமாக  --  துறைமுகமாக இன்னும் மேற்கே பலகாத தொலைவு பரந்திருந்தது  .   பெருநகர் புகார்  -- காவிரிப்பூம்பட்டினம் போல   பரந்து விரிந்த நகரம் .  ஆதிச்சநல்லூர் பல நூறு ஆண்டுகள் கொற்கையின  இடுகாடாக இருந்த இடமே . அத்தகைய  பெருநகரம் இல்லாமல் ஆதிச்சநல்லூர் போன்ற 113 ஏக்கர் விரிந்த இடுகாடு இருக்க முடியாது  . மேலும் பல்வேறு  உலக இனமக்கள் அங்கு தாழிகளில் புதைக்கப்பட்டிருந்த கரணம் அதுவே . 


        எனவே ,  பாண்டிய நாடு கடல் வணிகத்தால் மேலைநாடுகளில் புகழ் பெற்றிருந்தது . கிமு 6 ஆம் நூற்றாண்டில் ஆண்ட சுமேரிய  அசூர் பணிபால் என்ற மன்னன் ஏடுகளில் பாண்டியநாடு பாடே என்றும் , தலைநகர் கூடல் கூடே என்றும் குறிக்கப்படுவதாக ரொமிலா தாபர் குறிப்பிட்டு பாண்டியரின் பெருமைக்கு அவர்கள் நாகரிகப் பாங்கே காரணம் என்கிறார் .  பாண்டிய நாட்டுடன் தங்களுக்குரிய நட்புறவால் தோன்றிய மரபுச் செய்திதான் கிரேக்கர் அறிந்திருந்த பாண்டேயா கதை .  கிரேக்கர் தங்களுக்குள் இத்தகைய தொன்மத்தைப் பெற்றிருந்தும் தெளிவாகிறது . இதில் வரும் கிராகிளிஸ் கிரேக்க நாட்டு வீரர் அல்ல . கிரேக்கர் தாங்களறிந்த எல்லா வீரர்களையும்  ஹர்குலிஸ்  ,  ஹிராகிளிஸ் என்று ஒப்பீட்டுப் பெயர் கொடுத்து அழைப்பர் . அத்துடன் அல்லி அரசாணி நாடோடிப்  பாடல்  கதை  ,  அர்ஜூனன் பிற்காலக் கதை  ,  பாண்டிய நாட்டின் நமக்குத் தெரியாத மறந்துபோன பெரு வீரரான மன்னன் வரலாறு  ,  பேரரசி தடாதகைப் பிராட்டி வரலாறு ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை . தடாதகை வரலாற்றைத் தமிழர் தொன்மமாகத் தொடரவிட்டிருந்தால் தமிழர் வரலாற்றுத் தொன்மம் ஆகி இருக்கும் .


       மதுரை மீனாட்சியை பிராமணியப்படுத்த தடாதகையார் வரலாற்றை அவருக்கு மூன்று  மார்பகங்கள் இருந்தன என்ற அபத்தப்  புராணக்  கதையாக மாற்றி பிராமணீயப் புராணிகர்கள் வரலாற்றை அழித்துவிட்டனர் . தடாதகை ஆணுக்குச் சமமான மறக்குலப்பெண் ஆகவே நாணம் அறியாதவர் அவர் எந்த ஆண்டவனைக் கண்டு நாணம் அடைகிறாரோ அப்போது பெண்மை பெறுவார் என்பதே உண்மைத் தமிழரது  தொன்மமாக இருக்க முடியும் . தடாதகை படைநடத்திச் சென்ற இடங்கள் அவரது தொன்மக் கதையில் உள்ளன . அதன் வருணனை கடல் கொண்ட பாண்டிநாட்டின் இலங்கை உட்பட கிழக்கு நிலப்பகுதியே என்பதில் ஐயமில்லை . அப்போது இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே சதுப்பு நிலங்களும் , காடுகளும் , மணற்பாங்கான பாலைகளும் இருந்தன என்று தெரிகிறது  .  பாண்டிச்சேரிக்குக் கிழக்கில் கடலில்  அணந்துபோன எரிமலை வாய்கள் இருப்பதாக கடற்தரை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர் . அத்தகைய பெருவீரப் பெண்மணியான தடாதகைப் பிராட்டியையே பாண்டேயா என்று மெகஸ்தெனிஸ் குறிப்பது  என்பது என் கருத்து  . அவரது தந்தை புகழ் பெற்றதொரு மாமன்னர் ஆக இருக்க  வேண்டும் . மெகஸ்தனிஸ் இன்டிகா  குறிப்பின் அடிப்படை இதுதான் . தடாதகைப் பிராட்டியே பண்டேயா என்ற பெயரில் மெகஸ்தெனிஸ் குறிக்கிறார் . 


     இன்னொரு செய்தி :  சங்க காலப் பாடல்களைத்  தங்கள் அரசர்கள் , தங்கள் நாட்டு நலம் , தமக்குப் பிடித்த  பாடல்  , தமக்குப் பெரும்புலவர் என்று தோன்றிய சிலர் என்றில்லாமல் ,  தொன்மையான படல்களையும் ,  திணை துறை என்ற வேறுபாடு இன்றி எண்ணிக்கை  பார்க்காமல் அப்போது கிடைத்த அனைத்துப் பாடல்களையும் பல தொகுதிகளாகத் தொகுத்து வைத்திருந்தால் பழம்பாடல்கள் அழியாது காப்பாற்றப் பட்டிருக்கும் . தமிழக வரலாறு விளக்கம் பெற்றிருக்கும்  . 

பூர்ண சந்திர ஜீவா முக நூலில்

சூன் -16, சின்ன மருதுவின் "ஜம்புத்தீவு பிரகடனம்"

ஜே.கோர்லே என்னும் ஸ்காட்லாந்தியர் 1813 ஆம் ஆண்டு எழுதிய "MAHRADU" என்ற இந்நூல், இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்த ஆங்கில நூலாகும். மருதரசர்கள் 1801 யில் மறைந்த பின்பு 

12 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த நூலாகும். மருதரசர்களின் வரலாற்றை பதிவு செய்த நூல்களில் மிக பழமையான நூல். 


சின்ன மருதுவின் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் அறிக்கையை முழுமையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். விடுதலை வேண்டி அடிமனத்தின் ஆழத்திலிருந்து குரல் கொடுக்கும் இந்த அறிக்கை கோர்லேயையும் மிகவும் பாதித்திருக் கிறது. இந்த அறிக்கையைக் கி.பி. முதல் நூற்றாண்டில் ஜூலியஸ் அக்ரிகோலா வின் தலைமையில் நிகழ்ந்த ரோமானியப் படையெடுப்பிற்கு எதிராகக் கால்காகஸ் என்ற கலடோனியத் (வட ஸ்காட்லாந்து) தளபதி நிகழ்த்திய பேருரைக்குக் ஒப்பாக சின்ன மருதுவின் சுதந்திரப் பிரகடனத்தை ஒப்பிடுகிறார்.


அந்த ஆங்கில நூலில்  14 முதல் 26 வரை உள்ள பக்கங்களில் பதிவிடப்பட்ட சின்ன மருதுவின் ஜம்புத்தீவு பிரகடனத்தின் தமிழாக்கத்தின் பகுதியை தமிழ்க் கூறும் நல்லுலகின் பார்வைக்கு வைக்கிறேன். இந்த ஆங்கில நூலை தமிழில் தந்தவர் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர், 

பேரா நா.தர்மராசன் அவர்கள் ஆவார். 


ஜே.கோர்லேவின் "MAHRADU"  

நூலில் இருந்து.....

--------------------------------------------------------

1800 ஆம் ஆண்டில் திப்பு மரணமடைந்து மைசூரைக் கைப்பற்றிய பின்னர் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு எல்லா திசைகளிலும் மனித நேயத்துக்கு எதிரான முறையில் தன்னை விஸ்தரித்துக் கொண்டிருந்தபொழுது, சிற்றரசர்கள் ஒவ்வொருவரையும் அழித்த பிறகு, அவர்களுடைய உடைமைகளை தான் கைப்பற்றியதோடு, வீரர்களை கொள்ளையடிக்க அனுமதித்த காலத்தில் மருது என்ற பாளையக்காரர் வாழ்ந்தார். அவர் பழமையான கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் முன்னோர்கள் இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் மதுரைப் பிராந்தியத்தில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய ஒரு பகுதியை ஒட்டிய கணிசமான ஒரு பிரதேசத்தை மூதாதையர்களிடமிருந்து பெற்றிருந்தனர்.


அரசுகளும், பேரரசுகளும் சரிந்து கொண்டிருக்கிற காலத்தில் வறுமை மற்றும் துன்பத்தால் மருது பரம்பரையில் படிப்படியாக வளம் குன்றியது. மருது சிறந்த பண்பாளர் கண்ணியமானவர். கிழக்கிந்திய கம்பெனியுடன் (இந்தியாவில் அவரது அரசுகளுடன் என்று குறிப்பிடுவது பொருந்தமானது) பல போர்களில் அவர் ஈடுபட்டார். ஒவ்வொரு சண்டையிலும் அவர் தோல்வியடைந்தாலும் கம்பெனி இராணுவத்திற்கு வெற்றி சுலபமாகக் கிடைக்கவில்லை. கடைசியில் கம்பெனிக்குக் கப்பம் கட்டுகின்ற தாழ்வு நிலைக்குத் தள்ளப்பட்டார். பிறகு கம்பெனி அரசாங்கம் அவருடைய ஆட்சிப் பிரதேசத்தைக் குறைத்தது. அதிகமான கப்பம் வசூலித்தது. அவமதிப்பான ஆணைகளை அனுப்பியது மற்றும் கொடுங்கோன்மையான இதர வழிகளையும் கடைப்பிடித்தது. மருது தன்னுடைய முன்னோர்களின் அதிகாரத்தை இழந்து அவர்களின் நிழலாக மாறினார்.


