வியாழன், 22 ஏப்ரல், 2021

பட்டா மாறினாலும் கவலைப்பட வேண்டாம்

 வணக்கம் நண்பர்களே...!


ஒரு சொத்தை பட்டா மாற்றி 38 வருடங்கள் எதிர் தரப்பினருக்கு தெரிந்தே  அனுபவித்தாலும் அது adverse possession வராது, மேலும் கிரைய ஒப்பந்தம் மூலம் 40 வருடங்களுக்கு முன்பு கொடுத்த சொத்தை மீட்டு திருப்பி பழைய owner-க்கு கொடுத்த தீர்ப்பு, மேலும் permissive occupation என்றால் எத்தனை வருடம் கழித்தும் வழக்கு போட்டு சொத்தை எடுக்க இந்த judgement ஐ பயன்படுத்தி கொள்ளவும், மேலும் வழக்கு போட limitation act article 64, 65 apply ஆகாது, மேலும் section 106 transfer of property act மூலம் notice கொடுக்க தேவையில்லை, மேலும் adverse possession வழக்கு தள்ளுபடிக்கு இந்த தீர்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்.


தீர்பு நகள்



தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்:

https://drive.google.com/file/d/1E1XwOUDRrgZ_A3KiyDwcJmO1dPpPkW4g/view?usp=drivesdk



https://drive.google.com/file/d/1BgaWzQmNS-JTg6M3solPxmUygdICXIoW/view?usp=drivesdk


நன்றி...!

புதன், 14 ஏப்ரல், 2021

தமிழில் எழுதப்படும் துணையெழுத்துகள்,

  எழுத்துருக்கள் ஆகியவற்றை விளக்கும் படம் இது. 



     ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை அறிந்திருக்கும் நம்மில் பலர்க்கு மேல்விலங்கு, கீழ் விலங்கு, துணைக்கால், கொம்புக்கால், இணைக் கொம்பு, சங்கிலிக் கொம்பு, சாய்வுகள் கீற்று, மடக்கு ஏறு கீற்று, பின்விளைவுகள் கீற்று, இறங்கு கீற்று, மேல் விலங்கு, கீழ் விலங்கு, இறங்கு கீற்றுக் கீழ் விலங்குச்சுழி, மேல் விலங்குச் சுழி, கீழ் விலங்குச்சுழி, பிறைச்சுழி. 

      என்றால் என்னென்று தெரியாது. தமிழில் எழுதப்படும் ஒவ்வோர் எழுத்தும் எத்தகைய  சேர்ப்பு வடிவத்தினால் அதன் வரிசையில் இன்னோர்  எழுத்தாகிறது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு வரைவுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அவற்றையும்  அறிந்திருக்க வேண்டும். மூத்த  தமிழாசிரியர்களிடையே அறியப்பட்டிருக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்கள் புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களிடையே பரவலாகாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கும் நம் மாணாக்கர்களுக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்களின் பட்டியல் உதவும். துணையெழுத்துகளை விளக்கி எழுதப்பட்ட கட்டுரை நக்கீரன் இணையத்தில் சொல்லேர் உழவு பகுதியில் வெளியாகியிருக்கிறது. அதனையும் படித்துத் தெளிவுறுக.

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன*.

மலை தொடர்பான நாற்பதுக்கும் மேற்பட்ட 

 குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், மலையியல் என்பன போன்று குறிஞ்சியியல் என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும்.


 சங்கச் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களையோ பிறமொழிச் சொற்களையோ நாம் காண இயலாது.


 சான்றாக 


*எதிரரொலிக்கும் மலையைச் சிலம்பு* என்றனர். 

ஆனால், அத்தகைய வகைப்பாடு பிற மொழியாளரிடம் இல்லாததால்


 நாம் பொருள் விளக்கம்தான் அளிக்க இயலும்.


 *பின்வரும் சொல் ஒவ்வொன்றுமே கலைச்சொல் என்பதை உணர்ந்து உரிய துறை ஆசிரியர்கள் இவற்றைப் பயன்படுத்தி நூல்கள் எழுத வேண்டும்*.


 சங்க இலக்கியங்களில் சொல் பயன்படுத்தப்பெற்ற எண்ணிக்கை அடைப்பில் குறிக்கப்பெற்றுள்ளது.


