புதன், 15 ஆகஸ்ட், 2018

கணிணி இயக்கத்திற்கு மூலம் தமிழ்

உலக உயிரியக்கத்திற்கு மட்டுமல்ல கணிணி இயக்கத்திற்கும் தொன்மைமிகு தமிழே மூலம் ஐயனே!

பரமேசுவரி

கணினி மொழியின் அடிப்படை விதிகள் நம் தமிழ் மொழியில் இருந்துதான் தோன்றியது என்ற உண்மையை கண்டறிந்தேன் அதை உங்களோடு ஆதாரத்துடன் பகிர்ந்துகொள்வதில் தமிழன் என்று பெருமை கொள்கிறேன்

விளக்கக் கட்டுரை:

யாப்பு இலக்கண விதி சீரும்,  கணினி மொழியின் அடிப்படை விதி
கீழேயுள்ள அட்டவனைப்படி ஒப்பீடு படித்தி பார்த்ததில் கணிமொழி அடிப்படை விதி நம் தமிழில் இருந்துதான் தோன்றியுள்ளது என்பதை
கண்டறிந்தேன்.

சான்றுகள்

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China, and India.

பண்டைய எகிப்து, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பண்பாடுகளில் பைனரி எண்கள் தொடர்பான அமைப்புகள் முன்னர் தோன்றியுள்ளன என்றுஆங்கிலேயர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள் ஆனால் அது சமஸ்கிரத்தில் இருந்துதான் தோன்றியது என்று சொல்வதைவிட  சமஸ்கிரதத்துக்கு மூத்த மொழியான நம் தமிழ் மொழியில் இருந்துதான் தோன்றியது என்று சொல்வதுதான் உண்மை தமிழனுக்கு பெருமை...நம் தமிழ் மொழியின் இத்தகைய சிறப்புகளை திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது என்று எனது இந்த ஆய்வின் மூலம் தெட்ட தெளிவாக தெறிகிறது.

கணினி மொழி bainary number யாப்பு இலக்கண விதியில் இருந்துதான் கண்டுபிடிக்கப்பட்டது.
Computer programme language fundamental table matching as per below comparison

ஓர் அசைச் சீர் எ.கா single bit example
நேர் ( 0 )
 நிரை  ( 1 )
ஈரசைச் சீர் வாய்பாடு பின்வருமாறு அமையும்.
• ஓரசைச்சீர்கள் . 1  bit binary .LOGIC NAME
1. நேர் 0 LOW
2. நிரை 1 HIGH
• ஈரசைச்சீர்கள் . 2 bit binary .LOGIC NAME
1. நேர்-நேர் 0-0 LOW-LOW
2. நிரை-நேர் 1-0 HIGH-LOW
3. நிரை-நிரை 1-1 HIGH-HIGH
4. நேர்-நிரை 0-1 HIGH-LOW
• மூவசைச்சீர்கள் . 3 bit binary logic name
1. நேர்-நேர்-நேர் 0-0-0  LOW–LOW-LOW
2. நேர்-நேர்-நிரை 0-0-1 LOW-LOW-HIGH
3. நிரை-நேர்-நேர் 1-0-0 HIGH-LOW-LOW
4. நிரை-நேர்-நிரை 1-0-1 HIGH-LOW-LOW
5. நிரை-நிரை-நேர் 1-1-0 HIGH-LOW-LOW
6. நிரை-நிரை-நிரை 1-1-1 HIGH-HIGH-HIGH
7. நேர்-நிரை-நேர் 0-1-0 LOW-HIGH-LOW
8. நேர்-நிரை-நிரை 0-1-1 LOW-HIGH-HIGH
• நாலசைச்சீர்கள் . 4 bit binary logic name
1. நேர்-நேர்-நேர்-நேர் 0-0-0-0 LOW-LOW-LOW-LOW
2. நேர்-நேர்-நேர்-நிரை 0-0-0-1 LOW-LOW-LOW-HIGH
3. நேர்-நேர்-நிரை-நேர் 0-0-1-0 LOW-LOW-HIGH-LOW
4. நேர்-நேர்-நிரை-நிரை 0-0-1-1 LOW-LOW-HIGH-HIGH
5. நிரை-நேர்-நேர்-நேர் 1-0-0-0 HIGH-LOW-LOW-LOW
6. நிரை-நேர்-நேர்-நிரை 1-0-0-1 HIGH-LOW-LOW-HIGH
7. நிரை-நேர்-நிரை-நேர் 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
8. நிரை-நேர்-நிரை-நிரை 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
9. நேர்-நிரை-நேர்-நேர் 0-1-0-0 LOW-HIGH-LOW-LOW
10. நேர்-நிரை-நேர்-நிரை 1-0-1-0 HIGH-LOW-HIGH-LOW
11. நேர்-நிரை-நிரை-நேர் 0-1-1-0 LOW-HIGH-HIGH-LOW
12. நேர்-நிரை-நிரை-நிரை 0-1-1-1 LOW-HIGH-HIGH-HIGH
13. நிரை-நிரை-நேர்-நேர் 1-1-0-0 HIGH-HIGH-LOW-LOW
14. நிரை-நிரை-நேர்-நிரை 1-1-0-1 HIGH-HIGH-LOW-LOW
15. நிரை-நிரை-நிரை-நேர் 1-1-1-0 HIGH-HIGH-HIGH-LOW
16. நிரை-நிரை-நிரை-நிரை 0-0-0-0 LOW-LOW-LOW-LOW