மருது, தன்னுடைய படிப்படியான வீழ்ச்சியைப்பற்றி அடிக்கடி சிந்தித்தார். பொதுமக்களும் நாள்தோறும் புகார் செய்தார்கள். அவருடைய சுதந்திரத்தைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றாலும் அதை மறுபடியும் பெறுவதற்கு மற்றொரு முயற்சியை செய்ய அவரால் முடியாது. தன்னுடைய கெளரவத்தை சிறிதும் குறையாத அளவில் மரபுரிமையாக தன்னுடைய சந்ததியினரிடம் அவர் ஒப்படைக்க வேண்டும் என்று அவருடைய மதமும், கல்வியும் கற்பித்திருந்தன. திப்புவின் மறைவிற்குப் பிறகு அவரது வலிமையான குடும்பம் மற்றும் நாட்டின் எல்லா அரசர்களும் ஆங்கிலேயர்களின் காலடியில் கிடப்பதைப் பார்த்தார். ஒரு கெட்ட நேரத்தில் மருது பின்வரும் பிரகடனத்தை எழுதினார். கோட்டைகளின் முன் வாயில்களிலும் நாட்டிலுள்ள பொது இடங்களிலும் அதை ஒட்டச் செய்தார்.


"நாட்டு மக்கள் அனைவரும் இந்தப் பிரகடனத்தை கவனமாகப் படிக்க வேண்டும். 


ஜம்பு தீபத்திலுள்ள எல்லாச் சாதியினர், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் முசல்மான்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.


கர்நாடகத்தின் அரசராகிய முகம்மது அலி நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர் களுக்கு இடத்தைக் கொடுத்து இப்பொழுது விதவையைப் போல ஆகிவிட்டார். ஐரோப்பியர்கள் தங்களுடைய வாக்குறுதியை மீறி இந்த நாட்டைக் கைப்பற்றி விட்டார்கள். அவர்கள் இங்கு வசிப்பவர்களை நாய்களாக்க் கருதி அவர்கள் மீது அதிகாரம் செலுத்துகிறார்கள். மேலே குறிப்பிட்ட சாதியினரிடம் ஒற்றுமை யில்லை. நட்புணர்ச்சியில்லை. சுதேசி அரசர்கள், ஐரோப்பியர்களின் மோசடி களைப் புரிந்து கொள்ளாமல் ஒருவரோடு ஒருவர் சண்டை செய்து நாட்டை முற்றாக அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள்.


இந்த இழிபிறவிகளால் ஆளப்படுகின்ற இராஜ்ஜியங்களில் வசிப்பவர்கள் ஏழைகளாகிவிட்டார்கள். வயிற்றுக்குச் சோறில்லை. அவர்கள் துன்பப்பட்டாலும் அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளும் அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு மனிதன் ஆயிரமாண்டுகள் வாழ்ந்தால் கூட முடிவில் மரணம் வருவது நிச்சயம். கர்நாடக நவாப், திருமலை நாயக்கர் பரம்பரையில் விசுவநாத நாயக்கர் (தஞ்சாவூர்) ஆகியோர் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் சிறிதும் பாதிக்கப்படாதபடி தங்களது பரம்பரை உரிமையைப் பெறுவார்கள். அவருடைய இராஜ்ஜியங் களில் ஐரோப்பியர்களின் அதிகாரம் ஒழிந்து போவதால் நவாப்புகள் ஆட்சியில் இருந்ததைப் போல நிரந்தரமான மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியும்.


இழிபிறவிகளை ஒழிப்பதற்கு ஒவ்வொரு பாளையத்திலும் ஒவ்வொரு இடத்திலும் உள்ள எல்லோரும் ஆயுதங்களோடு ஒன்று சேர வேண்டும். அப்பொழுது ஏழைகளுக்கும் துன்பமடைந்தவர் களுக்கும் உணவு கிடைக்கும். ஆனால் யாராவது இந்த இழிபிறவிகளின் ஆணைகளை நிறைவேற்றி நாய்களைப் போல மகிழ்ச்சியடைந்தால் அவர்கள் கருவறுக்கப்படவேண்டும். இந்த இழிப்பிறவிகள் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து கொண்டு இந்த நாட்டை எப்படி அடிமைப்படுத்தினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே, பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் முசல்மான்கள் ஆகியோர் மீசை வைத்திருப்பவர்கள், வயலில் அல்லது மற்ற இடங்களில் பாடுபடுபவர்கள், இழிபிறவிகளிடம் வேலை செய்கின்ற சுபேதார்கள், ஜமீன்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் முதல் கட்டத்தில் தங்களுடைய  வீரத்தைக் காட்டட்டும். அதாவது இந்த இழிபிறவிகளை எங்கு பார்த்தாலும் கொல்லட்டும். இந்த இழிபிறவிகளிடம் வேலை செய்பவர்கள் தங்களுடைய மரணத்திற்குப் பிறகும் நிம்மதி அனுபவிக்க மாட்டார்கள். 

இதை மறவாதீர்கள்! இதை 

பின்பற்றாதவனுடைய மீசை என் மறைவிடத்து மயிருக்குச் சமம். அவன் உணவு ருசியில்லாமல் போவதுடன் ஊட்டமளிக்காது. அவர் மனைவி சோரம் போவாள். அவனுடைய குழந்தைகள் இழிப்பிறவிகளுக்குப் பிறந்த பிறவிகளாகக் கருதப்படும்.


ஐரோப்பியர்களால் இரத்தம் கலப்படமாகாத எல்லோரும் ஒன்று சேர வேண்டும். இதை யார் படித்தாலும் அல்லது படிக்கச் சொல்லிக் கேட்டாலும் இதை எழுதி தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலே சொன்னபடி இதை எழுதாதவர்கள், சுற்றறிக்கையாக  இதை அனுப்பாதவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை செய்தவர்களாகக் கருதப் படுவார்கள். நரகத்தின் எல்லா தண்டனைகளும் அவர்களுக்குக் கிடைக்கும். இதைச் செய்யாத முசல்மான்கள் பன்றியின் இரத்தத்தைக் குடித்த பாவியாக இருப்பான். இந்தப் பிரகடனம் ஒட்டப்பட்டிருக்கும் சுவரில் இருந்து இந்தப் பிரகடனத்தை கிழிப்பவர்கள் ஐந்து மாபெரும் பாவங்களைச் செய்த குற்றவாளிகளாகத் தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரும் இந்த பிரகடனத்தைப் படித்து இதைப் பிரதியெடுத்துக் கொள்ள வேண்டும்.


                                                        இப்படிக்கு

                                           மருதுபாண்டியன்,

                               பேரரசர்களின் ஊழியன்          ஐரோப்பிய இழிபிறவிகளுக்கு ஜென்ம எதிரி.


சீரங்கத்தில் வசிக்கின்ற புரோகிதர்கள் மற்றும் புண்ணியவான்களுக்கு மருது பாண்டியன் உங்களின் பாதங்களில் விழுந்து பலமுறை வணங்குகிறேன். தென்னாட்டு அரசர்கள், கோட்டைகளையும், மாதா கோயில்களையும், ஆலயங் களையும், தொழுகையிடங்களையும் கட்டினார்கள். அந்த மாபெரும் அரசர்களின் வழிவந்த பாளையக்காரர்கள், இந்த இழிப்பிறவிகளின் அநீதியான நடவடிக்கையால் வறுமையில் வாடுகிறார்கள். எவ்வளவு உயர்ந்த மனிதர்கள் இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்த இழிநிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டாமா? எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவர் நீங்கள். இந்தப்பணி வென்றிட..... என்னை ஆசிர்வதியுங்கள்."


இதைப் படித்த பொழுது இதே மாதிரியான பிரகடனத்தை நான் எங்கோ படித்திருந்ததாக உணர்ச்சி ஏற்பட்டது. ஆம்! சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு அக்ரி கோலாவின் தலைமையில் வந்த ரோமானியப் படையெடுப்பாளர் 

களை எதிர்த்துப் போர் புரியுங்கள் என்று கலடோனியா தளபதியான கால்காகஸ் தன்னுடைய படைவீரர்கள் முன்னால் நிகழ்த்திய உரை என் நினைவிற்கு வந்தது. மனித இயல்பு எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருந்திருக்கும். அன்னியர்கள் எல்லோரும் கொடியவர்கள்; பணத்தாசை உள்ளவர்கள், உண்மையான வீரர்களுக்குரிய பெருந்தன்மை அவர்களுக்கு இருக்காது என்று எடுத்துக்காட்டுவது மருது பாண்டியரது பிரகடனத்தின் முக்கியமான நோக்கமாகும். கால்காகஸ்ஸின் நோக்கமும் அதுவே. அவர் ரோமானியர் களின் காட்டுமிராண்டித்தனம், பேராசை, ஊதாரித்தனம் ஆகியவற்றை வன்மையாக கண்டனம் செய்கிறார். தன்னுடைய நாட்டு மக்களின் முன்னோர்களின் நினைவு களைக் கூறி அவர்களின் குடும்பங்களைப் பற்றிப் பேசி அவனது ஆண்மையைத் தூண்டுகிறார். "ஆயுதங்கள் வீரர்களுக்குப் பெருமை சேர்கின்றன. இப்பொழுது கோழைகளுக்கு கடைசிப் புகலிடமாக இருக்கின்றன" என்றார்.


பிரிட்டனில் வசிக்கின்ற மிகச் சிறந்த மனிதர்களாகிய நாம், அடிமைப்படுத்திய நாடுகளிலிருந்து நெடுந்தூரத்தில் வசிக்கின்ற நாம், அந்த அடிமைகளைப் பார்க்காததன் மூலம் நமது கண்களை மாசு படியாமல் காப்பாற்றிக் கொண்ட நாம்,  இத்தகையக் கொடுஞ்செயல்களை அனுமதிக்கலாமா?  படையெடுப்பாளர் களின் ஆணவத்திற்கு நாம் அடிபணிய மாட்டோம். இவர்கள் உலகத்தைக் கொள்ளையடித்தவர்கள், நாடுகளைச் சூறையாடிய பிறகும் கடல்களைத் தாண்டிச் சென்று கொள்ளையடிக் கிறார்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் நசுக்குகிறார்கள். கிழக்கிலும் மேற்கிலும் அவர்கள் அலைகிறார்கள். செல்வத்தையும்,  வறுமையையும் ஒரே மாதிரியான தீவிரத்துடன் பார்க்கிறார்கள். போலியான உரிமைகளைச் சொல்லிக் கொள்ளையடித்தும், மனிதர்களைப் படுகொலை செய்தும் அவர்கள் பேரரசுகளை உருவாக்குகிறார்கள். 