அடுக்கம் (range) (72),


அடுக்கல் (range) (5),


அருப்பம் (small hill) (13),


அரைமலை (Middle of a mountain slope) (1),


அறை (huge rock) (78),


அறைவாய் (mountain pass) (1),


இகுப்பம் (large boulders, hillock) (1),


இறும்பு (foothill) (21),


ஏகல் (high hill) (3),


ஓங்கல் (mountain top) (13),


கடறு (mountain slopes) (9),


கது (mountain cleft)(8),


கல் (rock) (245),


கல்லளை (mountain caves) (3),


கவாஅன் (slopes) (32),


கன்முழை (mountain cavern)(1),


கிழிப்பு (mountain cleft) (1),


குடுமி (Summit or peak of a mountain ) (26),


குவடு (Hillock ) (1),


குன்று ( mountain) (180),


கோடு(Summit of a hill ),(hill) (167),


சாரல் (mountain slopes)(99),


சிகரம் (peak)(1),


சிமையம் (peak) (2),


சிலம்பு (mountain which has resound or echo) (128),


சென்னி (peak) (44),


நவிரம் (peak) (2),


பிளப்பு (mountain cleft) ,


பிறங்கல்(hillock ) (20),


பெருங்கல்(rock ) (28),


பொறை(small hill) (51),


மலை(mountain) (337),


முகடு (peak) (5),


முகை(mountain cave) (134),


வசி (mountain cleft) (8),


வரை(big mountain) (379),


விடர் (mountain cleft)

 (33),


விடரகம் (mountain caves) (29),


விடரளை (Cleft in a mountain cave) (1),


விண்டு (mountain) (8),


விலங்கல் (blocking mountain) (3)


வெற்பு (hill) (20),


*முதலானவை அனைத்தும் மலையியல் கலைச் சொற்களே!*


அன்புடன்

 *இலக்குவனார் திருவள்ளுவன்*


நன்றி: (#திருவள்ளுவன்_இலக்குவனார் 11.4.2020 பதிவு.)

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

#அலோபதி_மருத்துவத்தின்_பித்தலாட்டங்கள்_பாகம் 3

 #Toothpaste எனப்படும் #பற்பசை பயன்பாட்டால் ஏற்படும் வியாதிகள்... 

 

#நாகரீக_வாயதிகள்_பாகம் 2 


இன்றைய காலகட்டத்தில், பற்பசையை பயன்படுத்தாதவர்கள் #நாகரீகம் அற்றவர்கள் என்ற ஒரு கண்ணோட்டத்தை வழக்கம் போல் நமது #கல்வி #சினிமா மாயக் கூட்டணி நம்முள் விதைத்து, பற்பசை மூலம் ஏற்படும் வியாதிகளை பணமாக மருத்துவமனைகளில் பல லட்சங்களில் அறுவடை செய்கிறது... 


பலர் நம்மிடம் வரும் போது கூறுவதுண்டு, " எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ஆனால் எனக்கு ஏன் இந்த பிரச்சினை வந்தது" என்று... 

இதற்கு பல வாழ்வியல் மாற்றங்கள் காரணம் என்றாலும் அதற்கு தலைமை இடம் பற்பசைக்கு தான் தர வேண்டும்... 


அந்த அளவுக்கு, நமது உடலில் என்ன விதமான வியாதிகளை உருவாக்க வேண்டும் & முடியும் என்று, சரியாக திட்டமிட்டு நம்மீது திணித்துள்ளது #அலோபதி மருத்துவம்... 


இப்போ எல்லாம் குழந்தைகள் வளரும் போதே, பூச்சி உள்ள பற்களாகவே வளர்வதற்கு என்ன காரணம்..? 


பல பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஏன் என்று தெரியாமலே திடீரென வரும் ஜூரம் எப்படி வருகிறது..? 

எல்லா புகழும், பற்பசைக்கே... 


நம் பாரம்பரிய முறைப்படி, திருமணங்களில் ஆகட்டும் விருந்தினர் உபசரிப்பில் முக்கிய பங்கு வகிக்குப்பது #இனிப்பு சுவை... அதையும் அதை தான் உணவில் முதலில் கொடுப்போம், ஏன் என்றால், இனிப்பு சுவை நாவில் பட்ட உடனேயே, வயிற்றில் செரிமானத்திற்கு தேவையான அனைத்து என்ஜைம்களும் சுரக்க துவங்கி விடுகிறது... 