குறிப்பு: யாப்பு எப்போது தோன்றியது?
தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய யாபருங்கலமும், அதன் தொகுப்பாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையும் நேர்பு, நிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன.

எனவே நண்பர்களே இனிமேல் தமிழ் மொழியில் இருந்ததுதான் கணினி மொழி தோன்றியது என்று நினைவில்கொள்வோம் நமது தமிழ் என்று பெருமைகொள்வோம்...!!!

இந்த தொகுப்பின் ஆய்வாளர்,

பி.மதியழகன்

சிங்கப்பூர்

தென்புலத்தார்2 வாட்சப் குழு   04/08/2018

யாழ்பாணர்கள் என்னும் ஆழ்வார்கள் - தமிழனின் தடயங்கள்

     சங்க தமிழ் வளர்த்த 12பாணர்கள்..

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் பண் பாடுதல், இசைக் கருவிகளை வாசித்தல், நடனம் ஆகிய கலைகளைத் தொழிலாக கொண்டோர் பாணர் எனப்பட்டனர். நாடோடிகள் போன்று பல ஊர்களுக்கு சென்று இவர்கள் தம் கலைகளால் மக்களை மகிழ்விப்பர். இக் கலைக்களில் ஆண்களைப் போன்றே பெண்களும் இணையாக ஈடுபட்டனர். பெண்கள் பாடினிகள் என்று அழைக்கப்பட்டனர்.


அக்காலத்தில் பக்தி இலக்கியம் பரவ பாணர் சமூகத்தார் பெரும் பங்காற்றியுள்ளனர். பாணர் சமூகத்தைச் சேர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சோமசுந்தரக் கடவுள் இவருக்கு தங்கப்பலகையிட்டு ஆலயத்தினுள் அவர்முன் அமர்ந்து யாழிசைக்கச் சொன்னதாகக் கூறப்படுகிறது.


அதே போல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரை திருவரங்கப் பெருமான் தன் அருகில் இருத்தி பாசுரம் பாடக் கேட்டதாகக் கூறப்படுகிறது.


63 நாயன்மார்களை தமிழ் இலக்கியம் காட்டும் நூல் சேக்கிழார் இயற்றிய

பெரிய புராணம்..


இவர் பெயர் பட்ட பெயரே மாடுகளை வைத்து உழவு புரிபவர் என்றே பொருள் படும்..

மாடுகளை 12நூற்றாண்டு வைத்திருந்த ஆயன்களின் (இடையர்) தலைவன்கள் தொகுப்பே இந்த நாயன்மார்கள்..


நாடுகளில் அடிப்படையில் நாயன்மார்களை நோக்கும் போது பெருவாரியான அடியார்கள் சோழ நாட்டினை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சேர, பாண்டிய நாடுகளோடு, மலைநாடு, தொண்டைநாடு, நடுநாடு, வடநாடு ஆகிய நாடுகளில் உள்ளோரும் நாயன்மார்களாக இருந்துள்ளார்கள். சோழ நாட்டிற்கு அடுத்தபடியாக தொண்டை நாட்டில் எட்டு நாயன்மார்கள் உள்ளார்கள்.


காலம், குலம், நாடு, இயற்பெயர் - காரணப்பெயர் என பல வகைகளில் நாயன்மார்களை வகைப்படுத்துகிறார்கள். இவ்வாறான ஒப்புமை நோக்குமை நாயன்மார்களைப் பற்றிய புரிதல்களை அதிகப்படுத்த உதவுகின்றன.