அவர்கள் அதைச் சமாதானம் என்கிறார்கள். நம்முடைய அன்புப் புதல்வர்களைக் கட்டாயமாக இராணுவத்தில் சேர்த்து வெளிநாடுகளில் சண்டை போட அனுப்புகிறார்கள்.


நம்முடைய மனைவியர்களையும், புதல்வியர்களையும் நாம் மிகவும் நேசிக்கிறோம். அவர்கள் இந்தக் காட்டுமிராண்டிகளின் வன்முறைக்குத் தப்பினால், நட்பு என்ற முகமூடியால் காயப்படுத்தபடுகிறார்கள். நம்முடைய சொத்துக்களைக் கப்பம் என்ற பெயரில் அள்ளிக்கொண்டு போகிறார்கள். நாம் விளைவித்த தானியங்களைப் பறிமுதல் செய்கிறார்கள். சவுக்கடியாலும், கடுஞ்சொற்களாலும் நம்முடைய வலிமையை அழிக்கிறார்கள். அடிமைகள் முதலில் விலைக்கு வாங்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். பிறகு அந்த எஜமானர்கள் அவர்களுக்கு உணவு தருகிறார்கள். சீரழிந்து போன பிரிட்டன் அடிமையாக இருப்பதற்கும் அந்த அடிமைத்தனம் நீடிப்பதற்கும் கப்பம் கட்டித் திருப்தியடைகிறது.


இனிமேல் தப்பமுடியும் என்கிற நம்பிக்கை அழிந்துவிட்டது. ஏனென்றால் தம்மிடம் எஞ்சியிருக்கின்ற வீரமும், சுதந்திர உணர்ச்சியும் நம்முடைய மூர்க்கத்தனமான எஜமானர்களிடம் அதிக வெறுப்பைத் தூண்டுகிறது. ஆகவே, "அன்பார்ந்த சகோதரர்களே! சுதந்திர உணர்ச்சி இனிமேலும் இழக்காமல் காப்பாற்றியுள்ள நீங்கள் கலிடோனியாவைப் பாதுகாப்பதற்கு நாங்கள் இன்னுயிர்களை அர்ப்பணிப்போம் என்று அறிவியுங்கள். ரோமானியர்கள், அமைதிக் காலத்தில் ஆணவத்தோடு நடந்து கொள்வதைப் போல, வீரத்தோடும் போர் புரிவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? நம்முடைய பிரிவினைகளும், வேற்றுமைகளும் அவர்களுக்கு உதவுகின்றன. எதிரிகளின் தவறுகளைப் பயன்படுத்தி அவர்களது இராணுவம் வெற்றி பெறுகிறது. வெற்றிதான் அந்த இராணுவத்தை சேர்த்து வைத்திருக்கிறது. தோல்வி யடைந்தால் அவர்கள் விரைவில் சிதறிப் போய் விடுவார்கள்."


பேராண்மை எனப்படுவது சுதேசியிடம் தான் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து. மேலே தரப்பட்ட உரை, 19 ஆம் நூற்றாண்டின் ஆன்மாவைத் தூண்டக்கூடியது. ஆனால் நமது தத்துவ ஞானிகளால் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அதை பிரதியெடுக்க முடியாது. கவனமுள்ள வாசகர்கள் இந்த வீர உரைக்கும் மருதுபாண்டியருடைய பிரகடனத்திற்கும் ஒரு சில ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டுபிடித்திருப்பார்கள். தன்னம்பிக்கையும் பெருமிதமும் உள்ள ஒரு வீரரை இந்தப் பிரகடனத்தில் பார்க்கலாம். மறுபக்கத்தில் இரும்புக் கரங்களால் ஒடுக்கப்பட்டு, பூமியில் அழுத்தப்பட்டுள்ள ஒரு வீரரின் வேதனைக் குரலை கேட்கிறோம்.


நான் தொடக்கத்தில் குறிப்பிட்ட நண்பர், இந்த பிரகடனத்தின் பிரதியை என்னிடம் தந்தார். இந்தியாவில்  நம்முடைய பிரதேசங்களில் வசிக்கின்ற சுதேசிகளில் எண்ணற்றவர்கள் இப்படித்தான் சிந்திக்கிறார்கள். ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக இந்திய அரசாங்கங்கள் மற்றும் ஆங்கிலேயர் களிடமிருந்து இந்தச் சிந்தனைகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மருது தனக்கு எதிராக வீசுகின்ற சூறாவளிக் காற்றை எதிர்த்து நின்று கொண்டு இதை முழங்குகிறார். மற்றவர்கள் இதைப் பைத்தியக்காரத்தனம் என்று சொல்லலாம். ஆனால் என்னுடைய கருத்து அதற்கு எதிரானது.


இந்தப் பிரகடனத்தைப் பற்றிய செய்தி ஒரு மாவட்ட ஆட்சியருக்குக் கிடைத்தது. அவர் உடனே அதைப் பிரதியெடுத்து தலைமை அதிகாரிக்கு மிக அவசரமாக அனுப்பினார். தேசத் துரோகம்! கலகம்! என்று அவர்கள் கூக்குரலிட்ட்டார்கள். மருதுவையும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண் வாரிசுகள் அனைவரையும் கேவலமான முறையில் ஒழிப்பதற்கு உத்தரவுகள் உடனடியாக வெளியிடப் பட்டன. மருதுபாண்டியர் மிகவும் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டபடியால் மருது இந்தப் பிரகடனத்தைத் தயாரித்தார் என்று நான் கூறவில்லை. மருது இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நற்பண்புகளையெம், இனிமையான சுபாவத்தையும் அவமதித்துவிட்டார் என்று ஒத்துக்கொள்வதற்குக் கூட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் மருது குடும்பத்திற்கு நடந்த மிகவும் பயங்கரமான கொடுமையை யாரும் கற்பனையில் கூட நியாயப்படுத்த முடியாது.


                                            "ஜே.கோர்லே"

                                            ‎         (1813)

----------------------------------------------------------------------

அகமுடையார் வரலாற்று 

மீட்புப் பணியில்..... 


சோ.பாலமுருகன் 


புலனம் (WhatsApp) எண் : 94429 38890.

*சொல்லின் முதலெழுத்தை எடுத்துக் கடைசியில் சேர்த்து - வலம் இடமாக வாசிக்கவும். வரும் வார்த்தை- அதே;அதே.*


கம்பம்

பொன்னன்

ரம்பம்

பாதிமதி

சிம்மம்

நீதிபதி

கும்பம்

அன்பன்

அதிபதி

காசிவாசி 

கோடுபோடு

இடுகாடு- சுடுகாடு

வீடுதேடு

கோல்மால்

பாசிஊசி

ஆல்போல்

பிம்பம்

சோலைமலை

கடைமடை

கூடைமுடை 

சடுகுடு

சின்னன்- சின்னான்

மெய்யாய்-பொய்யாய்

கைலைமலை

பாரிஓரி

மன்னன்...

                                 *-யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்  இனிதாவதெங்குங் காணோம்....*


🌹🌹🌹👌🏽👍🙏🏻

திங்கள், 14 ஜூன், 2021

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் கூறும் அறிவுரைகள்.....

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.


(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)


2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.


(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.)


3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.


(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.) 


4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....


(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.)


5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...


(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)


6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....


(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)

---------------------


இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!


► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!


► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!


நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. 


ஓடுவது முள் அல்ல..! 

நம் வாழ்க்கை...

ஞாயிறு, 13 ஜூன், 2021

*ஜோதிடத்தில் நவகிரக சனி பற்றிய விரிவான பதிவு !*

சனி கிரகம் சூரியனுக்கு சுமார் 88,66,000 மைல்கள் அப்பால் இருந்து சூரியனை சுற்றி வருகிறது. 


ஒரு தடவை சுரியனை சுற்றி வர 29 வருடகாலம் ஆகிறது. 


சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். 


அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். 


சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். 


அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார்.


சனி கொடுத்த செல்வத்தை அவராலே கூட பிடுங்க முடியாது அந்த அளவுக்கு நன்மையை தருவார். 


சனிபகவானுக்கு 3,7,10 என்ற பார்வை உண்டு. 

இரவில் வலிமை,

எருமை,யானை,அடிமை வாழ்வு,எண்ணெய்,வீண்கலகம்,கள்ளத்தனம்,கருநிறமுள்ள தானியம்,இரும்பு,கல்,மண்,

சுடுகாடு, மதுகுடித்தல்,

கஷ்டகாலம்,சிறைவாழ்வு ஆகியவற்றுக்கு காரணம் ஆகிறார். 


சனிபகவான் மகர ராசிக்கும், கும்ப ராசிக்கும் அதிபதி. 


அனுஷம், பூசம், உத்திரட்டாதி  நட்சந்திரங்களுக்கு நாயாகன். 


துலாம், சனிபகவானுக்கு 

உச்ச வீடு. 


மேஷம் நீச வீடு


நீசம்  பெற்ற சனிபகவான் நன்மை தரமாட்டார். 


உச்சம் பெற்ற சனிபகவான் நன்மைகளை வாரி  வழங்குவார். 


சனிபகவான் பார்வை கொடியது. 


சனிபகவானுக்கு சுபகிரகங்கள் பார்வை நன்மை செய்யும்  இடமான 3,6,10,15,9 அகிய இடங்களில் இருந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. 


நீண்ட கால வாழ்வுக்கும், மரணத்திற்க்கும் காரகன் சனிபகவான். 


வாகனம் காகம்.  கலி,காரி,முடவன் என்ற பல பெயர்கள் உண்டு. 


ஓருவர் ஜாதகத்தில் சனி நீசம் பெற்று வக்கிரம் பெறாமல் பலம் இழந்த நிலையில்  இருந்தால் வாத நோயை ஏற்படுத்தும். 


சனிபகவான் பலம் பெற்ற ஜாதகர் சர்வ சக்திகளையும்  பெறவாய்ப்பு உண்டு. 


ஜாதகத்தில் நல்ல நிலையில் சனி இருந்தால், அந்த ஜாதகர் ஓரு நாட்டுக்கே தலைவராகவும்  வாய்ப்பு உண்டு.


வறுமை, நோய், கலகம், அவமரியாதை, இரும்பு, எண்னை, கருமைநிறம்,  

பெரிய இயந்திர தொழிற்சாலை, 

தொழிலாளர் வர்க்கம் இவைகளுக்கு காரகன். 