அந்த இனிப்பு சுவை நாம் பயன்படுத்தும் அநேகமாக அனைத்து பற்பசைகளிலும் இருக்கும், சில பற்பசைகளில் காரத்தன்மை இருந்தாலும், கூர்ந்து கவனித்தால், அதில் இருக்கும் இனிப்பு சுவை நமக்கு புலப்படும்... 


இப்போ பாருங்க, இந்த பற்பசையில் உள்ள இனிப்பு சுவை, நமது செரிமான மண்டலத்தை, நாம் சாப்பிடும் முன்னரே தயார் செய்து, செரிமானத்திற்கு தேவையான என்ஜைம்களை சுரக்க வைத்து விடுகிறது... 

இந்த சுவை தூண்டலால் ஏற்படும் வியாதிகளில் பிரதான இடம் பிடித்து இருப்பது அலோபதி மருத்துவத்தின் செல்லப்பிள்ளைகளான #சர்க்கரை_வியாதி #தைராய்டு & #அல்சர்... 

(இதைப்பற்றி அடுத்தடுத்து வரும் பாகங்களில் காணலாம்) 


அடுத்ததாக பற்பசையில் கலந்துள்ள பொருட்கள் (ingredients) ஒவ்வொன்றும் தனித் தனியாக பல வியாதிகளை உருவாக்கக் கூடியது... 


பெரும்பாலான பற்பசைகளில் கலக்கப்பட்டுள்ள பொருட்கள், பின்வருமாறு...


Calcium carbonate, Sorbitol, Hydrated silica, sodium lauryl sulfate, sodium laureth sulfate, sodium mono flurophosate, sodium fluoride, Benzyl alcohol, Sodium silicate, Triclosan, Sodium Saccharin


இந்த கெமிக்கல் எல்லாம் பெரும்பாலான பற்பசைகளில் ஒத்துப் போகும் , மீதி ஒன்று அல்லது இரண்டு கெமிக்கல் வேண்டுமானால், ஒவ்வொரு கம்பெனியும் மாற்றிக் கொள்ளும்... 


இனி ஒவ்வொரு பொருட்களும் (ingredients) எந்த வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பற்றி விரிவாக காண்போம்... (யாருக்கேனும் ஆதாரங்கள் வேண்டும் என்று விரும்பினால்,  இணையத்தில் தேடித் தெளிவு பெறுக, கூகுளில் கூட கிடைக்கும்) 


#Sorbitol

இது இனிப்பு தன்மை கொண்டது, உங்கள் பற்பசையின் இனிப்பு சுவைக்கு காரணம் இது தான். இதனால், உடல் வலி, பேதி, மயக்கம், சுவாசக் கோளாறுகள்... ஏற்படுகிறது. 


#Hydrated silica

உங்கள் பற்களின் வெள்ளை நிறத்தை கொடுப்பது, இந்த கெமிக்கல் தான். 

பொதுவாக, நம் உணவு மற்றும் உமிழ் நீரில் உள்ள மினரல் & சுண்ணாம்பு சத்து, நம் பற்களின் மேல் படிந்து, பற்களை பாதுகாக்கும், அதை இந்த கெமிக்கல், தடுப்பதோடு, பற்கள் மேல் உள்ள இயற்கையாக நம் உடல் உற்பத்தி செய்யக்கூடிய சத்துகளை எல்லாம் சுரண்டி வெளியேற்றுகிறது. 


#Sodium lauryl sulfate / sodium laureth sulfate #sls 


உங்கள் பற்பசைகளில் நுரை வரும் அல்லவா, அதற்கு காரணம் இந்த கெமிக்கல் தான். இந்த கெமிக்கல் எல்லா நுரை வரும் தயாரிப்புகளிலும் உள்ளது (paste, soap, shampoo, hand wash, sheekakai etc...) பல் தேய்த்து முடித்து ஒரு சில நாட்களில், பல் எரியும் கவனித்து இருக்கீங்களா அதற்கு இது தான் காரணம், அதோடில்லாமல் வாயில் புண் (mouth ulcer), உங்கள் உடலில் உள்ள வழவழப்பு தன்மையை போக்கி தோல் நோய் ஏற்படுத்தும், இது கண் பார்வையை குறைக்கிறது (இப்ப புரியுதுங்களா கடந்த 30 ஆண்டுகளாக, 3 வயது குழந்தை கூட ஏன் கண்ணாடி போடுகிறார்கள் என்று) 


#Sodium Mono Flurophosate

பசியின்மை, வயிறு உப்புசம், மலச்சிக்கல், வாயு, வயிற்று வலி மற்றும் அதிகமான சுண்ணாம்பு சத்தை ரத்தத்தில் சேர்த்து, கிட்னியில் கற்களை (#kidney_stone) வர வைக்கிறது. 