இவர்கள் தலைவர்கள்.. ஒவ்வொரு குலத்திற்கு பின்னர் தலைவனாக மாறியவர்கள்.. பாட்டை எளிய நடையில் அனைத்து சமூகத்தினருக்கும் கொண்டு சேர்த்தனர்.. இவர்கள் பாடிய

திருத்தலம் ஊர்கள் வாழ்ந்தயிடமே..


நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர்ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.



தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம்(அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.


4000 பாடல் கொண்ட தெய்வீக பா ஸ்வரம் (பண் இசை குறுகள்)


குறிப்பாக அக்காலத்தில் பாயிரம் மற்றும் பிரபந்தம்  (ஸ்லோகம்) மாகவே செய்யுள் இயற்றப்பட்டது..



இந்த 4000 பாசுரங்களில் ஒவ்வொரு ஆழ்வார்களும் எவ்வளவு பாடினார்கள் என்பது குறித்த தகவல்


பொய்கையாழ்வார் - 100

பூதத்தாழ்வார் - 100

பேயாழ்வார் - 100

திருமழிசையாழ்வார் - 216

மதுரகவியாழ்வார் - 11

நம்மாழ்வார் - 1296

குலசேகராழ்வார் - 105

பெரியாழ்வார் - 473

ஆண்டாள் - 173

தொண்டரடிப் பொடியாழ்வார் - 55

திருப்பாணாழ்வார் - 10

திருமங்கையாழ்வார் - 1361


அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும்  வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.


ஆனால் யார் இவர்கள்?


நாகர் இன மக்களின் இடபெயர்ந்த இடையர் என்னும் ஆயர்களே இந்த யாழ் பாணார்கள்..


குறிப்பாக இவர்கள் பாக்கள் சுரமாக வகைபடுத்தபட்டு அதனை எளியமுறையில் கொடுத்துள்ளனர்..


இவர்கள் 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர்.  இவை தவறாக புகுத்தியதாகவே தெரிகிறது காரணம் இவர்கள் பிறந்த காலத்தை பக்தி இலக்கியம் வடித்த புராணம் பெயரோடு தொடுத்துள்ளனர்..


மேலும் சில ஆழ்வார்கள் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்று வைணவம் நம்புகின்றது. இதன்படி பேயாழ்வார் நந்தகம் எனப்படும் வாளின் அம்சம் கொண்டவர் என்கின்றனர்.


புராண காலத்திலேயே தொடங்கிய ஸ்ரீவைஷ்ணவம், ஆழ்வார்கள்காலத்துப் பிரபந்தங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பிரபந்தங்கள் நாதமுனிகள்என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டு புத்துயிர் பெற்றது. அதனால் நாதமுனிகளே தற்கால ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார்.


சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன் (956-973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஸ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஸ்ரீநாதர் நாலாயிரப் பிரபந்தங்களை பாடமாகவே நடத்தி ஸ்ரீரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தார் இவரே 12 ஆழ்வார்களை வரிசைபடுத்திய நாதமுனி..


இராமானுசரும், வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் தமிழை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா வரை ஆன்மீகத்தை பரப்பியுள்ளனர்.


 அரங்கத்துறையும் இறைவனின் அருளும், அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர்.


நாதமுனிகள் காலத்திற்கு முன் ஆழ்வார்களின் அருமையான செந்திறத்த தமிழோசை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாக ஒரு சில பதிகங்களை மட்டுமே ஓதி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்று பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டது.


தமிழ் பாசுரங்ளை சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஒரியா மொழிகளில் எழுதி வைத்து, அந்த தேசத்து வைணவப்பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தது. வேதம், ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக் கூட பைந்தமிழ் பாசுரங்களை இசைத்து பாடுவதால் அப்பிழையைக் கூட கடவுள் பொறுப்பதாக கூறியதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுசர் அனைத்து வைணவ ஆலயங்கள், இல்லங்களிலும் பூஜை முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.


 திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார். இல்லறச் சடங்குகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் ஓதிவரும் வழக்கம் இன்றும் உள்ளது.


1000.. வருடங்கள் பழமையான {காந்திஸ்வரம்} சிவன் கோயில், எட்டு சித்தர்கள் தவம்செய்த விலாங்காய்மரங்கள், எட்டு சித்தர்கள் வழிபட்ட லிங்கம் ராமர் காலடி பாதம் பதித்த பழமையான கல்வெட்டு இப்படி பல சிறப்புகளை கோண்டது ஆழ்வார்தோப்பு..