சனிபகவான் பலம்  பெற்று அமைந்தால் ஜாதகருக்கு அவர் சம்மந்தபட்ட இனங்களில் பொன்னையும், பொருளையும்  வாரி வழங்குவார். 

                                                    

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். 


நீண்ட ஆயுளுக்கும், மரணத்திற்கும் அதிபதி சனியே. 


சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். 


சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. 


ஏழரை நாட்டு சனி என்றழைக்கப்படும் எழரை ஆண்டுகளில் இவனைத் துதித்து வழிபட்டால் நலம் பெறலாம். 


எண்ணெய், கறுப்பு தானியங்களுக்கு சனியே அதிபதி. 


கருமை இவனுக்கு உகந்த நிறம். இயந்திரம் சம்பந்தபட்ட அனைத்திற்கும் ஆதிபத்யம் சனிக்கே உண்டு. 


உடலில் நரம்பு இவன். தாமச குணத்தோன். ஒற்றைக் கால் சற்று குட்டையாக இருப்பதால் மந்த நடையை உடையவன். ஆகவே மந்தன் என்றும் அழைக்கப்படுவான். 


மேற்குத்திசை சனிக்கு உரியது. 


திருநள்ளாறு சனிக்கு உரிய தலம். 


சனிக்கு அதி தேவதை யமன். 


பிரத்யதி தேவதை பிரஜாபதி. 


நீலம் இவருக்கு உகந்த ரத்தினம். 


காகமே சனியின் வாகனம். 


சனி பகவான் படைக்கலன்கள் ஏதுமின்றி பரமானந்த சொரூபமாக விளங்குகிறார். 


சனித்தொல்லையால் வாடும் எவரும் திருநள்ளாறை அடைந்து நளதீர்த்தத்தில் 

மூழ்கி சனி பகவானின், பாதம் பணியலாம். 


சனீஸ்வர பகவானுக்கு கருங்குவளை மாலை அணிவித்து நல்லெண்ணை தீபம் ஏற்றி வந்தால் வறுமைகள், துன்பங்கள் நீங்கி தொழில் சிறப்புரும்


திருநள்ளாறு:


இறைவர் திருப்பெயர்      : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர் 


இறைவியார் திருப்பெயர்   : போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை 


தல மரம்  : தர்ப்பை


தீர்த்தம்  : நளதீர்த்தம்

சிவகங்கை 


வழிபட்டோர்: திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர்,  அர்ச்சுனர், 

நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள்,  வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி 


தேவாரப் பாடல்கள் : 

1. சம்பந்தர் - 

1. பாடக மெல்லடிப் பாவை,  

2. போகமார்த்த பூண்முலையாள்,  

3. ஏடுமலி கொன்றையர,

 4. தளிரிள வளரொளி.

2. அப்பர்   -

1. உள்ளாறாததோர் புண்டரிகத் திரள், 

2. ஆதிகண்ணான் முகத்திலொன்று.

3. சுந்தரர்  -          செம்பொன் மேனிவெண் ணீறணி.


தல வரலாறு இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. 


இறைவனருளால், 

நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான். 


திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, 

அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது.


சிறப்புக்கள்: இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று(தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்). 


இது, சனி தோஷம் நீங்கும் சிறப்புடைய தலம்.


இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிபகவான் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். 


இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்.. 


இது,தருமை ஆதீனக் கோவிலாகும். 


சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.


அமைவிடம்: மாநிலம் : 

தமிழ் நாடு 


இது, பேரளம் - காரைக்கால் இரயில் பாதையில் உள்ள நிலையமாகும். 


இரயில் நிலையத்திற்கு அருகிலேயே கோவில் உள்ளது. 


காரைக்கால், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.


 தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 52வது தலம். 


திருவிழா: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம்.


தல சிறப்பு:இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் 

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

(மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி) சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது.


இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். 


காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். 


அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம். புதுச்சேரி-609 606. 


இது சிவத்தலமாயினும் சனிபகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. 


இத்தல விநாயகர் சொர்ணவிநாயகர் 

என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். 


திருமால், பிரமன், இந்திரன், திசைப்பாலர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்,நளன் முதலியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம். 


கோயிலின் தென்புறம் இடையனார் கோயில் உள்ளது. 


இங்கு இடையன், அவன் மனைவி, கணக்கன் ஆகியோர் உருவங்கள் உள்ளன. 


சனித்தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் ஒழிய பிரம்ம தீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். 


பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


தலபெருமை:சோமாஸ்கந்த

மூர்த்தி வடிவத்தின் பிறப்பிடம்


திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தை இல்லாத தம்பதியருக்கு அருள் புரிவர். 


திருமாலுக்கு குழந்தையில்லாமல் 

இருந்த வேளையில் அவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். 


அதற்கு பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமாஸ்கந்தமூர்த்தி என்ற புதிய வடிவை உருவாக்கினார். 


இந்த வடிவத்தை தேவலோகத்துக்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன், ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான். 


ஒரு கட்டத்தில் வாலாசுரன் என்பவன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது, முசுகுந்தன் சோழ மன்னன் உதவியுடன் அவனை வென்றான் இந்திரன். 


இதற்கு பரிசாக அந்த சோமாஸ்கந்த மூர்த்தியைப் பெற்று வந்தான். 


அதை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தான். அதே போல மேலும் ஆறு மூர்த்திகளைப் படைத்தான். 


அதில் ஒன்றை திருநள்ளாறில் வைத்தான். அதுவே தற்போது "தியாகவிடங்கர்' என வழங்கப்படுகிறது. 


தியாகவிடங்கருக்கு இங்கே தனி சன்னதி இருக்கிறது. 


தியாகவிடங்கரை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.


திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும், முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். 


ஏனெனில், இந்த வாசல்படி மாடத்தில் சனீஸ்வரன் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை. 


நளன் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்துக்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ 

என்று பயந்த சனீஸ்வரன் வாசல்படியோடு நின்று, அவனை விட்டு நீங்கி விட்டதாக சொல்வர். 


ஆனால், இறைவன் சனீஸ்வரனின் நிலையைப் பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி, தன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார்.


தீர்த்தங்கள் : திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்பதே நிஜம். 


தற்போது கோயிலைச் சுற்றி நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. 


இதில் நள தீர்த்தத்தில் குளித்தால் சனித்தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் ஒழியும். வாணி தீர்ததம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடன் கூட கவி பாடுவான் என்று நம்பிக்கை. 


இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன. 


ஒரு காலத்தில் உலகிற்கு ஏதேனும் கேடு நேர இருக்குமானால் கங்கா, பிரம்ம மற்றும் நள தீர்த்தங்களின் நீர் சிவப்பாக மாறிவிடுமாம். 


இதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தகுந்த பரிகார பூஜைகள் செய்து மக்கள் தப்பித்திருக்கிறார்கள் என்கின்றனர்.


சனீஸ்வரனை வணங்கும் முறை : காலை 5 மணிக்கு 

நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். 


கோயிலுக்குள் உள்ள கிணறான கங்காதீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். 


இந்த சுவரில் வரையப்பட்டுள்ள நள சரிதத்தை பக்திப்பூர்வமாக பார்த்த பிறகு, காளத்திநாதரை வணங்க வேண்டும். 


பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். 


இங்குள்ள மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கிய பின் வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும். 


அங்குள்ள தெய்வங்களை தரிசித்து கட்டைக் கோபுர வாசல் சென்று அம்பிகை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். 


பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல 

வேண்டும். 


சிலர் முதலிலேயே சனீஸ்வரனை தரிசிக்க 

சென்று விடுகின்றனர். 


இது சரியான வழிபாட்டு முறையல்ல. இங்குள்ள இறைவனை பார்த்த பிறகு சனீஸ்வரனைக் கண்டால் தான் சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.


தங்கக்கவசம் :சனிப்பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில் தங்கக்கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். 


சனீஸ்வரனைக் கண்டால் எல்லாருமே ஓட்டம் பிடிக்கும் நிலைமையில், இங்கே தங்கக்கவச சனீஸ்வரனைத் தரிசிக்க கூட்டம் அலை மோதும். 


தமிழகத்தை தவிர கன்னட மக்களுக்கு சனீஸ்வரன் மீது நம்பிக்கை அதிகம். 


எனவே, தமிழ் மக்களுக்கு 

ஈடாக கர்நாடக மாநில மக்களும் இங்கு அதிக அளவில் வருகிறார்கள்.


சனீஸ்வரன் வரலாறு :

சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா. இவள் சூரியனின் வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தங்கியிருந்தாள். 


சாயாதேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார். பின்னர் உண்மை தெரிந்தது. 


சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். 


அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார். 


சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் 

இடம் பெற்றார்.


சனி-அறிவியல் தகவல் : இந்த கிரகத்தை இத்தாலி விஞ்ஞானி கலிலியோ வானமண்டலத்தில் இருந்ததை முதன் முதலாக பார்த்தார். 


பூமியில் இருந்து 128 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது. 


சில சமயத்தில் பூமியிலிருந்து விலகிப் போனால் 164 கோடி கி.மீ., தூரம் இருக்கும். 


பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அதற்கடுத்த இடத்தை சனி பெறுகிறது.


சனீஸ்வரனுக்கு உரியவை 

ராசி-மகரம், கும்பம் 

திசை-மேற்கு 

அதிதேவதை-எமன் 

நிறம்-கருப்பு 

வாகனம்-காகம் 

தானியம்-எள் 

பால்-அலி 

நட்பு-புதன்,சுக்கிரன்,

இராகு.கேது. 

பகை-சூரியன்,சந்திரன்.

செவ்வாய் 

சமம்-குரு 

திசைகாலம்-19 வருடங்கள் 

மலர்-கருங்குவளை 

நட்சத்திரங்கள்- பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி. 

மலர்-கருங்குவளை 

வஸ்திரம்-கருப்பு ஆடை 

ரத்தினம்-நீலமணி 

நிவேதனம்-எள்ளுப்பொடி சாதம் 

சமித்து-வன்னி 

உலோகம்-இரும்பு.


தல வரலாறு:நிடதநாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியை திருமணம் செய்தான். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். 


ஆனால், நளனை அவள் திருமணம் செய்ததால் பொறாமை கொண்டு, சனீஸ்வரனை நாடினர். 