#Sodium_fluoride

மயக்கம் சுவாசக் கோளாறுகள், வாய் வீக்கம், வாய் எரிச்சல் ஆகியவை ஏற்பட காரணமாக இருக்கிறது. 


#Benzyl_alcohol

அரிப்பு, தடித்து போகுதல், பல்லில் சீழ் பிடித்தல், கண்ணில் எரிச்சல், மறுத்து போகுதல் ஆகியவை ஏற்படும் காரணம் இந்த கெமிக்கல் தான். 


#Sodium_silicate

சுவாசக் குழாய் கோளாறுகள், மூச்சு திணறல், வாய்ப்புண், வாந்தி ஆகியவை ஏற்பட இந்த கெமிக்கல் தான் காரணமாக உள்ளது... 


#Triclosan

இருப்பதிலேயே அதீத தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் இது தான். 

#கருவில் இருக்கும் குழந்தையின் எழும்பு வளர்ச்சியை குறைக்கிறது (கருவுற்ற சகோதரிகள் யாராவது இதை படிக்க நேர்ந்தால், தயவு செய்து பற்பசை உபயோகிப்பதை நிறுத்துங்கள், அடுத்த தலைமுறையை காப்பாற்ற), #புற்றுநோய் (cancer), தைராய்டு (thyroid), abnormal endocrine system, intrupt cell signaling, male & female infertility, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, #மூச்சு திணறல்... இன்னும் பல நோய்கள் வர காரணமாக இருக்கிறது இந்த கெமிக்கல். 


#Sodium saccharin

பற்பசை யின் சுவையை தீர்மானிப்பது, இதனால் புற்றுநோய் (cancer), #diabetes (நீரிழிவு நோய்), உடல் எடை அதிகரிப்பு ஏற்படும்... 


aspartame, fluoride, propylene glycol, glycerin, diethanolamine, sorbitol இந்த எல்லா கெமிக்கலும் Thyroid வர முக்கிய காரணம்


இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் நம்மை சுற்றி நடக்கும் உலக அரசியலை. ஆரோக்கியமாக சுற்றி திரிந்த நம்மை சுற்றி, இத்தனை மருத்துவமனை ஏன் வந்தது? எப்படி வந்தது? என்று சிந்தியுங்கள். 


இந்த #சர்ச்சை எல்லாம் ஆண்டாண்டு காலமாய், தொடர்ந்து #உலக_அளவில், விவாதத்தில், இருந்து கொண்டு தான் இருக்கிறது... என்ன நம்ம #ஊடகங்கள் தான் நம்மிடம் இதைப்பற்றி கூறாது... 

அதை உங்களிடம் சொல்லிட்டா..? 

அப்றம் #விளம்பரம் எவன் கொடுப்பான்...

அதை நம்பி தானே, அவன் பொழப்பு ஓடுது... 


உலக அளவில் ஏற்பட்ட எதிர்ப்பின் எதிரொளி நம்ம காதுகளில் விழக்கூடாது என்று தான், இப்ப அந்த பன்னாட்டு நிறுவனங்கள், #ஆயுர்வேத_பற்பசை என்ற பெயரில் மீண்டும், அதே விஷத்தை உங்கள் மீது திணித்துக் கொண்டு இருக்கிறது... 


#Ayurvedic_toothpaste

ஆயுர்வேத பற்பசை என்று நீங்கள் உபயோகப்படுத்துவதில் 90% மேற்கூறியவை தான் 10% மட்டும் மாறுபடும் அதற்கான ஆதாரங்கள் 👇

Herbal Toothpastes - Department of Consumer Affairs

PDFhttps://consumeraffairs.nic.in › consumer

#cancer 👇 

https://www.cancerwa.asn.au/resources/cancermyths/toothpaste-cancer-myth/ 


பற்பசை (tooth paste) கொண்டு பல் துலக்கினால், பற்கள் வெள்ளையாகும் என்று எவனோ ஒரு வியாபாரி, ஒரு கூத்தாடியை வைத்து விளம்பரம் செய்து உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கிறான், நாமும் ஆட்டு மந்தை கூட்டம் போல விளம்பரத்தில் வருவதை எல்லாம் வாங்கிக் கொண்டே இருக்கிறோம்... 