ஆழ்வார் தோப்பு நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இராமசுவாமி திருகோயில். ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வெள்ளி கிழமை கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெரும். இந்த திருவிழாவை காண அனைத்து ஆழ்வார்தோப்பு வெளியூர்வாசிகளும் குடும்பத்தாருடன் வந்து இந்த திருவிழாவை தவறாமல் கண்டுகளித்து எம்பெருமான் ராமனின் அருளை பெற்று செல்வார்கள்.

இன்றைய இக்குலபிரிவினர் அக்காலத்தில் வில்லடித்து பாடிய வில்லுப்பாட்டு காரனே..


அதே போல் இராமனும் காடுகளில் வேட்டையாடும் மற்றும் வில்லடித்து அரங்கத்தில் பாடும் அரங்கநாதனே..


நாகர்கோவிலை ஆண்ட காரிமாறன் தம்பதினருக்கு பிறந்தவர் சடகோபன் என்னும் *நம்மாழ்வார்* இவரும் வில்லடித்து பாடும் வில்லுப்பாட்டு பாடும் ஈழவர் சமூகத்தின் வழி வந்தவர்..



 இவருக்கு பின்னர் இவர் மாணவனாகவும் சீடராகவும் மதுரகவி ஆழ்வார் வந்தார்.. இவர் மதுரை கவி ஆழ்வாரே..


மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூரில் என்பது இன்றைய தூத்துகுடி (தூதுவர்கள் குடி புகுந்த இடமே) பாணார்கள் ஊர்கள் ஊராக செல்லும் போது தூதுவர் ஆனார்கள்...


திருவெக்கா என்னும் இன்றைய காஞ்சியில் பிறந்தவர் பொய்கையாழ்வார்..

திருமயிலை என்னும் இன்றைய சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் பேயாழ்வார்..


இன்றைய மகாபலிபுரம்  (மாமல்லபுரம் ) த்தில்

பிறந்தவர் பூதத்தாழ்வார்..


இவர்கள் மூவரும் வில்லடித்து பாடிய யாழிசை பாணார்கள்..


 திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு குலசேகராழ்வார்  பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!.



இவர்களே யாழ் மீட்டிய பாணர்கள்.. இலக்கியத்தில் அல்லது கல்வெட்டுகள் யாரும் குறிப்புகள் எதுவும் எழுதவில்லையே.. யாழ்பாணார் இவர்களா?


ஆம் யாழ் பாணார்கள் இவர்கள்.. ஆதிகாலத்தில் இலங்கையில் இருந்து இடபெயர்ந்த இடையர்கள்..

இவர்கள் நாகர் இன மக்கள் இவர்களின் இரு பிரிவினர் சேர்ந்த இடமே இன்றைய நாகர்கோவில் மற்றும் நாகப்பட்டினம்..


தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியேபள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.


இவர் பிறந்த ஊர் திருமண்டகுடி இப்போதைய சோழநாடு..


இசைக்குப் பெயர்பெற்ற பாணர் குலம் காலக்கிரமத்தில் தீண்டாக்குலமானது. அக்குலத்தில் பாண் பெருமாள் எனும் பெயரோடு ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் பதினோராம் ஆழ்வாராக பிறந்த இவர் திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். எனினும், தன் குலத்தின் பொருட்டு திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும் அம்மண்ணை மிதிப்பதற்கும் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனை பாடிவந்தார்.

இவரை கல்லால் அடித்த கதைகள் உண்டு.. இவர் பிறந்த ஊர் இன்றைய திருச்சி.. அமலனாதிபிரான் என்ற பெயர் இவருக்கு உண்டு.. அனாதையாக சுற்றி திரிந்து பாடுபவர் என்றே பொருள்..


பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலி திருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். 'கலியன்' என்னும் இயற்பெயர் கொண்ட இவர் முத்தரையர் இனத்தை சார்ந்தவர் . ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார்.  இவ்ஊரும் சோழ மண்டலத்தில் உள்ள சீர்காழி இவர் பிறந்த ஊர்..சாரங்கம் என்பது திருமால் வில்லின் பெயராகும். இதனை ஏந்தியமையால் திருமால் சாரங்கன் என்றும், சாரங்க பாணியென்றும் அறியப்பெறுகிறார். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் சாரங்கத்தின் அம்சமாக அறியப்பெறுகிறார்.


பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விதணு சித்தர்' என்பது இவர் இயற்பெயர்.


இவரது பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின்முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள்), 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களில் அடங்கியுள்ளன.


கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்துள்ளன. இவர் பெரிய யாழ் வகையில் மீட்டும் வல்லமையுடையோர்..


அவ்வாறிருக்க இவர் பிறந்த ஊர் இவரின் அடையாளம் இன்றைய திருவில்லிபுத்தூர்..

குறிப்பாக நாகர் இனமக்களை  குடிபுகுந்தயிடம் நாகங்கள் புத்தில் வசித்து வருவதால் நாகர்  இனமக்கள் வாழும் இடத்தை புத்தூர் என்று அழைக்கப்படும்.. வில்லிபுத்தூர் என்னும் வில்லடித்து பாடும் நாகர் இனமக்கள் வாழ்ந்த இடமே..


ஆண்டாள் திருவில்லிபுத்தூர் ஊரில் பெரியாழ்வார் ல் வளர்க்கபட்டவர் ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழிஎன்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.


தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் போது விடியு முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந் நூல். இதனால் தற்காலத்திலும் பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.


தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது.. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுகிறது.


இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும். மொழி வேறுபாடின்றி, வைகுந்த நாதனின் வழிபாட்டில் இந்தியக் கண்டம் முழுவதும் விரவிக் காணப்படுவது திருப்பாவைத் தொழுகை.


திருப்பாவையின் சிறப்பு முதன்மையாக அதன் பக்திப் பெருக்கு மட்டுமல்ல. பாற்கோவை முழுதும் விரவிக் கிடக்கும் கோதை மாதவன் பாற்கொண்ட தூய காதலமுதம் மற்றும் அதன் விளைவாய் அடியவருக்கும் அனைவருக்கும் அரும்பெரும் வரமாகக் கிடைத்த தமிழ் மணம்.


திருப்பாவையின் இந்த முச்சுவையும் தித்திக்கும் பாக்களில் இரண்டொன்றைக் கீழே காணலாம்:


கோதை நமக்கு அளிக்கும் பக்திச் சுவையைக் காணலாம். ஓரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் இயம்புகிறாள் கோதை:


 நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்ட இந்நூல், கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு அவனை அடையத் துடிக்கும் ஆண்டாளின் தவிப்பை எடுத்துக் காட்டுகின்றது. பாடல்கள் அனைத்திலும் காதல் சுவை மேலோங்கி இருப்பதைக் காணலாம்.


இந்நூல் ஒவ்வொன்றும் பத்துப் பாடல்களைக் கொண்ட 14 தலைப்புக்களில் அமைந்துள்ளன.


முதற் பத்துப் பாடல்கள், கண்ணனை இணக்கு எனக் காமனைத் தொழும் பாங்கில் அமைந்தவை. இவை அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்களாக அமைந்துள்ளன.


இரண்டாம் பத்து, சிறுமியர் மயனைத் தம் சிற்றில் சிதையேல் எனக் கேட்கும் வகையில் அமைந்தவை. இப் பாடல்கள் கலிவிருத்தங்களாக அமைந்தவை.


கன்னியரோடு கண்ணன் விளையாடுவதைக் கூறும் பாங்கில் அமைந்ததது..

 மூன்றாம் பத்து. இப் பாடல்கள் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாடல்கள்.


நான்காம் பத்துப் பாடல்கள் கூடல் குறிப்புப் பற்றியவை. இவை கலிவிருத்தப் பாடல்களால் இயற்றப்பட்டுள்ளன.குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளவை..


 ஐந்தாம் பத்தைச் சேர்ந்த பாடல்கள். இவை எழுசீர் ஆசிரிய விருத்தங்களாக அமைந்துள்ளன.மாயவன் தன்னை மணஞ்செய்யக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைந்த பாடல்கள்..


 ஆறாம் பத்தில் அமைந்துள்ளன. இவையும் கலிவிருத்தப் பாடல்கள் ஆகும்.


ஏழாம் பத்து, பாஞ்சசன்னியத்தைப் பதுமநாபனோடும் சுற்றமாக்கல் என்னும் தலைப்பில் அமைந்தவை. கலிவிருத்தப் பாடல்கள்.


மேகவிடுதூதாக அமைந்தவை..


 எட்டாம் பத்து தரவுக் கொச்சகக் கலிப்ப்பா எனும் பாவகையில் ஆக்கப்பட்டுள்ளது.


ஒன்பதாம் பத்தில் திருமாலிருஞ்சோலை எம்பெருமானை வழிபடும் பாங்கிலான பாடல்கள் அமைந்துள்ளன. இவை கலிநிலைத்துறை எனும் பாவகையில் உள்ளன.