சனீஸ்வரன் நளனின் தூய்மையான மனநிலையை அவர்களுக்கு உணர்த்த, அவனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்பப்படுத்தினார். 


மனைவி, மக்களையும், உடுத்தும் துணியைக் கூட இழந்து அவஸ்தைப்பட்ட மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை. 


ஒரு கட்டத்தில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை நளன் வணங்கினான். 


அப்போது சனி அவனை 

விட்டு நீங்கியது. அவனது வேண்டுகோளின் படி இதே தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் "சனீஸ்வரன்' என்ற பெயர் தாங்கி அருள்பாலித்தார். 


கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு, சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கப் பெறலாம். 


நளசரிதம் படித்தவர்களும் சனித்தொல்லை நீங்கப் பெற்று, வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவர்.


ஒதுங்கிய நந்தி : இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கியிருப்பதைக் காணலாம். 


இடையன் ஒருவன் அரசன் ஆணைப்படி கோயிலுக்குப் பால் அளந்து கொடுத்து

வந்தான். 


கணக்கன் அப்பாலைத் தன்வீட்டுக்கு அனுப்பிப் பொய்க்கணக்கு எழுதி, இடையனையும் அச்சுறுத்தி வந்தான். 


செய்தியறிந்த மன்னன் 

கோபம் கொண்டான். 


அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தம் சூலத்தை ஏவினார். 


அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் பலிபீடம் சற்று விலகியுள்ளது. 


சூலம் கணக்கன் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார்.


அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு தர்ப்பாரண்யேஸ்வரர் 

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி. சிவலிங்கத்தின்மீது முளைத்த தழும்பு உள்ளது)  


சனி பகவான் :ஒரு சிறந்த பரிகாரம்:

ஏழுதலைமுறைக்கு முன் 

செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம். 


எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது - 


அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் - சனி பகவான் , தயவு , தாட்சண்யமின்றி - கொடுமையாக தண்டிக்கிறார்.  


ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம். 


பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு,

விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு 

அந்த அரிசியை விநாயகரைச்சுற்றிப்போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.


அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். 


வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் , அது இன்னும் விசேஷம். 


சனிக்கிழமைகளில் 

இதை செய்யவும். அப்படித்தூக்கிச்சென்ற 

பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.


எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.


இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.


இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.


இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,

அதன் வலு இழந்துபோய்விடும்.


இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.


ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  


இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது. 


ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,

கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.  


உடல், ஊனமுற்றவர்களுக்கு - காலணிகள், அன்ன தானம் - அளிப்பது , மிக நல்லது.


ராசி கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சனி இருந்தால் என்ன பலன்  


சனி 1 ஆம் வீட்டில்  இருந்தால் மந்த புத்தி இருக்கும். வறுமை இருக்கும். துணைவர் மூலம் பிரச்சினை உருவாகும். நண்பர்களிடத்தில் சண்டை சச்சரவு இருக்கும். இளைய சகோதர சகோதரிகளிடத்தில் சுமுக உறவு இருக்காது. வாழ்வின் பின்பகுதி நன்றாக இருக்கும். இளம் வயதில் மூத்த வயதுபோல் தோற்றம் இருக்கும். சில நபருக்கு திருமண வாழ்வில் பிரச்சினைகள் 1 ஆம் வீட்டில் சனியால் வருகிறது. 


சனி 2 ஆம் வீட்டில்  இருந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவு இருக்கும் தாயாரின் உடல் நலம் கெடும். குழந்தை பாக்கியம் இருக்காது. ஆயுள் நன்றாக இருக்கும். தார தோஷத்தை ஏற்படுத்துவார்.வீட்டில் எப்போதும் ஒரு வெறுப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமணம் ஆனாலும் தொழில் விசயமாக துணையை விட்டு பிரிந்து சென்று வெளியில் தங்கிவிடுவார். வீட்டின் தொடர்பு மிக குறைவாகதான் இருக்கும்.


சனி 3 ஆம் வீட்டில்  இருந்தால நல்ல தைரியம் இருக்கும். சகோதர்கள் இருக்கமாட்டார்கள். அப்படியே இருந்தாலும் பகையாக இருப்பார். இந்த வீட்டில் சனி இருப்பது நல்லது தான் ஆனால் குழந்தை பாக்கியம் தள்ளி போகும். அண்டை அயலார் வீட்டுடன் சண்டை சச்சரவு இருக்கும். இசையின் மேல் அவ்வளவு ஆர்வம் இருக்காது. கடித போக்குவரத்தால் வில்லங்கம் தான் வரும். பயணம் செல்லும்போது அடிபடும். 


சனி 4 ஆம் வீட்டில்  இருந்தால் தாயாரின் உடல்நிலை கெடும். சொத்துக்கள் நாசம் ஆகும். வயிற்று வலி ஏற்படும். உடலில் முதுமை தெரியும். பழைய வாகனங்கள் வாங்கினால் யோகம் உண்டு. சிலபேர் பழைய வாகனங்கள் வாங்கி விற்க்கும் தொழில் செய்யலாம். சிலபேர் வீட்டை இடித்து தரும் தொழில்கள் செய்வார்கள். நான்காம் வீடு தங்கி இருக்கும் வீட்டை குறிப்பதால் பழைமையான வீட்டில் தங்கி இருப்பார்கள். 


சனி 5 ஆம் வீட்டில்  இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும்.வருமான குறைவு ஏற்படும். மனதில் நிம்மதி இருக்காது. ஐந்தில் சனி இருப்பவர்கள் வில்லங்க பார்ட்டியாக இருப்பார்கள. உணர்ச்சி வசப்படகூடியவர்கள். ஐந்தாம் வீடு புத்திர ஸ்தானத்தை குறிப்பதால் புத்திர தோஷம் ஏற்படும். திருமணத்திற்க்கு முன்பும் பின்பும் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அப்பொழுது தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்தவுடன் வருடம் ஒருமுறையாவது ராமேஸ்வரம் செல்ல வேண்டும். சில நபர்களை நீங்கள் பார்த்து இருக்கலாம். தங்கள் பிள்ளைகளுக்கு கொள்ளி போடுவார்கள் அவர்களின் ஜாதகங்களில் எல்லாம் ஐந்தாம் வீட்டுடன் சனி சம்பந்தப்பட்டு இருப்பார்.


இதற்கு தகுந்த பரிகாரம் ராமேஸ்வரம் தான். ஐந்தாம் வீடு குலதெய்வத்தை குறிப்பதால் கிராம தேவதையை வணங்கலாம்.


சனி 6 ஆம் வீட்டில்  இருந்தால் பகைவர்கள் இருக்கமாட்டார்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். வேலை ஆட்களால் பிரச்சினை ஏற்படாது. மாமன் வீட்டுடன் சுமூகமான உறவு இருக்காது. கணவன் மனைவியுடன் சிறிய தகராறு வந்து செல்லும். பிறர் பாராட்டும் படியான காரியங்களில் இறங்கி வெற்றி அடைவார்கள். பணவரவு நன்றாக இருக்கும்.காலில் அடிபட வாய்ப்பு உள்ளது. 


சனி 7 ஆம் வீட்டில்  இருந்தால் முதுமை தோற்றம் தெரியும். மர்ம பாகங்களில் முடி அதிகமாக தோன்றும்.திருமணம் தள்ளி போகும். துணைவருடன் எப்பொழும் சண்டை சச்சரவு இருக்கும். இளம்வயதில் திருமணம் நடந்தால் துணைவர் இரண்டு அமைவர்.உடம்பில் ஊனம் ஏற்படும். வறுமை இருக்கும். முகத்தில் கவலை தோன்றும். பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவார்கள். இவர்களுடன கூட்டு சேருபவர்கள் குள்ளமானவராக இருப்பார்கள். தாயாரின் உடல் நிலை கெடும்.


சனி 8 ஆம் வீட்டில்  இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டி இருக்கும். நிரம்தரமாக உடலில் நோய் இருக்கும். அதிக வாழ்நாள் இருப்பார். இறக்கும் போது மிகவும் கஷ்டபட்டு நோய்வாய் பட்டு இறப்பார். லக்கினாதிபதி ஆக இருந்து எட்டாம் வீட்டில் இருந்தால் உடல் அடிக்கடி முழு சக்தியையும் இழக்கும். அனைத்துக்கும் கஷ்டபட வேண்டி இருக்கும். சில பேர் இறப்பு சம்பந்தபட்ட தொழில்களில் இருப்பார்கள்.குழந்தை பாக்கியம் ஏற்படாது சில பேருக்கு குழந்தை பாக்கியம் தள்ளி போகும். 


சனி 9 ஆம் வீட்டில்  இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். தந்தையுடன் சண்டை சச்சரவு இருந்துகொண்டே இருக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சிலபேருக்கு காதல் திருமணம் நடைபெறும். மூத்த சகோர சகோதரிகளிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். நண்பர்களால் சண்டை வரும் வாய்ப்பு உள்ளது. 


சனி 10 ஆம் வீட்டில்  இருந்தால் தொழில் கொடி கட்டி பறப்பார். பெரும் பணக்காரராக்குவார். சமூகத்தில் பிறர் போற்றும் படி வாழ்வார். மிக பெரும் நிறுவனத்தில் தலைமைபொறுப்பு தேடி வரும். வருமானம் போல செலவும் அதிகமாக இருக்கும். புண்ணிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். சமயம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். பழைமையை விரும்புவார்கள். மனைவியிடம் சண்டை சச்சரவு இருந்து வரும். 


சனி 11 ஆம் வீட்டில்  இருந்தால் வருமானம் நிரந்தரமாக இருக்கும். தொழிலில் சிறந்து விளங்குவார். வியாபார சம்பந்தபட்ட விஷயங்களில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டவைப்பார். இளம்வயதில் நரை தோன்றும். நல்ல ஆயுள் இருக்கும். வருமானம் அதிகமாக வந்தாலும் மனதில் கவலை தோன்ற செய்யும். சிலபேருக்கு உயில் இன்ஸ்சுரன்ஸ் மூலம் வருமானம் வரும். 