நம்மை சுற்றி மருத்துவமனைகளும் பெருகிக் கொண்டே போகிறது, இதில் விசேஷம் என்னவென்றால், பற்களுக்கு என்று தனி மருத்துவர் ( #BDS) வேறு... 


எங்க ஏதாவது ஒரு பல் மருத்துவரை, இதைப்பற்றி ஆய்வு செய்து பார்த்து, உண்மையை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்...


மண், சாம்பல், மரக் குச்சிகள், உப்பு...

(நம் முன்னோர்கள் பல்தேய்க்க பயன்படுத்தும், பெரும்பாலான பொருட்கள், #துவர்ப்பு சுவை அல்லது சுவை அற்றதாகவே இருக்கும்...) 


இதை எல்லாம் வைத்து பல் தேய்த்து கொண்டு இருக்கும் (இருந்த) கிராமத்தில் வசிக்கும் விவசாயி, 80 வயதிலும் பச்சை பட்டாணியை, கொட்டை பாக்கை கடித்து சாப்பிடுவார்கள், ஆட்டு எலும்பை கடிப்பார்... ஆனால் பற்பசை கொண்டு பல் துலக்கும் பெரும்பாலான மக்களால் 40 வயதில் இவை எதுவுமே முடியாது...


அதற்காகத் தான்  #pizza, #chips, #bone_less கறி என்று நம் பற்களுக்கு சிரமம் தராமல் உண்ணும் உணவுகளை கொடுக்கத் துவங்கியுள்ளான் வணிகன்... 


இதை எல்லாம் படித்து விட்டு, ஒரு சிலர் கூறுவார்கள், நான் பற்பசை யை பல ஆண்டுகளாக உபயோகிக்கிறேன் நீங்கள் கூறும் எந்த ஒரு பிரச்சினையும் எனக்கு இல்லை என்று... 

அவர்களுக்கான பதில் இதோ... 


ஆரோக்கியம் என்பது உடலுக்கு உடல் மாறுபடும், நீங்கள் பற்பசை உபயோகித்தாலும், உங்களுக்கு தெரியாமலேயே வேறு ஏதாவது உங்கள் உடலுக்கு நண்மை செய்தால், இந்த தாக்கம் குறையும். உதாரணமாக, தினம் ஒரு பழம், காய்கறி, கீரை, பாரம்பரிய அரிசி, மீன், முட்டை, இது போன்ற நல்ல சத்துள்ள உணவுகள் தினமும் சாப்பிட்டால், உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, மேற்கூறிய நோயிலிருந்து தப்பித்து வரலாம். இயற்கையாகவே, உங்கள் உடலுக்கு என்று நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும், (அம்மா, அப்பாவிடம் இருந்து வரும் மரபறிவு) அதை பொருத்தே, உங்கள் உடல் ஆரோக்கியம் அமையும். பெரிய பிரச்சினை என்று வெளிக்காட்டவில்லை என்றாலும், நிச்சயம் சின்ன சின்ன பிரச்னைகள் இந்நேரம் தொடங்கி இருக்கும். இனி கவனித்து பாருங்கள், தெரியும். 


வழக்கம் போல முழுவதும் படித்து விட்டு செயலில் இறங்காமல் இருக்காதீர்கள், உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிச்சயம் பற்பசை பயன்படுத்துவர், அவர்களை மேற்கூறிய ஆபத்தில் இருந்து காப்பது இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை. இன்றே உங்கள் பற்பசையை வீசி எறியுங்கள், உங்கள் குடும்பத்தினர் & நண்பர்களின் ஆரோக்கியத்தை காத்திடுங்கள். 


இனி எந்த பொருள் பயன்படுத்தினாலும் அதில் உள்ள பக்கவிளைவுகள் என்ன என்று பார்த்து பயன் படுத்துங்கள். 


இதற்கு மாற்றாக மீண்டும் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் பற்பொடி யை பயன்படுத்தி அதே தொந்தரவில் சிக்காமல், உங்கள் அருகில் உள்ள, #நாட்டு_மருந்து கடைகளில் கிடைக்கும் பற்பொடியை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள்...