மாற்செய் வகையோடு மாற்றம் இயம்பல் என்னும் தலைப்பில் அமைந்த பாடல்களைக் கொண்ட பத்தாம் பத்து, கலிநிலைத்துறை எனும் பாவகையைச் சேர்ந்தது.


திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்த பதினோராம் பத்துப் பாடல்கள் தரவுக் கொச்சக் கலிப்பா வகையைச் சேர்ந்தவை.



பன்னிரண்டாம் பத்துப் பாடல்கள் சீதரனிருந்துழிச் செலுத்துவீர் எனை எனக் கோதை தமர்க்குக் கூறிய துணிபு எனும் தலைப்பில் அறுசீர் ஆசிரிய விருத்தங்களால் ஆனவை.


அவலம் தணி என இறைவனைக் கோரும் பதின்மூன்றாம் பத்தும் அறுசீர் ஆசிரிய விருத்தப்பாக்களால் ஆனவையே.


பிருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டது பற்றிக்கூறும் இறுதிப் பாடல்களும் அறுசீர் ஆசிரிய விருத்தப் பாக்களே.


சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார்.


அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.


ஆனால் இளவயதில் இவருக்கு கண்ணன் பற்றிய பாடல்கள் பின்னாளில் முழ்கி சிறகை விரித்தாலும்.. ஏன் திருவரங்கம் அழைத்து வந்து அரங்கநாதனை மணக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது?


இவர் கருவறை சென்ற படி முக்தியடைந்தை எடுத்துக்கொண்டாலும் ஏன் அருகிலேயே கிருஷ்ணன் கோயில் இருக்க திருவரங்கம் வரவேண்டும்..


பெரும் கோயில்களில் திருப்பணிக்காகவும் சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சிறுவயதில் நேர்ந்து விடப்பட்ட பெண்கள் ஆவர் தேவரடியர்கள்..


அரையர் என்போர் வைணவக்கோயில்களில் திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடும் இறைத் தொண்டர்கள் ஆவர். *இவர்கள் அனைவரும் ஆடவரே.*


 இவர்கள் இப்பாடல்களை அபிநயத்துடன் தாள ஒலிக்கேற்ப ஆடிப் பாடும் நிகழ்ச்சி அரையர் சேவை என்று அழைக்கப்படுகிறது.


இன்று திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில் மற்றும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகிய தமிழக வைணவக் கோயில்களிலும் தென்கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை  திருநாராயணபுரம் கோயிலில் மட்டுமே அரையர் சேவை வழக்கில் உள்ளது. மார்கழி மாத பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவங்களில் அரையர் சேவை சிறப்பாக நடைபெறுகிறது.


அரையர் என்பவர் கோயில் மூலவருக்கான பலவித சேவையில் தினசரி ஈடுபட்டாலும் நாதமுனிகள் ஏற்பாட்டுக்கிணங்க பொங்கல், பங்குனி உத்திரம், திருவாடிப்பூரம் உள்ளிட்ட திருவத்யயனம் உற்சவங்களில் இறைமுன் அரையர் சேவை செய்வதை 9 ம் நூற்றாண்டில் கட்டாயமாக்கியுள்ளனர்..

 


இவர்கள் ஏன் பெருமாள் மற்றும் கிருஷ்ணனை பாடவேண்டும்?


சக்கரத்தாழ்வார் -மயன் என்னும் மாயோன் இவரே..

ரதம் வடித்த முதல் தச்சன் என்னும் தச்சரதன் மயன் என்னும் மாயோனே ..


வில்லடித்து பாடிய வில்லுப்பாட்டு காரனே மயனின் மகன் இராமன் என்ற இராகவன்.. கிருஷ்ணன் லட்சுமணன் -ஊர்மிளை  மகன்.. திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன் பிறந்த ஊரே.. ஆயர்பாடியில் என்பது திருவில்லிபுத்தூரே இன்றும் பால்கோவா விற்கு பெயர் கொண்டுள்ளது.


சொல்ல போனால் பாபாணர்களே (பாடல் பாடியவரே) பார்பனர்கள்..

இராமனுக்கு பின்பு சாத்தனர் என்ற (சாஸ்தா) குருக்களே பிராமணர்.. பிரம்மன் என்பவர் ராமனே..


வில்லடித்து பாடும் ராமன் துணைவி வீனை மீட்டும் கலைவாணியே. .


***** *சுபம்* ******

கவுரியர் வாட்சப் குழு   20/06/2018

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