சனி 12 ஆம் வீட்டில்  இருந்தால் வியாபாரத்தில் வீழ்ச்சி வரும். செலவு அதிகமாக இருக்கும். மருத்துவ செலவு அதிகம் ஏற்படும். இளைய சகோதர சகோதரிகளிடம் சண்டை ஏற்படும். தந்தையாரின் உடல் நிலை கெடும். தந்தையின் உறவு நன்றாக இருக்காது. மூத்தவர்களின் சாபத்திற்க்கு ஆளாகலாம். சனி நல்ல நிலையில் இருந்தால் தீமை குறைந்து நல்லது நடக்கலாம். விரைய ஸ்தானமாக இருப்பதால் சுபசெலவுகளும் செய்ய வேண்டிவரும்.


சனி பகவான் (வீடு, மனை வாங்க)

ஓம் காகத்வஜாய வித்மஹே 

கட்கஹஸ்தாய தீமஹி 

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் 

ஓம் ரவிசுதாய வித்மஹே 

மந்தக்ரஹாய தீமஹி 

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் 

ஓம் காகத்வஜாய வித்மஹே 

கட்கஹஸ்தாய தீமஹி 

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் 

ஓம் வைவஸ்வதாய வித்மஹே 

பங்குபாதாய தீமஹி 

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத் 

ஓம் சனீஸ்வராய வித்மஹே 

சாயாபுத்ராய தீமஹி 

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத் 

ஓம் சதுர்புஜாய வித்மஹே 

தண்டஹஸ்தாய தீமஹி 

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்.

வெள்ளி, 11 ஜூன், 2021

3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபனேரியில் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழமையானது

 *உலகிலேயே ஆழமான கிணறு*


. இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமயமலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம் பெறும்.


இந்த அதிசயக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகளைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு. இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். 


இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றைக் குறிக்கும்).


இங்குள்ள பாமர மக்கள் இந்தக் கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்.காதால் கேட்பதை விட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும். இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டு விட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. 


ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும் போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.


ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறு உள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை. அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார்,


பகிர்வு

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் 1492ல் இந்தியாவைத் தேடி அமெரிக்காவை அடைவதற்கு முன்னரே தமிழர்கள் அமெரிக்காவில் குடியேறினர் என கடல்சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவிக்கிறார்

 அமெரிக்கப் பழங்குடிகளில் தமிழர் மரபு : கொண்டாடும் தமிழச்சிகள் 


உலகை வணிகத்தால் கட்டமைத்த அமெரிக்காவை கண்டுப்பிடித்தது கொலம்பஸ் என வரலாறு கூறுவதுண்டு. ஆனால், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் 1492ல் இந்தியாவைத் தேடி அமெரிக்காவை அடைவதற்கு முன்னரே தமிழர்கள் அமெரிக்காவில் குடியேறினர் என கடல்சார் தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் ஒரிசா பாலு தெரிவிக்கிறார். இது குறித்து FX16TV செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியதாவது,  



" ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கொலம்பஸ் 1492ல் இந்தியர்களை கண்டுபிடிக்க கடல் வழிப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது, அட்லாண்டிக் கடற்கரை வழியான பயணத்தில் அமெரிக்கை என்ற மலை அருகில் செவ்விந்தியர்களை கண்டறிந்தார். அதனையே, அமெரிக்கா என வரையறுத்து, அமெரிக்கர்களை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். இதனையடுத்து, ஐரோப்பியர்கள் 1,500ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு கடல் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்த பல பழங்குடிகளின் வரலாற்றை மறைத்து அமெரிக்க நாகரீகத்தை உருவாக்கினார்கள். ஆனால், அமெரிக்காவில் 1,500 ஆண்டுகளுக்கு முன்னர், சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளாக இருந்த அமெரிக்க பழங்குடியினருடன் தமிழர்கள் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளனர். இதனை நிரூபிக்கும் வகையில், அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரின் வரலாற்றில் தமிழர்கள் தொன்மம் ஏராளம் நிறைந்துள்ளது. 



அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பாறை ஓவியங்களில் சுமாா் 30 பழங்குடி இனங்களின் வரலாறு பதிந்துள்ளது. இங்குதான் அமெரிக்காவிலேயே அதிகமான பாறை ஓவியங்கள் உள்ளன. அலமேடா (Alameda) என்னும் ஊர், 'மரங்கள் சூழ்ந்த நிழற்பகுதி ' என்ற பொருளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தப் பெயர் 'ஆலமரம் ' என்பதில் இருந்து மருவி இவ்வாறு உருவாகியுள்ளது. முருங்கைக் கீரை Moringa leaf என்ற பெயரிலேயே விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட செம்பருத்தி செடியும் அரளி செடியும், நார்த்தங்காயும் கலிஃபோர்னியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் உள்ளது. 




சான்டா பாா்பரா பகுதியில் வாழ்ந்த சுமாஸ் ( Chumash) பழங்குடிகளின் இன்றைய தலைமுறையினர் ஆமைப் படத்தை தங்கள் கொடியில் வைத்துள்ளாா்கள். இதன் மூலம், கடல்சார்புடன் தொடர்புடையவர்கள் பழங்குடியினர் என்பதை விளக்கும் வகையில் உள்ளது. உலகிற்கு முதன் முதலில் "சோழியை" பணமாக அறிமுகப்படுத்தியவர்கள் பாண்டியர்கள் தான். அந்த சோழியின் ஆங்கிலப்பெயர் கவுரி என கொள்ளப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் பாண்டியர்களை கவுரியர்கள் என்று ஆவணப்படுத்தி உள்ளது. இதன் மூலம், ஆப்ரிக்கா முதல் அமெரிக்கா வரை கவுரியை காசாக அறிமுகப்படுத்தியர்கள் பாண்டியர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கலன்கள் செய்யப்பயன்படும் மாக்கல் கொண்டு, அமெரிக்காவின் கேடலினா தீவில் வாழ்ந்த பழங்குடிகள் ( Gabrielino) மாக்கல் கொண்டு சமையல் கலன்கள் செய்து வருகின்றனர். 



பழங்குடிகளின் வழிபாட்டு இடத்தில் தமிழர்களை போன்று சூரியன் மற்றும் சந்திரன் படங்களையும் வரைந்து வைத்துள்ளனர். இவர்களின் நம்பிக்கைகளில் காக்கை, ஆந்தை மற்றும் பருந்து ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். பெண்கள் பூக்களை தலையில் சூடியும், கழுத்தில் சுற்றியும்  (Hawaiian leis போன்று),  காதுகளில் வைத்தும் தமிழர்களை சேர்ந்தவர்களை போன்று அழகு படுத்திக் வருகின்றனர். யோகுட் ( Yokut) என்ற பழங்குடிகளின் ஒரு குழு, தங்களின் உட்பிரிவுகளுக்கு பறவை மற்றும் மிருகங்களின் பெயரை வைத்திருக்கிறாா்கள். தாஹோ ( Lake Tahoe) பகுதியில் வாழ்ந்த Wahoe குடியினர் புல்லாங்குழல் பயன்படுத்துகிறாா்கள். முக்கியமாக தமிழர்களின் நாட்டார் கலையின் முக்கிய இசைக்கருவியான பறையை போன்று மற்றொரு இசைக் கருவி  நினைவுபடுத்துவதாக உள்ளது. பழங்குடிகளின் கழுகாட்டம் நம்மூர் மயிலாட்டத்தை போன்று உள்ளது.



அமெரிக்க பழங்குடியினரும், தமிழர்களும் ஒன்றோடு, ஒன்றிணைந்து தொடர்பு கொண்டவர்கள் என்பதை விளக்கும் வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்களின் குடும்பத்தினர் பெயரில் தமுலிபாஸ் (tamilipas), தமியன்  (thamiyan), தமுக்கன்(tammuka/tamcan), சாலினன்(salinan), பயட்டு (paiute), களரிபயட்டு (kalariyaddu), யானை  (yana), முகவாய் (mohave). ஈழம் (yelamu), தொலைவு (tolowa), தொங்குவன் (tongva), தெற்கு மேடு, சாஸ்தா southern maidu. .since southern is therku இப்படி பல தமிழ் பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அரிசோனா மாகாணத்தில் வாழ்ந்த பழங்குடியினர் உணவு முறையில் அரிசி, தினை, கிழங்கு வகைகள் போன்றவை தமிழர் முல்லை நில மக்களின் உணவு முறையோடு ஒத்துபோகின்றது. 


அரிசோனாவுக்கு மேற்கே இருக்கும் சான் பிரான்சிஸ்கோ peak  ல் தனது முன்னோரின் ஆன்மா வசிப்பதாகவே இன்றும் கருதுகின்றனர். முக்கியமாக விஸ்கான்சின் மாகாணத்தின் மிகப்பெரிய பழங்குடியின் தெய்வம் menominee tribe ( மனோன்மணி) என்பதும், அகத்தியர் வழிப்பாட்டை நினைவுப்படுத்தும் அகத்தியர் சிகரம் Agazzis peak அங்கே உள்ளது. விஸ்கானிஸ்னில் வசிக்கும் ஆய்வாளர் ரேணுகா தேவி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதுபோல, தமிழர்களின் சித்தர் வழிமுறையை பழங்குடியினர்கள் பின்பற்றுவதாக அமைந்துள்ளது. 


பழந் தமிழரின் மூதாதையர் வழிபாடு, இயற்கை வழிபாடு போன்றவற்றை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக உள்ளது. சூரிய சந்திரனின் பயணங்களை வைத்து தமது விவசாயத்தை நடைமுறைபடுத்தி வருகின்றனர். விஸ்கான்சின் (wisconsin) மாகாணத்தின் முக்கிய பழங்குடி மக்களான சிப்பிவா இந்தியர்களில் வழக்கத்தில் இருக்கும் ஒசிபி இனத்தவரின் பூர்வீக கதை ஆமை வழித்தடக் கூற்றை உறுதி செய்யும் விதம் உள்ளது. 


அமெரிக்க , கனாடா நாட்டின் கிழக்குக்கரையாரேங்களில் வசித்த கியூபக் பழங்குடியினரின் நம்பிக்கைகளில் ஏழு கடல் தெய்வங்களில் (miigi-luminant with 7 colors..sapta kanni ) ஒன்று, வெள்ளை இனத்தவரால் துன்பம் வரும் என்றும், அதனால்  மேற்கு நோக்கி போக வேண்டாம் என்றும் அறிவுறுத்தி மேற்கு நோக்கி நகர்ந்தனர். அப்படி அவர்கள் சென்ற ஏழு இடங்கள் (Saint Lawrance river,ottawa river,Lake Nipissing and then to the great lakes of Wisconsin ) ஆமை வழியை பின்பற்றி சென்றதால் ஆமைத்தீவுகள் என்ற பெயர் இன்றளவும் குறிப்பிடப்பட்டு வருகின்றன. 