இவண் 

#BNC 

முனைவர் பா. ஜெயப்ரசாத் 

#AJPB 

#யதார்த்தம்_பேசுபவன் 

கிறுக்கல்கள் தொடரும்... 

மனிதப்பூக்கள் மலரட்டும்...

சனி, 3 ஏப்ரல், 2021

சூட்சும விஞ்ஞானம் என்றால் என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.


சூட்சும விஞ்ஞானம் :


1.மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது அதற்கு தூரம் தடை இல்லை.


2.நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.


3.நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.


4.ஒவ்வொரு மனிதனுக்கும்  சூ‎ட்சும  சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.


5.சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.


6.மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.


7.பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.


8.சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.


9.மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.


10.மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.


11.மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.


12.கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.


13.மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.


14.சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.


15.நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.


16.மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.


17.மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.


18.நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது. 


19.ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.


20.மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.


21.நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.


22.நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.


23.வலி என்பது உடலின் மொழி.

அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.


24.நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.


25.வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.


26.உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.


27.விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.


28.நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.


29.நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.


30.தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.


31.அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.


32.கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.


33.உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.


34.கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.


35.மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.


36.செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.


37.ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.


38.பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.


39.சூ‎ரிய  ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.


40.மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.


41.மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.


42.தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.


43.நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது. 


44.நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.


45.தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.


46.தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.


47.பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே. 


48.போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.


49.தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.


50.தூக்கம் என்பது, விழிப்புணர்வு அற்ற தியானம்.தியானம் என்பது

விழிப்புணர்வுடன் கூடிய தூக்கம்.

வியாழன், 1 ஏப்ரல், 2021

பட்ச_சுத்தி

     மிளகு, மஞ்சள், நெல்லிவத்தல், கடுக்காய் தோல், வேப்பமுத்து ஆகிய 5 பொருள்களையும் வகைக்கு கால் பலம் எடுத்து சுத்தமான பசும்பால் விட்டு விழுது போல் அரைத்து தலையிலும், உடலிலும் நன்கு அழுத்தித் தேய்த்துக் கொண்டு 1 சாமம் ஊறிய பின்பு சுடுநீரில் தலை முழுக வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம், தலைச்சூடு, கண் புகைச்சல், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் வராது, உடல், கண்கள் குளிர்ந்து காணப்படும். இந்த பட்ச சுத்தியால் உடல் உஷ்ணமானது சமனப்படுவதுடன் உடலின் மயிர்க்கால்கள் தங்கியிருக்கும் மெழுகு போன்ற கழிவுகள் நீங்கும். இதற்கு பஞ்ச கல்ப ஸ்நானம் என்று பெயர்.

         இவ்வாறு முறைப்படி உடலை            தூய்மையாக்கிக் கொண்டு தீவிரமாக யோக சாதனையை  செய்யும்போது உன் உடலில் படிப்படியாக பல மாற்றங்களை  உணர்வாய், தூக்கம், சோம்பல், உடல்வலி போன்ற உபாதைகள் நீங்கி உடல் வலுவும் ஆண்மை சக்தியும் அதிகரிக்கும். உயிர் தத்துவமாகிய விந்துவின் தன்மை அதிகரிப்பதால் காம உணர்வானது கூடும் அந்த மாய்கையில் சென்றுவிடாமல் கிரியா என்னும் யோக விஞ்ஞானத்தின் அதி அற்புத ஆற்றல்களை நினைவில் கொண்டு பெருவாழ்வு நிலையில் உயர் தத்துவத்தை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும். ஏனெனில் எவ்வளவு நூல்களைப் படித்தாலும் நேரடியாக இதுபோன்ற தெளிவான உன் கருவின் வழிமுறைகளை யாரும் கூறமாட்டார்கள். பல தத்துவங்களையும், பல யோக சாதனை முறைகளையும் கூறுவார்களே அன்றி அனுபவ பூர்வமாக படிப்படியாக முன்னேறும் செய்முறைகளை யாரும் கூறமாட்டார்கள். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். http://www.siddharmedicine.in/ @ 9943909495, 8903635949, 04258-226495