இதில் இன்னும் ஆச்சரியமாக, பிலிப்பைன்ஸ் தீவுகளில் இர்ந்து சிங்கப்பூர் வரை பல இடங்களில் ஆமைகள் வசிக்கும் ஆமைத்தீவுகள் உள்ளது. இந்த தென்கிழக்கு ஆசியா தீவுகளுக்கு சீனர்கள் ஆசிய தென்கரை என்ற பெயரை தமிழ் பெயரிலே வைத்துள்ளனர். இதிலிருந்து, தமிழர்கள் தென் கிழக்கு ஆசிய பகுதிகளின் வழியாக கடல் நீரோட்டத்தில் வலசை பயணம் செய்யும் ஆமைகள் வழியாக முதலில் கட்டுமரம், தெப்பம், மிதவை போன்றவைகளில் ஒரு வழிப் பயணம் செய்து, பின்னர், பாய் மரங்களை பயன்படுத்தி இருவழி பயணத்தை துவக்கி துவக்கி வைத்த திரைமீளர்களாக காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


தமிழர்களுக்கும், அமெரிக்க பழங்குடியினருக்கும் இடையிலான பல நூறு ஒற்றுமைகளை விளக்கும் வகையில், அமெரிக்காவில் பல கடற்கரை மாநிலங்களில் கடந்த 60 வருடங்களாக பழங்குடியினர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கலிஃபோர்னியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 4ம் வெள்ளியன்று இக்கொண்டாடப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி, கலிஃபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் தொல்லியல் கற்போம், பெண்கள் இணைய குழு மூலம் நாளை பழங்குடியினர் நாள் கொண்டாட இருக்கிறார்கள்.


அமெரிக்காவின் பழங்குடிகளில் கலந்து இருக்கும் தமிழர்களின் மொழி, மரபு, பண்பாடு, கடலோடும் தன்மையை நினைவுப்படுத்தும் வகையிலே இந்நாள் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதி மக்களின் வாழ்வியலில் அமெரிக்கா என்பது பிழைப்புக்காக சென்ற இடம் என்ற மன நிலையும் கொண்டுள்ளனர். 


அமெரிக்காவில் வரலாறு, பண்பாடு இவற்றில் இன்றளவும் ஈடுபாடு கொள்ளாமல், தாம் சென்ற தாய்நாட்டையே நினைத்த வண்ணம் உள்ளார்கள்.  உலகம் முழுவதும் கடலில் சென்று திரைமீளர்களாக திரும்பி வந்த தமிழர்களுக்கு அமெரிக்க மண்ணில் ஊடுருவியுள்ள தமிழரின் வரலாற்றை தெளிவாக சொல்ல அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் பெண்களால் தொல்லியல் கற்போம் என்ற இணைய குழு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் பிரிமாண்ட் என்ற ஊரில் வசிக்கும் ஆசிரியை சத்தியா நடராஜன், தமிழ் ஆர்வலர்கள் கனகலட்சுமி, பிரியா, சவுந்திர நாயகி, சுகந்தி, ரேணுகா தேவி, செந்தாமரை, லஷ்மி மற்றும் பலரால் அந்நாட்டின் நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பழங்குடி மையங்கள் போன்றவற்றில் இருக்கும் அமெரிக்க பழங்குடி வரலாற்றில் உள்ள தமிழரின் தொன்மையை தேடி வருகிறார்கள்


இதுபோன்று உலக அளவில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் குழு மூலம், இந்தோ-பசுபிக் கடல் தொடர்பாக தமிழகத்தில் இருந்து மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்த், பிலிஃபைன்ஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா, வியட்நாம், சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் ஆசியாவின் கடைக்கோடியில் உள்ள ரஷ்யாவின் காம்சட்கா போன்ற இடங்களில் இருந்து நீண்ட பசுபிக் பெருங்கடலை கடந்து அலாஸ்கா, கனடா மேற்கு வட அமெரிக்கா, மெக்சிக்கோ, கிருத்தமாலா, நிகாரிகோவா, பெரு, சிலி, அர்ஜெண்டினா வரை உள்ள கடற்கரைகளில் ஊடுருவி உள்ள தமிழர் பண்பாட்டை இடப்பெயர் மக்களின் பெயர், மரபு, பண்பாடு, நாட்டார் வழக்கியல், கடலோடும் தன்மை, இயற்கையின் மரங்கள், உயிரினங்கள், பெயர்களை ஒப்புமை செய்து, நீரோட்டங்களில் ஆமைகளின் வழித்தடத்தை பின் தொடர்ந்து, காற்றையும், கடல் நீரோட்டத்தையும் புரிந்துக்கொண்டு, புலம் பெயர்ந்த பழங்கற்கால மக்களின் கடலோடிய தன்மையை ஆய்வு செய்து வருகிறோம். 



நான் தனி ஒருவராக பல வருடங்களாக செய்த ஆய்வை வயது கருதி குழுக்களை உருவாக்கிக் கொண்டு அந்தெந்த நாடுகளில் உள்ள மக்களின் மனதில் தமிழர்களின் புரிதலை ஏற்படுத்த முயன்று வருகிறேன். அதனுடன், அறிஞர் சாமன்லால், எழுத்தாளர்கள் கி.மனோகரன், சீனிவாசன், ராமநாதன் கடந்த 1940களில் இந்தியவியல் கட்டுரைகளில் தமிழர்களின் பண்பாடுகள் மெக்சிகோ நாட்டில் இருப்பதை அடையாளப்படுத்தியுள்ளது, முக்கியமாக, அமெரிக்காவில் உள்ள பல அருங்காட்சியகங்களில் தமிழர்களின் கலைப்பொருட்கள் பல ஆயிரக்கணக்கில் இருப்பதை, சிலை கடத்துபவர்கள் கொடுக்கும் வாக்குமூலம் வழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, தமிழகத்தின் வரலாற்றை மீட்பதற்கு பெரும் முயற்சியாக அமையும். அமெரிக்காவில் பழங்குடியினர் நாளை கொண்டாடி, தமிழருக்கும், அமெரிக்க பூர்வகுடிகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் வகையில், உலக அளவில் 183 நாடுகளில் தமிழர்களுக்கும், அந்நாட்டின் பூர்வகுடிகளுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டின் தமிழர்கள் ஒன்றிணைந்து பழங்குடியினர் நாள் கொண்டாட வேண்டும். இதன் மூலம், தமிழர்களின் கடல்சார் வரலாற்றை மீட்டு, தமிழர்களின் உண்மை வரலாற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் கடல் சார் தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு.

மலேசியாவின் பழங்குடியின காலத்தில் இருந்தே தமிழர்களின் வரலாறு பொதிந்துள்ளது என கடல்சார் தமிழியல் தொன்மை ஆய்வாளர் ஒடிசா பாலு தெரிவித்தார்.

 பழங்குடியின காலத்தில் இருந்தே

மலேசியா வரலாற்றில் தமிழர்கள் உள்ளனர்

-கடல்சார் ஆய்வாளர் ஒடிசா பாலு பேட்டி

சென்னை, நவ. 27-

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது,


உலக அளவில் தமிழர்கள் அதிகம் பேர் வசிக்கும் நாடுகளில் மலேசியா 2வது இடத்தில் உள்ளது. இங்கு 20 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் உள்ளனர். உலகம்  முழுவதும் பரவியுள்ள தமிழர்களில் 2 லட்சம் பேர் மலேசியாவில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள். தமிழர்களுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான உறவு ஆதி காலத்தில்  இருந்தே, தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் பிரிட்டீஸ் வருகைக்கு பிறகு தமிழர்கள், மலேசியாவுக்கு இடப்பெயர்வு அடைந்தனர் என்பது உண்மைக்கு புறம்பானது.  ஏனெனில், மலேசியாவில் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய அறிமுகம் செய்து வைத்ததே தமிழர்கள்தான். பிரிட்டீஸ் அரசு 16ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில், இந்தியாவில்  வணிகத்தை தொடங்கியது. ஆனால், போர்ச்சுகீசியர்கள், டச்சுகாரர்கள் வருகைக்கு முன்னரே தமிழர்கள் மலேசியாவில் வணிகம் மேற்கொண்டனர். அதாவது, மலேசியாவில்  சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கடல் பயணம் மூலம் வணிகம் மேற்கொண்டவர்கள் தமிழர்கள். மலேசியா என்பது மலை, நிலம், கடல் சார்ந்த பகுதி அதனால்,  மலை சார்ந்த பகுதியை தமிழர்கள் மலையூர் என்று அழைத்தனர். அப்பெயரே பின்னர் மருவி மலேசியா என்று ஆனது. மலேசியாவில் தமிழர் மற்றும் தமிழ் மொழிக்கான  பல நூற்றாண்டு கால அடையாளங்கள் ஏராளமாக உள்ளது. மலேசியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் 1000 தமிழ் சொற்கள் கண்டறியப்பட்டுள்ளன. மலேசிய  மக்களின் அன்றாட வாழ்க்கையில் இச்சொற்கள் கலந்துள்ளன. தென்புலக்குடிகளான தமிழர்கள் எந்தவித புரிதலும் இன்றி உலகம் முழுவதும் வணிகம் செய்தவர்கள் அல்ல.  தமிழர்கள் கடல் வணிகத்திற்காக ஓர் திட்டமிட்ட வழிமுறைகளை கடைபிடித்தனர். அதாவது, தமிழர்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ‘திசைஆயிரத்து ஐநூற்றுவர்’  என்னும் ஆயிரம் திசைகளை அறிந்த 500 பேர் கொண்ட குழு மூலம் கடல் பயணம் மேற்கொண்டனர். அதுபோல், ‘பதினென்விசையறிந்தார்’ என்பவர்கள் இருந்தனர்.  இவர்கள், உலக அளவில் கடல் மூலம் 18 நாடுகளை சுற்றி அனுபவம் பெற்றவர்கள். முக்கியமாக திரைமீளர்கள் கடல் பயணத்திற்கு வலுவூட்டினர். இவர்கள், கடலின்  மைய பகுதிக்கு சென்று, உயிர் சேதமின்றி, மீண்டும் அதே இடத்திற்கு வரும் அளவிற்கு திறமை கொண்டவர்களாக  இருந்தனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள் என்பது  ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டவை. இதில், 1,024 திசைகளை அறிந்த தமிழர்களை ‘கணியர்’ என்று அழைக்கப்பட்டனர். வெளிநாடுகளில் வணிகம் செய்யும் தமிழர்களை  பல்வேறு பெயர்களில் அழைத்தனர். இதில், முத்து விற்பனையாளர்களை ‘பெர்லிஸ்’ எனவும், பவளம் விற்பனை செய்பவர்களை ’மணி கிரகத்தார்’ எனவும் அழைத்தனர்.  அக்காலத்தில், கடல் கொள்ளைகள் அதிகம் இருக்கும் என்ற காரணத்தால், முத்து, பவளம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை மாட்டு சாணி மூலம் மறைத்து  வரட்டியாக கொண்டு சென்றனர். மலேசியாவில் உள்ள ‘குணாஞ்சிரை’ என்ற மலையின் பெயர், ‘குணக்கடல்’ என்ற கடல் பகுதி போன்றவை 2 ஆயிரம் ஆண்டுகளாக  தமிழ்மொழியின் அடையாளங்களாக நீடித்து வருகிறது. மலேசியாவில் உள்ள தெமியான், தெமுலான் என்ற பழங்குடியின மக்களின் பெயர்கள் தமிழில் உள்ளது.  அதேபோல், மடகாஸ்கர் பகுதியில் வாழும் மக்களின் உருவத்தில் மாற்றம் இருந்தாலும், அவர்களது பெயர்கள் தமிழில் உள்ளதை பார்க்க முடியும். ஆங்கிலேயர்கள்  போன்று சீனர்களை மலேசியாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் தமிழர்கள்தான். இந்தியாவில் கிபி 14ம் நூற்றாண்டுக்கு பிறகு ஏற்பட்ட பல நாடுகளின் பண்பாட்டு  ஊடாட்டம் காரணமாக தமிழர் தொன்மங்கள் மக்களுக்கு தெரியாமல் உள்ளது. குறிப்பாக மலேசியாவில் உள்ள தமிழ் மொழியின் அடையாளங்கள், தமிழர் தொன்மங்கள்,  வணிக முறைகள், கடல் பயண திறமைகள் போன்றவை முழுமையாக தமிழர்களுக்கு தெரியாமல் உள்ளது. தமிழர் யார் என்று தமிழரே அறியும் போது, உலக அளவில்  தமிழரின் சிறப்புகள் உயரும். அதற்கு ஏற்றாற்போல், தமிழர்கள் தங்களின் பல திறமைகளை மேலும் வளர்த்து திறனுடன் செயல்பட முடியும். அதனால், உலகம் முழுவதும்  உள்ள தமிழர் அடையாளங்களை மீட்டெடுக்க, உலக அளவிலான முக்கிய பல்கலைக்கழகங்களில் ‘தமிழ் இயல் இருக்கை’ உருவாக்க வேண்டும். குறிப்பாக மலேசியாவில்  பொதிந்துள்ள தமிழர் தொன்மங்களை வெளி கொண்டுவர மலேசியா பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் இயல் இருக்கை’ ஏற்படுத்த வேண்டும் என்றார்.



  பாக்ஸ்


சமூக வலைத்தளங்களில் பண்பாட்டு ஆய்வு


உலகம் முழுவதும் உள்ள தமிழர் தொன்மங்களை, கடல் நீரோட்டம் மூலம் ஆமை வழியே  கடல்சார் தமிழியல் தொன்மை ஆய்வாளர் ஒடிசா பாலு ஆய்வு மேற்கொண்டு  வருகிறார். இதன் ஒருபகுதியாக, சமூக வலைதளம் மூலம் பல குழுக்களை ஏற்படுத்தி தகவல் திரட்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதில், ஆசிய தமிழ்ச் சங்கம் என்ற  குழு மூலம் ஆசிய நாடுகளின் தமிழ் ஆய்வையும், மலாய குழு மூலம் மலேசியா ஆய்வையும், திரை மீளர் என்ற பெயரில் உலக தமிழர்களையும், தென் புலத்தார் என்ற  பெயரில் மடகாஸ்கர், மலேசியா இடையிலான தமிழ் ஆய்வையும், ஐயை என்ற பெயரில் பெண்களுக்கான திறன் வளர் குழுவையும் ஏற்படுத்தி, வழிநடத்தி வருகிறார்.  சமூக வலைதளங்களில் நடப்பாண்டில் அதிகம் அறியப்படும் நபர்களில் ஒருவராக ஒடிசா பாலு உள்ளார். பிபிசி செய்தி பிரிவு இது குறித்த ஓர் செய்தியில் ஒடிசா பாலு  பதிவை 5 லட்சத்திற்கும் மேலானோர் பார்வையிடுகின்றனர் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

திங்கள், 7 ஜூன், 2021

நிலத்தை அளக்கும் அளவு முறைகள்

 நிலத்தை வைத்திருக்கும்

உரிமையாளர் ஒரு நிலத்தையோ,

அல்லது  மனையையோ அளக்க 

முற்படும் பொழுது பெரும்பாலும்

அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை...


குறிப்பாக நிலவரைபடம்   

FMB பற்றி தெளிவாக 

நமக்குத் தெரிவதில்லை 

அது நமக்கு புரியாத 

ஒரு புதிராகவே இருக்கிறது.

எனவே ஒரு நிலத்தை எப்படி 

அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் 

FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..


சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :


1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.


2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).


3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.


4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.


5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.


6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.


7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.


நிலத்தை அளக்கும் அளவு முறைகள் 

****************************************

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. 

அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.


1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,


2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை


3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்


ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.


நில அளவீடுகள்

*****************

1 சென்ட்      – 40.47 சதுர மீட்ட‍ர்

1 ஏக்க‍ர்       – 43,560 சதுர அடி

1 ஏக்க‍ர்       – 40.47 ஏர்ஸ்

1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர்

1 சென்ட்      – 435.6 சதுர அடி

1 ஏர்ஸ்    – 100 சதுர மீட்ட‍ர்

1 குழி           – 144 சதுர அடி

1 சென்ட்      – 3 குழி

3 மா              – 1 ஏக்க‍ர்

3 குழி           – 435.6 சதுர அடி

1 மா              – 100 குழி

1 ஏக்க‍ர்       – 18 கிரவுண்டு

1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்


ஏக்கர்


1 ஏக்கர் – 100 சென்ட்

1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்

1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்

1 ஏக்கர் – 43560 ச.அடி

1 ஏக்கர் – 4046 ச மீ


செண்ட்


1 செண்ட் – 001 ஏக்கர்

1 செண்ட் – 0040 ஹெக்டேர்

1 செண்ட் – 0.405 ஏர்ஸ்

1 செண்ட் – 435.54 ச.அடி

1 செண்ட் – 40.46 ச மீ


ஹெக்டேர்


1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்

1 ஹெக்டேர் – 247 செண்ட்

1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்

1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி

1 ஹெக்டேர் – 10,000 ச மீ


ஏர்ஸ்


1 ஏர் – 2.47 செண்ட்

1 ஏர் – 100 ச.மீ

1 ஏர் – 1076 ச.அடி


100 குழி     = ஒரு மா

20 மா        = ஒரு வேலி

3.5 மா       = ஒரு ஏக்கர்

6.17 ஏக்கர்  = ஒரு வேலி


1 ஏக்கரின் நீளம்        = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்

1 ஏக்கரின் அகலம்     = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்

நீட்டலளவை


•             10 கோண் = 1 நுண்ணணு


•             10 நுண்ணணு = 1 அணு


•             8 அணு = 1 கதிர்த்துகள்


•             8 கதிர்த்துகள் = 1 துசும்பு


•             8 துசும்பு = 1 மயிர்நுனி


•             8 மயிர்நுனி = 1 நுண்மணல்


•             8 நுண்மணல் = 1 சிறு கடுகு


•             8 சிறு கடுகு = 1 எள்


•             8 எள் = 1 நெல்


•             8 நெல் = 1 விரல்


•             12 விரல் = 1 சாண்


•             2 சாண் = 1 முழம்


•             4 முழம் = 1 பாகம்


•             6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)


•             4 காதம் = 1 யோசனை


•             வழியளவை


•             8 தோரை(நெல்) = 1 விரல்


•             12 விரல் = 1 சாண்


•             2 சாண் = 1 முழம்


•             4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்


•             2000 தண்டம் = 1 குரோசம்        21/4மைல்


•             4 குரோசம் = 1 யோசனை


•             71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)


நிலவளவை குழிக்கணக்கு வருமாறு


16 சாண் = 1 கோல்


18 கோல் = 1 குழி


100 குழி = 1 மா


240 குழி = 1 பாடகம்


கன்வெர்ஷன்


1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்


1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்


1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்


1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்


பிற அலகுகள்1


ஏர் = 100 சதுர மீட்டர்

1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்

தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.

நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.

1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்


1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்


நில அளவை 


100 ச.மீ                              - 1 ஏர்ஸ்


100 ஏர்ஸ்                          - 1 ஹெக்டேர் 


1 ச.மீ                                  - 10 .764 ச அடி


2400 ச.அடி                       - 1 மனை 


24 மனை                         - 1 காணி


1 காணி                            - 1 .32 ஏக்கர் 


144 ச.அங்குலம்            - 1 சதுர அடி 


435 . 6 சதுர அடி          - 1 சென்ட் 


1000 ச லிங்க்ஸ்         -  1 சென்ட் 


100 சென்ட்                     - 1  ஏக்கர் 


1லட்சம்ச.லிங்க்ஸ்   - 1  ஏக்கர் 


2 .47   ஏக்கர்                    - 1 ஹெக்டேர்


1 ஹெக்டேர்               = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )


1 ஏக்கர்                             = 4840 குழி (Square Yard)


100 சென்ட்                     = 4840 சதுர குழிகள் 


1 சென்ட்                          = 48.4 சதுர குழிகள்


1 ஏக்கர்                             = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )


1 ஏக்கர்                             = 43560 சதுர அடி


படித்ததில் பகிர நினைத்தது...